Total Pageviews

Monday, December 25, 2017

இயேசுவின் பிறப்பின் ரகசியங்கள்







8. அப்பொழுது அந்த நாட்டிலே மேய்ப்பர்கள் வயல்வெளியில் தங்கி, இராத்திரியிலே தங்கள் மந்தையைக் காத்துக்கொண்டிருந்தார்கள் .

9.அவ்வேளையில் கடவுளுடைய தூதன் அவர்களிடத்திலே வந்து நின்றான் , கடவுளுடைய மகிமை அவர்களைச் சுற்றிலும் பிரகாசித்தது ; அவர்கள் மிகவும் பயந்தார்கள்.

10. தேவதூதன் அவர்களை நோக்கி : பயப்படாதிருங்கள் இதோ , எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்.

11. இன்று சற்குருவாகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார் .

12. பிள்ளையைத் துணிகளில் சுற்றி , முன்னணையில் கிடத்தியிருக்கக்காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம் என்றான் .

13. அந்தக்ஷணமே பரமசேனையின் திரள் அந்தத் தூதனுடனே தோன்றி :

14. உன்னதத்திலிருக்கிற கடவுளுக்கு மகிமையும் , பூமியிலே சமாதானமும் , மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக என்று சொல்லி கடவுளைத் துதித்தார்கள்.

இயேசு பிறந்தவுடன் சம்பவித்தவை இவை

பெத்லகேம் தற்செயலாக வந்திருந்த மரியாளும் அவரது கணவர் யோசேப்பும் சத்திரத்தில் தங்க இடம் கிடைக்காததால் முகப்பு பட்டாசாலையிலேயே தங்குகிறார்கள் . நிறைமாத கர்ப்பிணியான மரியாள் பிரசவிக்கிறாள் . அந்த குழந்தையை சத்திரத்தின் முன்னணையிலேயே துணிகளில் சுத்தி கிடத்துகிறார்கள்

இந்த சம்பவம் நடந்தபோது வயல்வெளியிலே ஆடுமாடுகளை தொழு போட்டு காவல்காத்திருக்கிரவர்களிடம் வானமண்டலத்து தேவதூதர்கள் தோன்றி நற்செய்தி அறிவிக்கிறார்கள்

கர்த்தர் என்கிற வார்த்தை ஆங்கிலத்தில் லார்ட் என்பதாகும் . அதாவது மாண்புமிகு மதிப்புமிகு என சற்குருவுக்கு கொடுக்கும் விழிப்பு சொல்லே ஆகும் . கீதையில் கூட கிரிஷ்னரை குறிப்பிடும் இடத்தில் பகவான் பகவான் என்றே வருகிறது . இந்த பகவானும் கடவுளை குறிக்கும் சொல் அல்ல . சற்குரு என்ற அர்த்தத்தில் கடவுளின் புறத்திலிருந்து பூமிக்கு அனுப்பப்பட்டவர்கள் அல்லது இறைதூதர்கள் ; நபி என்பதெல்லாம் ஒரே அர்த்தம் உள்ளவை ஆகும்

இவ்வாறு பூமிக்கு கடவுளால் அனுப்பட்டவர்கள் தாங்கள் உயிரோடு பூமியில் இருந்த நாட்களில் தாங்கள் இருந்த சமுகத்திற்கு மாபெரும் நன்மைகள் ரட்சிப்புகள் செய்தார்கள் . அனேக மக்களை பக்திக்குள்ளாக்கி கடவுளோடு ஒப்புரவு ஆக்கி பலருக்கு முக்தி அளித்தார்கள்

பூமிக்கு ஒரே ஒரு ரட்சகரை மட்டும்தான் இறைவனால் அனுப்பமுடியும் என்பதுபோலும் தங்கள் நாட்டு இறை மனிதர் மட்டுமே உன்னதமானவர் என்பதுபோலும் மனிதர்கள் குழப்பிக்கொண்டு ஒருவரை ஒருவர் மதம் மாற்றுகிறார்களே அது மனிதர்கள் செய்யும் தவறு ஆகும்

இந்தியாவில் ஒரு காலகட்டத்தில் ராமர் என்ற ரட்சகர் தோன்றினார் . நல்ல சிவபக்தனாக இருந்தும் வரங்களை பெற்ற பிறகு தனது ஆணவ அக்கிரமங்களை மனித சமூகத்தின் மீது கட்டவிழ்த்து விட்ட ராவணன் என்ற பிராமண பூசாரி குலத்தை சேர்ந்த மன்னன் ஒருவனிடமிருந்து உலகை மீட்டார்

அதே போல பின்னொரு காலத்தில் கம்சன் என்ற கொடிய அசுரன் மன்னனாக இருந்த போது அவனை அழித்து உலகை ரட்சிக்கும் படியாக கிரிஷ்ணர் அவதரித்தார் .அவரும் பிரம்மாவின் ஆசி பெற்ற இந்திரனின் கொட்டத்தை அடக்கினார்

இதை ஏன் சொல்கிறேன் என்றால் இறைவன் புறத்திலிருந்து இறை மனிதர்கள் பூமிக்கு வந்த போதெல்லாம் அதற்கு முன்பு இறை பணியில் இருந்த மனித பூசாரிகளின் ஆணவத்தை அடக்காமல் இருந்ததில்லை . பிறப்பால் பூசை பணியில் இருக்கிறவர்களை நாம் குறைத்து மதிப்பிடவில்லை . ஆனால் அவர்கள் தங்கள் தகுதியை மீறி கடவுளுக்குஏஜெண்டுகள் போல நடக்கத்தொடங்குவது மனித பலகீனமாகும் . அந்த தவறுகளை சரி செய்ய மனிதர்களால் முடியாமல் போகும் போது இறைவன் புறத்திலிருந்து ஒருவர் வந்தாகவேண்டும் என்கிற நிலைமை உண்டாகிவிடுகிறது . அப்படிப்பட்ட சூழ்நிலையிலேயே சற்குரு எனப்படும் பரமண்டலத்து நபர் ஒருவர் பூமிக்கு வருகிறார்கள்

அப்படித்தான் யூதர்கள் இருண்ட கண்டமான ஒரு சுழ்நிலையில் இருந்த போது இயேசு என்னும் ரட்சகர் சற்குரு பரமண்டலத்திலிருந்து பூமியில் வந்து அவதரித்தார்

இயேசு அகில உலகத்திற்கும் ரட்சகரா என கேட்டால் அது இல்லை என்பது சரியான பதிலாகும்

ஏனென்றால் அவதாரமே அதுவரை வராத யூத அரேபிய ஐரோப்பிய மக்களுக்குத்தான் அவர் வந்தாரே தவிர இந்தியர்களை பொறுத்து அவர் ஏற்கனவே ராமராகவும் கிரிஷ்ணராகவும் வந்து சென்ற அதே நபர் இயேசுவே ஆகும்

இம்மூவரின் பிறப்புகளின் ஒற்றுமைகளை நிதானித்தால் மூவரும் ஒருவரே என்பது விளங்கும்

1)ஆண் பெண் கலப்பால் பிறக்காதவர்கள் :

வயது முதிர்ந்து பிள்ளையே பிறக்காத தசரதன் புத்திரன் வேண்டி யாகம் செய்த போது தீயில் இருந்து வந்த அருள் பிரசாதத்தை உண்டதால் கர்ப்பமுற்று பிறந்தவர் ஸ்ரீராமர்

எட்டாவது குழந்தை தன்னை கொல்லும் என்பதை அறிந்த கம்சன் தன் தங்கை தேவகியையும் அவரது கணவர் வசுதேவரையும் தனிமை சிறையில் அடைத்திருந்தான் . அதனால் குழந்தை பிறக்கவா போகிறது என்ன என கவனக்குறைவாகவும் இருந்தான் . அவனுக்கு தேவகியிடம் ஒரு குழந்தை இருக்கிறது என்ற சேதி சொல்லப்பட்ட பிறகே நம்ப முடியாமல் ஓடி வந்தான் . ஆனால் அதற்கு முன்பே குழந்தை மாற்றப்பட்டும் இருந்தது

இயேசு பிறந்த போதும் அந்த ராஜா அப்படி ஒரு குழந்தை எங்கு பிறந்திருக்கிறது என கண்டறிய முடியாமல் அதே சமயத்தில் நாட்டில் பிறந்த அனேக குழந்தைகளை கொன்றான் . ஆனால் இறைவனால் எச்சரிக்கப்பட்டு அதற்கு முன்பே இயேசுவை எடுத்துக்கொண்டு வெளிநாட்டிற்கு தப்பிபோனார்கள் . கிரிஷ்ணர் எப்படி வெளிநாட்டில் வாழ்ந்து பின் திரும்ப வந்தாரோ அதைப்போலவே இயேசுவும் வெளிநாட்டில் வாழ்ந்து பின்பே இஸ்ரேல் வந்து சேர்ந்தார்

ஆணின் வித்தில் ஒருவர் வந்து ஜனித்தால் அந்த ஆணின் முன்னோர்களின் பாவபுண்ணியங்களுக்கு அந்த ஆத்மா பதில் சொல்லாமல் உலக ரட்சிப்புக்கு இறைவனால் பயன்படுத்த முடியாது . அதனாலேயே உலக ரட்சிப்புக்கு பூமிக்கு இறைவனால் அனுப்பட்ட ராமரும் கிரிஷ்ணரும் இயேசுவும் சரி ஆண் வித்தினால் பிறக்காமல் பெண்ணின் கர்ப்பபையை மட்டும் பயன்படுத்தி பூமியில் மனித சரீரத்தில் வந்தார்கள்

கன்னிமேரி மட்டுமே கடவுளின் பரிசுத்த ஆவியால் கர்ப்பமுற்றது போல கிறிஸ்தவர்கள் பெருமை பேசுவதும் அதை இந்துக்கள் உண்மை என்பதை புரியாமல் கேவலமாக பேசுவதும் இரண்டுமே தவறு . இறைவன் நாடினால் எதுவும் நடக்கும்

ராமரும் கிரிஷ்ணரும் ஆண் வித்தினால் பிறக்கவில்லை என்கிற தத்துவ தெளிவு இல்லாமலேயே எங்க ஆளும்தான் அப்படி பரிசுத்த வித்தாக பிறந்தார் என சொல்லத்தெரியாமல் இயேசுவையும் மேரியையும் கேவலமாக பேச தொடங்கி தேவ தூசனம் என்ற பாவத்துக்கு ஆளாகிறார்கள்

இறைவனது முழு அதிகாரம் உள்ளவராக பூமிக்கு யார் வருகிறாரோ அவர் ஆண் வித்தினால் பிறக்காமல் கடவுளின் பரிசுத்த ஆவியினால் பெண்ணின் கர்ப்பத்தில் உற்பவிக்கவேண்டும்

ராமர் கிரிஷ்ணர் இயேசு மூவர் மட்டுமே அப்படி முழு அதிகாரத்தோடு பூமியில் பிறந்தவர்கள்

திருப்புகழ் கூட நாதவிந்து கலாதீ நமோ நமோ என்கிறதே கலாதீ என்றால் கலக்காமல் இருப்பது ; நாதமும் விந்தும் கலக்காமல் பிரக்கிரவனே நமோ நமோ என்பதை நம்பியே ஆகவேண்டும்

2)அனேக அற்புத அடையாளங்கள் செய்திருப்பார்கள் . பல நியதிகள் இவர்களால் மாற்றப்பெறும் . முக்கியமாக ஆவி மண்டல அசுர சக்திகள் பலவும் இவர்களுக்கு முன்பு அடங்கி சாட்சி சொல்லிய நிகழ்வுகள் நடக்கும்

3)இவர்கள் மரணம் அவர்களாக ஏற்றுக்கொண்ட விதத்தில் இருக்கும்

ராமர் ஒரு தார நியதியின் நிமித்தமாக அவர்களது குடி மக்களாலேயே பலமுறை மனம் காயப்படுத்தப்பட்டார் . அதனால் அவரது சொந்த வாழ்வு அவருக்கு நிம்மதியானதாக இல்லை . முடிவில் ஜலத்திற்குள் இறங்கி தன்னை சமாதியாக்கிகொண்டார்

கிரிஷ்ணரும் காந்தாரியின் சாபத்தை ஏற்று வாலியின் சாபத்தையும் ஏற்று தன் குலம் தனக்கு முன்பே அழியவிட்டும் வாலியின் அடுத்த பிறவியாக இருந்த வேடன் ஒருவனின் தவறான அம்பை ஏற்றும் உயிர் நீத்தார்

ராமர் கிரிஷ்ணர் என்ற இரண்டு அவதாரங்களிலும் தர்ம யுத்தம் என்கிற பெயரில் அனேக மனிதர்களின் அழிவுக்கு காரணமாக இருந்தார்கள்

தர்ம யுத்தமே ஆனாலும் கடவுளின் சாயலில் இருக்கும் மனிதனை கொல்வதும் பிரம்மஹத்தி தோஷத்தை இருவருக்கும் கொடுத்து விட்டது என்பது உண்மை . அந்த தோஷத்தை போக்க என்னதான் வேள்விகள் தர்ப்பணங்கள் செய்தாலும் அவை முற்றுப்பெற வில்லை

அதிதேவர் நாராயனணே ஆனாலும் மனிதர்களை கொன்ற தோஷம் அதுவும் தர்ம யுத்தத்திற்காக மனிதர்களை கொன்ற பிரம்மஹத்தி தோஷத்திற்கு அவர்கள் பதில் சொல்ல வேண்டியிருந்தது

பிரம்மஹத்தி தோஷத்திற்கு பிரார்த்தனை தர்ப்பணங்கள் மட்டுமே சரி செய்யமுடியாது . பதிலுக்கு தானே கொல்லப்படுவதை கோர மரணத்தை பிராயச்சித்தமாக ஏற்றுக்கொள்ளவே அவர் யேசுவாகவும் வந்து சிலுவை மரணத்தை ஏற்றுக்கொண்டார்

இந்த மூவரும் நாராயண அவதாரங்களே என்பதற்கு இன்னொரு காரணம் வரப்போகிற சத்திய யுகத்தை ஆளப்போகிறவர் தாமே என மூவரும் சொல்லியதே

மூன்று வேறு வேறு நபர்களா வந்து சத்திய யுகத்திலும் நான்தான் ஆள்வேன் என சண்டை இடுவார்களா 

சத்திய யுகத்தை ஆள்கிறவர் மனித சரீரத்தில் பிறந்து வருகிரவறல்ல ; வானத்திலிருந்து தேவ தூதர்கள் புடை சூழ இறங்கிவரப்போகிறவர் என்று மூவரும் சொல்லியுள்ளனர்

இறைவன் புறத்திலிருந்து இறங்கி வருகிறவர் ; இறைவனின் பிரதிநிதியாக பூமியில் சத்திய யுகத்தை நடத்துபவர் நிச்சயமாக ஒருவரே என்றால் இந்த மூவரும் ஒருவரே என்பதில் சந்தேகமில்லை

அந்தந்த நாட்டினர் அந்தந்த அவதாரத்தை சற்குருவாக ஏற்றுக்கொண்டால் போதுமானது ; அவரவர்கள் அவரவர் நாட்டு சம்பிரதாயங்களை கைக்கொண்டால் போதுமானது அடுத்தவரை மதம் மாற்ற அவசியமில்லை

மதம் மாறாமலேயே மூவரும் ஒருவரே என்பதை நம்பினாலே போதும் ; மூன்று அவதாரங்களாலும் வருகிற அருள்கொடை மனிதர்களை முழுமையாக்கும்

பெண்ணாசை ; மண்ணாசை ; பொன்னாசை என்ற மாபெரும் பாவ ஆசைகளை மனிதர்கள் கடர இந்த ஒவ்வொரு அவதாரத்திலும் அந்த ஒரு நபரே பிராயச்சித்தம் செய்திருக்கிறார்

மூவரையும் விசுவாசித்தாலன்றி முழுமை அடையவே முடியாது

இந்த மனித சரீரம் என்பது சத்திரம் போல தற்காலிகமானது .

அந்த சரீரத்தின் முன்னணையாகிய நாசியிலே ஓடும் ஆவியாகிய உயிரில் ஒன்றி தியானித்தோ மென்றால் நமக்காக இறைவன் புறத்திலிருந்து பூமிக்கு வந்த நாராயணர்களை ரட்சகர்களாக நம்மால் அடையாளம் காணமுடியும்

அவர்கள் நாடு நாடுக்கு உள்ள பழம் பாராம்பரியம் என்னும் துணிகளால் சுற்றப்பட்டு மதபேதம் என்ற மாயைகளால் மறைக்கப்பட்டவர்களாக உள்ளனர்

அந்த மாயைகளை களைந்து உண்மையான ரட்சகர் சற்குருநாதர் நாராயணனே என்பதை உணரவேண்டும்

உன்னதத்திலிருக்கிற கடவுளுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாகும்

அதிதேவர்கள் நால்வர் நாமத்தால் இறைவன் தம் அருள்பேறுகளால் நம்மை நிரப்பட்டும்






No comments:

Post a Comment