முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே துயில் எழாய்
செப்பம் உடையாய் திறல் உடையாய் செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா துயில் எழாய்
செப்பென்ன மென் முலைச் செவ்வாய்ச் சிறு மருங்குல்
நப்பின்னை நங்காய் திருவே துயில் எழாய்
உக்கமும் தட்டொளியும் தந்து உன் மணாளனை
இப்போதே எம்மை நீராட்டேலோர் எம்பாவாய்
முப்பத்து முக்கோடி தேவர்களைஅசுரர்கள் தங்கள் மாயைகளால் மயக்கி அடிமைப்படித்தி விட்டார்களாம் ஒரு குறிப்பிட்ட காலம் வரை இறை நேசம் கொள்வோருக்கும் எதற்கெடுத்தாலும் சோதனைகளும் தடைகளும் முட்டுக்கட்டைகளும் வந்து குவியும்
பட்டறிவில்லாத உபதேசங்கள் பெரிய பலன் கொடுக்காது
உழைக்களத்தில் இரும்பு மேருகேற்றப்படுவது போல வாழ்வில் அன்றாட சனத்தில் அசுர மாயைகளோடும் தடைகளோடும் போராடி போராடி உரமும் பொறுமையும் நம்பிக்கையும் அடையாத ஆத்மா ஞானமடையாது
முழு சரணாகதியை கற்றுக்கொள்ளாது
அல்லாமலும் முற்பிறவிகளில் நாமும் செய்த அழிச்சாட்டியங்களுக்கு பதிலும் அனுபவித்தாகவேண்டும்
ஆகவே அசுரர்கள் தேவர்களை அடக்குவது ஒரு குறிப்பட்ட காலம் வரை தொடரவே செய்யும்
ஆனாலும் அடிமைகளாக அல்லாடும் தேவர்களை விடுவிக்க என்றே ஒரு அம்சம் இருக்கிறது
அவர் முருகன் தேவ சேனாதிபதி
பரமண்டலத்தில் ஆதியில் தேவர்களை ஆட்டிப்படைத்த அசுரர்களை அடக்கி விடுதலை கொடுத்தவர் முருகன்
ஆனால் கோதை நாச்சியாரோ தேவர்களுக்கு முன் சென்று கப்பம் தவிர்ப்பவர் நாராயணன் என்கிறார்
முருகன் பரலோகத்தில் நாராயணனே என ஆதி தமிழ் வேதங்கள் பல இடங்களில் சொல்கின்றன . ஆனால் அவன் பூமிக்கு அவதாரமாக வந்தாலோ ஆதி மனிதனான சிவனின் பிள்ளை
ஹரிஹரன்
ஹரி = நாராயணன் + ஹரன் = சிவன்
நாராயணன் மனிதனாக அவதாரமெடுத்து வந்தால் அவன் ஹரிஹரன் ; முருகன்
அவதாரங்கள் அனைவரும் ஹரிஹரர்களே
ஹரிகரா ஹரிகரா ஹரிகரா என கோசம் போட்டதே காலப்போக்கில் அரோகரா அரோகரா என மாறிவிட்டது
சரி விசயத்துக்கு வருவோம்
கோதை அக்கா தமிழச்சி ஆயிற்றே ; அவளின் நேர்த்தியான அணுகுமுறை இப்பாடலிலும் வெளிப்படுகிறது
இந்த பாடலில் அவள் நாராயணனையும் அவளின் மனைவியையும் துயில்
எழுப்புகிறாள்
ரெண்டு போரையும் சேர்த்தே அழைக்கிறாள்
ஒருவன் மாணாளன் இன்னொருத்தியோ சக்களத்தி ; மதிக்க மாட்டாளே
சக்களத்திக்கு என்னைய அடிமையாக்கதடா சாமி என்பதை பக்குவமாக சொல்கிறாள் ; முப்பத்து மூன்று கோடி தேவர்களை அடிமைத்தளையிலிருந்து விடுவித்தவனல்லவா நீ என்கிறாள்
செம்மையானவனே திறமையானவனே
உன்னோடு ஒத்துப்போகிறவ்ர்களுக்கு ஞான அக்கினியால் இருளை களைகிறவன் நீ
அப்புறம் சக்களத்திக்கே ஐஸ் ஐஸ்
நப்பினையின் அழகை வர்ணித்து ஐஸ் வைத்து உன் மணவாளனுக்கு ஊக்கமும் ஆக்கமும் கொடுத்து என்னை அருளால் அபிஷேகிக்கும் படியாக செய்வாயாக என்கிறாள்
அழகான நப்பினையின் மணவாளனே என்கிறாள்
தாயீ கோபப்பட்டிராத அவரு ஓம் புருஷன்தா உன் தயவு எனக்கு என்னைக்கும் வேணும் தாயீ
கில்லாடி அக்கா அணுகுமுறையில்கில்லாடியே
நாராயணன் நாமத்தினாலும் ஆதிசேஷனனின் நாமத்தினாலும்
நாராயணியின் நாமத்தினாலும் சிவனின் நாமத்தினாலும் கடவுள் தங்களையும் தங்கள் குடும்பத்தாரையும் தமது அருளால் நிரப்ப வேண்டுகிறேன்
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி