Total Pageviews

Tuesday, April 16, 2013

பாவமன்னிப்பு கிரிஸ்ணராலும் அருளப்படுகிறதா ?




பிரச்சினைகள் மற்றும் நமது பலகீனங்களை வெல்லமுடியாமல் வழுக்கிவழுக்கி விழுவது மனித இயல்பு ! மனித அறிவினால்மட்டுமே பலகீனங்களை விட்டு வெளிவரவே முடியாது !

உள்ளார்ந்த அச்சத்துடன் அதனுடன் எவ்வளவு போராடுகிறோம் என்பதும் மீண்டும் மீண்டும் தன்னை பொறுத்துக்கொண்டு பக்குவம் கொடுக்கும்படியாக வேண்டி வந்தால் போதுமானது : கடவுளால் மட்டுமே பக்குவம் கொடுக்கமுடியும் !!

பலமுறை சிராய்த்துக்கொண்டு வழுக்கிவிழுந்த விசயங்களில் பல நாள் கழித்து நான் வெளிவந்திருக்கிறேன் என்னை பாடாய்படுத்தியவை இன்று ஒன்றுமேயில்லாதது போலப்போய் விட்டது மனித தெளிவால் இது முடியவே முடியாதது !!

நல்லதோகெட்டதோ செய்தாலும் உம்மிடம் பேசிக்கொண்டும் மண்ணிப்பு கேட்டுக்கொண்டும் உம்மிடம் வந்துகொண்டும்தான் இருப்பேன் என தாழ்மையுடன் அவரை பற்றிக்கொள்ள வேண்டும் பாவசுரணை அற்றுப்போனால் மட்டுமே அது அகம்பாவம் அக்கிரமம்!!

தாழ்மை சற்குருவாகிய நாராயணனோடு எப்போதும் உறவு பக்தி இவை நம்மை மீடேற்றிவிடும்

நான் மீண்டும் சொல்கிறேன் மனிதன் செய்யும் தவறுகளுக்கு அவன் மட்டுமே காரணமில்லை அவனை அதில் தூண்டி அமிழ்த்திய அசுர சக்திகளும் என்பதை கடவுள் அறிவார் பாவசுரணை அற்று துனிந்து பாவம் செய்பவர்கள் மட்டுமே கடவுளின் வெறுப்புக்காளாவார்கள்

அசுரர்கள் மனிதனை பாவத்தில் இழுத்து விடுவதுடன் அவனை குத்திக்காட்டி நீ பாவத்தில் விழுந்து விட்டாய் நீ கடவுளிடம் செல்லவே முடியாது ஆகவே துனிந்து விடு என உபதேசிக்கிறார்கள் !!

ஆனால் கடவுளின் சார்பானவர்களோ `` முழுக்க நனைந்தாலும் பரவாயில்லை ; முக்காடு போட்டுக்கொண்டு நனைக என்கிறார்கள் ! பாவ சுரணை என்ற முக்காடு ! நாராயணன் மீது குருபக்தி என்ற முக்காடு !!

நாரயணனின் அவதாரங்களான ராமர் , கிரிஸ்ணர் மற்றும் இயேசுவின் மீது குருபக்தி !  
கீதை 9:30 இத்தகு பக்திதொண்டில் நிலைத்திருப்போர் ஒருவேளை தன்னை அறியாமல் கொடுமையான காரியத்தை செய்ய நேரிட்டாலும் அவர் புண்ணியராகவே கருதப்படுவர் !!

கீதை 9:31 அவர் இந்த தூய மார்க்கத்தில் நிலைத்திருப்பதால் விரைவில் நேர்வழி பெற்று தூய்மையடைந்து மங்காத சமாதானத்தை அடைவார் !! ஆகவே அர்ச்சுணா ! எனது சீடன் ஒருபோதும் அழிவதில்லை என்பதை உரத்து சொல்வாயாக !!

மாற்கு 2:10 பூமியிலே பாவங்களை மன்னிக்க மனுஷகுமாரனுக்கு அதிகாரம் உண்டென்பதை நீங்கள் அறியவேண்டும் !


மனிதர்களில் மனிதனாக அவதரிக்கிர நாரயணனுக்கு மட்டுமே அந்த அதிகாரம் இருந்திருக்கிறது !

அந்த அதிகாரத்துடன் பூமியில் வந்தவர்கள் ராமர் , கிரிஸ்ணர் மற்றும் இயேசு மட்டுமே !

இயேசுவின் நாமம் மட்டுமல்ல அவரது முந்திய அவதாரங்களான ராம நாமமும் , கிரிஸ்ண நாமமும் பாவங்களை தீர்த்தது ; தீர்க்கும் என்பதை கிரிஸ்தவர்கள் உணரவேண்டும் !

ஐரோப்பியர்களுக்கு இயேசுவைத்தவிற யாரையும் தெரியாது ! அவர்களுக்கு தெரிந்த ஒரே அவதாரம் இயேசு ! ஆனால் இந்திய கிரிஸ்தவர்கள் இயேசுவே முந்தய அவதாரமாக ராமராகவும் கிரிஸ்ணராகவும் வந்ததை உணராமல் ஐரோப்பாவில் பிறந்தவர்களைப்போலவும் ; பக்கத்திலும் கூட அண்ட விடாத யூதர்களை பாட்டனும் பூட்டனும் போல நம்பிக்கொண்டு அலைவதை விட்டுவிட வேண்டும் ! 

கும்ப முணிவரான நோவாவின் மூன்று பிள்ளைகளில் மூத்த மகனான யாப்பே அதாவது அப்பவின் வாரீசுகளான இந்திய திராவிடர்கள் நாம் என்பதை உணரவேண்டும் !

கடவுள் ஒவ்வொரு இனத்திற்கென்றும் இறைதூதர்களையும் உபதேசங்களான வேதங்களையும் அருளியுள்ளார் !

மாற்று இனத்தாரின் வேதம் என்பது அவர்களுக்கு மட்டுமே அருளப்பட்டது ! அதிலிருந்து படிப்பினைகளை -- சாரத்தை மட்டுமே சுவீகரித்துக்கொள்ளவேண்டும் !

நோவாவின் இரண்டாவது பிள்ளையான சாமின் வாரீசுகளே ஆரியர்கள் ! அவர்களில் ஆப்ரஹாம் மூலம் வந்த வேதங்களான தவ்ராத் , புதிய ஏற்பாடு உள்ளிட்ட பைபிள் , குரானிலிருந்து அதன் சாரத்தை மட்டுமே சுவீகரித்துக்கொள்ளவேண்டும் !

அவர்களின் வாழ்னிலை பண்பாடு தொடர்பில் அவர்களுக்கென்று மட்டுமே பிரத்யேகமாக அருளப்பட்ட வேதங்களை அடுத்த இனத்தின் மீது தினிப்பது வெற்றி பெறாது !

ஒரு இனத்தையே அழித்து இன்னொரு இனமாக மாற்றுவது வாண்கோழியைப்போன்றது ! அது ஒருபோதும் மயிலாகாது !

நோவாவின் மூன்றாவது பிள்ளையான காமின் சந்ததியாரான ஐரோப்பியர்களில் இன்றளவும் இறைதூதர்கள் வந்ததில்லை ! இனிமேலும் வரப்போவதில்லை ! அதனால் ஆரியரான இயேசுவை வெள்ளைக்காரர் போல உருவமாற்றி ஐரோப்பிய இயேசுவாக அவர்கள் சித்தரித்துக்கொண்டு பாவமன்னிப்பு என்பதை தங்களது வசதிக்காக பயன்படுத்திக்கொண்டு உள்ளனர் !

காம் நோவாவால் சபிக்கப்பட்டவர் என்பதை பைபிளில் வாசித்திருப்பீர்களானால் எதற்காக கிரிஸ்துவை அவர்கள் வைத்துக்கொண்டுள்ளனர் என்பது புரியும் !

சீர் கேட்டின் உச்சத்தில் வழியும் அவர்களது கலாச்சாரத்தின் பின்னனியில் நோவாவின் சாபமும் அசுர ஆவிகளின் வழிநடத்துதலுமே உள்ளது !

ஆகவே ஐரோப்பிய மயமாதல் ஐரோப்பிய மோகத்தை விட்டு இந்திய கிரிஸ்தவர்கள் வெளியே வரவேண்டும் !

புனிதம் என்று அவர்கள் சொல்லுகிற பிரசங்க மேடையில் பாதரட்சையை அவர்கள் அவிழ்ப்பார்களா என்று பாருங்கள் !

தொடை வெளியே தெரியுமாறு பிரசங்கியின் மனைவி உடை போட்டுக்கொண்டு எதிரே உட்கார்ந்து கையை தட்டிக்கொண்டிருக்க குளிரிலிருந்து பாதத்தை காப்பாற்ற பிரசங்கி பூடீசு அணிந்திருக்கிறார் என சாக்கு சொல்வதை எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும் ?

பைபிள் மோசே மூலமாகவே முதலில் வந்தது என்பதையாவது அறிவீர்களா ? அந்த மோசேயை கடவுள் முதன்முதலில் சந்தித்தபோது கடவுள் சொன்ன முதல் வார்த்தை ``செருப்பை அவிழ்த்துப்போடு `` என்பதுவே !

அந்த முதல் வார்த்தையையே இன்றளவு கடைபிடிக்காத வெள்ளைக்கார பிரசங்கிகளுக்கும் கடவுளுக்கும் என்ன உறவு இருக்கும் ?


யாத்திராகமம் : 3

4. அவன் பார்க்கும்படி கிட்ட வருகிறதைக் கர்த்தர் கண்டார். முட்செடியின் நடுவிலிருந்து தேவன் அவனை நோக்கி: மோசே, மோசே என்று கூப்பிட்டார். அவன்: இதோ, அடியேன் என்றான்.

5. அப்பொழுது அவர்: இங்கே கிட்டிச் சேராயாக; உன் கால்களில் இருக்கிற பாதரட்சையைக் கழற்றிப்போடு; நீ நிற்கிற இடம் பரிசுத்த பூமி என்றார்.


அவர்கள் மோசேயிடம் கடவுள் பேசிய முதலாவது வார்த்தையையே கடைபிடிக்க முடியாதவர்கள் ! அப்படியானால் அவர்கள் விதவிதமாக பைபிளைப்பற்றி பேசுவதெல்லாம் வெற்று வார்த்தைகள் என்பதை புரிந்துகொள்ளமுடியாதா ?

கலிகாலத்தின் கோலங்களில் இதுவும் ஒன்று !

அவர்கள் கல்கியாக இயேசு மீண்டும் வந்து செருப்பை அவிழ்க்கும்படியாக சொல்லும்வரை அவிழ்க்கமாட்டார்கள் ! அது அவர்களின் தரத்திற்கு சரி !

ஆன்மீகத்தில் பலமடங்கு முன்னேறிய இந்தியாவில் அதே இயேசு ராமராகவும் கிரிஸ்ணராகவும் வந்து உபதேசித்தவைகள் ஏராளம் ! அதை கடைபிடிப்பதே நன்று !!


இயேசுவின் நாமமும் ராம நாமமும் கிரிஸ்ண நாமமும் ஒன்று என்பதை உணர வேண்டும் !