Total Pageviews

Tuesday, April 21, 2015

திருப்பாவை 29







தமிழ் ஆன்மீக செறிவுள்ள மொழி . வள்ளலார் கூட தமிழ் ஆத்மாவை எளிதில் இறைவனுடன் ஐக்கியம் ஏற்படுத்தும் . சமஸ்கிரதம் தாய் மொழி என்றால்  தந்தை மொழி 
தமிழ் என்றுள்ளார் 

தமிழ்வார்த்தைகள் ; அதை யார் உச்சரித்தாரோ அவருக்கும் இறைவனுக்கும் உள்ள அருள் தொடர்பை அதிர்வை அப்படியே இழுத்து வைத்துக்கொள்ளும் .

ஞானிகள் பக்தி சுவை உணர்வு சொட்ட பாடிய தேவாரம் , திருவாசகம் , திருப்பாவை , திருவெம்பாவை , திருப்புகழ் , கந்தரலங்காரம் , கந்தர் அநுபூதி , கந்தர்கோட்ட மணிமாலை , திருவருட்பா போன்ற உயர் ஞானிகள் எழுதிய பாடல் வரிகளை இசையோடு கேட்க பழகவேண்டும் . இவை புரிந்து கொள்ள சற்று கடினமாக தோன்றினாலும் கேட்க கேட்க அந்த அருளதிர்வுகள் உணர்வுகள் மெல்ல நம் உடலில் தங்கி மனதில் புகுந்து அதை ஆக்ரமிக்க தொடங்கும் . மெதுவாக உள்ளிருந்து நற்குணமாக வெளிவரும்

தமிழில் உள்ள அளவு பலதரப்பட்ட உணர்வுகளுக்கு ; இயல்புகளுக்கும் – தமோ ; ரஜோ ; சத்வ குணத்தாரையும் ஈர்க்கும் பாடல்களை மற்ற மொழிகளில் கேட்க இயலாது

ரஜோகுணம் மிகுந்த கருப்பசாமி பாடல்களும் கூட அப்படிப்பட்டவர்களை ஈர்த்து பக்தியை வளர்க்கிறது . வாடா கருப்பா போடா கருப்பா என்றால்தான் அவர்களுக்கு கொஞ்சம் பக்தி வரும் . எந்த தரத்திற்கும் இறங்கி வரும் தேவர்களின் வியாபகங்கள் தமிழில் மட்டுமே உண்டு

புற்றீசல் போல ஐயப்ப சீஷன் பாடல்களும் சினிமாக்களும் தமிழைப்போல எங்கும் இல்லை .

சிறு தொழில் செய்யும் ஏழைகள் அன்றாடம் வயிற்றுப்பாடு ; உடல்நோவு தீர குடித்தல் அடித்தல் உதைத்தல் காணா பாட்டுப்பாடி சோகத்தில் சுகம் காணுதல் ; தத்துவம் போல உளறுதல் ; இடுப்பு வலி சுளுக்கு டாண்ஸ் ஆடி அடுத்தவரை வெறுப்பேற்றுதல் போன்றவை அவர்களின் வாழ்நிலையில் தவிர்க்க இயலாதவை .

இப்படிப்பட்டவர்களுக்கு ஐயப்ப சீஷன் பொற்காலம் போல . அந்த குறைந்த கால கடும் விரதம் உடலை தேற்றும் ; காசை மிச்சமாக்கும் . செய்முறையில் வருவது மட்டுமே அந்த வருடத்திற்கு அவர்களுக்கு கிடைக்கும் மிச்சம் ; அப்படியே குடும்ப முன்னேற்றத்திற்கு போய் விடும் .

சினிமா கனவில் வெற்றி காணமுடியாமல் குழு ஆட்டம் ; சண்டை வீரர்களாக பலவேளைகளில் வாயிற்று பிழைப்பிற்காக தரம் தாழ்ந்த வாழ்க்கையில் வாழும் பலரும் உதவி இயக்குனர் தயாரிப்பு பணியாளர்கள் அனைவரும் மாலை போட்டு புற்றீசல் போல ஐயப்ப சீஷன் படங்களால் நன்மை அடைகிறார்கள் .

கிறிஸ்த வட்டாரத்தில் கூட தமிழ் பாதிரிகளைப்போல வித விதமாக சீ.டி போடுபவர்கள் வெளிநாட்டிலும் கூட இல்லை . பாடத்தெரிந்தால் பாஸ்ட்டர் ; ஆடத்தெரிந்தால் அபிஷேகம் உள்ள பெரிய ஊழியக்காரன் என்று ஆளாளுக்கு 1௦௦ பேரை பிடித்து வைத்துக்கொண்டு ஜோராக பிழைப்பவர்கள் தமிழர்களே . உலகளவில் கிறிஸ்த ஊழியம் செய்து கோடிக்கணக்கில் பணம் புரளுவது ஒரு தமிழர்

இதன் பின்னணி தமிழில் உள்ள இயல் ; இசை ; நாடகப்பின்னணி . முத்தமிழால் வைதாரையும் அங்கு வாழவைப்போம் என்று கந்தரலங்கார பாடல் வரி சால உண்மையானது

இறைதொடர்பு கூட கூட தமிழில் வார்த்தை வளம் அதிகரிக்கும் . அந்த வார்த்தை கேட்கப்பட்டாலும் படிக்கப்பட்டாலும் நம் ஆத்மாவில் அருள் கூடும்

அவ்வகையில் அருள் தமிழ் வார்த்தை வளம் ; கவிநயம் ; எதுகை மோனையுடன் கூடிய பொருள் சுவை நமக்குள் வளரவேண்டுமானால் ஆண்டாளின் திருப்பாவை முதலிடம் .


திருப்பாவை 29 அப்படி ஆழ்ந்து ரசிக்கப்படவேண்டிய ஒன்று







நேரடி விண்ணப்பம் இப்பாடலில் மட்டுமே உள்ளது . தன்னை ஏற்றுக்கொள்வானா மாட்டானா என ஆசைப்படும் ஒரு பெண் எவ்வளவு நேர்த்தியாக ; தாழ்மையோடு வின்னப்பிக்கிறாள் பாருங்கள் ;

சிற்றம் சிறுகாலே ; பொற்றாமரை அடி

பிரம்மமுகூர்த்தம் என்பது மட்டுமல்ல அதன் பொருள் ; முதல்மரியாதை துயில் எழுந்தவுடன் உனக்குத்தான் . பொற்றாமரை அடியை நான் போற்றுகிறேன் அதுமட்டுமே எனது வேலை ; சலசலவென பேசி உன்னை வெறுப்பேத்தமாட்டேன் ; ஏன் என்று நீதான் கேட்டுக்கொள்ள வேண்டும் . அப்படி கேட்டால் ஒரு ஒரு வார்த்தை பேசிக்கொள்கிறேன்

பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்தவன் நீ . பாலூட்டி என்ற வகை உயிரினத்தை பெற்றம் – எவ்வளவு அழகான வார்த்தை
பாலூட்டிகள் தன் வயிற்றில் கருவை சுமந்து ; பெற்ற பிறகு எனக்கென்ன என இருந்து  விடாது . குட்டிகள் ஆளாகி சொந்தக்காலில் நிற்கும் வரை வளர்த்து காக்கும் . தன் குட்டிகள் எவ்வளவு குற்றம் செய்தாலும் தாங்கி திருத்தி பக்குவம் கொடுக்கும் .
பிள்ளை மனம் கல்லாக இருந்தாலும் பெற்ற மனம் பித்தாக இருக்கும் . பிள்ளை பள்ளத்தில் போய் விழுவேன் என மாயையில் அறிவிழந்து போகாத போகாத என கெஞ்சும் பெற்றோர்களை எட்டி உதைக்கும் . போய் விழுந்தால் தாய்க்கா நோவு ? விடு கழுத போகட்டும் என்று பெற்றோர்கள் இருந்து விடுகிறார்களா ?

பாலூட்டும் மிருகங்களே அப்படிப்பட்டவை என்றால் அதை மேய்க்கும் குலத்தில் பிறந்த நீ எங்களை கைவிட்டு விடுவாயா ?

சற்குரு இயேசுவும் கூட தன்னை நல்ல மேய்ப்பன் என்றுதான் சொன்னார் நல்ல மேய்ப்பன் தன் ஆடுகளுக்காக தன் உயிரையும் கொடுப்பான் என்றார் . காணாமல் போகாத 99 ஆடுகள் பத்திரமாயிருப்பதை கண்டு சந்தோசப்படாமல் காணாமல் போன ஒரே ஒரு ஆட்டின் நிமித்தமாக கவலைகொண்டு ராப்பகலாக தேடி அலைவான் என்றார் . ஆம் ஆயர் குலத்தோனின் இயல்பு அது . அவன் தனது கிடையின் மீது அவ்வளவு அக்கறை வைத்திருப்பான் . ஆனாலும் சீடன் எப்படி இருக்கவேண்டும் ?

அதிகாரிகளின் கையை பிடித்து கையெழுத்து போட வைக்கிரவனே சிறந்த நிர்வாகி . அதிகாரியிடம் போய் அதைச்செய் இதைசெய் என்று கேட்டால் ; ம் அப்படியா நான் செய்யமாட்டேன் போ என விரட்டி விடுவார் . அவரது அறிவு தெளிவால் அவர் கண்டுபிடித்து அவர் செய்யச்சொன்னதுபோல சூழ்நிலையை நாம் உருவாக்க வேண்டும் . இதற்கு நாம் பேசும் வார்த்தைகளும் அணுகுமுறையும் மிகவும் முக்கியம் .

ஆண்டாளின் வார்த்தைகளில் அதிகாரியிடம் காட்டுகிற அணுகுமுறை இருக்கிறது . தலை சிறந்த குருபக்தி ஆத்மாவின் முன்னேற்றத்தை உறுதிப்படுத்தும் . குருவிடம் இருக்கும்வரை அடிமையைப்போலத்தான் இருக்கவேண்டும் , கெட்ட குருமார்களிடம் கூடவா என்று கேள்வி கேட்குமளவு பல நிகழ்வுகள் தற்போது உள்ளன . 



ஆனால் நான் ஒன்றே ஒன்று சொல்வேன் . கடவுளுக்கு கீழ்படிவதாக நினைத்து கெட்ட குருவுக்கும் நாம் சேவை செய்யவேண்டும் . குரு அப்படிப்பட்டவர் ஆகா ஓகோ என குருபெருமை பேசி சேவை செய்தால் அந்த குருவிடம் உள்ள தீய இயல்புக்கும் நாம் கப்பம் கட்டித்தான் ஆகவேண்டும் . மாறாக இறைவனுக்காக குருவிடம் மரியாதை காட்டினால் அவர் கெட்ட குரு என்றால் இறைவன் நம்மை அவரிடமிருந்து கை மாற்றி விட்டுவிடுவார்
இங்கோ பரந்தாமன் ஆண்டாளின் குரு . அவன் கடவுளை அடுத்த நான்கு அதிதேவர்களில் - சற்குருநாதர்களில் ஒருவன் . அதிலும் மூத்தவன் . அவனுக்குள் தான் மற்ற மூவரையும் கடவுள் படைத்துள்ளார் அவன் தவறேதும் இல்லாதவன் . மட்டுமல்ல மணவாளனும் கூட . அவனை சரணடைந்தே முழுமை அடைந்தாக வேண்டும் .

ஆயினும் நம் குறை அவனுடன் கலக்க விடாது தடுக்குமே . குறைகள் நம்மிடமிருந்து களையப்பட ; பரிசுத்தமடைய உள்ள ஒரு வழி குரு சேவை . குருவால் ஏவல் வேலை வாங்கப்பட்டால் பாவம் பல மடங்கு தீர்ந்து பத்து பிறவிகளை ஒரே பிறவியில் கடந்து விட முடியும் . அதற்கும் கொடுப்பினை வேண்டும் . 


கசவனம்பட்டி நிர்வாண சாமியாரை பார்க்க ஒரு கூட்டம் உட்கார்ந்திருக்குமாம் . அவர் வெளியே வந்து அந்தப்பக்கம் நிற்பாராம் . அந்தக்கூட்டம் அப்படியே மாறி நம்மை பார்க்கமாட்டாரா என  நிற்கும் . வெயிலில் காய விட்டுவிடுவார் . அவரை ஒரு ஒரு முறை பார்த்தால் வந்த காரியம் நிச்சயம் நிறைவேறுமாம் . அல்லது முன்னேற்றம் கட்டாயம் இருக்குமாம் .

என் குருநாதர்களில் ஒருவரான நாமக்கல் மகான் சட்டம் படித்துவிட்டு தொழிலில் சோபிக்க முடியாமல் ; இது பாவம் அது பாவம் என்று உலகத்தோடு ஒட்டி வாழமுடியாமல் தகப்பனுக்கு பிரியமற்ற பிள்ளையாக இருந்தாராம் . அப்போது கசவனம்பட்டியாரை கேள்விப்பட்டு அவரைப்பார்க்க போனாராம் . அவருக்கு முன்ஷிப் உத்தியோகம் கிடைத்ததாம் . மாவட்ட நீதிபதியாகி ஓய்வு பெற்றார் .

ஞானிகளுக்கு நாமாக முன்வந்து சிறு சிறு தொண்டூளியம் செய்யவேண்டும் . அதிலும் அவர்கள் ஏதேனும் ஏவல் செய்தால் இறைவனுக்கு செய்வதாக நினைத்து கையால் இட்ட பணியை நாம் தலையால் செய்து முடிக்கவேண்டும் பல பிறவி பாவம் தீர்ந்து விடும் . ஆண்டாளும் ஆயர் குலத்தில் பிறந்தவனே ; எங்களை குற்றேவல் வாங்காமல் இருந்து விடாதே என்கிறார் . உமக்கு அடிமையானோம் உம்மை சரணடைந்தோம் . இன்னைக்கு அல்ல எழேழு பிறவிக்கு பிறகும்கூட பார்த்துக்கொள் ; உனக்கு நல்ல அடிமையா இல்லையா என்பதை .
நான் செய்ய வேண்டியது எதுவோ அந்த எளிய வழியை கண்டுகொண்டேன் ; அதை நான் செய்தும்விடுவேன் ; மற்றபடியாக எனது காம குரோதாதி மாயைகளை மாற்றி என்னை பக்குவப்படுத்துவது ; முழுமைப்படுத்துவது உனது வேலை ; என் வேலை கிடையாது ; என்னாலும் அவ்வளவு லேசாக விடவேண்டியத்தை விட முடியாது ; ஆனாலும் அதை விடவைப்பது சற்குருவே உமது வேலை ; எப்படியாது என்னை முழுமையாக்கி விடுக .


நாராயணன் நாமத்தினாலும் சிவனின் நாமத்தினாலும் சேஷனனின் நாமத்தினாலும் நாராயணியின் நாமத்தினாலும் கடவுள் தங்களையும் தங்கள் குடும்பத்தாரையும் தமது அருளால் நிரப்ப வேண்டுகிறேன்


அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி





Sunday, April 19, 2015

திருப்பாவை 24



திருப்பாவை என்பது ஆண்டாள் என்ற ஒரு வசதியான தமிழ்ப்பெண் வேலை வெட்டி இல்லாததால் எழுத்தாக்கம் என்ற சுய திருப்திக்காக பாடியதல்ல ; கவிதாயிணி என்ற பட்டத்தை போட்டுக்கொண்டு தத்து பித்து கண்டேன் காதல்கொண்டேன் தவித்தேன் தடுமாறி தடுமாறி விழுகிறேன் என கணவர் காசில் புத்தகம் போட்டு புகழ் தேடுகிற  ரகமும் அல்ல

முன்பே சொல்லியிருக்கிறேன் ; ராமாவாதாரத்தில் சீதையாக அவதரித்த பூமியின் வியாபகம் ஒரு ஆத்மாவாக பூமியில் வந்து விட்டதால் நிறைவடைய வேண்டி அந்த பரந்தாமனை பாடி துதித்து பக்தி ரசத்தை மானுடர்களுக்கும் கொடுத்து தானும் முழுமையடைய  ஆண்டாளாக அவதரித்தது

பக்திரசம் மட்டுமல்ல ; ஞான ரகசியங்களும் ஆங்காங்கே அள்ளித்தெளித்திருப்பார் .

ஸ்ரீகிரிஷ்ணரே ராமாராக வந்தவர் என்பதை ஆண்டாளும் வெளிப்படுத்தினார் ; அதுமட்டுமல்ல கிருத யுகத்தில் சிவனார் அறிமுகப்படுத்திய மாயோன் சேயோன் குரு வழிபாட்டில் சேயோன் என முன்னறிவிக்கப்பட்ட முருகன் ; வேறு யாரோ அல்ல மாயோன் பூமியில் யுகங்கள் தோறும் அவதரித்து வரும் அவதாரம் என்பதின் முன்னறிவிப்பு என்பதையும் ஆண்டாள் வெளிப்படுத்தியுள்ளார்

திருப்பாவை 24 ல் இவ்விவரங்கள் உள்ளது



அன்று இவ் உலகம் அளந்தாய் அடி போற்றி
சென்றங்குத் தென் இலங்கை செற்றாய் திறல் போற்றி
பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றிகன்று குணில் ஆவெறிந்தாய் கழல் போற்றி
குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றிவென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி
என்றென்றும் உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்இன்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்         24



மாபலி சக்கரவர்த்திக்கு தானம் செய்கிறேன் என்ற சுயமகிமையே தடையாகி விடுகிறது . சுயத்தை நிக்கிரகம் செய்தால் ஒழிய அவருக்கு முழுமை கொடுக்க முடியாது . ஆகவே திரிவிக்ரமனாக  வந்த பரமாத்மா ; ஜீவாத்மாவின் ஆணவம் , கன்மம் , மாயைகளை வெற்றிகொள்ள மூவடி கேட்டு ஒரே அடியில் உலகம் முழுவதும் அளந்தார் . அடுத்த அடியிலோ பிரபஞ்சம் முழுவதும் அளந்து விட்டார் மூன்றாவது அடிக்கோ இடமில்லை . தன்னை அவருக்கு கீழ்படிதலுள்ளவானாகி அவரின் பாதத்தில் ஒன்றுவதைத்தவிர வேறு வழி இல்லாமல்போகிறது .

ஒரு ஆத்மா உலகம் முழுவதையும் அறிந்து கடந்தாலும் பிரபஞ்ச ரகசியங்கள் அனைத்தும் அறிந்து தெளிந்தாலும் பரமாத்மாவோடு ஒன்றி கடவுளுக்கு கீழ்படிதலுள்ள பக்தியை கற்றுக்கொள்ளா விட்டால் முழுமை என்பது இல்லை

சகல ஆத்மாக்களின் அடிப்படையான பரமாத்மாவானவர் சற்குருவாக சகலருக்கும் எது தேவையோ அதை படிப்படியே கற்றுக்கொடுத்து முழுமையடைய செய்வார் . இது அவரது பணியாக இருக்கிறது . அதனால்தான் அடி போற்றி என்கிறார்

இலங்கைக்கு ராமர் செல்லவேண்டியது அவரது அவதார நோக்கம் . சீதையை ராவணன் தூக்கி சென்றது ஒரு கருவி – உளவு . ராவணன் மாபெரும் தபஸ்வி . அவருக்கு அழிவு அவரது அடியிலிருந்தே சீதை என்ற மகளாக முழைத்தது . ராவணனும் அறிவார் .

அவரால் கடலில் விடப்பட்ட குழந்தை சீதை என்பது . குழந்தையை பாதுகாக்க தன்னால் தவம் செய்து பெறப்பட்ட சிவதனுஷையும் உடன் வைத்தே பேழையை கடலில் விட்டார் . அந்த சிவதனுஷை ராமர் முறித்தபோது மற்றொரு சிவதனுஷை வைத்திருந்த பரசுராமர் மற்றொரு வில்லையும் உன்னால் முறிக்க இயலுமா என கேள்வி கேட்கவில்லையா ?

ஏனென்றால் அப்படிப்பட்ட ஒரு நபர் பரமாத்மாவின் அவதாரமாக மட்டுமே இருக்கமுடியும் என்பதை பரசுராமரும் அறிவார் . அதை சோதித்து உறுதி செய்துகொண்டார் . இவ்விசயம் ராவணனுக்கும் தெரிந்தேதான் இருந்தது . சீதையை கவர்ந்து சென்று காவல் செய்தாரே தவிர அவர் சீதையை கெடுக்க முயலவே இல்லை . மகளை வனவாசத்தின் கொடுமையிலிருந்து காப்பதும் ஒன்று . மற்றொன்று கிருத யுகத்தின் முடிவு காலங்களில் உலகத்தில் தன்னிச்சையாக வளர்ந்த ஒரு கோட்பாடு – மதமாச்சரியம் சைவம் மட்டுமே உண்மை – சிவன் மட்டுமே கடவுள் என்ற கொள்கை .

சிவன் பூமியில் இருந்து வழிநடுத்தும் வரை பூமி முழு தர்மத்தில் இருந்ததாகத்தான் சகல வேதங்களும் – குரானும் கூட ஒப்புக்கொள்கிறது . ஆனால் சிவன் வைரவனாக ஒளி சரீரம் அடைந்து பரலோகம் சென்று ருத்ரன் ஆன பிறகு பூமியில் அவரை குருவாக – குலதெய்வ வழிபாடாக வைத்து வழிபட ஆரம்பித்தார்கள் . அப்போது அவர் சொல்லி வைத்த மாயோன் சேயோன் மூலமாக கடவுளை வழிபடும் முறையை முற்றிலும் ஒதுக்கி விட்டு சிவனை மட்டுமே வழிபடும் முறையை மனிதர்கள் உருவாக்கிக்கொண்டார்கள் . அவர்கள் மாயோனின் தயவு தேவையில்லை என்பதுபோல உதாசீனம் செய்யும் நடைமுறையும் – சைவ வைணவ மதச்சண்டைகளும் வந்து விட்டது . வைணவம் மற்றும் சதுர்வேதங்களுக்கு ஆசானான வியாசரை சைவத்தில் ஒதுக்கி வைத்து சைவசித்தாந்தங்களை மட்டு கடைபிடித்தால் போதும் என்கிற மதமாச்சாரியம் ஆரம்பித்த காலம் இது .

சிவனிடம் வரம் பெற்றவர் என்ற முறையில் சைவவெறியை இலங்கையை தலைமையகமாக வைத்து ராவணன் முன்னின்று உலகத்தில் நடத்திக்கொண்டிருந்தார் . இமய மலை வரை ராவணனின் ஆட்கள் சென்று சதுர் வேதத்தை கற்பிக்கவும் வளர்க்கவும் செய்த வசிஸ்ட்டர் விசுவாமித்ரர் போன்றோரின் ஆசிரமங்களை தாக்கியும் வந்தார்கள் .
ஆகவே இதை சரி செய்ய ராவணாதிகளின் கொட்டத்தை அடக்கவே ராமர் அவதரிக்க வேண்டும் என்ற வேண்டுதல் இம்முனிவர்களால் ஏறெடுக்கப்பட்டு ராமர் அவதரித்தார் . ஆக ராம அவதாரமே குலதெய்வமான சிவனின் மூலமாக கடவுளை வழிபடுவது என்ற முறையை குலதெய்வத்தை மட்டும் வழிபடுவது என்பதாகவே மாற்றிக்கொண்டார்களே அந்த தவறை  சரி செய்வதுதான் .


சீதையை ராமர் மணக்கும் முன்னமே முனிவர்களின் ஆசிரமங்களை தாக்க வந்த இலங்கையர்களை ராமர் அழித்தார் என்ற செய்தி ராவணனுக்கு தெரியாமலா இருந்திருக்கும் . அப்போதே பகை ஆரம்பித்து விட்டது

சிவதனுசோடு கடலில் விடப்பட்ட குழந்தை சீதையாக வளர்ந்திருக்கிறது என்ற விபரம் ஆரம்பத்தில் ராவணனுக்கு தெரியாமல் இருந்திருக்கலாம் ; ஆனால் சுயம்வர செய்திகளும் பரசுராமரிடம் இருந்த சிவனின் வில்லையும் ராமர் உடைத்தார் என்ற சேதியையும் ராவணன் அறிந்தபோது தனக்கு அழிவை தரும் சீதை தனது முரண்பாடான ராமருக்கு மனைவியும் ஆகி விட்டாள் என்பது இன்னும் ஆத்திரத்தை உண்டாக்கி விட்டது . சீதையும் ராமரும் சேர்ந்திருந்தால் தனக்கு விரைவில் அழிவு வரும் என்பதும் அவர்களை மறைத்து பிரித்து வைக்கவேண்டும் என்ற முடிவுக்கு ராவணன் வந்தது . கவணியுங்கள் வெளிப்படையாக சண்டை செய்து சீதையை தூக்கி செல்வதற்கு பதிலாக மறைவாக யார் என்று தெரியாமலும் எங்கு சீதை இருக்கிறாள் என்பது வெளிப்படாமல் இருக்கவேண்டும் என்றுதான் ராவணன் தூக்கி சென்றார் . ராவணன் பெரும்படையோடு வந்து காட்டில் தனியே இருந்தவர்களை தாக்கி சீதையை கொண்டு சென்றிருக்க முடியும் . அப்படி செய்தால் உடனே ராமர் ராவணனுடன் யுத்தம் செய்வார் ; ஆனால் காலத்தை நீடித்து சீதையை கண்டுபிடிக்கவே ராமர் அலையட்டும் என்றுதான் களவாக எடுத்தது ; ஆனாலும் சில சாட்சிகளால் ராவணனைப்பற்றிய சேதி வந்தது ; இருப்பினும் அனுமனை ரகசியமாக அனுப்பி உறுதி செய்யவேண்டியிருந்தது

இவைகளை நிதானித்தீர்களானால் சீதையின் நிமித்தமாக இச்சண்டை வரவே இல்லை . குலதெய்வத்தை மட்டும் வழிபட்டு விட்டு இறைவனை வழிபாடாமல் இரட்டடிப்பு செய்யும் தவறை  சரி செய்ய உண்டானதே இந்த யுத்தம் .

சிவனை குலதெய்வமாக வழிபட்டதோடு தங்கள் முன்னோர்கள் யாரெல்லாம் நன்கு வாழ்ந்தார்களோ அவர்களின் சமாதியின் மீது லிங்கம் ஒன்றை வைத்து இவரும் ஈஸ்வரனாகி விட்டார் என அவரது பேருடன் ஈஸ்வரன் என்று சேர்த்து கோவில் கட்டும் பழக்கம் வந்துவிட்டது

ராவணனும் தனது பெயருடன் ஈஸ்வரன் என்ற நாமத்தை தரித்துக்கொண்டான் . இவைகளை மாற்றி சிவனின் மூலமாகவும் நாராயணன் மூலமாகவும் கடவுளை வழிபடும் நெறியை உருவாக்க வந்தவரே ராமர் . இலங்கையில் அசுர ஆவிகளின் ஆதிக்கத்தை அழிக்கவே ; சரியான நெறியை வளர்க்கவே விபீசனருக்கு ஸ்ரீரெங்க மூர்த்தம் வழங்கப்பட்டது . ஆனால் அது காவிரிக்கரையில் தங்கி இலங்கை போய்ச்சேரததும் இன்று வரை அசுர ஆவிகள் இலங்கையின் நிம்மதியை கெடுத்து வருகின்றன .

என் சிறு வயதில் எனக்கு உண்டான ஒரு கணவு - தரிசனம் பசுமையாக நினைவில் உள்ளது . இலங்கை கடலுக்கு இக்கரையில் நின்று கொண்டிருக்கிறேன் . விதவைக்கோலத்தில் உள்ள தாயார் ஒருவர் என்னிடம் கை எடுத்து கும்பிட்டு தாண்டி வாருங்கள் என்று கெஞ்சுகிறார்கள் . ரெம்ப சின்ன வயது ; எனக்கு ஒன்றுமே புரியவில்லை . 

ஒருவேளை இறைவன் என்னை இறைபணிக்கு அபிஷேகித்து நான் இலங்கைக்கு செல்லும் காலத்தில் மட்டுமே அங்கு நிம்மதி திரும்பும்போல . இந்த எண்ணம் வந்தபிறகு நான் இரண்டுமுறை சேதுக்கரை சென்று என் ஆவிமண்டல குரு ஆஞ்சநேயரின் காலடியில் அமர்ந்து இலங்கைக்காக பிரார்த்தித்தேன் ; அப்போதெல்லாம் அங்கு ஏதோ சில மாற்றங்கள் வந்துகொண்டுதான் இருக்கிறது . 

இந்த அசுர ஆவிகளை – இறைவனை வழிபடாமல் எப்படியாவது கெடுத்து பூமியில் வந்த அவதாரங்களை மட்டும் வழிபட்டால் போதும் என திரும்ப திரும்ப மனிதர்களுக்கு உபதேசிக்கும் ஆவிகளை கடிந்து கொண்டார் ராமர் . அடக்கியும் வைத்தார் . ஆண்டாளும் தென்னிலங்கை  செற்றாய் ; திறம் போற்றி என்கிறார் . கலிகாலத்தின் முடிவு வரை அசுர ஆவிகளை முற்றிலுமாக அழிக்கமுடியாது ; ஆனால் அடக்கி வைக்கமுடியும் செற்றாய் என்பதின் அர்த்தம் அதுவே

அடுத்த வரி வென்று பகை முடிக்கும் நின் கை வேல் போற்றி என்கிறார் . நாராயணன் எங்குமே வேல் வைத்திருக்கமாட்டார் . ஆனால் ஞானவேல் உடையவன் முருகன் மட்டுமே . ஸ்ரீகிரிஷ்ணர்தான் ஸ்ரீராமர் என்பதை மட்டும் ஆண்டாள் சொல்லவில்லை ; முருகனும் நீ தான் என்கிறார் .

பூமியில் வருகிற அவதாரம் என்பதை அடையாளப்படுத்தி சிவனார் முருகன் என்று சொன்னார் . அவரே தனக்கும் ஞான குரு தகப்பன் சாமி என்றார் . அவரே மாயைகளை அழித்து ஞானத்தை வழங்கும் ஞானவேலை வைத்திருக்கிறவர் . இந்த வேலால் மட்டுமே எதிரிகளான மாயைகளை அழிக்கமுடியும் . திருப்பதியில் உள்ள சிலை முருகனா ; பெருமாளா என்ற குழப்பம் இருந்ததை உலகம் அறியும் . அதை பெருமாள் என்று ராமானுஜர் ஒரு டெஸ்ட் வைத்து தீர்ப்பளித்தார் என்பது வரலாறு . ராமானுஜர் வரும் வரை சிலர் அதை முருகன் என்றும் பெருமாள் என்றும் வழிபட்டு வந்தனர் .

உண்மை என்னவென்றால் பரலோகத்தில் பெருமாள் ஆகிய பரமாத்மா எப்போதெல்லாம் மனிதனாக அவதரித்து வருமோ ராமர் கிரிஷ்ணர் இயேசு மூவரும் முருகனே . இவர்களால் பூமிக்கு கொடுக்கப்பட்ட உபதேசங்களே – வேதங்களே ஞானவேல் .

நாராயணன் நாமத்தினாலும் சிவனின் நாமத்தினாலும் சேஷனனின் நாமத்தினாலும் காமாஷியின் நாமத்தினாலும் கடவுள் தங்களையும் தங்கள் குடும்பத்தாரையும் தமது அருளால் நிரப்ப வேண்டுகிறேன்

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி






Tuesday, April 14, 2015

சித்திரைப்புத்தாண்டா ???





சித்திரையை புத்தாண்டாக கொண்டாடுவோருக்கு வாழ்த்துகள்

சூரியன் மேஷம் என்ற நட்சத்திரக்கூட்டத்தை சேர்ந்த நட்சத்திரம்

சித்திரை மாதத்தில்  மேஷ  நடசத்திர கூட்டங்களின் ஒளி சூரியன்  வழியாக  பூமியில் விழும்

எனவே சூரியன் தாய் வீட்டில் இருக்கிறது என்பதாகவும் அடுத்த மாதத்தில் சூரியன் ரிஷிப நட்சத்திர கூட்டத்திற்கு போய் விடுகிறது  எனவும் ஜோதிடர்கள் சொல்லி  சித்திரையை புத்தாண்டாக கூறுகிறார்கள்

அரைகுறை ஞானிகள் இந்த ஜோதிடர்கள் . சிலர் போட்டு கொடுத்த கணக்கை வைத்து எல்லாம் தெரிந்தவர்கள் போல அலட்டிக்கொள்ளும் மாயம் ஜோதிடர்களை எப்போதும் பிடித்திருக்கும்

சூரியன் கூட்டம் விட்டு இன்னொரு கூட்டம் போவதேயில்லை . அது எப்போதும் மேஷ கூட்டத்தில்தான் இருக்கிறது

பூமி சூரியனை சுற்றி வருவதால் பூமியிலிருந்து சூரியன் வழியாக ஒரு கோட்டை கற்பனையாக இழுத்தால் அந்தப்பக்கம் சித்திரையில் மேஷமும் வைகாசியில் ரிஷபமும் என வேறு வேறு கூட்டம் வரும் . இது பூமி சூரியனை சுற்றுவதால் உண்டாகிறது

ஆனால் சூரியன் ஒருபோதும் மேஷ கூட்டத்தை விட்டு இடம் மாறுவதேயில்லை

எனவே சித்திரை முதல் மாதம் என்பது ஒரு பொய்யின் அடிப்படையில் உருவானது

பூமி சூரியனை சுற்றி வருவதின் அடிப்படையில் உத்திராயணம் 6 மாதம் சூரியனுக்கு பூமி இடப்புறமாகவும் தட்சிணாயனம் 6 மாதம் சூரியனுக்கு பூமி வலப்புறமாகவும் சுற்றுகிறது என்பதில் உண்மை இருக்கிறது

பூமியின் வட துருவத்திலிருந்து சூரியன் தென் துருவத்தை நோக்கி 6 மாதம் பக்கவாட்டில் கொஞ்ச கொஞ்சமாக நகரும் . அப்படி தெற்கு செல்லும் சூரியன் அதை நிறுத்தி வடக்கு பக்கமாக தை மாதத்தில் திசை மாறும் .

இந்த நாள் தை மாதத்தில் நடக்கும் . அதனால் தைப்புத்தாண்டு ஆதியில் தமிழர்களாலும் உலகம் முழுவதும் ஜனவரி என்றும் கொண்டாடப்படுகிறது 

ஆனால் 4000 ஆண்டுகளுக்கு முன்பு யூதர்கள் எகிப்தில் அடிமைகளாக இருந்த போது அவர்கள் அங்கிருந்து ஏப்ரலில் தப்பி கிளம்பியதை வைத்து ஏப்ரல் புத்தாண்டு முதல் முதலில் உலகில் அவர்களால் கொண்டாடடப்பட்டது . அவர்கள் கத்தியின்றி ரத்தமின்றி எகிப்தியரை ஏமாற்றி தப்பி சென்றதால் எகிப்தியரை முட்டாளாக்கினோம் என ஏப்ரல் முட்டாள் தினத்தையும் கொண்டாடினார்கள் ஏப்ரல் பூல்

அந்த யூதர்களின் ரத்த உறவுகளான நம்மூர் பிராமணர்கள் அங்கிருந்து வந்து இந்தியாவில் பூசைத்தொழில் செய்ததால் இந்து வேதத்தை தங்கள் வேதம் போல கைப்பற்றிக்கொண்டு அதை மறந்து விட்ட திராவிடர்களை ஆழுமை செய்த போது சந்தடி சாக்கில் தங்களின் புத்தாண்டான யூத விடுதலை பண்டிகையை சித்திரைப்புத்தாண்டு என இந்தியாவில் திணித்து விட்டார்கள் . அதற்கு இடம் மாறாத சூரியன் வீடு விட்டு வீடு போகிறது என்ற பொய்யை சாக்காக சொல்லிக்கொண்டனர் . ஏப்ரல் பூல் . சூரியன் எப்போதும் அதன் வீட்டில்தான் உள்ளது . பூமிதான் இடம் மாறி ஓடிக்கொண்டுள்ளது .

இந்தியா முழுவதிலும் மார்கழி கடைசி நாளை போகி பண்டிகையாக கொண்டாடுகிறார்கள் . போகி என்றால் பழையதை கழித்தல் அல்லது போக்குதல் . அதாவது அந்த வருடம் முழுவதும் சேர்ந்த பொருட்களில் வேண்டாத குப்பைகளை கழித்து தீயிட்டு கொழுத்தி விட்டு வீட்டை சுத்தம் செய்து புது வருடத்தை தையில் துவங்குவார்கள்

இன்றும் நம் தமிழகத்திலும் இந்தியா முழுவதிலும் பழையன கழித்து வீட்டை வெள்ளையடித்து தையை ஏன் துவக்குகிறார்கள் ?

ஏனென்றால் அதுவே ஆதியிலிருந்து வரும் பூர்வீக பழக்கம் . அதை செய்கிறோம்

ஆனால் அடுத்தவர் திணித்த சித்திரையை புத்தாண்டு என்று வாயிலே சொல்லிக்கொண்டுள்ளோம்

இருந்தாலும் வாழ்த்துகிறேன்

தாங்களும் தங்கள் பங்குக்கு  ஏப்ரல் பூல் என்று சொல்லிவிட்டே புத்தாண்டை கொண்டாடுங்கள்

வியாபாரிகள் ஏப்ரலில் புதுக்கணக்கு புத்தாண்டு கொண்டாடலாம்

விவசாயிகளுக்கு ஏப்ரல் பூல் உற்பத்தியாளர்களுக்கு ஏப்ரல் பூல் வியாபாரிகளுக்கு லாபம் புதுக்கணக்கு துவங்கலாம்

உற்பத்தியாளர்களும் ஏப்ரலில் புதுக்கணக்கு புத்தாண்டு கொண்டாடலாம்

தொழிலாளர்களுக்கு ஏப்ரல் பூல்  நுகர்வோருக்கும் ஏப்ரல் பூல் உற்பத்தியாளர்களுக்கு லாபம் புதுக்கணக்கு துவங்கலாம்

ஜோதிடர்கள் ஏப்ரலில் புதுக்கணக்கு புத்தாண்டு கொண்டாடலாம்

பூமி சூரியனை சுற்றுவதை ஏமாற்றி சூரியன்தான் பூமியை சுற்றி ஒவ்வொரு மாதமும் ஒரு வீட்டுக்கு போகிறது என நம்ப வைக்கவேண்டும் ஏப்ரல் பூல்



ஆனால் விவசாயிகளுக்கு உலகம் முழுவதிலும் அறுவடைத்திருநாள் ; தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் நவம்பர் டிசம்பரில் வருகிறது ; ஆங்கில புத்தாண்டும் வருகிறது . எல்லோருக்கும் வாழ்த்து சொல்லிவிட்டு தைப்புத்தாண்டு என்ற பொங்கல் திருநாளை கொண்டாடலாம் 

அவரவர் அவரவர் தரத்திற்கு வாழ்த்து சொல்லியோ அல்லது பூல் சொல்லியோ புத்தாண்டை கொண்டாடுங்கள் 

இருந்தாலும் வாழ்த்துகிறேன்








Sunday, April 5, 2015

இயேசுவும் இரண்டு திருடர்களும்





நாராயணன் கலியுகத்தில் அதுவரை அவர் அவதாரமாக வெளிப்படாத இந்தியர் அல்லாத இன மக்களுக்காகவும் இயேசுவாக யூதர்கள் மத்தியில் அவதரித்தார் .

அந்த அவதார நோக்கம் தங்களை உயர்ந்த பண்பாடு உள்ளவர்கள் என்ற கர்வத்தில் இருந்த ஆப்ராகாமிய வாரீசுகளை சரிப்படுத்துவது என்பது மட்டுமல்ல ; உலகம் தழுவிய அனைத்து மனித இனங்களின் பாவங்களையும் பரிகரித்து பூமியில் ஒரு சமாதானத்தை ஏற்படுத்துவதும் ஒரு நோக்கம் 

குருகிய அறிவுள்ள கிறிஸ்தவ வியாபாரிகள் இயேசுவை ஏற்றுக்கொள் அவரை ஏற்றுக்கொண்டு பெயரை வெள்ளைக்கார பெயராக வைத்துக்கொண்டு தாத்தன் பூட்டன் பரம்பரையை மறந்து விட்டு நீ யாரென்றே அறியாத ஆப்ரகாம் ஈசாக்கு என் தாத்தன் என்று சொல்லிக்கொள் ; அப்போதுமட்டுமே இயேசு செய்த பாவப்பரிகாரம் உனக்கு வாய்க்கும் ; இல்லாவிட்டால் நீ செத்து உருளுவது உறுதி என்று துன்பத்தில் இருப்போரிடம் சொல்கிறார்களே ; அப்படியல்ல அவரை யாரென்றே தெரியாத சகலருக்கும் அவர் பாவப்பரிகாரம் செய்து விடுதலை ஆக்கியது உண்மையே .

கலியுகத்தின் ஆரம்ப நாட்களில் உலகம் பல நாடுகளாக – ஏன் இந்தியா கூட பல நாடுகளாக இருந்ததும் ஒவ்வொரு நாட்டினரும் திடீரென அடுத்த ஊரை தாக்கி அங்கிருக்கும் ஆண்களை கொன்றுவிட்டு பெண்களை குழந்தைகளை அடிமைகளாகவும் ; உடமைகளை கால்நடைகளை கொள்ளையடிப்பது சர்வ சாதாரணமான ஒன்றாகத்தான் இருந்தது . அதனால்தான் எப்போது யார் கொள்வான் என்று தெரியாமலும் ஈவு இரக்கம் இல்லாதவர்களாகத்தான் வெளிநாடுகள் இருந்தன

இப்படிப்பட்ட நாடுகளில் சமூக ஒழுங்கு நியதி சீர்திருத்தம் மனித நேயம் என்பது இயேசுவின் பாவப்பரிகாரத்தின் மூலமாக உண்டாக்கப்பட்ட ஆன்ம சீர்திருத்தம் என்பது நிதர்சனம் . ஐ.நா சபை எவ்வளவோ நிம்மதியை உலகில் கொண்டுவந்திருக்கிறது

இன்று அவ்வப்போது கொந்தளிக்கும் போர்கள் ; இனக்கொடுமைகள் ; தீவிரவாதங்கள் என்று இருந்தாலும் ஒப்பு நோக்கில் முந்தய காலத்தை விட மனிதர்கள் மனிதர்களுக்கு செய்யும் கொடுமைகள் குறைவு என்றுதான் சொல்ல வேண்டும் . இது இயேசுவின் பாவப்பரிகாரத்தால் அவரை அறியாத சகல மக்களுக்கும் உண்டாக்கப்பட்டது

எபேசியர் 2

1.   அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்களாயிருந்த உங்களை உயிர்ப்பித்தார்.

2.
அவைகளில் நீங்கள் முற்காலத்திலே இவ்வுலக வழக்கத்திற்கேற்றபடியாகவும், கீழ்ப்படியாமையின் பிள்ளைகளிடத்தில் இப்பொழுது கிரியைசெய்கிற ஆகாயத்து அதிகாரப் பிரபுவின் ஆவிக்கேற்றபடியாகவும் நடந்துகொண்டீர்கள்.

3.
அவர்களுக்குள்ளே நாமெல்லாரும் முற்காலத்திலே நமது மாம்ச இச்சையின்டியே நடந்து, நமது மாம்சமும் மனசும் விரும்பினவைகளைச் செய்து, சுபாவத்தினாலே மற்றவர்களைப்போலக் கோபாக்கினையின் பிள்ளைகளாயிருந்தோம்.

4.
தேவனோ இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய் நம்மில் அன்புகூர்ந்த தம்முடைய மிகுந்த அன்பினாலே,

5.
அக்கிரமங்களில் மரித்தவர்களாயிருந்த நம்மைக் கிறிஸ்துவுடனேகூட உயிர்ப்பித்தார்; கிருபையினாலே இரட்சிக்கப்பட்டீர்கள்.

இவ்வாக்கு நிச்சயமாக கிறிஸ்தவர்களாக மதம் மாறாமலேயே அனைத்து மனித குலத்திற்கும் கடவுளால் இயேசுவின் மூலமாக உண்டாக்கப்பட்டது

ராமர் வரும் போது பூமி பலதார ; பல கணவர் திருமண உறவுக்குள் இருந்தது . மேலை நாடுகளில் எப்படி திருமண குடும்ப உறவு அவ்வளவு பெரிதாக எடுத்துக்கொள்ளப்படாத நிலை இன்றளவும் இருக்கிறதோ அப்படித்தான் இந்தியாவிலும் இருந்தது . அதை ஒருவனுக்கு ஒருத்தி என்ற நியதிக்கு ராமரே கொண்டுவந்தார் . இதற்கு விலை அவர் சில ஆண்டுகள் தவிர மனைவியை பிரிந்தே வாழ்ந்தார்

கிரிஷ்ணர் வாழ்விலும் அவர் செலுத்திய விலை கொஞ்ச நஞ்சமல்ல ; காந்தாரியின் சாபத்தை நிறைவு செய்ய அவரது பிள்ளைகள் முதலான அனைத்து மனிதர்களும் அவரது துவாரகையும் கடலில் அழிய அவரே இடம் கொடுத்தார் . ராமராக இருந்த போது சூழ்நிலையால் வாலியை கொன்றதற்கு பரிகாரமாக இப்பிறவியில் அதே வாலி தவறாக எய்த அம்பை ஏற்றுக்கொண்டு மரணத்திற்கு ஒப்புக்கொடுத்தார் . அதை வாலிக்கும் தெரியப்படுத்தினார்

சகலமும் கடவுளால் யார் மூலமாக படைக்கப்பட்டுள்ளதோ அந்த பரமாத்மா – கடவுளின் வாக்கு ஆகிய நாராயணன் பூமியில் ஒவ்வொரு யுகத்திலும் அவதாரமாக வந்து பூமியை சீர் படுத்தினார்

நாராயணனே திரேதா யுகத்தில் ராமராகவும் துவாபார யுகத்தில் கிரிஷ்ணராகவும் வந்தார் . கலியுகத்தில் இயேசுவாகவும் வந்தார் .

கலியுகம் என்பது சதுர் யுகத்தில் இறுதி யுகம் . வரப்போகிற சத்திய யுகத்தில் கல்கியாக இவரே வந்து நல்லாட்சி செய்து மனித ஆத்மாக்கள் பெருந்திரளாக பரலோகத்தில் நுழையும் தகுதி அடைய செய்யப்போகிறார்

அதற்கு பல ஆத்மாக்கள் தகுதி அடைய – அல்லது அசுரர்களின் தூண்டுதளினால் பல பிறவிகளாக பல கொடுமைகளை செய்த ஆத்மாக்கள் அந்த பாவங்களிலிருந்து விடுபட ஒரு பெரிய யாகம் செய்ய வேண்டி இருந்தது . அந்த யாகமே நாராயணன் மனிதனாக – சிவபாலனாக – மனிதகுமாரானாக – இயேசுவாக வந்து சிலுவைப்பலி செய்தது

அந்தக்காலகட்டங்களில் உலகம் முழுவதிலும் கழுவேற்றும் பழக்கம் – இந்தியாவிலும் தமிழகத்திலும் கூட இருந்தது . மிகவும் கொடியவர்களை கழுவேற்றுவது என்பது நடைமுறை

கலாத்தியர் 3:13 மரத்திலே தூக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து நமக்காகச் சாபமாகி, நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கி மீட்டுக்கொண்டார்.

உலகம் முழுவதிலும் பல பிறவிகளாக மனித இனம் செய்த கொடுமைகளை அந்த மனிதன் யாருக்குள் சிருஸ்டிக்கப்பட்டானோ அந்த பரமாத்மா மட்டுமே பாவப்பரிகாரம் செய்ய முடியும் .

அனைத்து மனிதர்களும் ஜீவாத்மாக்கள் என்றால் அந்த ஜீவாத்மாக்கள் அனைத்தையும் தன்னகத்தே கொண்ட பரமாத்மாவுக்கும் அந்த பாவங்களில் பங்குண்டு

ராமராக இருந்த போது வாலியை அம்பெய்து கொன்ற பாவத்திற்கு கிருஷ்ண அவதாரத்தில் அதே வாலியின் அம்பை அவர் ஏற்றுக்கொண்டார் என்றால் அந்த பரமாத்மா அனைத்து ஜீவாத்மாக்களின் பாவத்திற்கும் விலை செழுத்த வேண்டாமா ? செழுத்தினார் . நாம்தான் மதக்கண்ணாடி என்ற மாயையால் அவர்தான் இயேசு என்பதை உணராமல் இருக்கிறோம் ; அல்லது கிறிஸ்தவர்கள் என்கிறவர்கள் செய்கிற மத மாய்மாலத்தால் இயேசுவையும் சேர்த்து பகைக்கிரவர்களாக இருக்கிறோம் . நிச்சயமாக கிறிஸ்தவர்கள் இயேசுவிடம் குத்தகை எழுதி வாங்கவில்லை என்பதை மட்டும் உறுதியாக ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்

இயேசு யூதர் – மத்திய ஆசிய கண்டத்தை சேர்ந்தவர் ; ஆனால் ஐரோப்பியர்கள் இயேசுவை ஐரோப்பியர் போல சித்தரித்து குத்தகைதாரர்களாக நடந்து கொண்டு இனவழிப்பு அல்லது வெள்ளைக்காரமயமாக்கல் என்ற கலாச்சார சீர்கேட்டை செய்து வருகிறார்கள் .

காந்தியின் மூலமாக பிரபலப்பட்ட  சமரச வேதம் – அதன் முழு வீச்சை அடைந்து உலக மதங்கள் அனைத்தையும் தனக்குள் அடக்குவது மட்டுமே இந்த கலாச்சார சீகேட்டுக்கு மருந்து ; மாறாக இந்து மத வெறியைக்கொண்டு பிற மதங்களை பழிப்பது தீர்வாகாது  

இயேசுவின் பாவப்பரிகாரத்தை கிரிஸ்தவர்களாகமலேயே மிக உச்சமாக நமது ஆத்மாவிற்கு பயனுள்ளதாக ஆக்கிக்கொள்ள ஒவ்வொரு மனிதனாலும் முடியும்

அதற்கு சிலுவைப்பலி நடந்த போது நடந்த நிகழ்வுகள் அங்கு பேசப்பட்ட வார்த்தைகளில் படிப்பினை உள்ளது


லூக்கா 23 


31. பச்சைமரத்துக்கு இவைகளைச் செய்தால், பட்டமரத்துக்கு என்ன செய்யமாட்டார்கள் என்றார்.

32.
குற்றவாளிகளாகிய வேறே இரண்டுபேரும் அவரோடேகூடக் கொலைசெய்யப்படுவதற்குக் கொண்டுபோகப்பட்டார்கள்.

33.
கபாலஸ்தலம் என்று சொல்லப்பட்ட இடத்தில் அவர்கள் சேர்ந்தபொழுது, அவரையும், அவருடைய வலதுபக்கத்தில் ஒரு குற்றவாளியையும், அவருடைய இடதுபக்கத்தில் ஒரு குற்றவாளியையும் சிலுவைகளில் அறைந்தார்கள்.

34.
அப்பொழுது இயேசு: பிதாவே இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார். அவருடைய வஸ்திரங்களை அவர்கள் பங்கிட்டுச் சீட்டுப்போட்டார்கள்.

35.
ஜனங்கள் நின்று பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவர்களுடனே கூட அதிகாரிகளும் அவரை இகழ்ந்து: இவன் மற்றவர்களை இரட்சித்தான், இவன் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட கிறிஸ்துவானால் தன்னைத்தானே இரட்சித்துக்கொள்ளட்டும் என்றார்கள்.

36.
போர்ச்சேவகரும் அவரிடத்தில் சேர்ந்து, அவருக்குக் காடியைக் கொடுத்து:

37.
நீ யூதரின் ராஜாவானால், உன்னை இரட்சித்துக்கொள் என்று அவரைப் பரியாசம்பண்னினார்கள்.

38. 
இவன் யூதருடைய ராஜா என்று, கிரேக்கு லத்தீன் எபிரெயு எழுத்துக்களில் எழுதி, அவருக்கு மேலாக வைக்கப்பட்டது.

39.
அன்றியும் சிலுவையில் அறையப்பட்டிருந்த குற்றவாளிகளில் ஒருவன்: நீ கிறிஸ்துவானால் உன்னையும் எங்களையும் இரட்சித்துக்கொள் என்று அவரை இகழ்ந்தான்.

40.
மற்றவன் அவனை நோக்கி: நீ இந்த ஆக்கினைக்குட்பட்டவனாயிருந்தும் தேவனுக்குப் பயப்படுகிறதில்லையா?

41.
நாமோ நியாயப்படி தண்டிக்கப்படுகிறோம் நாம் நடப்பித்தவைகளுக்குத்தக்க பலனை அடைகிறோம்; இவரோ தகாததொன்றையும் நடப்பிக்கவில்லையே என்று அவனைக் கடிந்துகொண்டு,

42.
இயேசுவை நோக்கி: ஆண்டவரே, நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும் என்றான்.

43.
இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.

44.
அப்பொழுது ஏறக்குறைய ஆறாம்மணி நேரமாயிருந்தது; ஒன்பதாம்மணி நேரம் வரைக்கும் பூமியெங்கும் அந்தகாரமுண்டாயிற்று.

45.
சூரியன் இருளடைந்தது, தேவாலயத்தின் திரைச்சீலை நடுவில் இரண்டாகக் கிழிந்தது.

46.
இயேசு: பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டுச்சொன்னார்; இப்படிச் சொல்லி, ஜீவனைவிட்டார்.

47.
நூற்றுக்கு அதிபதி சம்பவித்ததைக் கண்டு: மெய்யாகவே இந்த மனுஷன் நீதிபரனாயிருந்தான் என்று சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினான்.


மனிதர்கள் அனைவரும் மரணம் என்ற தண்டனையை பல பிறவிகளாக அனுபவித்து வருகிறோம் ; மிகுந்த செல்வந்தன் கூட யார் சந்தோசமாக மரணத்தை எதிர்கொள்கிறார்கள் . குடும்பத்தில் அந்தக்குறை இந்த குறை ; இதை சரிப்படுத்தி விட்டு செத்தால் பரவாயில்லை என்றுதான் காலத்தை நீடிக்க ஆசைப்படுகிறார்கள் ; அந்தளவில் மரணம் ஒரு குறை ; தண்டனை அல்லது விரும்பத்தகாத விசயமாக உள்ளது . மரண பயத்தை விட கொடுமையானது எதுவுமில்லை

மரணமில்லா பெருவாழ்வு பெற்று நித்திய ஜீவன் அடைவதே மனிதனுக்கு உள்ள முடிவான இலக்காகவும் இருப்பதும் இந்த மரணம் அவனது நேர் எதிரியாக இருக்க காரணமாக உள்ளது

நித்திய ஜீவன் இல்லாத மனிதன்  பட்டமரம் . அவனது ஜீவாத்மா பல முறை மரணத்தை ருசி பார்த்து பல பிறவி எடுத்து உலன்று கொண்டே இருக்கிறது . தனது ஆத்மா அழிவற்றது ; சரீரம் அழிந்து பிறவி மாறுமே தவிர தான் அழிவற்றவன் ; ஆத்மா என்பது கூட உணராத இயல்பில் இப்பிறவியின் பிரச்சினைகளை சிந்தித்து நொந்து கண்ணீர் வடிக்கிறது

முதுமை வந்து நோய் வந்த பின்னும் பிள்ளைகளை முன்னேற்றும் முன்னாள் பொய் விடுவோமோ என்ற பயம் வந்து விடுகிறது

புதிய பணக்காரனாக சில வருடங்களில் சம்பாதித்த நபர் கூட போதும் என்று பண விவகாரங்களில் இருப்பதில்லை . ஏனென்றால் பிள்ளைகள் விவரமில்லாமல் இருந்துவிட்டால் கூட பல பிறவிக்கு அவர்கள் உட்கார்ந்து கொண்டு சாப்பிட சொத்து சேர்க்கவேண்டுமாம் .

இந்த லவ்கீக மனிதன் இப்படியென்றால் ஆன்ம வாழ்வுக்குள் வந்தவர்களையும் பல மாயைகள் ; விட வேண்டும் என்று அறிவு சொன்னாலும் உணர்வு வயப்பட்டு விட முடியாமல் திரும்ப திரும்ப பலகீனத்தில் விழுவது . மெல்லவும் முடியாமல் கொள்ளவும் முடியாமல் இடையில் போராடிக்கொண்டிருப்பது ; என்றைக்கு இவ்விசயத்தில் தேரிவிட்டோம் ; ஆத்மா இவ்விசயத்தில் தூய்மை அடைந்து விட்டது என உறுதிப்படுவது

இப்படியே உலக வாழ்வு மன உலைச்சளுக்கு உரியதாகவே இருக்கிறது . பட்ட மரமான மனித ஆத்மாவுக்கு எதுவெல்லாம் இந்த உலகத்தில் நேருமோ அவைகள் அனைத்தையும் பச்சை மரமான அந்த பரமாத்மாவும் ஏற்றுக்கொண்டது .

ஜீவாத்மாக்கள் சுய தகுதி அடைந்து முழுமையடையும் என்பது உலகில் நடவாத காரியம் . எவ்வளவுதான் பார்த்து பார்த்து நடந்தாலும் ; நமது வாழ்வு எல்லோருக்கும் நன்மை பயப்பதாக இருக்கவே இருக்காது ; யாரோ சிலருக்கு அது கெடுதல் என்பதாகத்தான் வந்து சேரும் . எந்த நிலையிலும் நாம் பழிபாவத்திற்கு ; வசைக்கு உரியவர்களாகத்தான் இருப்போம்

கடவுளின் அடியவர்களாக – வாயாக இருந்து அவர்களின் காலத்தில் உலகம் உய்ய காரணமாக இருந்த மகான்கள் ; இறைமனிதர்கள் சென்று போன பிறகு அவர்களின் உபதேசத்திற்கு புதிய அர்த்தம் சீடர்கள் கற்பித்து மதங்களின் பேரால் எத்தனை கொடுமைகள் செய்கிறார்கள் . அந்தக்கொடுமையால் மாற்று மதக்காரர்கள் அந்த இறைமனிதர்களையும் வசை பாடுவது ; அவர்களின் வாழ்வை கொச்சைப்படுத்தி பேசுவதை தவிர்க்க முடிகிறதா ?

கடவுள் ஒருவரைத்தவிர நீதிபரர் என்று ஒருவர் இருக்கவே முடியாது என்று இயேசுவே கூறியுள்ளார் . ராமரும் கிரிஷ்ணரும் பல பழிபாவத்திற்கு ஆட்பட்டுத்தான் இருந்தார்கள்

மத்தேயு 19:17 அதற்கு அவர்: நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவரைத்தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே;

அல்லாமலும் ஒரு பெரிய உண்மை ; எந்த மனிதனும் தன்னை ஒருபோதும் முழுமையடைந்து விட்டேன் என கூறவே முடியாது . ஒரு உண்மையை கண்டறிந்தாலும் அதிலிருந்து விடுபட்டோம் என சொல்லமுடியாது . பல பிறவிகளாக அது தொடர்பாக நாம் அனுபவித்த பதிவுகள் அவ்வளவு எளிதாக ஆத்மாவை விட்டு சுத்தமாகாது

நாம் உலகில் கேள்விப்படுகிற படிக்கிற காண்கிற அக்கிரமங்கள் அனைத்தும் எப்பிறவியிலாவது நாமும் செய்த விவகாரமாகத்தான் இருக்கும் . அது ஆத்மா உள்ளே போய் மெதுவாக வலுவாகி சந்தர்ப்ப சூழ்நிலையில் நம்மை மடக்கி வீழ்த்தி விடும் . நாம் கேள்விப்படுகிற தீமைகள் அனைத்திற்கும் ஐயோ நானும் இப்படி செய்தேனா என கடவுளிடம் மனஸ்தாபப்பட்டு பிரார்த்தனை செய்வது ஒன்றுதான் பரிகாரமே தவிர சீ இப்படியெல்லாம் எதுக்குத்தான் அக்கிரமம் செய்கிறார்களோ என அடுத்தவரைப்பற்றி எண்ணினால் அதே போல ஒன்றை நானும் செய்யும்படியாக சிக்கல்கள் சூழ்நிலை உண்டாகி போராடி மாயும்படியாக பல முறை அனுபவத்தை இறைவன் உண்டாக்கியிருக்கிறார்

நாம் அறிந்து சமீபத்தில் முழுமையடைந்த ஒருவர் வள்ளலார் . அவர் கூட நான் அந்த பாவம் செய்தேனா இப்படி நடந்தேனா என கடவுளிடம் புலம்புகிற பாடல்கள் உண்டு . அது அவர் கற்பனையில் எழுதியது இல்லை . உலகப்பவங்கள் எவைபற்றியும் நாம் கேள்விப்பாடாலே அது ஒரு பிறவியில் நாம் செய்தது என அர்த்தம் . நாம் செய்யாத எதுவும் நம் கவணத்தை ஈர்க்காது

அல்லாமலும் ஒன்று தவறு என ஒதுக்கி வைப்பதும் விரதம் இருப்பதும் ஆன்ம வாழ்வின் மிக ஆரம்ப நிலையே . அது ஆத்மாவுக்கு ஒரு பயிற்சி என்பதற்கு அதிகமாக பலன் விளையாது

ஓரளவு ஒரு விசயத்தில் தேறிய பிறகு அந்தத்தவறு செய்பவர்களுடன் இருந்து கொண்டே தவறை மட்டும் செய்யாமல் இருக்கும் பக்குவத்தை பெரும்படியாக இறைவன் நடத்துவார்

கீதையில் சத்வ குணமும் இறுதியில் விட வேண்டிய ஒன்று என குறிப்பிடப்பட்டிருக்கும் . நன்மை என்ற குணமும் கடந்து நன்மை தீமை களுக்கு நடுவில் எவ்வித பாதிப்பும் வித்தியாசமும் இல்லாமல் இருக்கும் சாத்வீகம் என்றொரு நிலை வந்தடைந்தாக வேண்டும் . அப்போது உலகின் சகல பாவங்களுடனும் அவர்களை குற்றப்படுத்தாமலும் அதை செய்யாமலும் நல்லிணக்கமாக இருக்கும் ஒரு நிலை வரும் . இது நாமும் இப்படிப்பட்ட பாவங்களை உணர்வு வரும்வரை செய்தவர்கள்தான் ; மனித இயல்பு பலகீனமுள்ளதுதான் ; இறைவனை சரணடைந்து அவர் காத்தாலொழிய பாவங்களை வெல்லுவது மனிதனால் கூடாத காரியம் என்றொரு பொறுமை ; நாம்மை தீமைகளின் மத்தியிலேயே காத்துக்கொள்ளும் மன சமநிலை – இப்பயிற்சியே நன்மை தீமைகளால் பாதிப்படையாத சற்குண நிலை .

மத்தேயு 5

45. இப்படிச் செய்வதினால் நீங்கள் பரலோகத்திலிருக்கிற உங்கள் பரம பிதாவுக்கு புத்திரராயிருப்பீர்கள்; அவர் தீயோர் மேலும் நல்லோர் மேலும் தமது சூரியனை உதிக்கப்பண்ணி, நீதியுள்ளவர்கள் மேலும் அநீதியுள்ளவர்கள் மேலும் மழையைப் பெய்யப்பண்ணுகிறார்.

46.
உங்களைச் சிநேகிக்கிறவர்களையே நீங்கள் சிநேகிப்பீர்களானால், உங்களுக்குப் பலன் என்ன? ஆயக்காரரும் அப்படியே செய்கிறார்கள் அல்லவா?

47.
உங்கள் சகோதரரைமாத்திரம் வாழ்த்துவீர்களானால், நீங்கள் விசேஷித்துச் செய்கிறது என்ன? ஆயக்காரரும் அப்படிச்செய்கிறார்களல்லவா?

48.
ஆகையால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா பூரண சற்குணராயிருக்கிறதுபோல, நீங்களும் பூரண சற்குணராயிருக்கக்கடவீர்கள்.


நம்மைச்சுற்றியுள்ளோரின் குற்றம் குறைகளை நியாயம் தீர்க்காது அதனை நிரவி கெடுதல் நேராது செய்ய கூடுதலாக நாம் உழைக்குபடியாக இறைவன் ஏவுவார் . இதில் எரிச்சலற்ற தன்மையை நாம் கற்றாக வேண்டும் .

நாம் எப்போதும் பாவிகளின் தோழனாக வாழ்ந்தால் ஒழிய பாவங்களின் பாதிப்பிலிருந்து விடுபடும் பக்குவம் ஆத்மாவிற்கு வராது

பூரண சற்குணராக இறைவன் இருப்பதுபோல நீங்களும் இருங்கள் என்கிற வார்த்தைக்கு அதுதான் அர்த்தம்

இயேசுவும் அப்படித்தான் இருந்தார் . அவரை எப்போதும் பாவிகள் சுற்றி சூழ்ந்திருந்தார்கள் . அவர் கொல்லப்படும் தருவாயிலும் பாவிகளோடேயே சிலுவையில் அறையப்பட்டார் . அவர் எந்த மனித குலத்திற்காக பாவப்பரிகாரம் செய்தாரோ அந்த மனிதர்களால் இகழவும் பட்டார் ஆனால் அவரோ சதா அவர்களுக்காக இறைவனிடம் பரிந்து பேசினார் . தாங்கள் செய்வது இன்னதென்று அறியாத இவர்களை மன்னியும் என்று வேண்டினார் . பாவ பலகீனங்களின் மீது சமத்துவ நிலை . அதுவே பூரண சற்குண நிலை .

இயேசுவின் நிலை இப்படியென்றால் கூட இரண்டு திருடர்கள் அவர்களின் குற்றங்களின் நிமித்தமாக மரண தண்டனை அடைந்து அங்கே சிலுவையில் அறையப்படிருந்தார்கள்

அந்த இவரைப்போலவே நமது நிலை உள்ளது . அது நாம் உட்பட மனித சமூகத்தின் அடையாளம் . சிலுவையில் அறையப்பட்டும் ; இன்னும் கொஞ்ச நேரத்தில் மரணம் உறுதி செய்யப்பட்டும் இடப்புறம் இருந்த கள்வன் இயேசுவை நிந்தனை செய்வதில் கொஞ்சம் திருப்தி அடைந்தான் .

நமது வாழ்வில் முற்பிறவி பாவங்களின் விளைவாக பல இடறல்கள் தடைகள் கஸ்ட்டங்கள் வந்தாலும் ; நாமோ மற்றவரின் குறைகளை சதா பேசி எல்லோரும் இப்படித்தான் நானும் இப்படித்தான் என நமது தவறுகளுக்கு நியாயம் கற்பித்துக்கொள்கிறோம் . குறுக்கு குண்டாமாத்து என துணிகரமாக தவறு செய்கிறவர்கள் பலர் எப்போதுபார்த்தாலும் அடுத்தவரை விமர்சித்து தங்களை சுய நீதி செய்து கொள்கிறார்கள் .இந்த சுயம் நாம் செய்கிற நல்ல காரியங்களுக்கு பெருமை பாராட்டுவது ; நமது குரு பெரிய ஆள் எனது மார்க்கம் உயர்ந்தது என சுயமாக பரிணமிக்கிறது இந்த சுயம் இருக்கும்வரை நமக்கு இறைவன் புறத்திலிருந்து எந்த வளர்ச்சியும் வரப்போவதில்லை . நாம் மென்மேலும் தீமைக்கு ஆட்பட்டு அதலபாதாளத்தில் அடுத்த பிறவியில் விழுவோம் . இப்பிறவியின் வாரிசுகளும் தீமைக்கு ஆளாவார்கள் . 


மாற்றாக நாம் வலப்பக்கத்தில் அறையப்பட்ட கள்வனைப்போல மன நிலையை அடைந்தால் நாம் எவ்வளவு பாவங்கள் செய்தவர்களாக இருந்தாலும் அவைகள் எல்லாவற்றிலிருந்தும் விடுபட்டு மனத்தூய்மை அடைந்து முழுமையடைவோம் .மரணமில்லா பெருவாழ்வு – ஒளிசரீரம் பெற்று பரலோகம் செல்வோம் என்பது சற்குரு இயேசுவால் வாக்களிக்கப்பட்டுள்ளது

அந்த நிலை மனத்தாழ்மை . நாமோ நமது பல பிறவி பாவங்களால் ஆக்கினைக்கு உட்படுகிறோம் ; அல்லல்படுகிறோம் ; ஜீவாத்மாக்களின் அக்கிரமங்களுக்காக பரமாத்மாவான நாராயணனும் இயேசுவாக வந்து பாவப்பரிகாரம் – சிலுவையிலே மரணத்தை ருசி பார்த்தார் என்பதை நம்புவது ; அந்த மகத்தான அன்பினால் நாம் தன்னை உணர்ந்து சீர்பட முயற்சிப்பதோடு நாம் உணர்ந்து திருந்தினால் நம்மை மண்ணிக்க கடவுள் சித்தமாயுள்ளார் என்பதில் உறுதிப்படுவது .

இடப்புற திருடன் தன்னை உணரத்தழைப்படாதவனாக சுய நீதி சுய சாக்கு சொல்ல்லிக்கொண்டிருந்தான் ; அவனுக்கு எந்த வாக்கும் வரவில்லை ; ஆனால் தண்டனைக்கு உள்ளாகுமளவு தவறு செய்தும் மரணத்தருவாயில் கூட வலப்புற கள்வன் தன்னை உணரத்தொடங்கினான் ; மட்டுப்பட்டான் ; தாழ்மையடைந்தான் ; என்னையும் ரட்சியும் என்றான் ; அவனுக்கு வாக்கு வந்து சேர்ந்தது

நாம் இறைவனிடம் தாழ்மையடைய கற்றுக்கொண்டால்போதும் வளர்ச்சி நமக்கு உறுதி செய்யப்பட்டிருக்கிறது . அதற்கு பக்தியோடு நெற்றிப்பொட்டில் கபால ஸ்தலத்தில் உயிரில் ஒன்றி தியானித்து ஆத்ம சுத்தியும் ஆத்ம பலமும் பெருக்கவேண்டும்

இந்த வாக்கு பரமாத்மாவான நாராயணனால் இறைவனிடம் நமக்கு மத்தியஸ்தம் செய்யப்பட்டு விட்டது

இயேசு மரணத்தை ருசி பார்த்து மீண்டும் உயிர்த்தெழுந்ததால் மனித குலத்தின் எத்தகைய பாவங்களும் அப்பாவத்தை உணர்ந்து திருந்தினாலே போதும் இறைவனால் மன்னிக்கபட ஏதுவாயிற்று . இல்லாவிட்டால் உணர்ந்து திருந்தினாலும் செய்த பாவங்களுக்கு பிராயச்சித்தமாக பல பிறவி ஒவ்வொரு மனிதனும் உலன்றாக வேண்டும் .

ஆனால் வரப்போகிற சத்திய யுகத்தில் நாம் நுழைய தகுதியாக்க மனம் திரும்புதல் ; தன்னை உணர்தல் ; தாழ்மையடைதல் ; இறைவனை அதி தேவர்களான நால்வர் மூலமாக சரணடைதல் என்பதை செய்தாலே போதுமானது என்பது இயேசுவின் பாவப்பரிகாரத்தால் அனைத்து மனித இனங்களுக்கும் உறுதி செய்யப்பட்டுவிட்டது ; இங்கு மதம் மாறு பெயரை மாற்று என்று எங்குமே சொல்லப்படவில்லை ; அதை பின்னாளில்
கிறிஸ்தவர்கள் இட்டு கட்டிக்கொண்டார்கள் . மேலும் முன்பு ராமராகவும் கிரிஷ்ணராகவும் வந்தவர்தான் இயேசுவாகவும் வந்தார் என்பதை அறிய இயலாமலும் உள்ளனர்

ஆனால் நாமோ நாராயணன் நாமத்திலே இயேசுவும் அடங்கி விட்டார் என்பதை அறிந்திருந்தாலே போதுமானது . வரப்போகிற கல்கியாக அவரை சந்திப்போம் .


நாராயணனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ நாராயணனாய

ஆதிசேஷனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ ஆதிசேஷாய

நாராயணியாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ நாராயணியாய

சிவனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ சிவாய

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி 







பங்குனி உத்திர நன்னாள்



பங்குனி உத்திர நன்னாளில் சற்குருவாம் முருகனை வழிபட்டு ; ஞானத்தை வேண்டுவது ஆதித்தமிழர்களின் மரபாகும்
கிருத யுகத்தில் குமரிக்கண்டத்தில் முதல் மனித சமூகம் தமிழ் சமூகமாக வளர்ந்தது  . முதல் தமிழ்ச்சங்கத்தில் சிவனும் ஒரு புலவர் .

சதா தியானத்தில் இருந்து பொன்னாசை ; பெண்ணாசை மற்றும் மண்ணாசை என்ற மூவகை ஆசைகளை வென்று அழியாத ஒளி சரீரத்தை பெற்று வைரவனாக அவர் பரலோகத்தில் நுழைந்தார் . அழியும் மனித சரீரம் என்பதை அழியாத சரீரமாக மாற்றிய முதல் நபர் ; மனிதன் என்ற நிலையிலிருந்து தேவராக பரலோகத்தில் நுழைந்த முதல் நபர் அவரே

அதுவரை பரலோகத்தில் படைக்கப்பட்ட அனைத்து தேவதூதர்களும் முழுமையானவர்களல்ல அவர்கள் ஒரு குறிப்பிட்ட வேலைக்காக குறிப்பிட்ட குணத்தோடு மட்டுமே படைக்கப்பட்டவர்கள்

சகலமும் கடவுளால் யாரை மூலமாக கொண்டு படைக்கப்பட்டதோ அந்த பரமாத்மா அருப உருபி . அவரை தேவதூதர்கள் கூட தரிசித்ததில்லை . அவர் வாழும் வைகுண்டத்தில் திருப்பாற்கடலில் பள்ளிகொண்ட நிலையில் இருப்பதாக ஞானத்தால் உணர்ந்து உருவகப்படுத்தினார்களே தவிர அவரை தேவர்களும் கண்டதில்லை ஏனென்றால் சகலமும் அவருக்குள் அவர் மூலமாக கடவுளால் படைக்கப்பட்டுள்ளது . அவர் படைப்புகள் அனைத்திலும் நிரவி உள்ள சர்வ வியாபி . அருவ உருபி .

பரலோகப்படைப்புக்கு பின்பு முதல் மனிதனாக சிவன் கடவுளால் அவரைப்போன்ற சாயலில் அவரைப்போலவே முழுமையான தன்மையில் படைக்கப்பட்டு அவரது முந்தய படைப்புகளான தேவர்கள் அனைவரும் அவருக்கு பணிவிடை செய்யும்படி கட்டளையிட்டார்

இப்படி சிவனுக்கு பணிய விருப்பமில்லாத தேவர்கள் சிலரே கடவுளை பகைத்து அசுரராக மாறினார்கள் . அவர்கள் மனிதர்களை தீய விசயங்களில் தூண்டி கெடுத்து இந்த மனிதனை படைத்ததற்காக கடவுள் வெட்கப்படும்படி செய்ய முயற்சிக்கிறார்கள் 



அசுரர்களின் மாயங்கள் அனைத்தையும் வென்று சிவன் முழுமையடைந்து அழியாத ஒளி சரீரம் பெற்று வைரவனாக பரலோகம் புகுந்தார் . அங்கு அவருக்கு ருத்ர பதவி கொடுக்கப்பட்டது . இந்த ருத்ரன் என்பதையே மைகேல் – வலிமையான யுத்த வீரன் என ஆப்ராகாமிய வேதங்கள் குறிப்பிடுகின்றன

இங்கு கவணிக்க வேண்டிய முக்கியமான விசயம் பரலோகத்தில் முழுமையான நபராக – கடவுளின் சாயலில் சிவனும் அவரைத்தொடர்ந்து சென்ற மனிதர்கள் மட்டுமே உள்ளனர் . ஆனால் தேவதூதர்கள் முழுமையானவர்களல்ல . அவர்கள் குறிப்பிட்ட வேலையை செய்யும் ரோபோக்கள் போனறவர்களே .

பரலோகம் செல்லும் வரை சிவன் கடவுளை சதா தியாநிக்கிரவராகவே பூமியில் இருந்தார் . அவர் தமது குருவாக கடவுளால் சகலமும் யார் மூலமாக யாருக்குள் படைக்கப்பட்டிருக்கிறதோ அந்த பரமாத்மா – நாராயணனை மாயோன் என்று தியானிக்கிரவராக இருந்தார் 

மனித குலம் உய்வடையும் வழியை உபதேசிக்கும்படி பார்வதியால் வேண்டுதல் செய்யப்பட்டபோது சிவன் குருகீதை என்ற உபதேசத்தை முதன்முதலாக பார்வதிக்கு வழங்கினார் .

அதில் அவர் தமது குருவாக நாராயணனை துதிக்கிறார்



குரு கீதை 2 : 5 . தூய (வெண்மையான) ஆடையுடுத்தவரும் ; தூய வடிவுடையவரும் புஷ்பமும் முத்துமாலையும் அணிந்தவரும் ; மகிழ்சி ததும்பும் இரு விழிகளுடன் இடது மடியில் லக்ஷ்மியை ஏந்தியவரும் ; பரிபூர்ண கிருபைக்கு உறைவிடமும் ஆன குருவை தியானித்து வரவேண்டும் !!




கிருத யுகம் சிவனின் நேரடி கண்காணிப்பில் இருந்த போது தீமைகள் பெருகாதபடி அவர் களைஎடுத்துக்கொண்டும் அசுரர்களை அழித்துக்கொண்டும் இருந்தார் 


சிவன் பரமேறியபிறகு வரும் யுகங்களில் அக்கிரமம் பெருகும் போது நாராயணனே பூமிக்கு சற்குருவாக அவதரித்து வருவார் ; அந்த குருவின் உபதேசத்தின் படியாக நடந்தால் மட்டுமே மனிதன் உய்வடைய முடியும் என்பது குரு கீதையின் வெளிப்பாடாகும்

வருகிறவர் நாராயணன் – தேவன் என்ற நிலையிலிருந்து மனிதனாக பூமிக்கு அவதரித்து வரும்போது அவர் சிவனின் மகன் . நாராயணன் ஆனாலும் சரீரத்தில் வரும்போது சிவபாலன் . இவ்வாறு மறுவி வருவதால் அவன் பெயர் முருகன் . முருகு என்றால் மறுவி வருவது என்று அர்த்தம்




2 . பரப்பிரம்மமே குருவாக வெளிப்படும் அவதார புருஷனை உணர்ந்து கொள்வாயாக ! பரப்பிரம்மமே குருவாக வெளிப்படும் அவதார புருஷனைப்பற்றியே பேசுவாயாக !பரப்பிரம்மமே குருவாக வெளிப்படும் அவதார புருஷனையே சேவிப்பாயாக ! பரப்பிரம்மமே குருவாக வெளிப்படும் அவதார புருஷனையே நமஸ்கரிப்பாயாக !!

3 . பிரம்மானந்தத்தையும் பரம சுகத்தையும் அடைய வழிகாட்டியும் ; ஞானமே வடிவானவரும் ; மயக்கும் இருமைகளின் ஆளுமைக்குள்ளாகாதவரும் ; ஆகாயம் போன்ற பரிசுத்தரும் ; ````தத்- த்வ – மஸி என்ற இலக்கை காட்டிக்கொடுக்கிரவரும் ; தனித்தவரும் ; அழிவற்றவரும் ; நிர்க்குணமானவரும் ; கலங்கமற்றவரும் ; எல்லோருடைய ஆத்மாவுக்கும் சாட்சியானவரும் ; கற்பனைகளுக்கெட்டாதவரும் ; ஜட இயல்பாகிய முக்குணங்களை கடந்தவரும் குருவிற்கெல்லாம் குருவாகியவரும் ஆன சற்குருவையே நமஸ்கரிக்கிறேன் !! 


இந்த முருகன் ஞானம் என்ற வேலை வைத்திருப்பவன் . அசுரர்களின் எத்தகைய மாயங்களையும் அவர்கள் உருவாக்குகிற மாயமலைகளான கிரவ்ஜம் என்ற மாய்மால கூடுகளை.உடைத்தெறிந்து மனிதர்களை கட்டுகளிலிருந்து விடுதலை ஆக்குகிறவர் . மனித ஆத்மாக்களை விதவிதமான மாயைகளால் அசுரர்கள் கட்டி வைத்து பல பிறவிகள் முன்னேற விடாமல் செய்து விடுவார்கள் . அல்லாமலும் இந்த மாயக்கட்டுகளால் புதிய பாவங்கள் பலவும் செய்து ஆத்மா நெருக்கடிக்குள்ளாகும் .

முருகனோ அந்த கட்டுகளை அறுப்பதும் அல்லாமல் அந்த பாவங்களுக்கு பிராயச்சித்தமும் அருளி மனிதனை உயர்த்தி விடுபவன் . சேந்தன் என்றால் உயர்த்தி விடுபவன் . கந்தன் என்றால் செய்த பாவமாகிய கடனை கந்து வட்டி போல வட்டியையும் அசலையும் சேர்த்து அடைத்து அதைக்கடறும் வழியை காட்டுபவன் . அதனால் அவன் கந்தன் . அவன் குற்றம் குறைகளோடு வாழும் வள்ளிக்குரத்திகளான மனிதர்களை நேசித்து தேடி வந்து ஆட்கொண்டு அவர்களை தூய்மைப்படுத்தி தேவானையாக மாற்றுவான். பாவங்களை பரிகரிக்கும் வழியை காட்டுவான் .


கிருத யுகத்தில் வரப்போகிற இந்த முருகனை சேயோன் என்றும் அவன் பரலோகத்தில் யாரோ அந்த நாராயணனை மாயோன் என்றும் குருவாக வைத்து கடவுளை வழிபடும்முறையை சிவனே உருவாக்கியிருந்தார் . தொல்காப்பியம் என்ற சங்க இலக்கிய நூலில் மாயோன் சேயோன் வழிபாடு மட்டுமே இருந்தது என்ற குறிப்பை தருகிறது . அதிமனிதர்கள் தூயநெறியில் – அதாவது இசுலாத்தில் இருந்தார்கள் என்றொரு குறிப்பு குர்ஆனில் வருகிறது 


அந்த ஆதி மனிதர்கள் கிருத யுக தமிழர்கள் என்பதும் அவர்கள் மாயோனையும் சேயோனையும் குருவாக வைத்து அறியப்படாத இறைவனை வழிபட்டார்கள் என்பதுவுமே ஆதி இந்து நெறியாகும் .




கிருத யுகம் ஜலப்பிரலயத்தில் குமரிக்கண்டம் கடலில் மூழ்கியபிறகு திரேதா யுகத்தில் ராமரும் ; துவாபார யுகத்தில் கிரிஷ்ணரும் கலியுகத்தில் இயேசுவும் முருகனாக பூமிக்கு வந்தார்கள் . அவர்களின் காலத்தில் அவர்களை ஏற்றுக்கொண்ட பல மனித ஆத்மாக்கள் பரலோக பாக்கியம் பெற்றார்கள் .
இந்த முருகனை மனிதர்கள் மறந்து விடக்கூடாது என்பதற்காகவே பங்குனி உத்திர நன்நாளில் அவனை வீதி உலா வரச்செய்து முருகனுக்கு அரோகரா என பலர் காதுபட கோஷம் போட்டார்கள்



முருகன் பரலோகில் நாராயணன் அதாவது ஹரி . ஆனால் பூமியில் சரீரத்தில் வருவதால் அவன் சிவனுக்கு மகன் . அதாவது ஹரன் . அதனால்தான் ஹரிஹரா ஹரிஹரா என்று கோஷம் போட்டது நாட்பட அரோகரா என்றாகிவிட்டது


திருப்பதியில் உள்ள சிலை முருகனா பெருமாளா என்று குழப்பமாக இருந்தது . அதை ராமானுஜர்தான் பெருமாள் என்று நிலைப்படுத்தினார் . ஆனாலும் வியாழக்கிழமை மட்டும் அவர் அலங்காரம் ஏதுவுமின்றி முருகனாகவே உள்ளார் . இதில் குழம்ப ஏதுமில்லை. பெருமாள்தான் பூமிக்கு வரும்போது முருகன் . மாலோன் மருவி பூமிக்கு அவதாரமாக வருவதால் முருகனுக்கு மால் மருகன் என்றும் பெயர் . மால் மருகன் அதாவது மால் மருவி வந்தால் முருகன் . ஆனால் உலக மனிதர்கள் மாலோன் வேறு ஆள் ; அவருக்கு மருமகன் முருகன் வேறு ஆள் என்று கற்பனை செய்து கொண்டார்கள் .


முருகனால் ஞானம் வழங்கப்பட்டு அருள்நிலையில் அருணகிரிநாதர் பாடிய திருப்புகழ் பாடல்கள் முழுவதும் முருகா என்று ஆரம்பித்து பெருமாளே பெருமாளே என்றுதான் முடியும் .


இந்த பங்குனி உத்திர நன்னாளில் இந்த முருகன் யாரென்று அறிந்து அவனை நமது குருவாக – நம் வாழ்வின் கூரையாக – உத்திரமாக நாம் வரிந்து கொள்ளவேண்டும் .அவனால் அன்றி ஞானம் அடையமுடியாது . பாவப்பரிகாரமும் பெற்றுக்கொள்ள முடியாது


கந்தர் அலங்காரத்தில் இரண்டு பாடல்களை பித்துக்குழி முருகதாஸ் அவர்கள் பக்தியும் உணர்வும் பொங்க பாடியுள்ளார்

ஆதிதமிழர்கள் உய்வடைய அவர்கள் முருகனை எப்படி கொண்டாடினார்கள் என்பது இப்பாடலை கேட்டால் புரியும்







கந்தர் அலங்காரம்
தடுங்கோள் மனத்தை விடுங்கோள் வெகுளியைத் தானமென்றும்
இடுங்கோ ளிருந்த படியிருங் கோளெழு பாருமுய்யக்
கொடுங்கோபச் சூருடன் குன்றந் திறக்கத் தொளைக்கவை வேல்
விடுங்கோ னருள்வந்து தானே யுமக்கு வெளிப்படுமே. ... 16



சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனைச் செஞ்சுடர்வேல்
வேந்தனைச் செந்தமிழ் நூல்விரித் தோனை விளங்குவள்ளி
காந்தனைக் கந்தக் கடம்பனைக் கார்மயில் வாகனனைச்
சாந்துணைப் போது மறவா தவர்க்கொரு தாழ்வில்லையே. ... 72





நாராயணன் நாமத்தினாலும்  ஆதிசேஷனனின்

நாமத்தினாலும் 

நாராயணியின் நாமத்தினாலும் சிவனின் 

நாமத்தினாலும்கடவுள் 

தங்களையும் தங்கள் குடும்பத்தாரையும் 

தமதுஅருளால் நிரப்ப வேண்டுகிறேன்


அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி

தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி