Total Pageviews

Friday, December 2, 2016

சாலை ஆண்டவர்


வள்ளலார் தனக்கு பின்வருபவரான தனித்தலைமைப்பதி @ சமரசவேதாந்தி பார்வதிபுரம் சபைக்கு வந்து செத்தவரை உயிரோடு எழுப்புவார் ; அவர் காலத்தில் சமரச சன்மார்க்கம் உலகெங்கும் தழைத்து ஓங்கும் என கூறியுள்ளார்

அவர் வந்து எழுப்ப வள்ளலாரின் அனுக்கசீடர் கல்பட்டு ஐயாவை வடலூர் பார்வதிபுரத்தில் அடக்கம் செய்துள்ளனர்

சாலை ஆண்டவரும் மெய்வழிச்சலையில் சமாதியில் அடங்கியதொடு தன் சீடர்கள் அநேகருக்கு பரிசுத்த அடக்கம் செய்துவருகிறார்கள்

இது பரிசுத்த அடக்கமே தவிர நித்திய ஜீவன் அல்ல . நித்திய ஜீவன் என்பது ஒளிசரீரம் அடைவது சரீரம் எஞ்சாது

வள்ளலார் ஆண்டாள் மாணிக்கவாசகர் போல

ஆண்டாள் ராமானுஜர் உட்பட பலர் கூட இருந்து பார்த்துக்கொண்டிருக்கும் போதே அரங்கனிடம் சென்று ஒளியாகி மறைந்தார்

மாணிக்கவாசகரும் பலர் பார்த்துக்கொண்டிருக்கும் போதே சிதம்பரத்தில் ஒளியில் கரைந்தார்

ஏன் சுந்தரர் திருமணத்தில் கலந்துகொண்ட ஒரு பெரிய கூட்டமே ஒளியாகி மறைந்துவிட்டனர்

இவர்கள் யாருக்கும் சரீரம் எஞ்சவில்லை


யாருக்கெல்லாம் சரீரம் எஞ்சியதோ அவர்கள் இன்னும் முழுமை அடையவில்லை ; ஒன்று மறுபிறவி எடுத்து முன்னேற வேண்டும் அல்லது ஜீவசமாதி அடைந்து வரப்போகிறவர் வந்து சரீரத்தோடு உயிரடையச்செய்து மீண்டும் எழுப்பும்வரை பூமியில் மண்ணறையில் காத்திருக்கவேண்டும்
இன்னொரு பிறவி எடுத்து உழலாமல் அவர் வரும்வரை காத்திருப்போம் என்பதைத்தவிர இதில் பெரிய லாபம் ஏதுமில்லை

இப்படிப்பட்ட ஒன்றை தன் அடியவருக்கு மெய் வழியில் சாலை ஆண்டவர் பரிசுத்த அடக்கம் என்னும் பெயரில் கொடுக்கிறார்கள்

கிறிஸ்தவர்களும் முஸ்லீம்களும் இந்த நம்பிக்கையில்தான் கல்லறை கட்டுகிறார்கள்
இதில் பெரிய லாபம் ஏதுமில்லை

ஆனால் இவர்கள் அனைவரும் வள்ளலாருக்கு பின்வருகிறவரான தனித்தலைமைப்பதி வரும் போது உயிரோடு எழுப்பப்படுவார்கள் என்பதே இதில் உள்ளசெய்தி

வடலூர் ஞானசபையில் வந்துயார் கல்பட்டு ஐயாவை கல்லறையை விட்டு எழுப்புவாரோ அவரே வள்ளலாரால் முன்குறிக்கப்பட்ட சமரச வேதாந்தி

இவரால் சாலை ஆண்டவரும் எழுப்பிகொண்டுவருப்படுவார் அதுவரை சாலைஆண்டவரின் சீடர்கள் தங்களை பரிசுத்த அடக்கம் செய்துகொள்ளட்டும்

சமரசவேதாந்தி வந்து சரீரத்தோடு எழுப்ப பலரை பரிசுத்த அடக்கம் செய்யும் பணியை மட்டுமே சாலைஆண்டவர் செய்கிறார்

சமரசவேதாந்திக்கு சாலை அமைக்கும் பணி இது

சாலை அமைக்கும் பணிக்கு வந்ததால் அவர்பேர்  சாலை ஆண்டவர் எனப்பட்டது

எப்போது  ஒருவர் அடங்கினாரோ அவர்  கல்கியுமல்ல ; தனித்தலைமைப்பதியுமல்ல  அல்மகதியும் அல்ல

ஏனென்றால் யார்  உயிரோடு  இருக்கும்போதே  வானத்திலிருந்து  கல்கி  இறங்கி  வருவாரோ  அவரே  அல்மகதி வள்ளலார்  குறிப்பிட்ட தனித்தலைமைபதி

சாலை  ஆண்டவர் அடங்கிவிட்டார்  என்பது  எவ்வளவு  உண்மையோ  அவ்வளவு  உண்மை  அவரை  எழுப்புபவர்  ஒருவர்  வரும்போது மட்டுமே  அவரால்  ஆவிக்குரிய  சரீரத்தில்  நித்திய ஜீவனோடு  எழும்ப  முடியும்

சாலை  ஆண்டவர்  தாம்  என்ன கொடுக்கிறாரோ  அதை பரிசுத்த  அடக்கம்  என்றுதானே  சொல்லியுள்ளார்

அடக்கம் என்றாலே அவர்  இறந்ததுபோல  ஒரு தன்மையை  அடைந்துவிட்டார் என்றுதான் அர்த்தம்

ஆகவே  அடக்கம்  ஆவதே  குறிக்கோள்  என்பவர் தாராளமாக  அடக்கம் ஆகிக்கொள்ளட்டும்

ஆனால் அது தற்காலிக  நிம்மதியே  தவிர  நித்திய ஜீவனல்ல  முழுமையை  கொடுப்பதல்ல  என்பதை உணர்ந்துகொள்ளட்டும்



நாராயணன் நாமத்தினாலும் ஆதிசேஷனனின் நாமத்தினாலும் நாராயணியின்
நாமத்தினாலும் சிவனின் நாமத்தினாலும் கடவுள் தங்களையும் தங்கள் 
குடும்பத்தாரையும் தமது அருளால் நிரப்ப வேண்டுகிறேன்



அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி

தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி