Total Pageviews

Saturday, January 19, 2013

வேதாத்திரி மகரிஷியின் நிறை உணர்வு !!

உருவெடுத்த காரணமும் காரியமும் முடிவும்

உலகினிலே எழுபத்து ஐந்தாண்டு வாழ்ந்து
திருவருளே அவ்வப்போ உணர்த்த உணர்ந்திட்டேன்
செய்த வினைப் பதிவுகளைத் தூய்மை செய்துகொண்டேன்
கருத்தொடராய்ப் பின் பிறவி இல்லை இனியில்லை
கர்மவினை மிச்சமில்லை இச்சையில்லை எதிலும்
அருள் நிறைந்த பெருஞ்சோதி அரவணைத்துக் கொள்ளும்
அந்தப் பெரு நன்னாளை எதிர்பார்த்து உள்ளேன்.

---------வேதாத்திரி மகரிஷி. !!

``அருள் நிறைந்த பெருஞ்சோதி அரவணைத்துக் கொள்ளும்``

கடவுள் என்ற உள்ளொளி அவருக்குள் இருந்திருக்கிறது ! ஏனென்றால் அவரது ஞானகுரு வள்ளலாரின் தொடர்பே அவரது ஞானத்திற்கு காரணம் ! விசாரம் செய்வதை முக்கியப்படுத்த அவர் அறிவே கடவுள் என்று சொன்னாலும் அதை கடவுள் என்றொருவர் தனித்து இல்லை என்பதாக புரிந்து கொள்ளக்கூடாது ! தன் வாழ்வின் முடிவாக அருட்பெரும் ஜோதி அணைத்துக்கொள்ளும் என்ற அவரது நம்பிக்கையே அவரது கடவுள் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது !