Total Pageviews

Sunday, June 4, 2017

வள்ளலாரின் ஞானம்




1)சிவமே பொருள்

பிரபஞ்சத்தில் ஜடப்பொருள்கள் பல உள்ளன

இந்த ஜடப்பொருளின் மொத்த வடிவம் மனித சரீரம்

பஞ்ச பூதங்களும் மனித சரீரத்தில் உள்ளன

பஞ்சேந்திரியங்களாக விரிந்துள்ளன

அவைகளின் இயல்பூக்கத்தால் பஞ்ச அறிவுகளும் அவை அனைத்தினதும் இணைப்பால் உண்டான ஆறாவது அறிவாகிய சிந்திக்கும் ஆற்றலும் மனமும் ஞானமும் மனித சரீரத்திற்குள் மட்டுமே உள்ளது

மனித பிறப்பு எடுக்காமல் ஞானம் விளையாது ஞானம் முழுமையடையும் வரை திரும்ப திரும்ப பிறவி எடுத்தே ஆகவேண்டும்

ஆக ஜடப்பொருள் எதுவோ அதுவும் சிவம்தான் அவைகள் அனைத்தினதும் முதிர்ச்சியால் விளைந்த மனித சரீரமும் சிவமே

ஆதி மனிதனாக வெளிப்பட்டவர் சிவனே

சரீரத்தின் அதிபதி சிவன்

ஸ்தூல சரீரமாக முதலில் வந்தவர் எப்படி சிவனோ அதுபோல முதல்முதலாக ஒளி சரீரம் உண்டாக்கி வைரவனாக மாறி பரலோகத்தில் நுழைந்தவரும் சிவனே

2) வித்தாக இருப்பது பரமாத்மா நாராயணன்

பிரபஞ்சத்தின் பொருள்கள் எல்லாம் ஏதாவது ஒன்றை வைத்துதானே உருவாக்கப்பட்டிருக்க வேண்டும்

அந்த வித்து ஆத்மா

கண்ணால் காணவியலா சூக்கும சரீரம் அதுவே ஆத்மா

சகல ஆத்மாக்களையும் தன்னுள் அடக்கிய பேராத்மா ; அதுவே பரமாத்மா

இந்த பரமாத்மாவே நாராயணன்

இந்த நாராயணன் அருவ உருபி

சிவன் உருவி என்றால் நாராயணன் அருவ உருவி

இந்த வித்தாகிய நாராயணனை உணர்ந்தால் மட்டுமே சித்தெல்லாம் சித்திக்கப்பெரும்

அதாவது சிற்றம்பலமாகிய உன் சரீரத்தில் ஜீவாத்மாவாகிய உன் ஆத்மாவில் நிலைத்து நீ பரமாத்மாவின் அங்கம் என்பதை உணரவேண்டும்

அப்போதே பரந்த மனமும் உன் சரீரமும் சகல சரீரங்களும் சிவனே என பொதுஞானம் சமாச சத்தியம் உன்னுள் விளையும்

3)ஆறு முகமும் ஒரு முகமாகும்

இதுவரை வெளிப்பட்ட அனைத்து சமயங்களையும் வழிபாட்டு நெறிகளையும் ஆறு மார்க்கங்களுக்குள் அடக்கி விடலாம்

சொல்வந்த அந்தங்கள் ஆறும் அந்தங்கள் என்றால் முடிவானவைகள்

ஆறு அந்தங்களும் தனித்தனியே ஆறு மார்க்கங்களை வேறு வேறு வாக மாச்சரியத்துடன் காட்டி நிற்கின்றன

அவைகளை தன்னகத்தே உள்வாங்கி அடக்கி ஆளும் சமரச சன்மார்க்க சத்தியம் ஒரே ஒரு சொல்லின் சரியான அர்த்தத்தை புரிந்துகொள்வதால் உண்டாகும்

அந்த சொல் ஆம் என்ற ஓம் என்கிறார் வள்ளலார்

ஓம் என்ற சொல்லின் அத்தத்தை சிவன் மறந்து விட்டார் அதாவது மனிதர்கள் அனைவரும் மறந்து விட்டனர்

அதை சற்குருநாதன் முருகனால் மட்டுமே விளக்கி காட்டமுடியும்

அதுவும் தகுதி உள்ளோருக்கு மட்டுமே ரகசியமாக கூறினார்

ஓம் ஓர் இறைவனையே நமஸ்கரிக்கிறோம்

சகலத்தையும் படைத்தவன் ஓர் இறைவனே

அவனே பாமாத்வாகிய நாராயணனை படைத்து அதில் முழுமையாக தனது சாயலில் சிவனையும் படைத்தார்

தருநெறி எல்லாம்உள் வாங்கும் - சுத்த
சன்மார்க்கம் என்றோர் தனிப்பேர்கொண் டோங்கும்
திருநெறிக் கேசென்று பாரீர்

எம்பொருள் எம்பொருள் என்றே - சொல்லும்
எல்லாச் சமயத்துள் எல்லார்க்கும் ஒன்றே
செம்பொருள் என்பது பாரீர்

எங்கள் மூலவர் மட்டுமே கடவுள் என ஒவ்வொரு சமயங்களும் சொல்கின்றன அது மாச்சரியத்தால் உண்டானது

கலியுகம் மாச்சரியம் இருந்தால் மட்டுமே நடக்கும்

கலியுக மாந்தர்கள் மாச்சரியத்திற்கு அடங்கியவர்கள்

ஆனால் கலியை கடந்தவர்களுக்கோ சமரச சன்மார்க்கம் விளங்கும்

அது மற்ற எல்லாமே தப்பு நாங்க சொல்வதுமட்டும்தான் சரி என சொல்வதல்ல நாமொரு புது மார்க்கத்தை உண்டாக்கி பத்தோடு பதினொன்றாக சண்டை போடுவதல்ல

சகல நெறிகளையும் உள்வாங்கி ஏற்றுக்கொள்ளும் சன்மார்க்கம்

எல்லா சமயங்களும் உண்மையே அவைகளை ஏக இறைவனில் கொண்டு வந்து இணைத்துக்காட்டும் சமரச சத்தியமே சன்மார்க்கம்

ஆறு மார்க்கத்தையும் இணைத்துக்காட்டுவதே சன்மார்க்கம்

சைவ முதலாக நாட்டும் - பல
சமயங்கள் எல்லாம் தனித்தனிக் காட்டும்
தெய்வம் இதுவந்து பாரீர்

வருவித்த வண்ணமும் நானே - இந்த
மாநிலத் தேசெயும் வண்ணமும் தானே
தெரிவித் தருளிற்றுப் பாரீர்

ஆம் குருதேவா

வள்ளல்பிரானே சமரச சத்தியத்தை சன்மார்க்கமாக தெரிவிக்கவே பூமிக்கு அனுப்பபட்டீர்

அதற்கு ஒரு கருவியாக மட்டுமே ஜீவகாருண்யத்தை காட்டினீர்

அந்தோ உமது சீடர்கள் புளுகிராஸ் இயக்கமாக மாறிப்போனார்கள்

ஏற்கனவே சண்டை போட்டுக்கொண்டிருக்கும் பத்து மார்க்கங்களுடன் பதினொன்றாவது மார்க்கம் போல வள்ளலாரியத்தை விளக்கம் கொடுத்து மற்ற மார்க்கங்களெல்லாம் தப்பு என சண்டை போடுகிறவர்களாக மாறிப்போனார்கள்

சைவ இசுலாமியர்களாக வள்ளலாரியம் மாற்றம் அடைந்துவருகிறது