Total Pageviews

Sunday, March 2, 2014

சுருளி மலை - முப்பத்து முக்கோடி தேவர்கள் வாழ்ந்த இடம

by கிருபானந்தன் பழனிவேலுச்சா on 22/12/2013, 20:08


சுருளி மலையின் நுழைவு வாயிலில் பூத நாராயணன் திருக்கோவில் அமைந்துள்ளது இப்பகுதி மக்கள் இறந்தவருக்கு நாற்பதாம் நாள் கடமையாக நீர்க்கடன் செழுத்தி ஆத்மா சாந்தி வழிபாடு செய்ய உறவினர்களுடன் வாகனங்களில் இங்கு வருவார்கள் !எல்லோரு நீராடி சமையல் செய்து ; இங்குள்ள சந்நியாசிகளின் மூலமாக இறந்தோரின் ஆத்மா சந்திக்கு வழிபாடும் ஓதுதலும் செய்து அர்ப்பணித்து பின்பு அனைவரும் பந்தியிருப்பார்கள் கர்மம் செய்தல் அல்லது கருமாதி என அழைக்கப்படும் இச்சடங்கு அவர்களை அடுத்த பிறவிக்கு வழியனுப்பி வைத்தாலே ஆகும் சுருளி மலை முப்பதிமுக்கோடி தேவர்களும் அவ்வப்போது ஒன்றாக கூடி வழிபாடு செய்யுமிடம் என்றொரு ஐதீகம் உண்டு

அவ்வாறு ஒன்று கூடும் போது பூத நாராயணனே காவல் செய்கிறவராக இருப்பதால் காவல் - பூத நாராயணன் என்பதாக கதை உண்டு


ஆனால் உண்மை யாதெனில் ஆத்மாக்கள் தங்களின் பூத உடலையே தாங்கள் என்பதாக கருதிக்கொண்டு இறந்த உடலை விட்டு பிரிந்து செல்ல மனமில்லாமல் இருக்கும் நாற்பது நாளலவில் உடல் மண்ணால் திண்ணப்பட்ட பிறகு அவை இனி அடுத்த நிலைக்கு கடந்து சென்றே ஆகவேண்டிய நிர்ப்பந்தம் அல்லது அவ்வளவுதான் என்ற தெளிவு உண்டாகும் அதன் தொடர்பாகவே இப்பிறவி வாரிசுகள் அந்த ஆத்மாவுக்கு சாந்தி உண்டாகும் படியாக சாரீரங்களுக்கும் காரணகர்த்தாவாகிய பூத நாராயணனிடம் அகண்ட விளக்கு ஏற்றி வேண்டுதல் செய்து அடுத்த பிறவி நற்பிறவியாக அமைய வழியனுப்பி வைப்பதாகும் இந்தப்பிரார்த்தனை

எனவே இவருக்கு பூத நாராயணன் ! சரீரங்கள் அழிந்தாலும் அடுத்த சரீரத்தை - அடுத்த பிறவியை கொடுப்பவர் இக்கோவிலை அடுத்து சுருளி நீர்வீழ்சி உள்ளது அடுத்த மலை சிகரத்தில் கைலாசநாதர் குகை அல்லது சுருளி வேலப்பர் சன்னதி உள்ளது






இங்கு எப்போதும் சில சித்த புருஷர்கள் தவத்தில் இருப்பார்கள்

நான் பத்து வயதிருக்கும் ; இங்கிருந்து நாற்பது கிலோமீட்டர் துரம் உள்ள எனது பிறந்த ஊருக்கு அருகில் டோம்புச்செரி என்ற கிராமத்தில் எனது உறவிணர் தாத்தா -ஒருவர் தவ யோகா வாழ்வு வாழ்ந்தவர் தனது பிள்ளைகளை வற்புறுத்தி தன்னை புதைக்கசொல்லி விட்டார்

சில நாட்களுக்கு பின்பு அவர் இந்த மலைக்குகையில் இருப்பதாக தகவல் வந்து உறவினர்கள் படை திரண்டு சென்று அழுது முறையிட்டும் அவர் வர மறுத்து விட்டார்

அப்புறம் பின்னாளிலும் உறவினர்கள் தொந்தரவு அதிகமாகவே கிராமம் வந்து சில நாட்கள் இருந்தார் பின்பு சமாதி ஆவதாக அங்கேயே சமாதி வைத்து அவரின் நினைவாக ஒரு பள்ளிக்கூடம் ஒன்று நடத்தி வருகிறார்கள்

நான் சென்ற மாதம் ஸ்ரீரெங்கம் செல்ல ; அங்கு எனது (சன்மார்க்க )நண்பர் ஆதியின் வீட்டிற்கு சென்றேன் அங்கு ஒரு புகைப்படத்தில் பக்கத்து கிராமத்தில் இருந்து சமாதியான ஒரு சித்தரின் புகைப்படம் ஒன்றை அவர் வைத்துக்கொண்டிருந்தார் அவரைப்பற்றி பல கதைகளை சொன்னார் ஆனால் எனக்கு ரெம்ப தெளிவாகவே அது அவர்தான் என்பது புரிந்தது

முக்தியை நெருங்கும் நிலையில் உள்ளோர் உலக வாழ்வில் பட்டும்படாமலும் வாழ்ந்து சில பாவங்களை கடற வேண்டி வரும்போது இத்தகைய வாழ்வு அவர்களுக்கு உண்டாகும் . நாம் அவர்களை சித்தர்கள் என்று சொல்லுகிறோம் சிலர் உபதேசிப்பார்கள் சிலர் உபதேசிப்பதில்லை அனால் இவர்களின் இருப்பு அப்பகுதியில் கடவுளின் இறை பேரரசை நிலைநாட்டும் ! அசுர ஆவிகளும் பூமியில் கிரியை செய்து அனேக ஆத்மாக்களை தீமைக்குள் ஊக்குவிக்கும் போது இவர்களின் இருப்பு அதை நீர்த்து போகச்செய்யும்










கடந்த பத்தாண்டுகளாக சுருளி மலையை ஒட்டி அப்படி ஒரு நபர் வாழ்ந்து கொண்டுள்ளார் அவரின் பெயர் ஊர் எதுவும் தெரியாது ! எதையும் உண்பதுமில்லை யாரிடமும் பேசுவதுமில்லை

சுருளி செல்லும் பாதையில் ரோட்டோரத்தில் அங்கும் இங்கும் இருப்பார் நள்ளிரவிலும் நடந்து கொண்டே இருப்பார் ! அவர் நடந்து கொண்டிருப்பது ஒரு மைய புள்ளியாக வைத்து மெதுவாக அவர் சுருளி மலையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார் அப்படி அவர் சுருளி மலையை அடைந்ததும் சமாதி ஆகி விடுவார் என மக்கள் பேசிக்கொள்கிறார்கள்

அவருக்கென்றும் இப்போது ஒரு கூட்டம் உருவாகி விட்டது ஆனால் அவர் அதையெல்லாம் கண்டு கொள்வதில்லை அவர் ஒரு பாலத்தில் உட்கார்ந்திருப்பார் அவரை சுற்றிலும் சிலர் நின்று கொண்டு பழத்தை பீடியை வைத்துக்கொண்டு வாங்கிக்கொள்ள மாட்டாரா என்று காத்திருப்பார்கள் வாங்கினால் பழத்தை கீழே வைத்துவிடுவார் அதை எடுக்க போட்டி போடுவார்கள் பீடியை மட்டும் பிடிப்பார் அந்த வெப்பத்தையே உணவாக்கிகொள்கிறார் பிறகு அவர் பாட்டுக்கு நடக்கத்தொடங்கி விடுவார்

அவரை போட்டோ எடுக்கலாம் என நினைத்தேன் என்னால் அவரை காண முடியவில்லை


கைலாசநாதர் குகை !!

சுருளி மலை அடிவாரத்தில் இருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் மலைப்பாதை வழியாக நடந்து சென்றால் கைலாசநாதர் குகையை அடையலாம் 

திரேதா யுகத்தில்நாராயணன் ராமராக அவதரித்தபோது அவருக்கு உதவும் நோக்கத்தில் தேவர்கள் அனைவரும் வாணரர்களாக அவதரித்தனர்

அப்படி அவர்கள் அவதரித்து வாழ்ந்த மலை இந்த சுருளிமலை  அதனாலேயே முப்பத்தி முக்கோடி தேவர்கள் வாழ்ந்த மலை சுருளிமலை என்கிறார்கள் 



இங்கு அருள் சக்தி பொங்கி வழிவதை கண்கூடாக கண்டேன்  தியானத்தில் மிக அற்புதமான பேரானந்தம் சித்தித்தது புகைப்படத்தில் கூட என்னை சுற்றிலும் ஆற்றல் ஒளிர்வதை காணலாம்





















வைகுண்ட ஏகாதசி விரதம் !!

(இங்கு க்ளிக் செய்து பாடலை கேட்டுக்கொண்டே படிக்கவும்)

வைகுண்ட ஏகாதசி விரதம் !!

புராண கதை கூறும் விரதம் :

கிருதா யுகத்தில் முரண் என்ற அசுரன் மக்களையும் தேவர்களையும் துன்புறுத்தினான். அதை விஷ்ணுவிடம் முறையிட் டனர். விஷ்ணு முரணுடன் கடும்போர் செய்தார். ஒரு சமயம் அவர் களைப் படைந்து ஹிமாவதி குகையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். அப்போது முரண் விஷ்ணுவைக் கொல்ல முயன்றான்.

அச்சமயம் விஷ்ணுவின் 11 இந்திரியங்களில் இருந்தும் சக்தி உருவாகி, ஒரு சௌந்தர்ய தேவதை தோன்றி முரனை அழித்தாள். விஷ்ணு எழுந்து நடந்ததை அறிந்தார். 11 இந்திரியங்களிலிருந்து தோன்றியதால் அவளுக்கு ஏகாதசி எனப் பெயரிட்டு, "உனக்கு என்ன வரம் வேண்டும்?' என்றார். "இந்த நன்னாளில் எவர் விரதம் இருந்து தங்கள் நாமத்தை உச்சரித்து வழிபடுகிறார்களோ, அவர்கள் செய்த பாவத்தை விலக்கி வைகுண்ட பதவி தரும் சக்தியை எனக்குத் தாருங்கள்' என்றாள். அப்படியே திருமால் வரம் அருளினார். இப்படி உருவானதுதான் மார்கழி வளர்பிறை ஏகாதசி விரதம்


புராணக்கதைகள் என்பவற்றை அப்படியே நடந்ததா ? நடக்கவாய்புள்ளதா ? என்றெல்லாம் ஆராய்ச்சி செய்யவேண்டிய அவசியமில்லை !

ஏனென்றால் இந்தக்கதைகளின் மூலம் உணர்த்தப்படும் ஞானம் முக்கியமே தவிர கதை முக்கியமில்லை ! இருந்தாலும் ஞான அப்பியாசம் இல்லாத சாதாரன மனிதர்களுக்கும் – ஆரம்ப நிலை சாதகர்களுக்கும் இந்த விரதம் நல்ல பலன்களை அடுத்த பிறவியில் அருளும் என்பதில் சந்தேகமே இல்லை
இந்து தர்மத்தில் சடங்காச்சார பக்தியும் ; ஞானம் பொதிந்த பக்தி யோகமும் மேற்பார்வைக்கு ஒன்று போல கடைபிடிக்கப்பட்டாலும் பலன்கள் வேறுவேறாக விளையும் !

அதனாலேயே ஒரு பெரிய ஞானத்தை எளிமைப்படுத்தி ஒரு புராணக்கதையாக ஆக்கி அதன் தொடர்பாக ஒரு சடங்கை அல்லது விரத்தத்தை கொடுத்திருப்பார்கள் !

இவ்விரதத்திலும் விளங்கப்படும் ஞானமாவது

பக்தியில் ; ஞானத்தில் ஓரளவு சாதகம் பல பிறவியில் செய்ததால் இப்பிறவியில் சத்துவத்தில் நிலைக்கிறவர்கள் இப்பிறவியில் அதில் முன்னேற விடாதபடி உலகமும் அசுர ஆவிகளும் முரண்பாடுகளை கொண்டுவரும் ! ஆரம்ப காலங்களில் உலகில் வாழத்தெரியாத ஏமாளிகளாக சிக்கலுக்குள்ளாவர்கள் !

லவ்கீக மாயை ; ஆசாபாஷைகளால் ஈர்க்கப்பட்ட உலக மாந்தர்களை பல தவறுகளில் இழுத்து விட்டு அவர்களின் பாவ கணக்கை முடிந்தளவு கூட்டி விடுவதால் கடவுள் அவர்களை வெறுத்து விடட்டும் என முயற்சிக்கும் அசுர ஆவிகள் ; மறுபுறம் கடவுளைத்தேட துவங்குவோர் ஒரு சிறு தவறு செய்தாலும் அதை பிரபலப்படுத்தி அவர்களை இழிவுக்குள்ளாக்க முயலும் ! அல்லது நீ கடவுளை தேட அருகதை அற்றவன் என்ற குற்றச்சாட்டை முன் வைக்கும் ! அதை விட கடவுள் ஒரு அடி அடித்தால் கூட பத்து அடி அடித்து பக்தர்களை அழிக்கவே முயலும் ! இத்தகைய இக்கட்டுகள் ஆன்மீக அன்பர்களுக்கு நிறையவே வரும் !

பொதுவாகவே பிறர் குறைகளை அதிகமாக பேசுகிறவர்கள் இப்படிப்பட்ட ஆவிகளின் பின்னணியில் தூண்டப்படுபவர்களே !

சந்தர்ப்பம் கிடைத்தவுடன் அதே தவறுகளை அவர்கள் பல மடங்கு செய்யத்தொடங்குவார்கள் !

எவ்வகையிலும் உலக வாழ்விலும் ஆன்மீக வாழ்விலும் முன்னேற விடாமல் தடுப்பவை முரண்பாடுகளே ! இவைகளை ஊதி ஊதி தூண்டி விடும் அசுர ஆவிகளே ! இந்த ஆவிகளையே முரண் என்ற அசுரன் என கதை சொல்லுகிறது !

இவைகளோடு போராடி போராடி களைப்படைவது ; சோர்ந்து போவது சாதகர்களின் வாழ்வில் தவிர்க்க இயலாது !

இந்த அசுரனை அடக்க நாராயணனின் இந்திரியங்களால் உண்டாகும் ஒரு ஈர்ப்பு சக்தியால் மட்டுமே முடியும் ! அது முரண்படுபவர்களை அழிப்பதல்ல ! அது வன்முறையாகவும் சாத்வீகத்திற்கு எதிராகவும் பக்தி நெறியற்றும் போய் விடும் ! தீமையை அழிப்பது பக்தர்களின் ஆன்மீக வாழ்வை பல மடங்கு பின்னேற்றம் கொடுத்து விடும் !


அப்படியானால் முரண்பாடுகளை வெல்ல என்னதான் வழி ?

நாராயணன் நாமத்தினால் நம்மோடு முரன்படுபவர்களுக்கும் அவர்களின் பின்னணியில் இயங்கும் ஆவிகளுக்கும் சாந்தி உண்டாகும்படியாக அனுதினமும் பிராதித்துக்கொண்டே இருக்கவேண்டும் !
இந்தப்பிரார்த்தனையை ஏகாதசி நாளன்று ஒரு சிறு விரத்தத்துடன் ஏறெடுத்து நமக்கு தீங்கு செய்தோரை மண்ணிக்கவும் அவர்களுக்கு சாந்தி உண்டாகும்படியாக வேண்டுவதும் விரைவில் நமக்கு வெற்றியை கொண்டுவரும் !

நம்மிடமிருந்து வெளியேறும் சாந்தியும் சாத்வீகமும் மட்டுமே இந்த முரண்டுகளை ஈர்த்து அவர்களை அடக்கும் ! அது ஒரு சாதகன் அடையவேண்டிய முக்கிய படி !


இன்று உலகில் அந்தந்த இனங்களுக்கு வந்த வேதங்கள் மதங்களாகி ஒன்றை ஒன்று அழிப்பதாகவும் ; இனங்களை அழிப்பதாகவும் மதவெறிகளாக முரண்பாடுகள்  உச்சத்தை அடைந்துகொண்டுள்ளன !
இந்த முரண்பாட்டை சமப்படுத்தி உலகம் முழுவதும் சாந்தியை உண்டாக்கும் சமரச வேதம் வெளியரங்கமாவதே தீர்வு !

அதை நாராயணன் விரைவில் செய்யும் படியாக வேண்டிக்கொள்கிறேன் !



நாராயணனாய் வெளிப்பட்ட அந்த
ஓரிறைவனையே துதிக்கிறோம்
ஓம் நமோ நாராயணாய !
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி  


திருப்பாவை 5





திருப்பாவை - 5

பரலோகத்தில் - வைகுண்டத்தில் ஒரு நாள் என்பது பூமியில் ஒரு வருடம் !

தேவர்களும் ; ஒளி சரீரம் பெற்று மரணமில்லா பெரு வாழ்வு பெற்ற ஆத்மாக்களும் வாழும் அந்த லோகத்தில் மார்கழி மாதம் முழுவதும் வைகறை பொழுது ! அதாவது அவர்கள் பிரார்த்தனை தியானம் செய்யும் நேரம் !

எனவே இம்மாதம் முழுவதும் புனிதமானது ! பக்தி ; தியானம் ; பிரார்த்தனைக்கு உரியது !

மாகாகுரு ஆண்டாள் - மனிதர்கள் பாடி துதிக்கவும் ; பின்பற்றவும் ; ஞானம் பெறவும் திருப்பாவை அருளினார் !!

அதில் சிறந்த முன் உதாரணம் உள்ளது !!

போய பிழையும் புகுதருவா நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய் !!

பாவமன்னிப்பு - சற்குருவாகிய நாராயணனது நாமம் - ராம நாமம் ; கிரிச்னரின் நாமம் ; இயேசுவின் நாமம் சகல பாவங்களையும் தீர்க்கும் !!

இந்தியாவில் திரேதா யுகத்திலும் ; துவாபர யுகத்திலும் வெளியரங்கமான இந்த உண்மை ; வெளிநாடுகளில் வாழும் மற்ற சமுதாயத்திற்கும் இயேசுவின் மூலமாக கலியுகத்தில் வெளிப்படுத்தப்பட்டது !!

வேதம் எதுவும் வெளிப்படுத்தப்படாத ஐரோப்பியர்களுக்கு இயேசுவின் நாமத்தால் - குமாரன் அதாவது ராமன் என்ற நாமத்தால் இந்த உண்மை கடந்து சென்றது

இந்தியாவில் ஸ்ரீ என்றால் இறைவனை குறிக்கும் ; அதுபோல இஸ்ரேலில் ஜெ என்றால் இறைவனை குறிக்கும்

ராம் என்றால் குமாரன் - பிரதிநிதி என்று அர்த்தம்

ஸ்ரீராம் என்பதும் ஜெரோம் என்பதும் ஒரே அர்த்தம் உள்ள சொல் .

இயேசு தன்னை குமாரன் - ராமன் ராமன் என்றுதானே சொல்லிக்கொண்டார்

ராமநாமம் சகல பாவங்களையும் தீர்க்கும்

காசியில் இறப்போரின் காதில் சிவ்னார் ராமா ராமா என்ற மந்திரத்தை ஓதுவாராம்

அதனால் அடுத்த பிறவியில் அந்த ஆத்மாக்கள் ஆன்மீக செறிவுள்ளவர்களாக பிறக்கிறார்களாம்

கலியுகத்தில் ஐரோப்பியர்கள் விஞ்ஞானத்தின் மூலமாக ஆதிக்க சக்தியாக மாறியதால் இந்தியாவில் ஏற்கனவே இருந்த உண்மையை அவர்கள்தான் முதலில் கண்டுபிடித்ததது போல சொல்லிவிட்டார்கள் !

ராமநாமம் சகல பாவங்களையும் தீர்த்து நாம் கடைத்தேற வழிகாட்டும்

விஷ்ணுசகஸ்ரநாமத்தில் பீஷ்மர் பாண்டவர்களுக்கு நாராயணனது ஆயிரம் நாமங்களையும் அவற்றின் மகிமைகளையும் பற்றி உபதேசிக்கிறார்

அதில் வந்து கலந்து கொண்ட சிவ்னார் சொல்கிறார் ; ஆயிரம் நாமங்களையும் விட ராமா ராமா என்ற நாமமே சிறந்தது என்கிறார்

ஸ்ரீராம ராம ரமேதி ரமே ராமே மனோரமே
சகஸ்ரநாம தத்யுல்யம் ராமநாம வராணனே

அதிதேவர் சிவன் திருவாய் மலர்ந்த வாக்கு இது - ஆயிரம் நாமங்களை சங்கல்பம் செய்வதை விட ராமநாமம் ஒன்றே சகல பாவங்களையும் தீர்க்க கூடியாது என்பதுவே இதன் சாரம் !!

இயேசுதான் முந்தய யுகங்களில் ராமராகவும் கிரிச்னராகவும் இந்தியாவில் அவதரித்தார் ; இந்து தர்மம் என்ற செழுமையான வேதம் நிர்மாணித்தார்

வேதமே வராத ஆப்ராகாமிய வாரீசுகளுக்கும் ஐரோப்பியர்களுக்கும் மட்டுமே யூதம் ; கிறிஸ்தவம் ; குரான் !

அவைகள் இந்து தர்மத்தில் வந்து அடங்க வேண்டியவை !

அதற்கான காலகட்டம் - சமரச வேதம் வெளியரங்கமாகும் நாள் நெருங்கிக்கொண்டுள்ளது !

நாரயணன் நாமத்தினாலே கடவுள் தங்களையும் தங்கள் குடும்பத்தாரையும் தமது அருளால் நிரப்ப வேண்டுகிறேன் !

நாராயணனாக வெளிப்பட்ட அந்த ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ நாராயணாய !!

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி


 


மகாகுரு ஆஞ்சநேயர் ஜயந்தி வாழ்த்துகள் !!

(இங்கு க்ளிக் செய்து பாடலை கேட்டுக்கொண்டே படிக்கவும்)

மகாகுரு ஆஞ்சநேயர் ஜயந்தி வாழ்த்துகள் !!

அனுமந்தன்பட்டி ஸ்ரீஆஞ்சநேயர் திருக்கோவில் !!

இக்கோவில் நான் அடிக்கடி செல்லும் கோவில்களில் ஒன்று !

தேனி மாவட்டத்தில் உத்தமபாளையம் ( கம்பம் சாலையில் ) அடுத்த ஊரில் கால்வாய்க்கரையில் உள்ளது !

இதை ஆரம்பத்தில் சிறு கோவிலாக பிரபலமற்று இருந்தது ! வரலாறு அறியப்படாததால் சுயம்பு என்றும் கூட சொல்லிக்கொண்டார்கள் !

குருராகவேந்திரர் அவரது முந்தய பிறவியில் மத்வாச்சாரியராக குரு விஜயேந்திரராக கர்நாடகத்தில் ஆன்மீகப்பனிகள் செய்ததோடு இந்தியா முழுவதும் பயணம் செய்து மகாகுரு அனுமனுக்கு கோவில்கள் ஸ்தாபித்தார்

விஜயநகர பேரரசின் சார்பில் மதுரை மற்றும் தென் தமிழகத்தை டெல்லி சுல்த்தானின் ஆளுகையிலிருந்து விடுவிக்க படை வந்தபோது காடாக இருந்த தேனி மாவட்டத்தை அவர்கள் முதலில் ஆக்கிரமித்து பின்பு மதுரையை தாக்கினார்கள் !

அப்போது உடன் வந்து இங்கு தங்கியவர்களுள் மார்க்கயன்கோட்டை என்ற கிராமம் மட்டும் மத்வ பிராமணர்களின் கிராமமாக குடி அமர்த்தப்பட்டது

இங்கு இப்போதும் ராகவேந்திரரின் மிருத்யுஞ்ச பிருந்தாவனம் ஒன்று சிறப்பாக செயல்பட்டு வருகிறது

இதை ஏன் சொல்லுகிறேநென்றால் குரு விஜயேந்திரர் மார்க்கயன்கோட்டை வந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன அவரின் ஒரு சித்திரம் ஒன்று இங்கு உள்ளது !

அவரால் ஸ்தாபிக்கப்பட்ட மகாகுரு அனுமன் சிலைகளில் வாலில் மணி ஒன்றும் கால்களில் பாதரட்சையும் இருக்கும் என்பது ஒரு குறிப்பு !

இவ்வகையில் அனுமந்தன்பட்டியில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள சிலையில் இவ்வடையாளங்கள் உள்ளன !

அத்தோடு அக்கோவிலுக்கு சற்று தெற்கே அதே கால்வாய்க்கரையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள (புதுப்பட்டி) விளியல் கல் ராயப்பெருமாள் கோவிலின் கோபுரத்திலும் விஜயேந்திரரரின் உருவம் போல ஒன்று உள்ளது ! பின்னாளில் விபரங்கள் அறிந்தவர் யாரும் இல்லாததால் இவ்வுருவத்திற்கு வெள்ளை வேட்டி கட்டி நம்மாழ்வார் போல மாற்றி விட்டார்கள் ! இக்கோவிலும் மிக ஒதுக்குப்புறமாக இருந்து இப்போதுதான் கொஞ்சம் பிரபலமாகி வருகிறது விளியல் – அழைத்தால் வருகிற பெருமாளின் கோவிலில் நல்ல ஆற்றல் இருப்பதை உணர்கிறேன்  இவ்விரு கோவில்களும் குரு விஜயேந்திரர் அருளால் உண்டானவையே என்பது எனது கணிப்பும் கூட !






மற்றொரு கர்ணபரம்பரை கதையும் ஒன்றுள்ளது ! அது ஸ்ரீஆஞ்சநேயர் முதலான வாணர சேனையினரை ஸ்ரீராமர் சந்தித்த மலை சுருளி மலையே !

நாராயணன் ராமராக அவதரித்த போது அவருக்கு உதவி செய்ய தேவர்கள் அனைவரும் வாணர சேனையினராக பூமியில் அவதரித்தனர் ! அவ்வாறு அவதரித்த தேவர்கள் வாழ்ந்ததாலேயே முப்பத்தி முக்கோடி தேவர்கள் வாழ்ந்த இடம் சுருளி மலை என்றானது !

சுருளி மலையிலும் சஞ்சீவி மூலிகைகள் இருப்பதை பலர் அறிவர் ! ஸ்ரீஆஞ்சநேயர் எடுத்துச்சென்ற சஞ்சீவி மலை இதுதான் என்றும் அவர் திரும்ப கொண்டு வந்து நின்று மீண்டும் வைக்கும்போது நின்ற இடமே அனுமந்தன்பட்டி என்றும் சொல்கிறார்கள் !

அல்லாமலும் சுருளி மலையில் நீண்ட நாட்கள் தவம் செய்து மறைந்து போன பாட்டையா சித்தர் வாழ்ந்த குகைக்கருகில் ஒரு குகையும் அதில் ஸ்ரீஆஞ்சநேயர் சிலையும் அவரால் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது !

இது ஸ்ரீஆஞ்சநேயர் தங்கிய குகையாகக்கூட இருக்கும் வாய்ப்பு உள்ளது !




பூம்புகாரில் பிறந்து மதுரையில் வந்து சிலநாட்களில் கணவனை இழந்து மதுரையை எரித்து விட்டு கண்ணகி வைகை ஆற்றின் வழி எதிர் நடந்து சுருளி நதியின் வழியாகவே விண்ணேற்ற மலையை அடைந்தார் ! அதுவும் இதன் தொடர்பு மலையே ! அந்த இடத்தின் அடிவாரம் மறுவி வண்ணாத்திப்பாறை என்று இப்போது அழைக்கப்படுகிறது !

அல்லாமலும் நீத்தார் வழிபாட்டுக்கு உரிய இடமாக இம்மலை நீண்ட காலமாகவே பயன்படுத்தப்பட்டு வருகிறது !

இவையெல்லாம் இம்மலைப்பகுதியின் ஆன்மீக முக்கியத்துவத்தை தெரிவிப்பவையாகவே உள்ளன !

ஆகவே அனுமனதன்பட்டி ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவில் அருள் ஆற்றல் நிறைந்துள்ள இடமாக உள்ளது என்பதில் சந்தேகமில்லை !

ஸ்ரீ ஆஞ்சநேயர் சிவனின் அவதாரம் என்பதும் அவர் ராம பக்தராக வைஸ்னவராக – சமரச வேதத்தின் முதல் வித்தாவார் ! தன் அவதாரத்தாலேயே அவர் சைவத்தையும் வைணவத்தையும் சமரச படுத்தியவர் !

முஸ்லீம் ஆதிக்கத்தில் இந்து தர்மம் சிதைக்கப்பட்டபோது அதை தென்னிந்தியாவில் தோற்கடித்து வைணவத்தை நிலைநிறுத்திய விஜய நகர பேரரசுக்கு ஆன்மீக பலம் கொடுத்த மத்வ மடங்களின் முதல் ஆச்சாரியாராக அவதரித்தவரும் ஆஞ்சநேயரே !


அத்வைதம் என்பது தியானம் ; தவம் செய்வது ; தனக்குள்ளேயே தேடி தானே கடவுள் என்பதாக உணர்ந்துகொள்வது வெளியே தேடுவது வீண் என்பதாக ஆன்மீக உலகில் ஒரு பெருங்காற்று வீசிக்கொண்டுள்ளது

மறுபுறமோ வெறும் சடங்காகவும் வியாபார பக்தியாகவும் அந்த சடங்கு செய்தால் இது கிடைக்கும் ; இது பரிகாரம் பூசை கோவில் வழிபாடு என்பதுபோல கொடுக்கல் வாங்கல் பக்தியாகவே மட்டும் துவைதம் என்றொரு பெருங்காற்று !

பத்து சித்தர் பாடல்கள் ; கொஞ்சம் ஞானம் ; ரெண்டு தியானம் ; நாலு ஆசனம் ; பிராணாயாமம் ; தவப்பயிற்சி ; எளிய முறை யோகங்கள் ; ஆளாளுக்கு ஒரு குரு என வைத்துக்கொண்டு ஞானமார்க்கத்திலே சிறகடித்து பறப்பவர்களாக தங்களைத்தாங்களே பெருமைப்படுத்திக்கொள்கிரவர்கள் பக்தி என்றவுடன் மட்டமாக பார்க்கும் நிலை !!

இந்த ஒட்டாத பாதைகளில் முன்னேற ; சரீரத்தில் சாதனைக்கு – மன ஒருமைப்பாட்டுக்கு தியானமும் யோகாப்பியசமும் ; ஆத்மாவிலே கறைகளை – இயலாமையை – பலகீனங்களை களைந்து முன்னேற இறைவனை சரணாகதி அடையும் பக்தியும் வேத உபாசனையும் அவசியம் அதாவது ஞானத்துடன் கூடிய பக்தி என்ற விசிஷ்டாத்வைதம் என்ற தத்துவார்த்தம் மத்வராக முன் வைக்கப்பட்டது ! ஸ்ரீ ஆஞ்சநேயரால் உண்டான சமரச வேதத்தின் வளர்ச்சி இது !

குருகீதை 13 . புவனங்கள் அனைத்தின் வளர் சிதை மாற்றங்களின் அளவுகோலாகவும் ;கருணாரசத்தின் பிரவாகமாகவும் ; சகல மார்க்கங்களையும் உலகில் ஆங்காங்கு தோற்றுவித்தவரும் ; ஒன்றுக்கொன்று முரண்பாடுகளாக தெரியும் தத்வ மாலைகளின் மத்யஸ்தரும் (சமரச வேதம் ) ; சத்,சித்,ஆனந்தம் (பரமாத்மா , ஜீவாத்மா . பேரானந்தம் ) ஆகியவைகளின் ஒத்ததிர்வை உலகிற்கு உபதேசிக்க வல்லவருமான சற்குருவின் அருட்பார்வை எப்போதும் ஏன் மீது நிலைத்திருக்கட்டும் !!    

பல மத்வாச்சாரியார்களும் – ஸ்ரீராகவேந்திரரின் மடம் வரை ஒரு முக்கியமான குரு சீட பரம்பரையின் மகாகுரு ஸ்ரீ ஆஞ்சநேயரே என்பதை உணர்ந்துகொள்வது அவசியம் !

மத்வம் என்றால் நடுப்பாதை ! சமாதானப்பாதை ! சாத்வீகப்பாதை ! சமரச வேதம் !!

மத்வம் சைவத்தையும் வைணவத்தையும் சமரசப்படுத்துதுகிறது ! மத்வம் அத்வைதத்தையும் துவைதத்தையும் சமரசப்படுத்த்கிறது !!

இதுவே வளர்ச்சியில் உலகம் முழுமையும் வந்துள்ள அனைத்து வேதங்களையும் – இந்து , முஸ்லிம் , கிறிஸ்தவம் , புத்தம் , சமணம் என அனைத்து மார்க்கங்களையும் சமரசப்படுத்தப்போவது – சமரச வேதம் !


சைவத்தின் வளர்ச்சியில் குரு வள்ளலார் இந்த சமரச வேதத்தை உணர்ந்து சித்தி அடையும்போது அருட்பெருஞ்சோதி என்றும் வரப்போகிற சமரச வேதம் என்றும் முன்னறிவித்தார்

ஆன்மீக உலகில் – வாழ்வில் ஒரு சாதகன் தான் எந்த குருபரம்பரையை சேர்ந்தவன் என்பதை சரியாக உணர்த்தப்பட்ட பிறகே வளர்ச்சி அபிரிதமாக இருக்கும் !

2013 தைப்பூசத்திற்கு முதன்முதலாக வடலூர் சித்தி வளாகத்தில் அமர்ந்து தியானித்தேன் ! சமரச வேதத்தைப்பற்றிய வெளிப்பாடு கிடைத்தது !

அப்படியே மந்திராலயம் செல்லும் வாய்ப்பு உண்டாகி அங்கும் தியானித்தேன் ! சமரச வேதத்தைப்பற்றிய வெளிப்பாடுகளே கிடைத்தது ! மகாகுரு ஆஞ்சநேயரைப்பற்றி அங்குதான் தெளிவாக உணர்ந்தேன் !

அதுவரை நான் பிறப்பால் வைணவக்குடும்பத்தை சேர்ந்தவன் என்ற முறையில் பெருமாள் கோவில்களுக்கு அடிக்கடி செல்பவன் ஆயினும் ஏனோ ஏன் மனம் ஆஞ்சநேயரைப்பற்றி கண்டுகொள்ளவில்லை !

ஆனால் அத்வைத பயிற்சியால் தியானம் சித்தித்த பிறகும் ; வாழ்வின் பலகீனங்களுடன் போராடி போராடி சறுக்கி சிராய்த்துக்கொண்டு பக்தியிலும் சங்கமித்து பெருமாள் கோவிலிலேயே ஒரு ஓரத்தில் அமர்ந்து தியானிக்கும் பழக்கமும் வந்தது ! அப்போதெல்லாம் என்னை அறியாமல் ஆஞ்சநேயரின் அருகாமையில்தான் அமர்ந்து தியானித்துக்கொண்டிருந்திருக்கிறேன் ! ஆனால் அவரைப்பார்த்து வணங்கியது கிடையாது !

அவரை அறியாதவனாக – ஏன் சற்று உதாசீனனாகவும் கூட நான் இருந்தும் மகாகுரு ஆஞ்சநேயர் என்னை ஆதரித்தும் வழிநடத்தியும் வந்திருக்கிறார் ; நான் அவரின் சீடப்பரம்பரையை சேர்ந்தவன் ; அவரின் வழிகாட்டுதலே பிற வேதங்களையும் அறிந்துகொள்ளும் பக்குவத்தை கொடுத்திருக்கிறது என்பதை சில மாதங்களுக்கு முன்பே உணர்ந்தேன் !

வழியில் போகும்போதும் வரும்போதும் பார்த்துக்கொண்டு மட்டுமே சென்றுகொண்டிருந்த அனுமனதன்பட்டி கோவிலுக்குள்ளும் இதன் பிறகுதான் சென்றேன் !

குருவின் அன்பையும் திருவருளையும் உணர்ந்தவனாக அழுது தியானத்தில் ஆழ்ந்து விட்டேன் ! சமரச வேதம் என்ற அந்த இலக்கில் நான் அறியாத பல விசயங்களை நான் எழுதிக்கொண்டுள்ளேன் என்பதுமட்டும் நடந்துகொண்டுள்ளது !

வெறுமையாக்கி ஒப்புக்கொடுப்பது என்பதைத்தவிற நான் ஏதும் செய்யவில்லை – அதுதான் சரணாகதியின் ரகசியம் !

குருவின் மூலமாக கடவுளை எப்போதும் சார்ந்துகொள்கிறேன் !

அனுபவத்தில் உண்டாகி – இப்போது நான் பிரார்த்திக்கும் ஆகமம் ஆவது :



குரு வள்ளலாரை மதிக்கிறேன் !

குரு ராகவேந்திரரை மதிக்கிறேன் !

மகாகுரு ஆஞ்சநேயரை மதிக்கிறேன் !

ஆஞ்சநேயர் மூலமாக சற்குரு நாராயணனை நமஸ்கரிக்கிறேன் !

நாராயணன் நாமத்தினாலே கடவுளை துதிக்கிறேன் !



ஓரிறைவனையே துதிக்கிறேன்

நாராயணன் நாமத்தினாலே

ஓம் நமோ நாராயணா

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி

தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி



நாராயணனாய் வெளிப்பட்ட அந்த

ஓரிறைவனையே துதிக்கிறேன்

ஓம் நமோ நாராயணனாய

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி

தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி

- இப்படி பிரார்தித்தவாறு தியானத்தில் ஆழ்ந்துவிடுகிறேன் ! இது எனக்கு போதுமானதாகவும் ஞான ரகசியங்களை வெளிப்படுத்துவதாகவும் இருக்கிறது !

இன்று அனுமன் ஜெயந்தி ! அருகிலுள்ள அனுமார் கோவிலுக்கு சென்று மகாகுரு ஆஞ்சநேயரை மதிக்கிறேன் மகாகுரு ஆஞ்சநேயரை மதிக்கிறேன் மகாகுரு ஆஞ்சநேயரை மதிக்கிறேன் மகாகுரு ஆஞ்சநேயரை மதிக்கிறேன் என்று பிராத்தித்து வாருங்கள் !

ஞானமும் பலமும் மரணமில்லா பெருவாழ்வு பெறுவதற்கான மார்க்கத்தை அவர் உபதேசிப்பார் !!

இயேசுவின் முற்பிறவி இந்தியாவிலே !!





இயேசுவின் மூன்றாம் தலைமுறை சீடர்கள் எழுதிய வரலாற்றில் மிகைப்படுத்த பட்ட விசயங்கள் உள்ளன.ஆனால் இயேசு உபதேசித்ததாக கூறப்பட்ட உபதேசங்கள் உண்மையானைவைகளே எந்த இறைதூதர் கருத்துகளிலும் இடைச்செருகள் இருக்கலாம் என்கிற எச்சரிக்கையுடன் அணுகவேண்டும்

இயேசுவின் ஆழமான உபதேசங்களை புரிந்து கொள்ளும் அளவு ஆன்மீக பரம்பரை ஐரோப்பியர்களுக்கு இல்லை! அவர்கள் உலகின் வலிமை மிகுந்த சக்தியாய் இருந்தாலும் ; அவர்களுக்கென்று சொந்தமாக ஆன்மீகப்பரம்பரை இல்லை . ஐரோப்பியர்களில் இன்றளவும் இறைதுதர்கள் யாரும் வரவில்லை !

உண்மை கிரிஸ்தவர்களை எல்லொரையும் கொன்று ஒழிப்பதையே தொழிலாக வைத்துக்கொண்டிருந்த ரோமப்பேரரசர்கள் தங்கள் சாம்ராஜ்ஜியம் தோல்வி மேல் தோல்வியை சந்தித்த போது காண்ஸ்டாண்டைன் என்னும் ராஜா க்ரிஸ்தவர்களை கொன்றதால்தான் தோல்வியோ என மனம் குத்தப்பட்டு இப்போரில் ஜெயித்தால் இயேசுவை குல தெய்வமாக ஏற்றுக்கொள்வதாக பொருத்தனை செய்து ஜெயித்தும் விடுகிரார்! அவர் தமது ரோம மத குருமார்களை கொண்டு இயேசுவையும் இனைத்து உருவாக்கிய அய்ரோப்பிய மதம் தான் ரோம கத்தொலிக்க க்ரிஷ்தவ மதமாகும் இந்த மதத்திர்க்கும் இயேசுவின் யூத சீடர்களுக்கும் எந்த சம்மந்தமுமில்லை இன்றைய க்ரிஷ்தவ மதம் என்பது இயேசுவல்லாத வெள்ளைக்காரத்தனமாக்கப்பட்ட ஒரு இயேசுவை கும்பிட்டால் போதும் என்று சொல்லுகிற கலிபுருசனின் மதமாகும்!

அவர்கள் இயேசுவையும் பைபிளையும் அடையாளமாய் வைத்திருப்பதால் அதனை வெறுக்கிர போக்கு இந்திய ஆன்மீகவாதிகளிடம் கானப்படுகிரது அது சரியல்ல!பைபிள்---பழைய ஏற்ப்பாடு என்பது பத்துக்கும் மேற்பட்ட இறைதூதர்கள் மூலம் கடவுளிடத்திலிருந்த வந்த வேதமாகும் அள்ள அள்ள குறையாத ஆன்மீக பொக்கிசங்கள் ஊள்ளன அவை ஆதிஇந்து தத்துவங்களுக்கு ஏற்புடையவையே!

இந்தியாவில் ராமர் க்ரிஷ்னர் புத்தர் மஹாவீரர் குரு நானக் போன்றோர் ஏக இறை வழிபாட்டுக்கார்களே ! உருவமற்ற ஓரிறை கொள்கை பரம்பரை இந்தியாவில் எப்போதும் உண்டு முஷ்லீம் ,இந்து கொள்கைகளின் ஒருங்கினைப்பே சீக்கிய மதமாகும்

பைபிள் இந்திய ஆன்மீக வாதிகளால்தான் சரியாக புரிந்து கொள்ள முடியும்! யூதர்கள் மதப்பெறுமை பிடித்தவர்களாய் மோசே முதலான இறைதூதர்கள் வழியில் வந்தவர்கள் நாங்கள் என்று இயேசுவிடம் சொன்னார்கள் அப்போது ஆபிராம்,மோசே ஆகியோருக்கு முன்னமே நான் இருக்கிறேன் என்று இயேசு சொன்னார்-- தான் ராமர்,க்ரிஷ்ணராய் முந்தய யுகங்களில் அவதரித்ததையே இப்படி சொனார் ! பிளாத்து(ராஜா) நீ யூதர்களின் ராஜாவா என வினவிய போது ராஜாதான் ஆனால் இந்த யுகத்திர்க்கு அல்ல என பதிலளித்தார்

பைபிளின் இன்னொரு பொழிப்புரை குரான் ஆகும்!பைபிளில் வரும் அனைத்து இறைதூதர்களின் வரலாறும் உபதேசங்களும் விரிவாக ஆழமாக விளக்கி காட்டப்பட்டுள்ளது!இயேசுவை மஸீஹ்-மேசியா--கல்கி என ஒத்துக்கொள்ளுகிரது!அவர் தற்போதும் உயிரோடு வானத்திற்கு உயர்த்தப்பட்டு நியாயத்தீர்ப்பு நாளுக்கு அடையாளமானவர் - மீண்டும் உலகிற்கு வருவார் என குறிப்பிடுகிறது!

கடவுளின் வார்தையே கடவுள் உச்சரித்தவுடன் செயலாகிறது!கடவுளின் சிறப்பு அதிகாரம் பெற்றவராய் பூமியில் அதர்மம் பெருகும் போது அவதரித்து தர்மத்தை நிலைனாட்டுகிறது!அந்த வார்த்தையே ராமராகவும் க்ரிஷ்ணராகவும் இயேசுவாகவும் அவதரித்தது---கல்கியாகவும் வரப்போவது

எதோ எடுத்தோம் கவிழ்த்தோம் என்று இக்கருத்தை சொல்லவில்லை ! இவர்களின் சொல்லை ஆராய்ந்தும் இன்னும் பிரார்த்தித்தும் ஓரளவு இவர்களோடு உள்ள உறவால் இவர்களை நிதானித்தரிந்தும் ராமரும் கிரிச்னரும் இயேசுவும் ஒருவரே அதாவது நாராயணனே என்பதை அறிந்து கொண்டேன்

ராமரையும் கிரிச்னரையும் வேறு வேறு நபராகத்தான் முதலில் நினைத்துக்கொண்டிருந்தார்கள் தமிழ் ஆழ்வார்கள் முதல் முதலில் சொல்லித்தான் இந்தியா அதனை ஏற்றுக்கொண்டது அதுபோல இந்த உண்மையை கடவுள் மெய்ப்பிப்பார்

யோவான் 1 அதிகாரம் :


1. ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது.

2. அவர் ஆதியிலே தேவனோடிருந்தார்.

3. சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை
.
10. அவர் உலகத்தில் இருந்தார், முழு உலகமும் அவர் மூலமாய் உண்டாயிருந்தும் உலகமோ அவரை அறியவில்லை.

11. அவர் தமக்குச் சொந்தமானதிலே வந்தார், அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.

கடவுளின் சத்தமே ஒன்றுமில்லாத இடத்தில் வந்த முதலாவது வெளிப்பாடு ! அருவ உருவம் ! அதுவே சகல பிரபஞ்சமாக படைப்புகளாக வெளிப்பட்டது

அந்த சத்தமே நாராயணன் ! நரல் + ஆயணன் = சத்தமாக வெளிப்பட்டவன் !

யுகங்கள் தோறும் அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்ட நாராயணனே ஒரு மனித அவதாரமாக வருவார் என்பது கீதையின் தெளிவு !

திரேதா யுகத்தில் ராமர் வந்தார்

துவாபார யுகத்தில் கிரிச்னர் வந்தார் ; கலியுக முடிவில் கல்கியாக வந்து உலகை நியாயம் தீர்த்து சத்திய யுகத்தை நிறுவுவேன் என்று சொன்னார்!

ஆனால் கலியுகத்தில் அசுர மாயைகளுக்கு அனுமதி கொடுத்து கலியுகத்திலும் வருவேன் என்பதை அவர் சொல்லவில்லை !சூசகமாக வைத்துப்போனார் ! ஒவ்வொரு யுகத்திலும் வருவேன் என்றால் கலியுகத்திலும் வரவேண்டுமல்லவா ?

வந்தார் ! ஆனால் இந்து சமூகமில்லாத மற்ற மனிதர்களுக்கு ஒரு அவதாரமாக ஆப்ராகாமை பெருமைப்படுத்த ஆப்ராகாமின் சந்ததியிலே அவர் இயேசுவாக வந்தார் !

ஆனாலும் ஆப்ராகமியர்களுக்கு உள்ள அகம்பாவத்தை - யூதர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் அரேபியர்களுக்கும் உள்ள ஒரு அகம்பாவம் தாங்கள் சொல்லுவது மட்டுமே சரி உயர்ந்தது என்பதும் மற்ற கருத்துகளை அழிப்பதற்கு தங்களுக்கு கடவுளே அனுமதி கொடுத்திருப்பதாக நம்பிக்கொள்வதுமான ஒரு வணங்காக்கழுத்தை அவர் கடுமையாக சாடினார் !

மத்தேயு 3:9 ஆபிரகாம் எங்களுக்குத் தகப்பன் என்று உங்களுக்குள்ளே சொல்லிக்கொள்ள நினையாதிருங்கள்; தேவன் இந்தக் கல்லுகளினாலே ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டுபண்ண வல்லவராயிருக்கிறார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
யோவான் 8 அதிகாரம்

53. எங்கள் பிதாவாகிய ஆபிரகாமிலும் நீ பெரியவனோ? அவர் மரித்தார், தீர்க்கதரிசிகளும் மரித்தார்கள்; உன்னை நீ எப்படிப்பட்டவனாக்குகிறாய் என்றார்கள்.

56. இயேசு : உங்கள் பிதாவாகிய ஆபிரகாம் என்னுடைய நாளைக் காண ஆசையாயிருந்தான்; கண்டு களிகூர்ந்தான் என்றார்.

57. அப்பொழுது யூதர்கள் அவரை நோக்கி: உனக்கு இன்னும் ஐம்பது வயதாகவில்லையே, நீ ஆபிரகாமைக் கண்டாயோ என்றார்கள்.

58. அதற்கு இயேசு: ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

ஆபிராமுக்கு முன்னமே நான் இருந்தேன் இருக்கிறேன் இருப்பேன் என்பது அவர் ராமராகவும் கிரிச்னராகவும் இருந்தது

அல்லாமலும் யுக முடிவைப்பற்றி மிக விரிவாக உபதேசித்துள்ளார் ! நியாயம் தீர்க்க வானத்திலிருந்து இறங்கி வருவேன் என்றார் ! அது கல்கியாக வருவது !

கலியுக முடிவில் ஒரு நியாயத்தீர்ப்பும் ஒரு நபரும் மட்டுமே வரமுடியும் ! ஆகவே கலியுக முடிவிலே நான் மீண்டும் வருவேன் என கிரிச்னர் சொன்னதும் இயேசு சொன்னதும் தாங்கள் ஒரே நபர் என்ற அர்த்தத்தில் மட்டுமே இருக்க முடியும்

அப்படியில்லாது இந்துக்களுக்கு ஒரு யுக முடிவும் ஆப்ராகமியருக்கு தனியே ஒரு யுக முடிவும் நடக்கும்போல கருதுவது ஒரு அஞ்ஞானம் !


அதிதேவர் நாராயணன் நாமத்தினாலே கடவுளை வணங்குவதே நேர் வழி ! ராமரை ஏற்றுக்கொள்வதும் கிரிச்னரை ஏற்றுக்கொள்வதும் இயேசுவை ஏற்றுக்கொள்வதற்கு சமமே ! இயேசுவை ஏற்றுக்கொள்வதற்கு ஐரோப்பிய அடிமை பாஸ்ட்டர்களிடம் காணிக்கை கொடுத்து நீரில் மூழ்க வேண்டிய அவசியமில்லை ! வெள்ளைக்கார பெயர் வைத்துக்கொண்டு தாத்தனும் பூட்டனுமாக ஆப்ராகம் ஈசாக்கு அந்தோணி என உளற வேண்டிய அவசியமில்லை !

பாடத்தெரிந்தாலே பாஸ்ட்டர் ஆடத்தெரிந்தாலோ ஆபிஷேகம் உள்ள ஊழியக்காரர் என கூத்தாடிகள் பாஸ்ட்டராகி ஆளாளுக்கு சபை நடத்தி தங்களை கடவுளின் ஏஜன்டுகளாக கருதிக்கொள்ளும் ஒரு பாஸ்ட்டருக்கு அடிமையாகி இயேசுவை ஏற்றுக்கொள் இயேசுவை ஏற்றுக்கொள் என கீறல் விழுந்த ரெக்கார்டு மாதிரி ஒப்பித்து திரிய வேண்டியதுமில்லை

இயேசுவை ஏற்றுக்கொண்டேன் என்று வாயில் சொல்வதால் எந்த பெரிய முன்னேற்றமும் ஆன்ம வாழ்வில் வந்துவிடாது. அவரின் உபதேசங்களை கைகொள்ளாது அவரை கடவுளாக்கி வழிபடுவதால் கிறிஸ்தவர்கள் என்பவர்கள் ஆன்ம ,முன்னேற்றம் அற்றவர்களாகவே உள்ளனர்

மத்தேயு 23:15 ஒருவனை உங்கள் மார்க்கத்தானாக்கும்படி சமுத்திரத்தையும் பூமியையும் சுற்றித்திரிகிறீர்கள்; அவன் உங்கள் மார்க்கத்தானானபோது அவனை உங்களிலும் இரட்டிப்பாய் நரகத்தின் மகனாக்குகிறீர்கள்.
இந்து தர்மத்தில் இருந்து கொண்டே அவரின் உபதேசங்களை மட்டும் உள்வாங்கி கடைபிடித்தால் போதுமானது

கடவுள் நமது அகக்கண்ணை திறந்து அருளுவாராக என நான்கு அதிதேவர்கள் நாமத்தினாலே வேண்டிக்கொள்வோம் !

நாராயணனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ நாராயணனாய

ஆதிசேஷனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ ஆதிசேஷாய

நாராயணியாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ நாராயணியாய

சிவனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ சிவாய

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி


இயேசுவின் மரணத்தின் பின்னணிகள் !!



இயேசுவை ஆப்ராகாமிய பின்னணியில் புரிந்துகொள்ளாமல் இந்திய பின்னணியில் புரிந்து கொள்ளவேண்டும்


அவர் ஒளிதேகம் உள்ளவர் ஒளிதேகம் உள்ள

தேவர்கள் அவ்வப்போது பூமியில் வரும்போது

சரீரம் உள்ளவர்கள்போல காட்டிக்கொள்ள இயலும்

நம்மைபோன்ற ஸ்துல சரீரம் உள்ளவர்கள்

 மரணமில்லா பெரு வாழ்வு பெறும்போது 

ஒளிதேகம் - அல்லது சூக்கும சரீரத்தில் மாறும் 

நிலை பெறுவோம் - வள்ளலாரைப்போல



அப்படி ஒரு தேகத்துடன்தான் அவர் பிறந்தார் ! 

மனிதனாக வரவேண்டும் என்பதற்காக ஆண்பெண் 

சேர்க்கையில்லாமல் ஒரு கர்ப்பத்தை தேர்ந்து 

கொண்டார்



அவர் நாராயணனின் அதாவது காப்ரியேலின் 

அவதாரம் என்பதால் இது முடியும் !


(உம்) ராமர் வேள்வியில் வெளிப்பட்ட அமிழ்தை 


உண்டதால் கர்ப்பமானவர்

கிரிச்னர் சிறையில் கணவனும் மனைவியும் 

தனித்தனியே தடுத்து வைக்கப்பட்ட நிலையில் 

இயேசுவைப்போலவே கர்ப்பத்தை தேர்ந்து 

கொண்டவர் 


பூமியில் மனிதனாக வருவதற்கு ஒரு பெண்ணின் 


கருவறையை பயன்படுத்திக்கொள்வார்களே தவிர 

ஆணின் வித்தாக அவதாரம் வராது ஏனென்றால் 

ஆணின் விதத்தில் அவனின் முன்னோர்களின் 

மனித பரம்பரை இருக்கும் அவ்வாறில்லாமல் 

நாராயணின் முழு தன்மை மனித சரீரத்திற்காக 

பெண்ணின் கருவறையை மட்டும் தேர்ந்து 

கொள்ளும் 


உலகிற்கு அவர் மனித சரீரமாக இருந்தாலும் அந்த 


சரீரத்தால் ஒளிசரீரமாக மாற முடியும்



கும்பகர்ணனின் மாயா அம்பால் அனைவரும் 

மயக்கமாகி இறப்புக்கு ஆளான போது ராமரும் 

அனுமானும் மட்டுமே பாதிப்பிலாமல் இருந்தனர் 

காரணம் ஒளிதேகம் அனுமனின் பிறப்பும் அப்படியே


இயேசு தனது சீடர்கள் முன்னிலையில் மறு 

ரூபமாகி இந்த ஒளி சரீரத்தை சிலுவை

மரணத்துக்கு முன்பே 


வெளிப்படுத்தினார் !

மாற்கு: 9

2. ஆறுநாளைக்குப் பின்பு, இயேசு பேதுருவையும் யாக்கோபையும் யோவானையும் அழைத்து, உயர்ந்த மலையின்மேல் அவர்களைத் தனியே கூட்டிக்கொண்டுபோய், அவர்களுக்கு முன்பாக மறுரூபமானார்;

3. அவருடைய வஸ்திரம் உறைந்த மழையைப்போல் பூமியிலே எந்த வண்ணானும் வெளுக்கக்கூடாத வெண்மையாய்ப் பிரகாசித்தது.

4. அப்பொழுது மோசேயும், எலியாவும் இயேசுவுடனே பேசுகிறவர்களாக அவர்களுக்குக் காணப்பட்டார்கள்.


அல்லாமலும் மத குருமார்களுக்கும் யூதர்களின் 

தற்பெருமைக்கும் விரோதமாக அவர் பல முறை 

கோவிலில் உபதேசிக்கும்போது யூதர்கள் பல 

முறை அவரை பிடித்து கொல்ல பலமுறை 

முயற்சித்தார்கள் அப்போதெல்லாம் அவர் 

ஒளிதேகமாகி பிடிபடாமல் தப்பிசென்று விடுவார்

எனவேதான் அவரை பிடித்துகொடுக்கும்படியாக 

யூதாஸ் என்ற ஒரு சீடருக்கு பணம் கொடுத்தனர்

யோவான் 8:59 அப்பொழுது அவர்மேல் எறியும்படி கல்லுகளை எடுத்துக்கொண்டார்கள். இயேசு மறைந்து, அவர்கள் நடுவே கடந்து, தேவாலயத்தை விட்டுப்போனார்.

அவர் ஒவ்வொரு நாளும் யூதர்களின் கோவிலுக்கு 

வந்து பல அற்புதங்களும் அதிசயங்களும் 

செய்துகொண்டே யூத மத சம்பிராதயங்களுக்கு 

விரோதமாக உபதேசித்துக்கொண்டிருந்தபோது 

அவரை பிடிப்பதற்கு எதற்காக கூலி 

கொடுக்கவேண்டும் ?


அவரை பிடிக்க முயற்சிக்கும்போதேல்லாம் அவர் 

மறைந்து போய் விடுகிறார் என்பதற்காகவே ! 

அவரை ஒரு மந்திரவாதியாகவே யூத மத 

குருமார்கள் சித்தரித்துக்கொண்டிருன்தனர் !


ஆகவே அவர் ஏற்றுக்கொண்ட சிலுவை மரணம் 

என்பது உலகிற்காக நிகழ்த்தப்பட்ட ஒரு நிகழ்வு !


அதில் அவர் மாமிச சரீரத்தில் மரித்தார் – ஸ்துல 


சரீரத்தில் மரித்தது போல காட்டி அவரது ஒளி  

சரீரத்தில் 

உயிர்த்தெழுந்தார் ! அது ஒரு நாடகம் !


குரான் அந்த நிகழ்வை நாடகம் என்றுதான் 

கூறுகிறது அது ஒரு மாயத்தோற்றம் போல 

காண்பிக்கப்பட்டது


குரான் 4:157. இன்னும், “நிச்சயமாக நாங்கள் 

அல்லாஹ்வின் தூதராகிய - மர்யமின் குமாரராகிய-

ஈஸா மஸீஹை கொன்றுவிட்டோம்” என்று 

அவர்கள் கூறுவதாலும் (அவர்கள் 

சபிக்கப்பட்டனர்); 

அவர்கள் அவரைக் கொல்லவுமில்லை, அவரை 

அவர்கள் சிலுவையில் அறையவுமில்லை. ஆனால் 

அவர்களுக்கு ஒருவன் ஒப்பாக்கப்பட்டான்; மேலும் 

இதில் அபிப்பிராய பேதம் கொண்டவர்கள், அதில் 

சந்தேகத்திலேயே இருக்கின்றார்கள் - வெறும் 

யூகத்தைப் பின்பற்றுவதேயன்றி அவர்களுக்கு 

இதில் எத்தகைய அறிவும் கிடையாது; நிச்சயமாக அவர்கள், அவரைக் கொல்லவே இல்லை.

4:158. ஆனால் அல்லாஹ் அவரைத் தன் அளவில் 

உயர்த்திக் கொண்டான் - இன்னும் அல்லாஹ் 

வல்லமை மிக்கோனாகவும் 

ஞானமுடையோனாகவும் இருக்கின்றான்.

4:159. வேதமுடையவர்களில் எவரும் தாம் 

இறப்பதற்கு முன் அவர் (ஈஸா) மீது நம்ம்பிக்கை 

கொள்ளாமல் இருப்பதில்லை; ஆனால் மறுமை 

நாளில் அவர் அவர்களுக்கு எதிராக சாட்சி 

சொல்பவராக இருப்பார்.


ஆனால் இந்த வசனங்களில் அரபியர்கள் தங்களின் 

அறியாமை காரணமாக கொஞ்சம் கை 

வைத்திருப்பார்கள் என்று நம்புகிறேன் .  மேலும் 

 நியாயத்தீர்ப்பு அன்று  இயேசுவை ஒரு சாதாரன 

மனிதனாக   தரம்  இறக்கி  அவரை  அல்லா 

 ஒழித்து 

 வைத்திருக்கிறார்  இறுதி  நாளுக்கு  பிறகு 

 பூமியிலே  வந்து இறந்து  முகமது  நபிக்கு 

 பக்கத்திலே  அடக்கம்  செய்யப்பட  போகிறார் ; 

இதற்காக இடம்  கூட  ஒதுக்கி வைத்திருக்கிறோம் 

என்றெல்லாம்  பீலா விடும்  அரபியர்களை  அவர் 

 நிச்சயம் குற்றம்  சாட்டுவார் என்று  குரானே  இங்கு 

முன்னறிவிக்கிறது


ஒளிசரீரம் என்பது பற்றியோ சூக்கும சரீரம் என்பது 

பற்றியோ அரபியர்களுக்கு ஒன்றும் தெரியாது 

என்பதால் இயேசுவை கடவுள் பரலோகத்திற்கு 

எடுத்துக்கொண்டார் அவரைப்போல ஒருவரை ஆள் 

மாறாட்டம் செய்து யூதர்களுக்கு 

ஒப்புக்கொடுத்தவரை அவர்கள் கொன்றார்கள் 

என்பது போல இவ்வசனங்களை கொஞ்சம் திருத்தி 

எழுதிக்கொண்டார்கள் !


ஆனால் உண்மை யாதெனில் இயேசுவே 

இந்நிகழ்வை அனுபவித்தார் என்பதாகும் ! அவர் 

ஸ்துல சரீரத்தில் இப்பாடுகள் அனைத்தையும் 

அனுபவித்தார் மரணத்திற்காக ஆவியையும் 

கடவுளிடம் ஒப்புவித்தார் ஆனால் அவர் ஏற்கனவே 

மரணமில்லா பெருவாழ்வு உள்ளவர் – ஒளிதேகம் 

உள்ளவராதலால் அச்சரீரமாக தன்னை 

மாற்றிக்கொண்டு உயிர்த்தெழுந்தார் !


அதாவது பைபிள் சொல்லுவதும் உண்மை குரான் 


சொல்லுவதும் உண்மை ஆனால் அதை 

புரிந்துகொள்ளும் தெளிவு ஆப்ரகாமிய 

வேதங்களுக்கு கிடையாது இந்திய வேதங்களின் 

பின்னணியில் மட்டுமே புரிந்துகொள்ளமுடியும் 

உலகின் மூத்த வேதமும் தாய் வேதமுமான இந்து 

தர்மத்திலே ஆப்ரகாமிய வேதங்கள் 

ஐக்கியமாகும்போது மட்டுமே முழு 

உண்மையாகிய 

– சமரச வேதம் வெளிப்படும் !


கடவுள் ஞானத்தை – சமரச வேதத்தை 

வெளியாக்கும் நாள் நெருங்கிக்கொண்டுள்ளது !


இயேசுவின் சிலுவைப்பாடுகள் முழு மனித 


சமுதாயத்திற்கும் மாபெரும் பலனை 

கொடுத்திருக்கிறது ! கிறிஸ்தவர்களுக்கு மட்டும் 

அல்ல ! கிறிஸ்தவர்கள் அல்லாத முழு மனித 

சமுதாயத்திலும் ஞானஸ்நானம் 

பெறாதவர்களுக்கும் அவரின் சிலுவைப்பாடுகள் 

பலனை கொடுத்துவிட்டன !


ஆப்ராகாமிய வேதங்களில் இயேசு 

ஆதாமைப்போன்றவர் என்ற குறிப்பு உண்டு ! அவர் 

கடவுளால் படைக்கப்பட்ட முதல் மனிதனான 

ஆதாமுக்கு (சிவனுக்கு) அடையாளமானவர் ! 

பிந்தைய ஆதாம் அதாவது ஆதி சிவனைப்போன்ற 

கலியுக சிவன் !

3:59அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக ஈஸாவின் உதாரணம் ஆதமின் உதாரணம் போன்றதே; அவன் அவரை மண்ணிலிருந்து படைத்துப் பின் “குன்” (ஆகுக) எனக் கூறினான்; அவர் (மனிதர்) ஆகிவிட்டார்.



சிவன் மூலமான உண்டான மனித குலத்தில் 

நாராயணனே அவதரித்து வந்தாலும் சரீரத்தில் 

வருவதால் அவர்கள் சிவபாலர்களே !


அவதாரங்கள் வருவதையே ஆதி மனிதர்களான 

தமிழர்கள் சேயோன் – குமாரன் ; முருகன் என 

அடையாளப்படுத்தினார்கள் !


இந்த முருகன் மால் மருகன்  ! – அதாவது திருமால் 

பூமியில் மறுவி வருவதால் மால் மருகன் !


உலகிற்கு சிவனுக்கு மகன் ! ஆத்மாவிலே அவன் 

தேவன் ! சரீரத்திலே அவன் சிவபாலன் ! 

சிவக்குமார் ! - இயேசுவும் தன்னை மனுஷகுமாரன் 

அதாவது சிவக்குமார் என்றுதான் 

சொல்லிக்கொண்டார் !


மாலோன் மருகனை மன்றாடி மைந்தனை 

வானவர்க்கு

மேலான தேவனை மெய்ஞான தெய்வத்தை -- 

கந்தரலங்காரம் 90 !

தந்தியின் கொம்பைப் ...... புணர்வோனே

சங்கரன் பங்கிற் ...... சிவைபாலா -- திருப்புகழ் 13 !


கலியுக முருகனான இயேசு பூமியில் அவதரித்தது 

முழு மனுக்குலத்தின் பாவங்களுக்கு பரிகாரம் 

செய்வது !


முழு மனுக்குலத்திற்கும் அது யாரிடமிருந்து 

பல்கிப்பெருகியதோ அந்த முதல் மனிதனால் 

மட்டுமே பாவப்பரிகாரம் செய்யமுடியும் !


முதல் மனிதனான ஆதாமைப்போன்ற 

சிவபாலனான இயேசுவாக சகல படைப்புகளையும் 

தன்னுள்ளே தாங்குகின்ற பரமாத்வான 

நாராயணனே அவதரித்து சிவத்திற்கு 

அடையாளமான ஸ்துல சரீரத்தில் சிலுவை 

பாடுகளை அனுபவித்து மரணத்தையும் 

அனுபவித்தார் !


ஆனாலும் அவர் நாராயணன் என்பதால் சூக்கும 


சரீரத்தில் உயிர்த்தெழுந்தார் !


மனித குலத்தின் பாவத்திற்கு செத்து 

நாராயணனின் 

அன்பு கிருபையை வெளிப்படுத்தி மனுக்குலத்தை 

கடவுளோடு மீண்டும் ஒரு முறை ஒப்புரவாக்கினார் !


கிறிஸ்தவ மதம் கிறிஸ்த்துவின் நேரடி சீடர்களால் 

உருவாக்கப்பட்டதல்ல ! அதனால் சகல 

மனுக்குலத்திற்கும் பாவப்பரிகாரத்தை இயேசு 

செய்ததை மறைத்து தங்களிடம் ஞான ஸ்நானம் 

பெற்று ஐரோப்பிய அடிமைகளாக மாறினால் 

மட்டுமே இயேசு உங்களை விடுவிப்பார் என்று 

பிதற்றித்திரிகிறார்கள் !


இயேசுவின் பெயரையே கூட 

கேள்விப்படாதவர்களுக்கும் பாவப்பரிகாரம் – பலன் 

ஏற்கனவே கிடைத்து விட்டது இயேசு என்ற 

பெயரை கேட்டாலே வாந்தி எடுக்கும் 

தீவிரவாதிகளுக்கும் அவரால் உண்டான பலன் 

கிடைத்துவிட்டது !


தொழில் புரட்சி மற்றும் சோசலிஷ புரட்சியின் 

மூலமாக மக்களாட்சியும் இரண்டாம் 

உலகப்போருக்கு பின்பு ஏற்ப்பட்ட உலக 

சமாதானத்திற்கான ஐ நா உடன்படிக்கையும் 

இப்போது போரை வெகுவாக குறைத்து விட்டது 

மனித உரிமைகளை பேணுவது அன்பியல் 

சமத்துவம் வாயளவிலாவது பேசப்படாவிட்டால் 

காட்டுமிராண்டிகள் என கேவலமாக நினைக்கும் 

மன நிலை உலகில் வந்து விட்டது


இலங்கை போன்ற இன வெறிகளும் மத 

வெறிகளும் கொஞ்சம் ஆங்காங்கே இருந்தாலும் 

பரவலாக ஒரு நிம்மதி எல்லா நாடுகளிலும் உள்ளது


இவை முன்பு ஒரு இனத்திற்குள்ளேயே 
இல்லாமல்தான் இருந்தது மன்னர்கள் 
மன்னர்களை 
வெல்ல உண்டாகும் சண்டைகளால் ஒருவரை ஒருவர் திடீர் திடீரென கொன்று கொண்டு அதை வீரம் என புகழ்ந்து கொண்டிருந்தார்கள்


தமிழகத்திலேயே எத்தனை அரசுகள் சண்டைகள் ! 

ஆரம்ப கால புறநானுறு இலக்கியம் தமிழர்கள் 

தமிழர்களை வெற்றிவேல் வீரவேல் என 

கத்திக்கொண்டு ஒருவரை ஒருவர் 

கொன்றதைத்தான் பாடுகிறது


இன்னும் ஓரு ஊர்க்காரர்கள் மற்றொரு ஊரின் 

மேல் 

விழுந்து ஆண்களை கொன்றுவிட்டு ஆடு 

மாடுகளையும் பெண்டு பிள்ளைகளை 

அடிமைகளாக பிடித்துக்கொண்டு போவார்கள் 

இதில் கற்பை காக்க அடிமைத்தனத்தை 

வல்லுறவிளிருந்து தப்ப பெண்கள் தற்கொலை 

செய்து கொள்வார்கள் ! இலங்கையில் நடக்கும் 

இந்த அவலங்களை கண்டு நோகும் நாம் உலகம் 

முழுவதிலும் மக்களாட்சிக்கு முன்பு இப்படித்தான் 

நடந்து கொண்டிருந்தது என்பதை 

நிதாநித்தொமானால் அது இயேசுவின் 

சிலுவைப்பாடுகளால் உண்டான அன்பியல் 

புரட்சியில் ஒன்று !


வெறிகளையும் காட்டுமிராண்டித்தனத்தையும் 

தூண்டும் அசுர ஆவிகளை சிலுவையிலே அவர் 

ஜெயித்தார் !

கொலோசெயர் 2:15 துரைத்தனங்களையும் அதிகாரங்களையும் உரிந்துகொண்டு, வெளியரங்கமான கோலமாக்கி, அவைகளின்மேல் சிலுவையிலே வெற்றிசிறந்தார்.

மனிதர்கள் செய்யும் எல்லா தவறுகளுக்கும் 


மனிதன் மட்டும் காரணமில்லை ; அவன் 

பின்னணியில் அவனை துண்டி விடும் அசுர 

ஆவிகளும் காரணம் என்பதால் ஒட்டு மொத்த 

படைப்புகளுக்கும் அதன் காரணிகளான ஆத்மா 

(நாராயணன்) சரீரமான சிவன் இணைப்பாக 

சங்கரநாராயணனாக இப்பரிகாரம் செய்யப்பட்டது ! 

அது கடவுளின் சித்தப்படியாக முன் ஏற்பாட்டின் 

படியாகவும் நடந்தது ! தற்செயல் நிகழ்வு அல்ல !



இயேசுவுக்கு ஐநூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட ஒரு 

தீர்க்கர்கரிசியின் ஆவணத்திலிருந்து 

முன்னறிவிப்பு 
:

ஏசாயா 44 அதிகாரம்

22. உன் மீறுதல்களை மேகத்தைப்போலவும், உன் 


பாவங்களைக் கார்மேகத்தைப்போலவும் 

அகற்றிவிட்டேன்; என்னிடத்தில் திரும்பு; உன்னை 

நான் மீட்டுக்கொண்டேன்.

23. வானங்களே, களித்துப் பாடுங்கள்; கடவுள் 

இதைச் செய்தார்; பூதலத்தின் தாழ்விடங்களே, 

ஆர்ப்பரியுங்கள்; பர்வதங்களே, காடுகளே, 

காட்டிலுள்ள சகல மரங்களே, கெம்பீரமாய் 

முழங்குங்கள்;

24. உன் மீட்பரும், தாயின் கர்ப்பத்தில் உன்னை 

உருவாக்கினவருமான கடவுள் சொல்லுகிறதாவது: 

நானே எல்லாவற்றையும் செய்கிற கடவுள் ; நான் 

ஒருவராய் வானங்களை விரித்து, நானே பூமியைப் 

பரப்பினவர்.

3. தாகமுள்ளவன்மேல் தண்ணீரையும், வறண்ட 

நிலத்தின்மேல் ஆறுகளையும் ஊற்றுவேன்; உன் 

சந்ததியின்மேல் என் ஆவியையும், உன் 

சந்தானத்தின்மேல் என் ஆசீர்வாதத்தையும் 

ஊற்றுவேன்.

ஏசாயா 53 அதிகாரம்

3. அவர் அசட்டைபண்ணப்பட்டவரும், மனுஷரால் 


புறக்கணிக்கப்பட்டவரும், துக்கம் நிறைந்தவரும், 

பாடு அநுபவித்தவருமாயிருந்தார்; அவரைவிட்டு, 

நம்முடைய முகங்களை மறைத்துக் கொண்டோம்; 

அவர் அசட்டைபண்ணப்பட்டிருந்தார்; அவரை 

எண்ணாமற்போனோம்.

4. மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை 

ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் 

சுமந்தார்; நாமோ, அவர் தேவனால் அடிபட்டு 

வாதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டவரென்று 

எண்ணினோம்.

5. நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் 

காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் 

அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை 

உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; 

அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்.

6. நாமெல்லாரும் ஆடுகளைப்போல 

வழிதப்பித்திரிந்து, அவனவன் தன்தன் வழியிலே 

போனோம்; கடவுளோ நம்மெல்லாருடைய 

அக்கிரமத்தையும் அவர்மேல் விழப்பண்ணினார்.

7. அவர் நெருக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் இருந்தார், 

ஆனாலும் தம்முடைய வாயை அவர் 

திறக்கவில்லை; அடிக்கப்படும்படி 

கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக் 

குட்டியைப்போலவும், தன்னை 

மயிர்கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் 

சத்தமிடாதிருக்கிற ஆட்டைப்போலவும், அவர் 

தம்முடைய வாயைத் திறவாதிருந்தார்.

10. ; கடவுளோ அவரை நொறுக்கச் சித்தமாகி, 

அவரைப் பாடுகளுக்குட்படுத்தினார்; அவருடைய 

ஆத்துமா தன்னைக் குற்றநிவாரணபலியாக 

ஒப்புக்கொடுக்கும்போது, அவர் தமது சந்ததியைக் 

கண்டு, நீடித்தநாளாயிருப்பார், ; கடவுளுக்கு 

சித்தமானது அவர் கையினால் வாய்க்கும்.

11. அவர் தமது ஆத்தும வருத்தத்தின் பலனைக் 

கண்டு திருப்தியாவார்; என் தாசனாகிய நீதிபரர் 

தம்மைப் பற்றும் அறிவினால் அநேகரை 

நீதிமான்களாக்குவார்; அவர்களுடைய 

அக்கிரமங்களைத் தாமே சுமந்துகொள்வார்.

12. அவர் தம்முடைய ஆத்துமாவை 

மரணத்திலூற்றி, அக்கிரமக்காரரில் ஒருவராக 

எண்ணப்பட்டு, அநேகருடைய பாவத்தைத் தாமே 

சுமந்து, அக்கிரமக்காரருக்காக 

வேண்டிக்கொண்டதினிமித்தம் அநேகரை 

அவருக்குப் பங்காகக் கொடுப்பேன்


யூதர்களின் வேதங்களிலுள்ள 

இம்முன்னறிவிப்பின்படி இயேசுவின் மரணமும் 

உயிர்த்தெழுதலும் நடந்தது ! மனுக்குலம் 

முழுமைக்கும் கடவுளின் ஆசிர்வாதம் உண்டானது


இதற்குப்பிறகு வந்த கிறிஸ்தவர்கள் தங்களை பூசாரிகளாக ஆக்கிக்கொண்டு அந்த ஆசிர்வாதத்தை 
பெற பூசாரிகளான தங்கள் மூலமாகத்தான் முடியும் 
என பிதற்றித்திரிகிறார்கள் . அவர்கள் குத்தகைதாரிகளல்ல !

ராம நாமமே பாவத்தை போக்கும் ! எத்தனை 

தவறுகள் செய்தாலும் எனது சீடன் நேர்வழி 

பெறுவான் என்ற கிரிஷ்ணரின் வாக்குதத்தமும் 

அவரின் அடுத்த அவதாரமான இயேசுவின் 

தியாகத்தில் பூர்த்தி ஆனது !


ராமரும் கிரிஷ்ணரும் இயேசுவும் ஒருவரே 

என்பதை புரிந்து கொண்டால் மட்டுமே 

போதுமானது ! அவரே காப்ரியேல்


நாராயணனின் நாமத்தினாலே கடவுளை 

வழிபட்டாலே போதுமானது !


இவர்களின் உபதேசங்களை கேட்பதும் அதை இந்து 

தர்மத்திலேயே கடைபிடிப்பதும் போதுமானது !



ஓரிறைவனையே துதிக்கிறோம்

நாராயணன் நாமத்தினாலே

ஓம் நமோ நாராயணா !!

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி

தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி