Total Pageviews

Thursday, February 20, 2014

சிதம்பர ரகசியம் !!

(இங்கு க்ளிக் செய்து இசையை கேட்டுக்கொண்டு வாசிக்கவும்)

அல்லது  இந்த  பிளேயரிலும் கேட்கலாம்
https://ia800501.us.archive.org/26/items/OMNamhShivayaByKrishnaDas/OM%20Namh%20Shivaya%20by%20Krishna%20Das.ogg


சிதம்பர ரகசியம் என்பது நடராஜர் சன்னதிக்கு மேற்கே ஒரு அறை இருக்கும் . அதைப்பார்ப்பதற்கு நுழைவுச்சீட்டு பெற்றுக்கொண்டு செல்லவேண்டும் . அங்குபோனால் ஒரு அறையை காட்டுவார்கள் ; அது இருட்டாக இருக்கும் அதில் சிவனுக்கு அடையாளமாக ஒரு வில்வம் வைத்திருப்பார்கள் !

இந்த ரகசியத்தின் அர்த்தத்தை பலரும் விளக்கமளித்தாயிற்று !
அது இறை நிலை என்பது வெட்டவெளி ! சகல அண்டங்களையும் (சூரிய குடும்பங்கள் ) உள்ளடக்கிய பேரண்டம் அல்லது பிரபஞ்சம் இருள் மயமான வெட்ட வெளிக்குள் இருக்கிறது !
பிரபஞ்சம் நாளும் வளர்ந்து கொண்டே – விரிவடைந்து கொண்டே இருக்கிறது . அது எவ்வளவு வளர்ந்தாலும் அது எதில் வளருகிறதோ அல்லது எது எல்லாவற்றையும் ஊடுருவியும் எல்லாவற்றையும் தாங்கிக்கொண்டும் உள்ளதோ அந்த வெட்டவெளி – அரூபம்  இன்னும் அதை விட பெரியதாக இருந்து கொண்டேதான் இருக்கிறது ! அதன் நீளஅகலத்தை யாரும் அறியார் !

இந்த அறைக்கு நுழைவு சீட்டு இருப்பதால் அந்த அறையை மட்டுமே ரகசியம் அது என்ன என்பதான கேள்வியோடு மனிதர்களின் மனம் ;அறிவு ; ஞானம் தேக்கமடைந்து அதற்கு அப்பால் அக்கோவிலில் உள்ள எளிதான ; ஆழமான ; நுட்பமான ; அவசியுமுமான ரகசியம் கண்டுகொள்ளாமலே விடப்பட்டுள்ளது

மகாகுரு வள்ளலார் அவர்களின் ஆசியும் அருட்பொழிவும் வேண்டி தைப்பூசம் 2014 ற்கு வடலூர் நீரோடையில் தாய் வீட்டில் எனது நண்பர்கள் குழாம் தங்கி சித்தி வளாகத்தில் தியானம் செய்து வந்தோம்

இப்பயணம் எனக்கு இரண்டாம் பயணம் ! முதல் முறையும் கூட்டம் கருதி ஞானசபை செல்லவில்லை ! ஆனால் இம்முறை 18 ம் தேதி ஞானசபை சென்றபோது அதை மகாகுரு வள்ளலார் `உத்தர ஞான சிதம்பரம்``` `` என குறித்திருப்பதும் அதில் சிற்சபை ; பொற்சபை ; ஞானசபை அமைத்து ஞானசபையில் ஏழு மாயத்திரைகளை அகற்றினால் மட்டுமே அருட்பெரும்ஜோதியாகிய ஏக அரூப இறைவனை தரிசிக்க முடியும் என உணர்த்தியிருப்பதையும் அறிந்தேன்

அப்படியானால் சிதம்பரத்திலும் இது தொடர்பான ரகசியம் இருக்கவேண்டும் என்ற உணர்வு எழுந்ததால் சிதம்பரம் செல்ல முடிவெடுத்தேன் 

 ஏனெனில் மகாகுரு வள்ளலார் சிதம்பரத்தில் சில நாட்கள் தரித்திருந்தே வடலூர் வந்து சேர்ந்தார் ! அதோடு தருமசாலை ; ஜீவகாருண்யம் ; தயவு ஆகியவற்றை முன்னேடுத்துக்கொண்டிருந்த வள்ளலாரை ஆதித்தகப்பன் சற்குரு சிவன் – சிவனடியாராக வந்து திருவடி தீட்சை அளித்தபிறகே சைவ சமய வழிபாட்டு நெறியிலிருந்து அருட்பெரும்ஜோதி – ஏக இறை வழிபாட்டுக்கு மாறிக்கொண்டார் !

குருவின் மூலமாக கடவுளை வழிபடுவது என்ற ஆதி வழிபாட்டு இந்து தர்ம நெறியை காலப்போக்கில் குருவையே கடவுளாக்கி வழிபடுவதாக நெறிபிறழ்ந்த நிலையில் வள்ளலார் யாரை வழிபட்டுக்கொண்டிருந்தாரோ அந்த சிவனே நேரடியாக வந்து தீட்சை அளித்தபிறகுதான் அவரால் வழிகாட்டப்பட்டே அருட்பெரும்ஜோதி வழிபாட்டுக்கு வள்ளலார் மாறினார் – இந்த உத்தர ஞான சிதம்பரத்தை அமைத்தார் என்பதில் உணர்வுள்ளோருக்கு மெய்ஞானம் உள்ளது !

உத்தரம் என்பது வடக்கு திசை மற்றும் உச்சி – உன்னதத்தை குறிப்பது ! உன்னதத்திலிருந்து வரும் ஞானம் நம்மை அம்பரத்திற்கு உயர்த்தும் என்பதே இதன் அறிவுரை !


சிதம்பரத்திற்கும் இதற்கு முன்பு நான் சென்றதில்லை ! சீர்காழி நண்பர் குமரேசன் அவர்களிடத்தும் எனக்கு கொஞ்சம் வேலை இருந்ததால் அவரை சிதம்பரம் அழைத்துவிட்டு அவர் வரும்வரை சிதம்பரம் கோவிலை சுற்றிப்பார்த்துக்கொண்டிருந்தேன் !

இங்கு நடராஜர் பொன்னம்பலத்தில் நடனமாடுகிறார் என்பதையும் ஒரு ரகசிய அறை ஒன்றும் இருக்கிறது என கேள்விப்பட்டிருந்தேனே தவிர அங்கு உள்ளேயே பெருமாளுக்கும் கோவில் இருப்பதை அறியவில்லை !

பெருமாள் கோவில் மேற்கிருந்து கிழக்கு நோக்கி கொடிமரத்துடனும் ; நடராஜர் வடக்கிருந்து தெற்கு நோக்கி கொடிமரத்துடனும் சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளன ! இவ்விரண்டு + அடையாளம் போல ஒன்றை ஒன்று வெட்டிக்கொண்டு அமைக்கப்பட்டுள்ளன .இவ்விரண்டு கோவில்களும் ஒன்றை ஒன்று வெட்டிக்கொள்ளும் இடத்தில் ஒருவர் நின்றால் ஒரே நேரத்தில் இரண்டு சன்னதிகளிலும் நடக்கும் பூஜையை தரிசிக்க முடியும் !

இக்கோவிலில் சைவ மற்றும் வைணவ மார்க்கங்களின் சமரசம் ; அல்லது ஒரு சாதகனுக்கு சரீரம் மற்றும் ஆத்மாவுக்கான சற்குருக்கள் சிவன் மற்றும் விஷ்ணுவின் அருளில்லாமல் ஆத்மசாதனையில் முன்னேறி இறைவனை அறியும் மேன்மையை அடைய முடியாது . இருவரின் அருளும் கலந்தால் மட்டுமே ரகசியத்தை அறியும் திறவுகோல் கிடைக்கும் ! – இது அடிப்படையான - மிக முக்கியமான சிதம்பர ரகசியம் !


இன்னும் ஆழமாக செல்லும்போது நடராஜர் சன்னதியின் கொடிமரத்தை அடுத்து சிவன் காளியோடு ஊர்த்தவ தாண்டம் ஆடும் சன்னதி உள்ளது !

நான் குறிப்பிடும் இடத்தில் ஒருவர் நின்று பெருமாளை நோக்குவாரானால் அவரின் இடப்புறத்தில் சிவன் காளியோடு ஊர்த்தவமும் ; வலப்புறத்தில் சிவகாமியோடு ஆனந்த தாண்டவமும் ஆடிக்கொண்டிருப்பார்கள் ! சிவனின் இரண்டு தாண்டவங்களும் இருக்கும் ஒரு நேர்கோட்டை பெருமாள் செங்குத்தாக வந்து கலப்பார் !!


மனித சரீரம் இல்லாமல் ; பிறவி எடுக்காமல் ஒருவர் ஆத்மா ஞானத்தில் முழுமையடைய முடியாது ! ஆத்மா துய்மையடைந்து ஒளி சரீரம் பெற்று மரணமில்லா பெரு வாழ்வு அல்லது தேவனாக மாறுவதற்கு சரீரம் அவசியம் !

சரீரத்தின் அதிபதியான சிவன் அந்த சரீரத்தின் இச்சைகளோடு கலந்து நடனமாடிக்கொண்டிருப்பது சாதாரண மனித நிலை ! (காளி – ரஜோ குணத்தின் – உலகியல் வாழ்வின் ஆசா பாஷைகளுக்கு அடையாளம் )


உலக ஆசைகள் இச்சைகளின் வழி ஊர்த்தவம் ஆடி ஆத்மாக்கள் பாவங்களுக்குள்ளாக விழுகின்றன ! ஆனால் அதற்கு பதில் விளைவுகளாக துன்பங்கள் மேலிருந்து – பரத்திலிருந்து வந்து கலக்கும்போது ; அந்த ஆத்மா நிதானப்படுவதும் ; இறைவனைத்தேடுவதும் – ஏதாவது பக்தி நெறிக்குள்ளாகி தனது இச்சைகளை தடைபோடும் போது அல்லது காளியின் ஆதிக்கத்தில் ஆட்படாமல் காளியை அடக்கும் நிலையை அது அடையும் போது அந்த சரீரம் சிற்சபையாக பரிணமிக்கிறது !

இப்படிப்பட்ட ஆத்மாக்கள் மென்மேலும் ஏதாவது ஒரு குருபராமபரியத்தில் அருளில் வளரவேண்டும் ! அந்த அருள் பரத்திலிருந்து – பெருமாளிடமிருந்து வந்து கலந்து கொண்டே இருக்கும் !

அந்த வளர்ச்சியில் அதே சரீரம் பொற்சபையாக ஆனந்த தாண்டவமாக – சிவகாமி என்பது சத் குனத்திற்கு அடையாளம் ! சத் குணமான சிவகாமியின் அன்பு அரவணைப்புடன் இவ்வுலக வாழ்விலேயே ஆனந்த மயத்திற்குள் பிரவேசிக்கிறது !

இப்பூவுலக வாழ்விலேயே தனக்கும் ஆனந்தமாக பிறருக்கும் ஆனந்தம் பயப்பதாக அவ்வாழ்வு இருக்கும் ! அப்போது சரீரத்திற்கு ஐம்புலன்களும் அடங்கி இருக்கும் ! பூதம் அடங்கி மிதிக்கப்பட்டு நமது ஆளுகையில் இருக்கும் ! கையில் ஏந்தப்பட்ட ஞானத்தீ நம்மையும் செழுமைப்படுத்தி பிறரையும் செழுமைப்படுத்தும் !

ஐம்புலன்களை ஆதிக்கப்படுத்துதல் என்பது பக்தியினால் மட்டும் விழையாது ! சரீரத்தில் மேற்கொள்ளப்படும் தியான ; யோகா சாதனைகள் அவசியம் ! யோகங்கள் மூலமாக மனதை சீர்படுத்தி இவ்வுலக வாழ்வை ஆனந்த மயமாக்கிகொள்ளும் அனேக குருமார்க்கங்கள் வந்து விட்டனர் ! ஆனால் அதுமட்டுமே முழுமையடைய போதுமானதல்ல ; இறைவனின் அருள் ; ஆத்மாவின் சற்குருவாகிய நாராயணனது கிருபை அவசியம் !

சரீரத்தில் மேற்கொள்ளப்படும் யோக சித்திகளுக்கு சற்குருவான சிவனின் தயவு எவ்வளவு அவசியமோ அதுபோல ஆத்மாவுக்கு சற்குரு – பரமாத்மா நாராயணனது கிருபையும் அவசியம் !

அத்வைதம் யோகா சாதனைகளுக்கு எவ்வளவு அவசியமோ அவ்வளவு ஆத்மா சாதனைகளுக்கு துவைதம் அவசியம் ! இந்த சமரச வேதமே – மத்வ நெறியே சிதம்பர ரகசியத்தின் அடுத்த வெளிப்பாடு !

இந்த ரகசியமே உத்தரஞான சிதமபரத்திலும் மகாகுரு வள்ளலாரால் வெளிப்படுத்தப்பட்டுள்ளது !


யோக அப்பியாசங்களின் மூலமாக நமது ஆத்மா உறையும் சரீரம் சிற்சபையாகவும் பொற்சபையாகவும் மாற்றம் அடைவதற்கான முயற்சி செய்துகொண்டே இருக்கவேண்டும் ! அதற்கு பரத்திலிருந்து ஞானம் அருட்பெரும்ஜோதியாகிய ஆண்டவரிடம் நாராயணன் மூலமாக பக்தி – வேண்டுதல் செய்து பெற்றுக்கொண்டே இருக்கவேண்டும் !

பாவங்கள் போக்கும் திரிவேணி சங்கம் என்பது இதுவே !

அலகாபாத்தில்  தூய நீர்பெருக்கு யமுனைத்துறைவன் என மாகாகுரு ஆண்டாள் பாடினாரே அந்த யமுனை நாராயணனது அடையாளமாக  வடக்கிருந்து கங்கையில் போய்  கலக்கிறது !கங்கை   சிவனுக்கு அடையாளமானது !மேற்கிருந்து கிழக்காக ஓடிக்கொண்டிருக்கிறது ! அங்கு கங்கை இரண்டு அம்சங்கலுள்ளதாக ஆகிவிடுகிறது !

அதே போலத்தான் திருஆணிக்கூடல் என அருணகிரியாரால் வர்ணிக்கப்படும் பவானியிலும் காவேரி மேற்கிலிருந்து கிழக்காக ஓடிக்கொண்டுள்ளது ! அதில் வடக்கிருந்து பவாணி – பர அருள் ஆணியாக வந்து அடித்து ஆத்மாவை மேன்மைப்படுத்துகிறது !

இந்த இடங்களில் நீராடுவது நமது பாவங்களை தீர்க்கும் என்பது அடையாளமே தவிர அதன் ஞானம் சாதகனுக்கு சற்குருக்களான சிவன்  மற்றும் நாராயணனது கிருபை அவசியம் என்பதே !

சரீரத்தில் மேற்கொள்ளப்படும் யோகசாதனைகளில் ஆத்மா விழிப்பு பெற்றபிறகு ஆத்மாவை உணர்ந்து அதன் பாவபதிவுகளை சுத்தம் செய்து ஆத்ம சொரூபியாக சரீரத்தை அடக்கி ஞானத்தீயை உடையவனாக ஒருவன் மாறவேண்டும் !

அவ்வாறு ஆத்மா சுத்தம் செய்தல் என்பதே ஏழு மாயத்திரைகள் ! இந்த மாயத்திரைகள் சுத்தம் செய்யப்பட்டால் மட்டுமே ஆத்மா ஒளிசரீரம் பெற்று அருட்பெரும்ஜோதியை தரிசிக்க இயலும் !


இதுவே சிதம்பரத்தில் திரை நீக்கம் செய்து இறைவனை வெட்டவெளியாக காட்டப்படுவது !

ஆத்மாவே நமது பல பிறவிகளில் நமது பாவப்பதிவுகளுடன் நம்மை கடவுளை உணரவிடாமல் மயங்கிய நிலையில் உள்ளது ! அந்த ஆத்மா சுத்தமடைவதும் ஒளி சரீரம் பெறுவது என்பதும் சரீரத்தை அடக்கி அதை அவசியமற்றதாக்குவதும் மரணமில்லா பெருவாழ்வு பெறுவதற்கான பாதை !



நாராயணனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ நாராயணாய

சிவனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ சிவாய

சேஷனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ சேஷாய

நாராயணியாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ நாராயணியாய

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி 

Wednesday, February 19, 2014

வருகிற இந்திய அரசாலாவது ஈழத்தமிழருக்கு நிம்மதி கிடைக்குமா ?




உலகின் மிக மூத்த குடி தமிழர்கள் அதுவும் சிவன் பூமியில் முதலாவது வாழ்ந்த இடம் ஈழம் . அவர் வேண்டி கொண்டு வந்த கங்கை அங்கு மாவேலி கங்கை என்ற நதியாக ஓடிக்கொண்டுள்ளது

உலகின் அனைத்து மனித குடிகளும் தமிழனளிருந்து பிரிந்ததால் சகலரின் பாவங்களும் ஈழத்தமிழரை பிடித்து வாட்டிக்கொண்டுள்ளது

சீக்கிய பிரச்சினையில் இந்திரா கொல்லப்படாமல் இருந்திருந்தால் ஈழத்தமிழருக்கு நிம்மதி கிடைத்திருக்கும்

பங்களாதேஷ் உருவானாலும் மதவாத முஸ்லீம்களால் அந்த நாடு இந்தியாவுக்கு ஆதாரவாக இருக்காது என இந்திராவுக்கு நன்கு தெரிந்தும் எதிரி ஒரே எதிரியாக வலிமையாக இருப்பதைக்காட்டிலும் இரண்டு எதிரியாக பிரிந்திருப்பது நல்லது என இந்திய ராணுவத்தை பயன்படுத்தினார்

அந்த தெளிவு ராஜீவுக்கு இல்லை ; ஜெயவர்த்தனேயின் சூழ்ச்சிக்கு பலியானார் போலிஷ் அதிகாரிகளான பாதுகாப்பு ஆலோசகர்களின் பேச்சை கேட்டு ஈழத்தநிழர்களுக்கு எதிர்ப்பாக இறங்கினார்

அப்போதும் சிங்கள சிப்பாயின் கரத்தில் ராஜீவ் கொல்லப்பட்டிருந்தாலும் ஈழத்தமிழருக்கு ஆறுதல் கிடைத்திருக்கும்

 

அமெரிக்க சி ஐ ஏ - இன் பேச்சை கேட்டு பிரபாகரன் ராஜீவை கொன்றது இன்னும் சிக்கலை அதிகப்படுத்தி விட்டது

பிரபாகரன் ஒருவரை கொல்ல இவ்வளவு அப்பாவி பொதுமக்களை யுத்தம் என்கிற பெயரால் தடை செய்யப்பட சீனாவின் ஆயுதங்களை - ரசாயன கொத்து குண்டுகளால் கொன்று கொடுர பலிவாங்கிய நல்ல உள்ளம் படைத்த அம்மணியையும் அவரது பரம்பரையையும் கடவுள் பார்த்துக்கொள்ளட்டும்

பாஞ்சாலியின் சபதம் நியாயம் என்றாலும் போரின் முடிவில் பாஞ்சாலியின் ஒரு பிள்ளைகள் கூட உயிரோடு இல்லை

நாராயணனே அவதாரமாக வந்த கிரிஷ்ணரும் போரின் பாவங்களுக்கு பரிகாரமாக ஒரு அம்பை ஏற்றுக்கொண்டு உலகை கடந்து சென்றார்

இவைகளில் படிப்பினை இல்லையா ?

எது எப்படி இருந்தாலும் இந்து என்கிற முறையிலும் தமிழர் என்ற முறையிலும் ஈழத்தமிழர்களின் அவலங்களை தீர்க்க இந்து தர்மத்தினருக்கு அக்கறை இல்லையா ?

தமிழர் இயக்கத்தினர் நாத்திகர்களாக இருக்கலாம் ! அவர்களின் ஈழத்தமிழர்களுக்கான துடிப்பில் நியாயமில்லையா ?

இந்தியாவில் இந்திய குடிமைப்பணி மற்றும் ராணுவத்தில் தேர்வெழுதி அதிகாரிகளாக தமிழர்கள் பணி செய்கிறார்கள் . மக்கள் பிரதிநிதிகள் இல்லாத ஆளும் வர்க்கமாகிய அதிகாரிகளாக இந்தியாவின் சகல இனங்களும் இந்தியாவை ஆளுகிறார்கள் !

ஆனால் அத்தகைய அரசியல் உரிமை ஈழவர்களுக்கு இலங்கையில் இல்லை அடிமைக்குடிகள் மட்டுமே

ராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தப்படி தமிழ் போராட்டக்குழுக்களை அழித்தாயிற்று அதற்கு இந்திய அரசு இவ்வளவு செலவிட்டதே . இப்போது அந்த ஒப்பந்தத்திலுள்ள அரசியல் உரிமையை இலங்கை செயல்படுத்த வில்லையானால் அந்த அரசு மீது ராணுவ நடவடிக்கை எடுக்க இந்திய அரசுக்கு உரிமை வந்து விட்டதல்லவா ?

பழி வாங்குவது மட்டுமே லட்சியமாக இருந்த சோனியா குடும்பம் - இலகை அரசின் மீதும் ராணுவ நடவடிக்கை எடுக்க உரிமை இருந்தும் அதை செய்யவில்லை !

வருகிற இந்திய அரசாவது செய்யுமா ?

ஒத்துப்போவது என்கிற இயல்பே இல்லாத முஸ்லீம்களை - காஷ்மீரை இந்தியாவில் வைத்திருக்க இவ்வளவு செலவு செய்வதைக்காட்டிலும் வளம் கொழிக்கும் இலங்கையை கைப்பற்றி இந்தியாவுடன் சேர்த்துக்கொள்வது எளிது இந்தியாவுடன் சகல உரிமைகளுடன் வாழ்வதை சிங்களவர்கள் வெறுக்கமாட்டார்கள்

ஒரே வைசிராயின் கீழ்தான் ஆங்கிலேயர்கள் இந்தியாவையும் இலங்கையையும் ஆண்டார்கள் .

இந்தியாவின் வலிமையை குறைக்கவேண்டும் என்றுதான் முஸ்லீம்களின் தனி நாடு கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்தார்கள்

அந்தப்பிரச்சினையில் கவனம் செழுத்திய ஆர் எஸ் எஸ் காரர்கள் அழுக்கில்லாமல் இலங்கையை தனியே பிரித்து சுதந்திரம் கொடுத்ததை கண்டுகொள்ளாமல் விட்டு விட்டார்கள்

இரண்டுமே இந்தியாவை வலிமையற்றதாக மாற்ற ஆங்கிலேயர்கள் வைத்த செக் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்வது இந்தியர்களுக்கு நல்லது


Monday, February 17, 2014

ஹரித்வார் !!

(இங்கு க்ளிக் செய்து பாடலை கேட்டுக்கொண்டே வாசிக்கவும்)
உலகம் உண்மையை பிரதிபலித்துக்கொண்டே உள்ளது . அதைப்பார்க்கிரவர்கள் அதிலிருந்து ஒரு பகுதி உண்மையை கிரகித்துக்கொள்கிறார்கள் . அவர்கள் புரிந்து கொண்டதற்கும் மேலாக இன்னும் எவ்வளவோ கிரகிக்கவேண்டிய உண்மை – முழுமை இன்னும் எஞ்சித்தான் இருக்கிறது .


காலம் காலமாக படிப்படியாக உண்மைகள் வெளிப்பட்டுக்கொண்டேதான் இருக்கின்றன . ஆனால் கொஞ்சம் புரிந்து கொண்டவர்கள் தாங்கள் அறிந்து கொண்டதுமட்டுமே முழுமை என்பதுபோல சுய பெருமை அவர்களை மேலும் அறிய விடாமல் தடை செய்து விடுகிறது .
ஒருவேளை அடுத்த பிறவியில் இறைவன் அருளினால் மட்டுமே ஞானம் விருத்தியாகும் .
ஆகவே எவைகளும் முழுமையல்ல ; எவைகளும் பொய்யுமல்ல என்ற நியதி ஞானம் பயில்வோர் கவனத்தில் வைக்கவேண்டிய ஒன்று .
ஏனென்றால் ஹரித்வார் பற்றி கங்கையைப்பற்றி எவ்வளவோ வெளிப்பாடுகள் வந்து விட்டன .
கங்கை இமய மலையிலிருந்து தரைக்கு வந்து நுழைகிற இடம் - ஹரித்வார் !
ஆகவே அங்கு கங்கையில் முழுகினால் பாவங்கள் தீரும் ! கங்கையின் முக்கியத்வம் கருதி கங்கைக்கு ஆரத்தி எடுத்து போற்றுதல் வேண்டும் ! முன்னோர்களுக்காக வழிபாடு செய்யவேண்டும் !

இவைகளை நான் மறுக்கவில்லை . கங்கையை காண்பதே ஒரு சுகமான அனுபவம் . ஒவ்வொரு இந்தியனின் உள்ளத்திலும் கங்கைக்கான ஒரு ஏக்கம் இருக்கும் . அதன் புனிதம் ; அதன் வற்றாத ; கரை புரண்டு ஓடுகிற பெருக்கால் உண்டாகிற மகிழ்சி ; வாழ்வுக்கு நம்பிக்கை கொடுக்கும் உத்தரவாதம் இவைகள் அனைத்திற்கும் மேலாக கங்கை பல பிறவிகளாக எனக்கு பரிச்சயமான பிரதேசமாகவே எனக்கு பட்டது



கங்கையும் அந்த பிரதேசமும் மொழி – இந்தி தெரியாத குறையையும் மீறி என்னுடன் கலந்து விட்ட ஒன்றாகவே உணர்ந்தேன் !

ஒரு சராசரி இந்தியன் காட்டுகிற அனைத்து அன்புடனும் மதிப்புடனும் அதில் மூழ்கி கடவுளை நம்பிக்கையுடன் வேண்டிக்கொண்டேன் ! எனது சரீரத்திலும் ஆத்மாவிலும் புனிதம் உண்டாக்கும் படியாக நாராயணன் நாமத்தினாலும் ; சிவனின் நாமத்தினாலும் கடவுளிடம் வேண்டிக்கொண்டேன் . இப்பிறவியிலும் முற்பிறவிகளிலும் முன்னோர்களுக்காக அவர்களின் ஆத்மா புனிதமாகும் படியாக வேண்டிக்கொண்டேன் !

நாராயணன் நாமத்தினால் கடவுளே ; சிவனின் நாமத்தினால் கடவுளே எனது சரீரத்திலும் ஆத்மாவிலும் உமது சக்தியால் நிரப்புவீராக ! பாவ சாபங்களில் சாந்தி உண்டாக்குவீராக ! உலகம் முழுமையும் உம்மை  நோக்கி திரும்புவதாக ! சாந்தியையும் சமாதானத்தையும் உண்டாக்குவீராக !! சகல மதங்களுக்குள்ளும் நல்லிணக்கத்தை உண்டாக்கும் சமரச வேதத்தை வெளிப்படுத்துவீராக !!

இவைகளுக்கும் மேலாக ஹரித்வார் சமரச வேதத்தை விளம்பிக்கொண்டு உள்ளது என்பதுதான் உணர்வுள்ளோருக்கு வெளிப்பாடு !

கங்கையில் மூழ்கினால் பாவங்கள் தொலையும் அல்லது குறையும் என்பது இந்து மதத்தில் மட்டுமல்ல ; யூத ; கிறிஸ்த்தவ ; முஸ்லீம் சம்பிரதாயங்களிலும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நடைமுறையில் உள்ள ஒன்று !

யூத மதத்திலும் இயேசுவுக்கு முன்பே குடமுழுக்கு யோவான் (Jhon the Baptist)  என்பவர் தோன்றி அவர் மூலமாக பலர் ஜோர்டான் நதியில் பாவங்களை அறிக்கையிட்டு பாவமன்னிப்பு கேட்டு முழுகி வேண்டும் வழக்கம் வந்துவிட்டது

அதன் தொடர்பாகவே கிறிஸ்தவர்களும் ஞானஸ்நானம் என்ற வழக்கத்தை கடைபிடிக்கிறார்கள்

குரானிலும் பள்ளியில் சென்று வழிபடும் முன்னர் தண்ணீரில் ஒளுவு செய்தல் என்ற வழக்கம் நியதி ஆக்கப்பட்டுள்ளது

இந்து கோவில்கள் அனைத்திலும் தீர்த்தம் என்ற பெயரில் குளம் ஒன்றும் அதில் கைகால் முகம் சுத்தம் செய்து ஜலத்தை தலையில் தெளித்த பின்பே கோவிலுக்குள் நுழையும் நியதி உள்ளது

இவையெல்லாம் உடல் சுத்தம் என்பதற்கு மேலாக கடவுளிடம் பிரார்த்திக்கும் முன்னர் தண்ணீரில் ஆத்மாவை தூய்மை செய்து கொள்வது பாவ நிவர்த்தி என்பதன் அடையாளமாகவே சகல மதத்தினராலும் கடைபிடிக்கப்படுகிறது

ஆக ஜலம் அல்லது கங்கை என்பது ஆத்மாவை சுத்தம் செய்யும் தகுதியுள்ள பரமாத்மா – ஹரிக்கு - நாராயணனுக்கு அடையாளமாக உள்ள ஒன்று

இந்தப்பிரப்ஞ்சம் நாளும் விரிந்து வளர்ந்து கொண்டே உள்ளது என்பதை விஞ்ஞானம் கண்டறிந்துள்ளது . அது எதில் வளர்ந்து கொண்டுள்ளது என்றால் வெட்ட வெளியில் வளர்ந்து கொண்டே உள்ளது . அந்த வெட்ட வெளியில் ஈதர் என்ற கண்ணால் காண இயலாத ஆவி உள்ளது

சற்குரு இயேசுவும் ``தேவன் ஆவியாயிருக்கிறார் என்றார் 
கடவுள் படைப்பை தொடங்கும் போது முதலாவது பூமியையும் வானத்தையும் உண்டாக்கினார் என்றே சகல வேதங்களும் குறிப்பிடுகின்றன

யூத வேதம் ஆதியில் பூமி தண்ணீரால் நிரம்பியிருந்தது தேவ ஆவி ஜலத்தின் மீது அசைவாடிக்கொண்டிருந்தது என்கிறது

ஆவியான கடவுள் படைப்பை தொடங்கும்போது ஆவி ஓரிடத்தில் குவிந்து அது அழுத்தத்தால் குளிர்ந்து தண்ணீர் கோளமாக மாறியது அதிலிருந்தே பூமி மற்ற கோளங்கள் நட்சத்திரங்கள் தோன்றின

படைப்பில் கண்ணால் காண இயலாத ஆவியிலிருந்து முதலாவது தோன்றிய பருப்பொருள் தண்ணீர் ! அதனால்தான் அதிலிருந்து தோன்றிய உலகம் மற்றும் அதில் தோன்றிய மனித குலம் செய்த பாவங்கள் அனைத்தையும் கழுவும் சக்தி – புனிதம் அந்த ஆதி ஜலத்திற்கு உள்ளது !

உயரமான இமய மலையில் ஆவி குளிர்வதால் உண்டான பணி படிவுகள் உருகி உண்டாகும் தூய தண்ணீர் கங்கையாக உண்டாவதால் அது அந்த ஆதி கங்கைக்கு அடையாளம் !

அருவமான கடவுள் ரூபமாக வெளிப்படுவது – பரமாத்மா – ஹரி – நாராயணன் . எனவே கங்கை ஹரிக்கு அடையாளம் !
அந்த ஹரி பூமியில் நுழைகிற இடம் ஹரித்வார் ! 

கங்கை தரைக்கு வந்த உடன் அங்கு கங்கையை எதிர்நோக்கி பிரமாண்டாமான சிவன் மூர்த்தம் உள்ளது . அந்த மூர்த்தம் உள்ள தீவில் மோதி கங்கை இரண்டாக பிரிந்து மீண்டும் கூடுகிறது அங்கு பொதுமக்கள் கங்கையில் மூழ்கி வழிபாடு செய்கிறார்கள்

சிவனுக்கு இடப்புறம் மனசாதேவி மலையும் வலப்புறம் சாந்திதேவி மலையும் உள்ளது அதில் மனசாதேவியுடன் சிவனும் ; சாந்திதேவியுடன் சிவனும் உள்ளனர் ! பக்தர்கள் கங்கையில் மூழ்கி பின்பு மனசாதேவி மலைக்கும் சாந்திதேவி மலைக்கும் சென்று வழிபடுகிறார்கள் !

பவ்தீகப்படைப்பில் அசையாப்பொருட்கள் அடுத்து அசையும் உயிரினங்கள் அதில் மனித படைப்பு சிவன் ! அவரே முதலாவது ஒளி சரீரம் பெற்று ருத்திரன் ஆக மரணமில்லா பெரு வாழ்வு பெற்று தேவலோகத்தில் முதலாவது நுழைந்தவர் !

அவ்வாறு தகுதி பெற மனிதர்கள் சரீரத்தில் சரியை கிரியை யோகம் செய்து தகுதி பெற வேண்டும் அதற்கு சரீரத்திற்கு அதிபதியான சற்குரு சிவனின் கிருபையுடன் ஆத்மாவிற்கு அதிபதியான ஹரியின் அருள் உன்னதத்திலிருந்து வந்து கலக்க வேண்டும் !

இந்த இரண்டு சற்குரு நாதர்களின் அருளுடன் மட்டுமே மனம் போன போக்கில் வாழும் மனிதன் மனதை சீர்திருத்தி செம்மையான வாழ்வு வாழும்போது மானசாதேவியுடன் மகிழ்ந்திருப்பதும் ; அதில் ஹரியின் அருள் கலக்கும் அளவு அதிகரிக்க அதிகரிக்க பாவசாபங்களில் சாந்தம் உண்டாகி ; ஆத்மா சுத்தியடையும் போது சாந்திதேவியுடன் மகிழ்ந்த பேரின்ப நிலை கிடைக்கும்

சத்து (ஹரி) சித்தாகிய சிவனுடன் கலப்பதால் மானசதேவியுடன் மகிழ்துவாழும் மனிதன் சாந்திதேவியுடன் பேரின்பத்தில் திளைக்கும் நிலைக்கு உயர்வான் என்பதே ஹரித்வாரின் வெளிப்பாடு !
சத் + சித் + ஆனந்தம் = சச்சிதானதம் என்பதன் வெளிப்பாடு இதுவே !!
 

சைவமும் வைணவமும் ஆதியிலே வெவ்வேறு மார்க்கங்களாக அறியப்பட்டு பலத்த மதச்சண்டை நடந்துகொண்டிருந்தது . அதை சமரசப்படுத்தும் – சமரச வேதம் ஆதியிலிருந்தே இந்தியாவில் வந்து கொண்டேதான் இருந்தது அதுவே ஹரித்வாரின் அடையாளம் !

இன்றைக்கும் யோகசாதகர்கள் இந்த உண்மையை புரிந்து கொள்ளாமல் தேங்கிப்போய் உள்ளனர் !

சரீரத்தில் யோக சாதனைகளை குருமார்களை அடுத்து குண்டலினியை சகஸ்ராரத்தில் கொண்டு வந்து விட்டால் அது அமுதமாக மனிதனுக்குள் பொழிந்து அவனை சகல மேன்மைக்குள் – ஞானத்திற்குள் நடத்தி விடும் என்பது உண்மையே ! அது டோக்கன் மட்டுமே !

குண்டலினி ஒவ்வொரு சக்கரத்தில் நுழையும்போதும் வாழ்வில் ஆத்மாவில் ஏற்படும் அனுபவங்கள் – பாவப்பதிவுகளுடன் போராடி ஆத்மா சுத்தம் பெறுவது நடக்காமல் சஹாஸ்ராரத்திற்கு வந்து சேர்வது என்பது எளிதானது அன்று !

ஆத்மா சுத்தம் அடைவது அனுபவம் உள்ளொளியாக ஞானமாக பரிணமிப்பது என்பது ஆத்மாவிற்கும் பரமாத்மாவான நாராயணனுக்கும் தொடர்பில்லாமல் சாத்தியமாகாது !

உயரமான மலையை ஏதாவது ஒரு பாதையில் கடினமாக ஏறி விட்டவர்கள் வெற்றியாளர்கள்தாம் ! ஆனால் அந்த வெற்றியே மலையையை முழுமையாக உணர்ந்து விட்டதாக ஆகி விடாது ! மற்ற பாதைகளில் இன்னும் எவ்வளவோ அறியவேண்டிய பொக்கிசங்கள் இருக்கும் !

உச்சியிலிருந்து முழு மலையையும் ஆய்வு செய்வது உணர்வது
எளிதானது என்பதால் உச்சியை அடைந்து விட்டால் எல்லாம் அறிந்துகொள்ளலாம் என்று அந்தந்த மார்க்கத்தினர் சொல்வது பொத்தாம் பொதுவானது - ஒரு டோக்கன் – முழுமையல்ல ! உச்சியை அடைந்தபிறகு முழு மலையை உணர்ந்துகொள்ளும் வேலையை செய்தாக வேண்டும் அதாவது நமது மார்க்கமல்லாத மற்ற மார்க்கங்களின் மேன்மைகளை – ரகசியங்களை உள்வாங்கியே ஆகவேண்டும் !

சிவ குருவின் அருளால் சரீரத்தில் மேற்கொள்ளப்படும் எந்த யோகசாதனைகளும் ; குண்டலினியை சகஸ்ரத்திற்கு கொண்டு வருமானால் அது ஆத்மாவை முழுமையாக புரிந்துகொண்டு பல்லாயிரம் பிறவிகளில் அதன் வாசனைகளை ; பதிவுகளை ; பாவசாபங்களை சுத்திகரிக்கும் பணியையும் ; அத்தோடு பிரபஞ்ச ரகசியங்களையும் கடவுள் வைகுண்டம் (பரலோகம் ) ஆவி மண்டல ரகசியங்கள் அனைத்தையும் பற்றிய நுண்ணிய அறிவுக்குள் திரும்பி விடும் !

யோகம் ஆத்மா கடவுளைப்பற்றி சிந்தனைக்குள் திரும்பி விடும் !
ஆனால் யோகத்தில் உச்சியை நெருங்காதவர்கள் ; அதை நெருங்கியவர்கள் சொல்லியதை திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டு உச்சியை தொட்டால்போதும் உச்சியை தொட்டால்போதும் அப்படி ஆகி விடுவோம் இப்படி ஆகி விடுவோம் என்று சொல்லிக்கொண்டே உள்ளனர் ! ஏன் கடவுளாகவே ஆகி விடுவோம் என்றும் கூட தைரியமாக சொல்வது வேடிக்கையாக உள்ளது !

அல்லது ஜீவசமாதியை பற்றி பேசிக்கொண்டே உள்ளனர் ! அப்படி பேசிய பல முன்னேறிய தகுதியான குருமார்களும் ஜீவசமாதி அடையமுடியாமல் இறந்து போனார்கள் என்பதை தெரிந்துகொண்டும் அவர்கள் ஜீவசமாதியை பெரிதாக சொன்னதை நம்பிக்கொண்டு பேசிக்கொண்டுள்ளனர்

ஜீவசமாதி என்பதே இரண்டாம் படித்தரத்தில் உள்ளது . ஜீவசமாதி அடைந்த பலரும் சில நாளில் அடுத்த பிறவி எடுத்து விட்டனர்  !

பிறவாப்பெருநிலை என்பது சாத்தியமே அற்ற ஒன்று ! அது இலக்கும்  
அல்ல ;  மரணமில்லா பெரு வாழ்வு – ஒளி சரீரம் பெற்றால் மட்டுமே தேவதூதனாக பரலோக வாழ்வு பெற முடியும் என்பதை வள்ளலார் விளம்பி அருளினார் !

ஆண்டாள் ; பக்த மீரா ; மாணிக்கவாசகர் என்று ஜோதியில் கலந்து ஒளி சரீரம் பெற்றவர்கள் நிறைய உள்ளனர் !

ஆப்ரகாம் வாரிசுகளில் மோசே ; எலியா போன்றோர் ஒளி சரீரம் பெற்றவர்கள் !

ஏற்கனவே ஒளி சரீரத்தோடு உலகில் அவதரித்தவர்கள் ராமன் ; கிரிஸ்ணர் ; இயேசு – நாராயணனின் அவதாரங்கள் ! உலகிற்காக அவர்கள் மாமிச சரீரத்தில் இருப்பதாக காட்டிக்கொண்டாலும் தாங்கள் பரமாத்மா ; படைப்புகள் சகலமும் தங்களுக்குள்ளே தான் படைக்கப்பட்டிருக்கிறது என்ற விச்வரூபத்தை அவ்வப்போது வெளிக்காட்டவும் செய்தார்க்கள்

பரசுராமருக்கு தனது விஸ்வரூபம் ராமரால் வெளிக்காட்டப்பட்டது

அர்ச்சுனருக்கு தனது விஸ்வரூபம் கிரிஸ்ணரால் வெளிக்காட்டப்பட்டது

பேதுருவுகும் யோவானுக்கும் தனது விஸ்வரூபம் இயேசுவால் வெளிக்காட்டப்பட்டது

இவர்கள் மூவருமே கடவுளை தங்கள் மூலமாக மட்டுமே அடைய முடியும் என்றும் சொனார்கள் ! இவர்கள் மூவரும் பாவமண்ணிப்பை பற்றி பேசினார்கள் ! மூவரும் மரணமில்லா பெரு வாழ்வு – நித்திய ஜீவனைப்பற்றி பேசினார்கள் !

யோவான் 4 அதிகாரம்
 13. இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: இந்தத் கிணற்று தண்ணீரைக் குடிக்கிறவனுக்கு மறுபடியும் தாகமுண்டாகும்.

14. நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருக்காலும் தாகமுண்டாகாது; நான் அவனுக்குக் கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்தியஜீவகாலமாய் ஊறுகிற நீரூற்றாயிருக்கும் என்றார்.

இந்தியர்களுக்கு கங்கையாய் பிரவகிக்கும் ஹரியே ; ராமராகவும் கிரிஸ்ணராகவும் அவதரித்து பக்திக்குள்ளும் ஆத்ம துய்மைக்கும் சற்குருவாக இருந்து வழி நடத்தும் நாராயணனே ; இந்தியர் அல்லாதோருக்கு இயேசுவாக வெளிப்பட்டு ஜீவத்தண்ணீரையும் ஞானஸ்நானத்தையும் வழங்கி வருகிறார் ! ஆனால் கங்கையையும் ராமரையும் கிரிஸ்ணரையும் அறிந்த இந்தியர்களுக்கு கங்கையே போதுமானது என்பதை கிறிஸ்தவர்கள் புரிந்து கொள்ளவேண்டும் !!

தங்கள் இனத்திற்கு வந்த இறைதூதரை – அவரின் உபதேசத்தால் தங்களின் இனத்தை மேம்படுத்த முடியாமல் கலாச்சார சீரழிவுகளும் வக்கிரங்களும் தலைவிரித்தாடும்போது அடுத்த இனத்தை அழித்து இன மாற்றம் செய்யும் மத மாற்ற வேலையை அவர்கள் நிறுத்த வேண்டும் !!

இயேசுதான் இந்தியாவில் ராமராகவும் கிரிஸ்ணராகவும் அவதரித்தார் என்பதை புரிந்து கொள்ளவேண்டும் !!

ஆப்ரகாமிய வேதங்கள் (யூதம் ; கிறிஸ்த்தவம் ; இசுலாம் ) அனைத்தும் ஆரியர்களுக்கும் ஐரோப்பியர்களுக்கும் மட்டுமே என்பதை புரிந்து கொள்ளவேண்டும் !

அவரவர்கள் அவரவர் வேதங்களில் உள்ள மேன்மையை அவரவர் இனத்திற்கு கற்றுக்கொடுத்து மேம்படுத்த வேண்டிய அளவு சீர்கேடுகளின் அளவுகள் எல்லா சமூகத்திலும் வந்து விட்ட பிறகு மதச்சண்டை போடுவதும் ஒரு இனத்தை அழித்து இன்னொரு இனமாக மாற்ற முயற்சிப்பதும் மனிதனை மனிதன் கடவுளின் பேரால் கொல்லுவதும் அசுரர்களின் மாயை என்பதை புரிந்துகொள்ளவேண்டும் !

சரியை என்கிற அளவில் சமுகம் சீராக வாழ சமுதாய சட்டங்கள் எல்லா மதங்களிலும் உள்ளன . அவற்றில் இறை தூதர்கள் சொல்லாத – வெற்று சடங்காச்சாரங்கள் – தவறான வியாக்கியானங்கள் எல்லா மதத்திலும் வந்து விட்டன இவற்றை சீர்திருத்த கடவுளின் பாதத்தில் காத்திருந்து முயற்சிக்கவேண்டிய தருணம் வந்து விட்டது .மற்ற மதங்களிலிருந்து நல்ல கொள்கையை மட்டும் அவரவர் மதத்திற்கு சுவீகரித்தால் போதுமானது

உலகில் கடவுளிடமிருந்து வராத – மனிதர்களால் ஏற்படுத்தப்பட்ட மதங்கள் எல்லாம் அழிந்து விட்டன

இப்போது எவை தாக்கு பிடித்து நிற்கின்றனவோ அவையெல்லாம் இறைவனிடமிருந்து அவரது தூதர்களால் வந்தவை என்பதை ஒவ்வொருவரும் முக்கியமாக கிறிஸ்தவர்களும் முஸ்லீம்களும் உணர்ந்து கொள்ளவேண்டும் !

உலகில் அவசியமானது மதச்சார்பின்மை இல்லை ! காந்தி ஒருபோதும் மதச்சார்பின்மையை வலியுறுத்தவில்லை ! மத சமத்துவத்தையே வலியுறுத்தினார் – சமரச வேதத்தை வெளிக்கொணர்வதற்கான முயற்சியில் இருந்தார் ! ஆனால் அவர் கொல்லப்பட்ட பிறகு அவரின் பெயரை சொல்லிக்கொண்டு ஓட்டுக்காக மதச்சார்பின்மை என்பதான தவறான நெறியையோ அல்லது அதற்கு எதிர்ப்பாக மத வெறியையோ தூண்டி மக்களை வேட்டை ஆடுகிற அரசியல்வாதிகளே பெருத்து விட்டார்கள் !

உலகின் இன்றைய தேவை சகல மதங்களையும் சமத்துவப்படுத்தும் சமரச வேதமே !

அதற்கான வழிகாட்டியாக இறைவனது சகல வல்லமையோடும் ; அருளோடும் கிரிஸ்ணரின் நண்பனான அர்ச்சுணன் என்ற காந்தியின் ஆத்மா விரைவில் வெளிப்படுத்தப்பட வேண்டும் என உணர்வுள்ளோர் வேண்டிக்கொள்வோம்




நாராயணனாய் வெளிப்பட்ட அந்த
ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ நாராயணாய !
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி   

சிவனாக வெளிப்பட்ட அந்த
ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ சிவாய  !
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி