Total Pageviews

Wednesday, October 22, 2014

திராவிட பின்னேற்ற மாய்மாலம்



ஆதி மனித சமூகமான குமரிக்கண்ட தமிழ் சமூகம் பிரளயத்தில் அழிந்த பிறகு கும்பகோணத்தில் அகத்தியரால் மனித இனம் வெளிப்படுத்தப்பட்டு அங்கிருந்துதான் முழு உலக மனித இனங்களும் பரவின இந்நிகழ்வே கும்பகோணம் மகாமகம் திருவிழா

அப்போது பூம்புகாரின் அருகிலிருந்த கபாடபுரமே அகில உலக தலைநகர்
வியாசர் ; விஸ்வாமித்ரர் போன்றோரால் குருகுலங்கள் அமைத்து வேதங்களை தொகுக்க பயன்படுத்தப்பட்ட இடமே வேதாரண்யம் - திருமறைக்காடு 


முழு இந்திய தத்துவஞானமும் ; இந்து வேதமும் தமிழ் முனிவர்களாலேயே தொகுக்கப்பட்டு பின்னர் உலகம் முழுவதும் பரவிய மனிதர்களின் சகல பாஷைகளையும் இணைத்து சம + கிரதமாக = சமஸ்கிரதத்தை உருவாக்கியவர்களும் தமிழ் ஞானிகளே

சமஸ்கிரதத்தை உலகில் உள்ள எந்த மொழியினர் கேட்டாலும் அதில் அவர்களின் சொற்கள் ஒன்றிரண்டாவது வரும் . அதனால் அந்த வேதம் அவர்களை ஈர்க்கும் என்பதுவே சமஸ்கிரதத்தை உருவாக்கியதன் நோக்கம் . அதில் மற்றெல்லா மொழிகளைக்காட்டிலும் தமிழ் சொற்களே அதிகம் உள்ளன

இந்து மதத்தின் சகல தெய்வங்களும் சத்திரியர்களான திராவிடர்களாகவே இருக்கிறார்கள்
ஆனால் அதை திராவிடர்கள் மறந்து விட பூசைத்தொழிலை செய்து பிழைக்க மனப்பாடம் செய்த பிராமணர்களின் வேதமாக இந்து வேதத்தை திராவிடர்கள் கருதிக்கொண்டது பெரும் தவறு
நிலத்தின் சொந்தக்காரனை கூலியாளே முதலாளி என  நினைக்க வைத்ததுதான் இங்கு அண்ணாவாலும் கருணாநிதியாலும் உருவாக்கப்பட்ட மாய்மாலம்
இந்து வேதத்தின் உண்மையான சொந்தக்காரர்கள் திராவிடர்களே ;பிராமணர்களல்ல

வேதத்தை எழுதிய திராவிடர்கள் அதை மறந்து விட்டது முதல் தவறு . அதை மனப்பாடம் செய்த பிராமணர்கள் தங்களை கடவுளின் பிரதிநிதிகளாக சித்தரித்ததால் அந்த வெறுப்பில் கடவுளே இல்லை எனவும் வேதங்களே பொய் என்றும் திராவிட இயக்கங்கள் நிலைப்பாடு எடுத்தது அடுத்த தவறு

கூரையில் ஒலுங்கு இரு
க்கிறது என்பதற்காக கூரையையே தீ வைத்து அழிப்பதைப்போல இந்து தர்மத்தை அழிப்பது என்று முடிவெடுத்தது அடுத்த தவறு

இப்போது பிராமணர்களின் ஆதிக்கம் ஒழிக்கப்பட்டு விட்டது

சங்கர மடங்கள் தவிர பல மடங்கள் திராவிடர்களே இப்போது பிரபலமாக உள்ள கார்ப்பரேட் சாமியார்கள் பலர் திராவிடர்களே

ஏனென்றால் வேதத்தின் சொந்தக்காரர்களானா திராவிடர்கள் அந்த வேதத்தை படித்து கையிலெடுத்தால் அவர்களின் வீச்சு பிராமணர்களை விட பல மடங்கு அதிகமாகவும் உயிர்த்துடிப்போடும் இருக்கிறது என்பது பல முறை நிரூபனமாகி வருகிறது

இப்போது தமிழ் இனப்பற்றாளர்கள் செய்யவேண்டியது வேதங்களை கையிலேடுப்பது . அதை விடுத்து பழைய பஞ்சாங்கமாக பிராமணர்களின் வேதம் என்று சொல்லிக்கொண்டு இருக்கலாகாது சொந்த வீட்டையே அழிக்கலாகாது

வேதங்களை கைப்பற்றி திராவிடர்களின் சொந்தமாக்குங்கள் சமஸ்கிரதத்தை கற்றுக்கொண்டு அதை தமிழில் உயிர்ப்போடு கொண்டு வாருங்கள்
எப்படி ஆனாலும் முழு மனித இனமும் தமிழரிலிருந்து தோன்றியிருக்க எதற்காக அடுத்தவரை எதிர்ப்பதுவே தமிழ் இனப்பற்று என்ற கொள்கைக்கு பலியாகிறீர்கள் ?

ஆரியர் என்பவர் ஆதியில் தனியாக வரவில்லை .தமிழரிலிருந்து வெளியே சென்று மீண்டும் தமிழகத்தில் வந்தவர்களே ஆரியர்கள் . அவர்களை எதிர்ப்பது என்பது குறுகிய குழு உணர்வை தூண்டினாலொழிய ஆட்சியை பிடிக்க முடியாது என சிலர் செய்த சதி அவர்கள் பல தலைமுறைக்கு சொத்தை சேர்த்தாயிற்று .போதும் அவர்களின் உசுப்பேத்தும் பேச்சை கேட்டு கைதட்டியது போதும்

வட இந்தியர்கள் அனைவரும் பிராமணர்களா ? அவர்கள் திராவிடர்களல்லவா ? இந்தி உள்ளிட்ட அவர்களின் மொழி அனைத்தும் திராவிட மொழிகள் அல்லவா ?

 
தமிழரைத்தவிர அனைவரும் ஆரியர்கள் அந்நியர்கள் என்ற மாயையை பரப்பிவிட்டு அவர்கள் தமிழரை எதிர்க்கிறார்கள் என்றால் அவர்களை அந்நியர்கள் என்று முதலில் சொன்னதே நாம்தானே நாம் தானே அவர்களை முதலில் வெறுத்தோம் இந்தியாவில் மலையாளிகள் உட்பட அனைவரும் (தமிழர்களைத்தவிர) இந்திய தேசிய நீரோட்டத்தில் உள்ளார்கள் அவர்கள் வட இந்தியர்களை திராவிடர்கள் என்று அங்கீகரிக்கிறார்கள் . அவர்களை ஆரியர்கள் என்று அந்நியப்படுத்தவில்லை எல்லோரும் இந்தியை பேசக்கற்றுக்கொள்கிரார்கள் . இதனால் இந்தியர்கள் என்ற அடையாளம் அவர்களுக்கு இருக்கிறது அந்நிய இனமான ஆங்கில கலாச்சாரமும் ஆங்கிலமும் தமிழை சீரழிப்பதை விட இந்தி சீரழிவை ஏற்படுத்தாது

குறைந்த பட்சம் தேர்வு இல்லாமல் கூட இந்தி பள்ளிகளில் கற்பிக்கப்படவேண்டும் அது இந்திய தேசிய அல்லது திராவிட அடையாளம்
வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது ஆரிய மாயை இந்தி எதிர்ப்பு -  என்றைக்கு வட இந்தியர்களை எதிர்க்க துவங்கினார்களோ அன்றையிலிருந்து தமிழர்கள் அந்நியப்பட்டு போனார்கள் .

அனைவருக்கும் அண்ணை தமிழ் என்றால் ; சகல மனித இனங்களும் தமிழரிலிருந்து உற்பத்தி ஆனவை என்றால் உலகில் சமாதானத்தை நிறுவும் பணியும் தமிழரிடத்திருந்தே வரும் .

குறுகிய குழு வெறி என்ற திராவிட பின்னேற்ற மாய்மாலங்களை விட்டு வெளிவருவோம். உலகில் சமாதானத்தை உண்டாக்கும் வரலாற்று கடமையை நிறைவேற்ற தயாராவோம்

சகல வேதங்களையும் கற்று உணர்வோம் . சமரச வேதத்தை வெளிக்கொண்டுவரும்  படி இறைவனை வேண்டுவோம்

ஓரிறைவனையே துதிக்கிறோம்
நாராயணன் நாமத்தினாலே    
ஓம் நமோ நாராயணா !!
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி

ஓரிறைவனையே துதிக்கிறோம்
சிவனின் நாமத்தினாலே    
ஓம் நமோ சிவாய !!
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி
நாராயணனாய் வெளிப்பட்ட அந்த
ஓரிறைவனையே துதிக்கிறோம்
ஓம் நமோ நாராயணாய !
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி