Total Pageviews

Friday, December 26, 2014

ஆப்ரகாமிய வேதங்களில் பரமாத்மா




ஆப்ரகாமிய வேதங்களில் கடவுள் தேவுதூதர்கள் மனிதர்கள் மட்டுமே

அறியப்படுகிறார்கள்



ஆனால் இந்திய வேதங்களில் பரமாத்மா என்ற ஒன்றைப்பற்றிய

மெய்யறிவு உள்ளது



அருபமான கடவுளை அடுத்து அவரால் உண்டாக்கப்பட்ட

அனைத்தையும் - பிரபஞ்சம் உயிரினங்கள் அனைத்தையும்

முழுமையாக தன்னிலே அடக்கி கொண்டுள்ள அந்த ஒன்று பரமாத்மா

அது உருவங்கள் அருப உருவங்கள் அனைத்தையும் தன்னுள்ளே

அடக்கியுள்ள அருஉஇருவம் .



பரமாத்மா கடவுளல்ல ; ஆனால் உண்டான அனைத்தும் அவர்

மூலமாகவே உண்டாக்கப்படுகிறது . அவர் மூலமாக இல்லாமல்

கடவுள் எதையும் உண்டாக்கவில்லை


ஆகவே அந்த ஒன்று கடவுளுக்கு இணையானது . அதுவே இயேசுவாக

வந்தது . அதனால்தான் இயேசு கடவுளை பிதா என்றார்

காந்தியின் முந்தய பிறவியும் இயேசுவின் பிரியமான சீடனுமான

யோவான் மற்ற சீடர்களைக்காட்டிலும் இந்த நுட்பங்களை தெளிவாக

எழுதியுள்ளார் 

யோவான் 1

1.      ஆதியிலே வார்த்தை தேவனிடத்திலிருந்தது, .
2.      அவர் ஆதியிலே தேவனோடிருந்தார்.
3.       சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை.
              
14. அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரே பேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது.

கடவுள் ஆகுக என்று பேசினார் . அந்த வார்த்தையால் சகலமும் உண்டாயிற்று . இவை தனித்தனியே ஆங்காங்கு உண்டாகவில்லை . சகல சிருஸ்டிகளையும் ஒன்றின் மூலமாக அந்த ஒன்றுக்குள்ளேயே உண்டாக்கியிருக்கிறார் . அந்த ஒன்றுதான் இந்திய வேதங்களின் படி பரமாத்மா . அந்த பரமாத்மாதான் நாராயணன் என அடையாளப்படுத்தப்பட்டு காலப்போக்கில் அவருக்கு ஒரு உருவமும் கற்பித்தார்கள் நரல் + ஆயணன் நர நர என பேசுவதால் உண்டாவது சத்தம் . சத்தமாக வெளிப்பட்டவன் என்பதே நாராயணன் என்பதின் அர்த்தம்

அந்த நாராயணனுக்கும் கடவுளுக்கு ஒப்பான மகிமை உள்ளது என்பதே அந்த 14 வசனத்தின் பொருள் (அது பிதாவுக்கு ஒரே பேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது.) கடவுளிடமிருந்து வெளிப்படவைகள் எல்லாம் அவருக்குள்ளேயே இருப்பதால் அவரை பிதாவுக்கு ஒரே பேறானவர் என்று முக்கியப்படுத்தப்பட்டுள்ளது

குரானிலும் இயேசு கடவுளின் வார்த்தையனவர் என்பது ஒத்துக்கொள்ளப்பட்டுள்ளது .

4:171. வேதத்தையுடையோரே! நீங்கள் உங்கள் மார்க்கத்தில் அளவு கடந்து செல்லாதீர்கள். அல்லாஹ்வைப் பற்றி உண்மையைத் தவிர (வேறெதையும்) கூறாதீர்கள்; நிச்சயமாக மர்யமுடைய மகனாகிய ஈஸா மஸீஹ் அல்லாஹ்வின் தூதர் தான்; இன்னும் (குன் ஆகுக என்ற) அல்லாஹ்வின் வாக்காக இருக்கின்றார்; அதை அவன் மர்யமின்பால் போட்டான்; (எனவே) அவரும் அவனிடமிருந்து (வந்த) ஓர் ஆன்மா தான்; ஆகவே, அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொள்ளுங்கள்; இன்னும், (வணக்கத்திற்குரிய இறைவன்) மூன்று என்று கூறாதீர்கள் - (இப்படிக் கூறுவதை விட்டு) விலகிக் கொள்ளுங்கள்; (இது) உங்களுக்கு நன்மையாகும் - ஏனெனில் வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ் ஒருவன் தான்; அவனுக்கு எவரும் சந்ததியாக இருப்பதிலிருந்து அவன் தூய்மையானவன். வானங்களிலும்;, பூமியிலும் இருப்பவையெல்லாம் அவனுக்கே சொந்தம். (காரியங்கள் அனைத்துக்கும்) பொறுப்பேற்றுக் கொள்வதற்கு அல்லாஹ்வே போதுமானவன்.

ஆனால் அதை புரிந்துகொள்ளும் பக்குவம் முகமது நபிக்கும் அருளப்படவில்லை . கடவுளுக்கு எதையும் இணை வைக்காதீர்கள் என்ற உபதேசத்தை உலகில் அழுத்தி சொல்ல அவர் பயன்படுத்தப்பட்டதால் அருவமான கடவுளின் முழு வெளிப்பாடும் அடங்கியுள்ள ஒருவரை அவரால் புரிந்துகொள்ள முடியவில்லை . அவரும் ஒரு இறைதூதர் மட்டுமே என சாதாரண மனிதனாக கற்பிக்கிறார்கள் . அவர் இறைவனால் படைக்கப்பட்டவர் என்பதின் அர்த்தமே அவரும் தூதர்தான் என்பது . ஆனால் அவர் சாதாரண மனிதனல்ல . அல்லாவுக்கு கொடுக்கப்பட்டுள்ள அதே அடைமொழி அலை என்பது ஈசா அலை என்று கொடுக்கப்பட்டுள்ளது , ஆனால் முகமது நபிக்கு ஸல் என்ற பட்டம் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது . ஆனாலும் அவர்கள் இந்த வித்தியாசத்தை புரிந்துகொள்ள பக்குவம் இல்லை  


66:12. மேலும், இம்ரானின் புதல்வியான மர்யமையும் (அல்லாஹ் உதாரணமாக்கினான்) அவர் தம் கற்பைக் காத்துக் கொண்டார்; நாம் (அவரில்) நம் ரூஹிலிருந்து (ஆத்மாவிலிருந்து) ஊதினோம். மேலும், அவர் தம் இறைவனின் வார்த்தைகளையும், அவனுடைய வேதங்களையும் மெய்ப்பித்தார் - (ஏற்றுக் கொண்டார்); இன்னும், அவர் (அல்லாஹ்வை வணங்கி) வழிபட்டவர்களில் ஒருவராகவும் இருந்தார்.

இயேசு அல்லாவின் ஆத்மா . அதாவது பரமாத்மா .

மனிதர்களெல்லாம் பரமாத்மாவிலிருந்து உருவாக்கப்படும் ஜீவாத்மாக்கள் என்றால் இயேசு பரமாத்மா .

நாம் எல்லோரும் கடவுளால் படைப்பட்டது போல அவரிளிருந்தும் படைக்கப்பட்டுளோம்

சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை.

6:98. உங்கள் அனைவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து உண்டாக்கிப்பின் (உங்கள் தந்தையிடம்) தங்க வைத்து, (பின்னர் கர்ப்பத்தில்) ஒப்படைப்பவனும் அவனே. சிந்தித்து விளங்கிக் கொள்ளக் கூடிய மக்களுக்கு நிச்சயமாக நம் வசனங்களை விவரித்துள்ளோம்.

இயேசுவின் வார்த்தைகளை இப்போது புரிந்துகொள்ளுங்கள் :

யோவான் 10 


9. நானே வாசல்
30. நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம்

யோவான் 14:6  நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.

என்னால் மட்டுமே ஒருவன் கடவுளிடம் வரமுடியும் என்பதை இயேசுவால் மட்டுமே என அவரை மட்டுமே அறிந்த கிறிஸ்தவர்கள் சொல்கிறார்கள் . ஆனால் அந்த இயேசு யார் என்றால் கடவுளின் வார்த்தையாகிய பரமாத்மா – நாராயணன் .

அந்த நாராயணன் முந்தய யுகங்களிலும் பூமியில் அவதரித்துள்ளார்

கீதை 4 :1 யுகபுருஷன் கிருஷ்ணர் கூறினார் : நான் இந்த அழிவற்ற விஞ்ஞானமாகிய யோகமுறைகளை ஆதியிலே மனிதர்களின் தகப்பனான மண்ணு /மணுவிற்கு உபதேசித்தேன் !!! அவர் தமது மகனான இஷ்வாகிற்கு உபதேசித்தார் !! 

கீதை 4 :2 இந்த உண்ணதமான விஞ்ஞானம் வழிவழியாக சீடர்களின் பாராம்பரியத்தால் பெறப்பட்டு; ராஜரிஷிகளாகிய அரசர்களால் உணர்ந்து கடைபிடிக்க பட்டு வந்தது! இருப்பினும் நாளடைவில் இந்த பாராம்பரியம் உடைந்து இன்றைய தினம் காணப்படுவது போல இந்த உண்ணதமான விஞ்ஞானம் அறியப்படாமலேயே போயிற்று!!!

கீதை 4 :3 உண்ணதமான கடவுளோடு இயைந்து ஒருமித்து வாழும் அந்த ஆதி கலையை இன்று நான் உனக்கு உபதேசிக்கிறேன்!!! ஏனென்றால் நீ எனது நண்பனும் சீடனும் அத்தோடு உயிரோட்டமுள்ள நித்திய ஞானத்தை உணர்ந்து கொள்ள தகுதியுள்ளவனுமாய் இருக்கிறாய்!!! 
கீதை 4 :4 அர்ச்சுனன் கேட்டான்: தாங்கள் பிறந்திருப்பது இப்போது! அப்படியிருக்க ஆதியிலே இந்த விஞ்ஞானத்தை எப்படி மனுவிற்கு உபதேசித்தீர்கள்?

கீதை 4 :5 கிரிஷ்ணர் கூறினார்: நீயும் நானும் பலபிறவிகள் இப்பூமியில் வந்துள்ளோம்!! ஆனால் அவை பற்றிய உணர்வு உனக்கு அருளபடவில்லை!! எனக்கு மறைக்க படவில்லை!!!

கீதை 4:6 நான் பிறப்பற்றவனாகவும்; அழிவற்ற எனது ஆத்துமசரீரம் நித்தியஜீவனுள்ளதாகவும் இருந்தாலும் நான் அதனை தாழ்த்தி யுகங்கள் தோறும் இப்பூமியில் அவதரிக்கிறேன்! எனென்றால் நானே இப்பூமிக்கு கடவுளின் பிரதிநிதியும்; பூமியில்உள்ள அனைத்து உயிரிணங்களின் யுகபுருஷனும் ஆவேன்!!

கீதை 4:7 எப்போதெல்லாம் எப்போதெல்லாம் ஆன்மீக மதிப்பீடுகள் தொய்வடைந்து அதர்மம் தலைவிரித்தாடுகிறதோ அப்போதெல்லாம் நான் பூமிக்கு இறங்கி வருகிறேன்!!

கீதை 4:8 பக்தர்களை ரட்சிக்கவும் தீமை புரிந்து பூமியில் குழப்பம் செய்வோரை அழிக்கவும் மீண்டும் தர்மத்தை நிலைநாட்டவும் யுகங்கள்தோறும் யுகங்கள்தோறும் இப்பூமியில் அவதரிக்கிறேன்!!

கீதை 4:9 யார் பூமியில் வெளிப்படும் எனது சரீரத்தின் தோற்றத்தையும்; நித்தியஜீவனுள்ள எனது ஆத்துமாவையும் உணர்ந்து அதன் செயல்பாடுகளில் தன்னை இனைத்துக்கொண்டு ஒத்திசைவாய் வாழ்கிறானோ அவன் இந்த லவ்கீகவாழ்வில் மீண்டும்மீண்டும் அல்லலுறுவதில்லை;மாறாக எனது நித்தியத்தின் மனநிலையை எய்துவான்!! நித்திய ஜீவனை அடைந்து என்னோடுகூட வாசம் செய்வான்!!
இயேசுவும் நான் என்று பல இடங்களில் பேசியுள்ளார் . இந்த நானை பரமாத்மா என்று புரிந்துகொள்ளவேண்டும்
எந்த வேதங்களிலும் காலப்போக்கில் மனிதர்கள் தங்கள் வார்த்தைகளை கலக்கின்றனர் .
பகவத்கீதை என்பது பல ஆண்டுகள் பேச்சாக ; கிராமிய நாடகமாக இருந்து எழுத்தாக்கம் செய்யப்பட்டது . அதனால் அதில் மனிதர்கள் தங்களுக்கிருந்த குறைந்த அறிவோடு சில வார்த்தைகளை அர்த்தப்படுத்திக்கொண்டார்கள் . அதனால்தான் அதை நாராயணன் கடவுளைக்குறித்து உபதேசித்ததாக சீர்படுத்தி அடியேன் மூலமாக தமிழ்பெயர்ப்பு செய்யப்பட்டுவருகிறது  
கீதை 9:25 யார் ஞானிகளையும் மஹான்களையும் வழிபடுகிறார்களோ அவர்கள் அவர்கள் பிறவியெடுத்துள்ள இடத்தில் பிறப்பர் ! யார் முன்னோர்களை வழிபடுகிறார்களோ அவர்களும் அவர்கள் பிறவியெடுத்துள்ள இடத்தில் பிறப்பர் ! யார் அசுரர்களை வழிபடுகிறார்களோ அவர்களும் அவர்களின் ஆதிக்கம் உள்ளோரிடத்தில் பிறப்பர் ! ஆனால் யார் என் மூலமாக கடவுளை வழிபடுகிறார்களோ அவர்கள் எனது நித்திய இடத்தை அடைந்து மரணமில்லா பெரு வாழ்வு  பெறுவர் !!




Wednesday, October 22, 2014

திராவிட பின்னேற்ற மாய்மாலம்



ஆதி மனித சமூகமான குமரிக்கண்ட தமிழ் சமூகம் பிரளயத்தில் அழிந்த பிறகு கும்பகோணத்தில் அகத்தியரால் மனித இனம் வெளிப்படுத்தப்பட்டு அங்கிருந்துதான் முழு உலக மனித இனங்களும் பரவின இந்நிகழ்வே கும்பகோணம் மகாமகம் திருவிழா

அப்போது பூம்புகாரின் அருகிலிருந்த கபாடபுரமே அகில உலக தலைநகர்
வியாசர் ; விஸ்வாமித்ரர் போன்றோரால் குருகுலங்கள் அமைத்து வேதங்களை தொகுக்க பயன்படுத்தப்பட்ட இடமே வேதாரண்யம் - திருமறைக்காடு 


முழு இந்திய தத்துவஞானமும் ; இந்து வேதமும் தமிழ் முனிவர்களாலேயே தொகுக்கப்பட்டு பின்னர் உலகம் முழுவதும் பரவிய மனிதர்களின் சகல பாஷைகளையும் இணைத்து சம + கிரதமாக = சமஸ்கிரதத்தை உருவாக்கியவர்களும் தமிழ் ஞானிகளே

சமஸ்கிரதத்தை உலகில் உள்ள எந்த மொழியினர் கேட்டாலும் அதில் அவர்களின் சொற்கள் ஒன்றிரண்டாவது வரும் . அதனால் அந்த வேதம் அவர்களை ஈர்க்கும் என்பதுவே சமஸ்கிரதத்தை உருவாக்கியதன் நோக்கம் . அதில் மற்றெல்லா மொழிகளைக்காட்டிலும் தமிழ் சொற்களே அதிகம் உள்ளன

இந்து மதத்தின் சகல தெய்வங்களும் சத்திரியர்களான திராவிடர்களாகவே இருக்கிறார்கள்
ஆனால் அதை திராவிடர்கள் மறந்து விட பூசைத்தொழிலை செய்து பிழைக்க மனப்பாடம் செய்த பிராமணர்களின் வேதமாக இந்து வேதத்தை திராவிடர்கள் கருதிக்கொண்டது பெரும் தவறு
நிலத்தின் சொந்தக்காரனை கூலியாளே முதலாளி என  நினைக்க வைத்ததுதான் இங்கு அண்ணாவாலும் கருணாநிதியாலும் உருவாக்கப்பட்ட மாய்மாலம்
இந்து வேதத்தின் உண்மையான சொந்தக்காரர்கள் திராவிடர்களே ;பிராமணர்களல்ல

வேதத்தை எழுதிய திராவிடர்கள் அதை மறந்து விட்டது முதல் தவறு . அதை மனப்பாடம் செய்த பிராமணர்கள் தங்களை கடவுளின் பிரதிநிதிகளாக சித்தரித்ததால் அந்த வெறுப்பில் கடவுளே இல்லை எனவும் வேதங்களே பொய் என்றும் திராவிட இயக்கங்கள் நிலைப்பாடு எடுத்தது அடுத்த தவறு

கூரையில் ஒலுங்கு இரு
க்கிறது என்பதற்காக கூரையையே தீ வைத்து அழிப்பதைப்போல இந்து தர்மத்தை அழிப்பது என்று முடிவெடுத்தது அடுத்த தவறு

இப்போது பிராமணர்களின் ஆதிக்கம் ஒழிக்கப்பட்டு விட்டது

சங்கர மடங்கள் தவிர பல மடங்கள் திராவிடர்களே இப்போது பிரபலமாக உள்ள கார்ப்பரேட் சாமியார்கள் பலர் திராவிடர்களே

ஏனென்றால் வேதத்தின் சொந்தக்காரர்களானா திராவிடர்கள் அந்த வேதத்தை படித்து கையிலெடுத்தால் அவர்களின் வீச்சு பிராமணர்களை விட பல மடங்கு அதிகமாகவும் உயிர்த்துடிப்போடும் இருக்கிறது என்பது பல முறை நிரூபனமாகி வருகிறது

இப்போது தமிழ் இனப்பற்றாளர்கள் செய்யவேண்டியது வேதங்களை கையிலேடுப்பது . அதை விடுத்து பழைய பஞ்சாங்கமாக பிராமணர்களின் வேதம் என்று சொல்லிக்கொண்டு இருக்கலாகாது சொந்த வீட்டையே அழிக்கலாகாது

வேதங்களை கைப்பற்றி திராவிடர்களின் சொந்தமாக்குங்கள் சமஸ்கிரதத்தை கற்றுக்கொண்டு அதை தமிழில் உயிர்ப்போடு கொண்டு வாருங்கள்
எப்படி ஆனாலும் முழு மனித இனமும் தமிழரிலிருந்து தோன்றியிருக்க எதற்காக அடுத்தவரை எதிர்ப்பதுவே தமிழ் இனப்பற்று என்ற கொள்கைக்கு பலியாகிறீர்கள் ?

ஆரியர் என்பவர் ஆதியில் தனியாக வரவில்லை .தமிழரிலிருந்து வெளியே சென்று மீண்டும் தமிழகத்தில் வந்தவர்களே ஆரியர்கள் . அவர்களை எதிர்ப்பது என்பது குறுகிய குழு உணர்வை தூண்டினாலொழிய ஆட்சியை பிடிக்க முடியாது என சிலர் செய்த சதி அவர்கள் பல தலைமுறைக்கு சொத்தை சேர்த்தாயிற்று .போதும் அவர்களின் உசுப்பேத்தும் பேச்சை கேட்டு கைதட்டியது போதும்

வட இந்தியர்கள் அனைவரும் பிராமணர்களா ? அவர்கள் திராவிடர்களல்லவா ? இந்தி உள்ளிட்ட அவர்களின் மொழி அனைத்தும் திராவிட மொழிகள் அல்லவா ?

 
தமிழரைத்தவிர அனைவரும் ஆரியர்கள் அந்நியர்கள் என்ற மாயையை பரப்பிவிட்டு அவர்கள் தமிழரை எதிர்க்கிறார்கள் என்றால் அவர்களை அந்நியர்கள் என்று முதலில் சொன்னதே நாம்தானே நாம் தானே அவர்களை முதலில் வெறுத்தோம் இந்தியாவில் மலையாளிகள் உட்பட அனைவரும் (தமிழர்களைத்தவிர) இந்திய தேசிய நீரோட்டத்தில் உள்ளார்கள் அவர்கள் வட இந்தியர்களை திராவிடர்கள் என்று அங்கீகரிக்கிறார்கள் . அவர்களை ஆரியர்கள் என்று அந்நியப்படுத்தவில்லை எல்லோரும் இந்தியை பேசக்கற்றுக்கொள்கிரார்கள் . இதனால் இந்தியர்கள் என்ற அடையாளம் அவர்களுக்கு இருக்கிறது அந்நிய இனமான ஆங்கில கலாச்சாரமும் ஆங்கிலமும் தமிழை சீரழிப்பதை விட இந்தி சீரழிவை ஏற்படுத்தாது

குறைந்த பட்சம் தேர்வு இல்லாமல் கூட இந்தி பள்ளிகளில் கற்பிக்கப்படவேண்டும் அது இந்திய தேசிய அல்லது திராவிட அடையாளம்
வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது ஆரிய மாயை இந்தி எதிர்ப்பு -  என்றைக்கு வட இந்தியர்களை எதிர்க்க துவங்கினார்களோ அன்றையிலிருந்து தமிழர்கள் அந்நியப்பட்டு போனார்கள் .

அனைவருக்கும் அண்ணை தமிழ் என்றால் ; சகல மனித இனங்களும் தமிழரிலிருந்து உற்பத்தி ஆனவை என்றால் உலகில் சமாதானத்தை நிறுவும் பணியும் தமிழரிடத்திருந்தே வரும் .

குறுகிய குழு வெறி என்ற திராவிட பின்னேற்ற மாய்மாலங்களை விட்டு வெளிவருவோம். உலகில் சமாதானத்தை உண்டாக்கும் வரலாற்று கடமையை நிறைவேற்ற தயாராவோம்

சகல வேதங்களையும் கற்று உணர்வோம் . சமரச வேதத்தை வெளிக்கொண்டுவரும்  படி இறைவனை வேண்டுவோம்

ஓரிறைவனையே துதிக்கிறோம்
நாராயணன் நாமத்தினாலே    
ஓம் நமோ நாராயணா !!
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி

ஓரிறைவனையே துதிக்கிறோம்
சிவனின் நாமத்தினாலே    
ஓம் நமோ சிவாய !!
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி
நாராயணனாய் வெளிப்பட்ட அந்த
ஓரிறைவனையே துதிக்கிறோம்
ஓம் நமோ நாராயணாய !
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி





Friday, August 15, 2014

சுதந்திர தின வழ்த்துகள் !!





இந்திய சுதந்திர போராட்டம் என்பது
அரசியல் விடுதலையை மட்டும் மையமாக வைத்து நடத்தப்பட்டதல்ல ! ஆன்ம விடுதலை ;சமுதாய ஒழுங்கு ; சமத்துவம் ; சர்வ மதங்களில் வெளிப்படுத்தப்பட்ட இறையன்பு , இறைஅச்சம் , தேடல் , மனிதநேயம் ; சமரச வேதத்தின் வளர்ச்சி ஆகியவற்றையும் முன்னிலைபடுத்தப்பட்டது !

சுதந்திரம்
அடைந்தவுடன் மஹாத்மா காந்தி அவர்கள் ஆன்மீகப்பணியை முன்னெடுக்க திட்டத்துடன் ஆட்சியை நேருவிடம் ஒப்படைத்து விட்டு ஒதுங்கினார் ! துரதிஸ்ட்டம் அவர் கொல்லப்பட்டதால் காந்தியவாதம் என்பது கேலிக்குறிய விசயமாக மற்றப்பட்டு விட்டது !

கொள்கைகள் சார்ந்த அரசியல் என்பதற்கு பதிலாக பிழைப்பு
, அதிகாரம் என்பதற்காக கொள்கை பேசும் அரசியல் என்பதாக அது பரிணாமம் அடைந்து விட்டது ! அரசியலை மட்டும் தொழிலாக வைத்து பிழைக்கிறவர்களின் கையில் அரசும் ; கொள்கைகளும் மாட்டிகொண்டு தவிக்கின்றன !

சர்வ மதங்களின் இணைப்பு – அல்லது சமரச வேதம் – காந்தியின் உள்ளார்ந்த திட்டமாக இருந்தது . அவரின் நடத்துதலின் கீழ் அன்புடன் நடந்த ஜின்னா திடீரென இசுலாம் தீவிரவாதத்தை கக்குவார் என காந்தி எதிர்பார்க்கவில்லை ; அதன் எதிர்விளைவாக இந்து தீவிரவாதமும் தலைவிரித்தாடும் என்பதையும் காந்தி எதிர்பார்க்கவில்லை .

சமயம் பார்த்து மத தீவிரவாதங்கள் தலைவிரித்தாடும் என்பதை எதிர்பார்த்திருந்தால் ; ஒன்று பட்ட அரசின் ராணுவ பாதுகாப்புடன் இந்துக்கள் மற்றும் முஸ்லீம்களின் இட மாற்றத்தை கலவரங்கள் இல்லாமல் – முடிந்த அளவு சேதமில்லாமல் செய்து விட்டு பிரிவினை செய்திருக்கலாம்

ஆனால் இதை நிதானிக்காமல் பிரிவினை என்பதை காந்தி ஆதரிக்காத நிலையில் வலிய பிரிவினையும் ; மதக்கலவரங்களும் ; கொலைகளும் அரங்கேறின .

நான் அனைத்து முஸ்லீம்களையும் குறை சொல்லவில்லை ; ஆனால் முஸ்லீம் அல்லாத காபிர்களை கொன்றால் அல்லா உனக்கு சொர்க்கம் கொடுப்பார் என அல்லாவை உணராத வறட்டு சூத்திரதாரிகளான -தீவிரவாதிகளின் உபதேசத்தை கேட்டு கடவுளுக்கு சேவை செய்வதாக நினைத்துக்கொண்டு லாகூரிலிருந்து கிளம்பிய தொடர்வண்டியில் இருந்த அனைத்து இந்துக்களையும் பிணமாக்கி டில்லிக்கு அனுப்பிவைத்தார்கள் ; பதில் கலவரம் மூண்டது . கலவரம் மூண்ட பிறகு அதில் தீமைகள் இரு பக்கமும் தலைவிரித்தாடின . அந்த கலவரத்தை நிறுத்தும் படியாகத்தான் காந்தி உண்ணாவிரதம் ஆரம்பித்தார் .

ஆனால் முஸ்லீம்களை காக்க காந்தி உண்ணாவிரதம் இருப்பதாக இந்து தீவிரவாதிகள் புரிந்து கொண்டார்கள் .

முஸ்லீம்கள் இந்துக்களை கொன்றதற்கு பதிலுக்கு பதில் தீமை செய்வது சரியல்ல என்பதே காந்தியின் கருத்து .

காந்தியை கொன்றதால் என்ன சாதித்தார்கள் ?

காந்தியின் கொள்கை மதச்சார்பின்மை அல்ல . அவர் இந்துவாக இருந்து சகல மதங்களையும் அதற்குள் சுவீகரிக்கும் –சகல மதங்களையும் இந்து தர்மத்திற்குள் அடக்கும் முன்முயற்சியில் இருந்தார் . அவர் துப்பாக்கியால் சுடப்பட்டபோதும் ராம் ராம் என்றுதான் சொன்னார் . சிறந்த இந்துவாக இருந்தார் . அது சகல மதங்களின் தாய் மதம் ; சகலவற்றையும் தன்னுள் அடக்கும் ஒரே தகுதி இந்து தர்மத்திற்கு மட்டுமே உள்ளது என்பதும் ; இதற்கு முன்பும் உருவான புத்த சமண மதங்களை அது ஏற்கனவே அடக்கியே வளர்ந்தது ; அது போல இப்போது சவாலாக உள்ள கிறிஸ்தவ ; இசுலாம் கொள்கைகளில் சரியானதை மட்டும் இந்துவுக்குள் இழுத்து சமப்படுத்தினால் மட்டுமே உலகில் சமாதானத்தை நிலைநாட்ட முடியும் என்பதும் அவரது தரிசனமாக இருந்தது

உலக நாடுகள் முழுதும் அவருக்கு அங்கீகாரமும் இருந்தது .உலகிற்கு ஆன்மீக தலைமை – உலகை மூழ்கடிக்கும் ஆன்மீகப்பேரலை அவர் மூலமாக புறப்பட இருந்ததை சிறுபிள்ளைத்தனமாக கோட்சேயும் அவரைத்தூண்டி விட்டவர்களும் செய்து வளர்சியை கெடுத்தார்கள் .

காந்தியை கொன்றதால் இந்து மத ஆதிக்கம் இந்தியாவில் பெருகும் என்று கனவு கண்டார்கள் ; ஆனால் நடந்தது என்ன ? காந்தி சொல்லாத மதச்சார்பின்மை என்ற ஒன்றை உன்னதமான கொள்கையாகவும் ; அதை சாதிக்க சிறுபான்மையினருக்கு சலுகை என்ற பெயரால் ; சிறுபான்மையினரின் ஓட்டை மட்டும் கவர்ந்து ஆட்சியை தக்க வைத்தால் போதும் என்ற சந்தர்ப்பவாத அரசியல் இந்தியாவை இதுவரை நடத்தியது

ஆக கோட்சேயின் சிறுபிள்ளைத்தனமான செயல்பாடு இந்து மதத்திற்கு கெடுதலாக முடிந்தது என்பதே நிதர்சனமான உண்மை . உலகம் முழுதும் கோலோச்சும் ஆன்மீகத்தலைமையாக இந்தியா உருவெடுக்கும் கடவுளின் சித்தமும் தள்ளிப்போனது .
 .   

காந்தி தலைமைப்பதவியை தாமாக வலிந்து உருவாக்கவில்லை . அவர் பரமாத்மாவின் நண்பர் என்ற தகுதி மட்டுமே தலைமைப்பதவியை – திரள்கூட்ட ஆதரவை அவருக்கு பெற்றுத்தந்தது .

அவர் கொல்லப்பட்டதிலும் ஒரு நன்மை ; அவர் உலகின் மூத்த குடியான தமிழராக அவதரித்து உலகம் முழுதும் சமரச வேதத்தை நிலைநாட்டுவார் .

அந்த நாள் விரைவில் வர நாராயணன் நாமத்தினாலும் சிவனின் நாமத்தினாலும் கடவுளை வேண்டுகிறேன் .

ஓரிறைவனையே துதிக்கிறோம்
நாராயணன் நாமத்தினாலே    
ஓம் நமோ நாராயணாய !!


ஓரிறைவனையே துதிக்கிறோம்
சிவனின் நாமத்தினாலே    
ஓம் நமோ சிவாய !!