Total Pageviews

Wednesday, February 19, 2014

வருகிற இந்திய அரசாலாவது ஈழத்தமிழருக்கு நிம்மதி கிடைக்குமா ?




உலகின் மிக மூத்த குடி தமிழர்கள் அதுவும் சிவன் பூமியில் முதலாவது வாழ்ந்த இடம் ஈழம் . அவர் வேண்டி கொண்டு வந்த கங்கை அங்கு மாவேலி கங்கை என்ற நதியாக ஓடிக்கொண்டுள்ளது

உலகின் அனைத்து மனித குடிகளும் தமிழனளிருந்து பிரிந்ததால் சகலரின் பாவங்களும் ஈழத்தமிழரை பிடித்து வாட்டிக்கொண்டுள்ளது

சீக்கிய பிரச்சினையில் இந்திரா கொல்லப்படாமல் இருந்திருந்தால் ஈழத்தமிழருக்கு நிம்மதி கிடைத்திருக்கும்

பங்களாதேஷ் உருவானாலும் மதவாத முஸ்லீம்களால் அந்த நாடு இந்தியாவுக்கு ஆதாரவாக இருக்காது என இந்திராவுக்கு நன்கு தெரிந்தும் எதிரி ஒரே எதிரியாக வலிமையாக இருப்பதைக்காட்டிலும் இரண்டு எதிரியாக பிரிந்திருப்பது நல்லது என இந்திய ராணுவத்தை பயன்படுத்தினார்

அந்த தெளிவு ராஜீவுக்கு இல்லை ; ஜெயவர்த்தனேயின் சூழ்ச்சிக்கு பலியானார் போலிஷ் அதிகாரிகளான பாதுகாப்பு ஆலோசகர்களின் பேச்சை கேட்டு ஈழத்தநிழர்களுக்கு எதிர்ப்பாக இறங்கினார்

அப்போதும் சிங்கள சிப்பாயின் கரத்தில் ராஜீவ் கொல்லப்பட்டிருந்தாலும் ஈழத்தமிழருக்கு ஆறுதல் கிடைத்திருக்கும்

 

அமெரிக்க சி ஐ ஏ - இன் பேச்சை கேட்டு பிரபாகரன் ராஜீவை கொன்றது இன்னும் சிக்கலை அதிகப்படுத்தி விட்டது

பிரபாகரன் ஒருவரை கொல்ல இவ்வளவு அப்பாவி பொதுமக்களை யுத்தம் என்கிற பெயரால் தடை செய்யப்பட சீனாவின் ஆயுதங்களை - ரசாயன கொத்து குண்டுகளால் கொன்று கொடுர பலிவாங்கிய நல்ல உள்ளம் படைத்த அம்மணியையும் அவரது பரம்பரையையும் கடவுள் பார்த்துக்கொள்ளட்டும்

பாஞ்சாலியின் சபதம் நியாயம் என்றாலும் போரின் முடிவில் பாஞ்சாலியின் ஒரு பிள்ளைகள் கூட உயிரோடு இல்லை

நாராயணனே அவதாரமாக வந்த கிரிஷ்ணரும் போரின் பாவங்களுக்கு பரிகாரமாக ஒரு அம்பை ஏற்றுக்கொண்டு உலகை கடந்து சென்றார்

இவைகளில் படிப்பினை இல்லையா ?

எது எப்படி இருந்தாலும் இந்து என்கிற முறையிலும் தமிழர் என்ற முறையிலும் ஈழத்தமிழர்களின் அவலங்களை தீர்க்க இந்து தர்மத்தினருக்கு அக்கறை இல்லையா ?

தமிழர் இயக்கத்தினர் நாத்திகர்களாக இருக்கலாம் ! அவர்களின் ஈழத்தமிழர்களுக்கான துடிப்பில் நியாயமில்லையா ?

இந்தியாவில் இந்திய குடிமைப்பணி மற்றும் ராணுவத்தில் தேர்வெழுதி அதிகாரிகளாக தமிழர்கள் பணி செய்கிறார்கள் . மக்கள் பிரதிநிதிகள் இல்லாத ஆளும் வர்க்கமாகிய அதிகாரிகளாக இந்தியாவின் சகல இனங்களும் இந்தியாவை ஆளுகிறார்கள் !

ஆனால் அத்தகைய அரசியல் உரிமை ஈழவர்களுக்கு இலங்கையில் இல்லை அடிமைக்குடிகள் மட்டுமே

ராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தப்படி தமிழ் போராட்டக்குழுக்களை அழித்தாயிற்று அதற்கு இந்திய அரசு இவ்வளவு செலவிட்டதே . இப்போது அந்த ஒப்பந்தத்திலுள்ள அரசியல் உரிமையை இலங்கை செயல்படுத்த வில்லையானால் அந்த அரசு மீது ராணுவ நடவடிக்கை எடுக்க இந்திய அரசுக்கு உரிமை வந்து விட்டதல்லவா ?

பழி வாங்குவது மட்டுமே லட்சியமாக இருந்த சோனியா குடும்பம் - இலகை அரசின் மீதும் ராணுவ நடவடிக்கை எடுக்க உரிமை இருந்தும் அதை செய்யவில்லை !

வருகிற இந்திய அரசாவது செய்யுமா ?

ஒத்துப்போவது என்கிற இயல்பே இல்லாத முஸ்லீம்களை - காஷ்மீரை இந்தியாவில் வைத்திருக்க இவ்வளவு செலவு செய்வதைக்காட்டிலும் வளம் கொழிக்கும் இலங்கையை கைப்பற்றி இந்தியாவுடன் சேர்த்துக்கொள்வது எளிது இந்தியாவுடன் சகல உரிமைகளுடன் வாழ்வதை சிங்களவர்கள் வெறுக்கமாட்டார்கள்

ஒரே வைசிராயின் கீழ்தான் ஆங்கிலேயர்கள் இந்தியாவையும் இலங்கையையும் ஆண்டார்கள் .

இந்தியாவின் வலிமையை குறைக்கவேண்டும் என்றுதான் முஸ்லீம்களின் தனி நாடு கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்தார்கள்

அந்தப்பிரச்சினையில் கவனம் செழுத்திய ஆர் எஸ் எஸ் காரர்கள் அழுக்கில்லாமல் இலங்கையை தனியே பிரித்து சுதந்திரம் கொடுத்ததை கண்டுகொள்ளாமல் விட்டு விட்டார்கள்

இரண்டுமே இந்தியாவை வலிமையற்றதாக மாற்ற ஆங்கிலேயர்கள் வைத்த செக் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்வது இந்தியர்களுக்கு நல்லது