Total Pageviews

Tuesday, April 16, 2013

பாவமன்னிப்பு கிரிஸ்ணராலும் அருளப்படுகிறதா ?




பிரச்சினைகள் மற்றும் நமது பலகீனங்களை வெல்லமுடியாமல் வழுக்கிவழுக்கி விழுவது மனித இயல்பு ! மனித அறிவினால்மட்டுமே பலகீனங்களை விட்டு வெளிவரவே முடியாது !

உள்ளார்ந்த அச்சத்துடன் அதனுடன் எவ்வளவு போராடுகிறோம் என்பதும் மீண்டும் மீண்டும் தன்னை பொறுத்துக்கொண்டு பக்குவம் கொடுக்கும்படியாக வேண்டி வந்தால் போதுமானது : கடவுளால் மட்டுமே பக்குவம் கொடுக்கமுடியும் !!

பலமுறை சிராய்த்துக்கொண்டு வழுக்கிவிழுந்த விசயங்களில் பல நாள் கழித்து நான் வெளிவந்திருக்கிறேன் என்னை பாடாய்படுத்தியவை இன்று ஒன்றுமேயில்லாதது போலப்போய் விட்டது மனித தெளிவால் இது முடியவே முடியாதது !!

நல்லதோகெட்டதோ செய்தாலும் உம்மிடம் பேசிக்கொண்டும் மண்ணிப்பு கேட்டுக்கொண்டும் உம்மிடம் வந்துகொண்டும்தான் இருப்பேன் என தாழ்மையுடன் அவரை பற்றிக்கொள்ள வேண்டும் பாவசுரணை அற்றுப்போனால் மட்டுமே அது அகம்பாவம் அக்கிரமம்!!

தாழ்மை சற்குருவாகிய நாராயணனோடு எப்போதும் உறவு பக்தி இவை நம்மை மீடேற்றிவிடும்

நான் மீண்டும் சொல்கிறேன் மனிதன் செய்யும் தவறுகளுக்கு அவன் மட்டுமே காரணமில்லை அவனை அதில் தூண்டி அமிழ்த்திய அசுர சக்திகளும் என்பதை கடவுள் அறிவார் பாவசுரணை அற்று துனிந்து பாவம் செய்பவர்கள் மட்டுமே கடவுளின் வெறுப்புக்காளாவார்கள்

அசுரர்கள் மனிதனை பாவத்தில் இழுத்து விடுவதுடன் அவனை குத்திக்காட்டி நீ பாவத்தில் விழுந்து விட்டாய் நீ கடவுளிடம் செல்லவே முடியாது ஆகவே துனிந்து விடு என உபதேசிக்கிறார்கள் !!

ஆனால் கடவுளின் சார்பானவர்களோ `` முழுக்க நனைந்தாலும் பரவாயில்லை ; முக்காடு போட்டுக்கொண்டு நனைக என்கிறார்கள் ! பாவ சுரணை என்ற முக்காடு ! நாராயணன் மீது குருபக்தி என்ற முக்காடு !!

நாரயணனின் அவதாரங்களான ராமர் , கிரிஸ்ணர் மற்றும் இயேசுவின் மீது குருபக்தி !  
கீதை 9:30 இத்தகு பக்திதொண்டில் நிலைத்திருப்போர் ஒருவேளை தன்னை அறியாமல் கொடுமையான காரியத்தை செய்ய நேரிட்டாலும் அவர் புண்ணியராகவே கருதப்படுவர் !!

கீதை 9:31 அவர் இந்த தூய மார்க்கத்தில் நிலைத்திருப்பதால் விரைவில் நேர்வழி பெற்று தூய்மையடைந்து மங்காத சமாதானத்தை அடைவார் !! ஆகவே அர்ச்சுணா ! எனது சீடன் ஒருபோதும் அழிவதில்லை என்பதை உரத்து சொல்வாயாக !!

மாற்கு 2:10 பூமியிலே பாவங்களை மன்னிக்க மனுஷகுமாரனுக்கு அதிகாரம் உண்டென்பதை நீங்கள் அறியவேண்டும் !


மனிதர்களில் மனிதனாக அவதரிக்கிர நாரயணனுக்கு மட்டுமே அந்த அதிகாரம் இருந்திருக்கிறது !

அந்த அதிகாரத்துடன் பூமியில் வந்தவர்கள் ராமர் , கிரிஸ்ணர் மற்றும் இயேசு மட்டுமே !

இயேசுவின் நாமம் மட்டுமல்ல அவரது முந்திய அவதாரங்களான ராம நாமமும் , கிரிஸ்ண நாமமும் பாவங்களை தீர்த்தது ; தீர்க்கும் என்பதை கிரிஸ்தவர்கள் உணரவேண்டும் !

ஐரோப்பியர்களுக்கு இயேசுவைத்தவிற யாரையும் தெரியாது ! அவர்களுக்கு தெரிந்த ஒரே அவதாரம் இயேசு ! ஆனால் இந்திய கிரிஸ்தவர்கள் இயேசுவே முந்தய அவதாரமாக ராமராகவும் கிரிஸ்ணராகவும் வந்ததை உணராமல் ஐரோப்பாவில் பிறந்தவர்களைப்போலவும் ; பக்கத்திலும் கூட அண்ட விடாத யூதர்களை பாட்டனும் பூட்டனும் போல நம்பிக்கொண்டு அலைவதை விட்டுவிட வேண்டும் ! 

கும்ப முணிவரான நோவாவின் மூன்று பிள்ளைகளில் மூத்த மகனான யாப்பே அதாவது அப்பவின் வாரீசுகளான இந்திய திராவிடர்கள் நாம் என்பதை உணரவேண்டும் !

கடவுள் ஒவ்வொரு இனத்திற்கென்றும் இறைதூதர்களையும் உபதேசங்களான வேதங்களையும் அருளியுள்ளார் !

மாற்று இனத்தாரின் வேதம் என்பது அவர்களுக்கு மட்டுமே அருளப்பட்டது ! அதிலிருந்து படிப்பினைகளை -- சாரத்தை மட்டுமே சுவீகரித்துக்கொள்ளவேண்டும் !

நோவாவின் இரண்டாவது பிள்ளையான சாமின் வாரீசுகளே ஆரியர்கள் ! அவர்களில் ஆப்ரஹாம் மூலம் வந்த வேதங்களான தவ்ராத் , புதிய ஏற்பாடு உள்ளிட்ட பைபிள் , குரானிலிருந்து அதன் சாரத்தை மட்டுமே சுவீகரித்துக்கொள்ளவேண்டும் !

அவர்களின் வாழ்னிலை பண்பாடு தொடர்பில் அவர்களுக்கென்று மட்டுமே பிரத்யேகமாக அருளப்பட்ட வேதங்களை அடுத்த இனத்தின் மீது தினிப்பது வெற்றி பெறாது !

ஒரு இனத்தையே அழித்து இன்னொரு இனமாக மாற்றுவது வாண்கோழியைப்போன்றது ! அது ஒருபோதும் மயிலாகாது !

நோவாவின் மூன்றாவது பிள்ளையான காமின் சந்ததியாரான ஐரோப்பியர்களில் இன்றளவும் இறைதூதர்கள் வந்ததில்லை ! இனிமேலும் வரப்போவதில்லை ! அதனால் ஆரியரான இயேசுவை வெள்ளைக்காரர் போல உருவமாற்றி ஐரோப்பிய இயேசுவாக அவர்கள் சித்தரித்துக்கொண்டு பாவமன்னிப்பு என்பதை தங்களது வசதிக்காக பயன்படுத்திக்கொண்டு உள்ளனர் !

காம் நோவாவால் சபிக்கப்பட்டவர் என்பதை பைபிளில் வாசித்திருப்பீர்களானால் எதற்காக கிரிஸ்துவை அவர்கள் வைத்துக்கொண்டுள்ளனர் என்பது புரியும் !

சீர் கேட்டின் உச்சத்தில் வழியும் அவர்களது கலாச்சாரத்தின் பின்னனியில் நோவாவின் சாபமும் அசுர ஆவிகளின் வழிநடத்துதலுமே உள்ளது !

ஆகவே ஐரோப்பிய மயமாதல் ஐரோப்பிய மோகத்தை விட்டு இந்திய கிரிஸ்தவர்கள் வெளியே வரவேண்டும் !

புனிதம் என்று அவர்கள் சொல்லுகிற பிரசங்க மேடையில் பாதரட்சையை அவர்கள் அவிழ்ப்பார்களா என்று பாருங்கள் !

தொடை வெளியே தெரியுமாறு பிரசங்கியின் மனைவி உடை போட்டுக்கொண்டு எதிரே உட்கார்ந்து கையை தட்டிக்கொண்டிருக்க குளிரிலிருந்து பாதத்தை காப்பாற்ற பிரசங்கி பூடீசு அணிந்திருக்கிறார் என சாக்கு சொல்வதை எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும் ?

பைபிள் மோசே மூலமாகவே முதலில் வந்தது என்பதையாவது அறிவீர்களா ? அந்த மோசேயை கடவுள் முதன்முதலில் சந்தித்தபோது கடவுள் சொன்ன முதல் வார்த்தை ``செருப்பை அவிழ்த்துப்போடு `` என்பதுவே !

அந்த முதல் வார்த்தையையே இன்றளவு கடைபிடிக்காத வெள்ளைக்கார பிரசங்கிகளுக்கும் கடவுளுக்கும் என்ன உறவு இருக்கும் ?


யாத்திராகமம் : 3

4. அவன் பார்க்கும்படி கிட்ட வருகிறதைக் கர்த்தர் கண்டார். முட்செடியின் நடுவிலிருந்து தேவன் அவனை நோக்கி: மோசே, மோசே என்று கூப்பிட்டார். அவன்: இதோ, அடியேன் என்றான்.

5. அப்பொழுது அவர்: இங்கே கிட்டிச் சேராயாக; உன் கால்களில் இருக்கிற பாதரட்சையைக் கழற்றிப்போடு; நீ நிற்கிற இடம் பரிசுத்த பூமி என்றார்.


அவர்கள் மோசேயிடம் கடவுள் பேசிய முதலாவது வார்த்தையையே கடைபிடிக்க முடியாதவர்கள் ! அப்படியானால் அவர்கள் விதவிதமாக பைபிளைப்பற்றி பேசுவதெல்லாம் வெற்று வார்த்தைகள் என்பதை புரிந்துகொள்ளமுடியாதா ?

கலிகாலத்தின் கோலங்களில் இதுவும் ஒன்று !

அவர்கள் கல்கியாக இயேசு மீண்டும் வந்து செருப்பை அவிழ்க்கும்படியாக சொல்லும்வரை அவிழ்க்கமாட்டார்கள் ! அது அவர்களின் தரத்திற்கு சரி !

ஆன்மீகத்தில் பலமடங்கு முன்னேறிய இந்தியாவில் அதே இயேசு ராமராகவும் கிரிஸ்ணராகவும் வந்து உபதேசித்தவைகள் ஏராளம் ! அதை கடைபிடிப்பதே நன்று !!


இயேசுவின் நாமமும் ராம நாமமும் கிரிஸ்ண நாமமும் ஒன்று என்பதை உணர வேண்டும் !    


Thursday, April 11, 2013

மகா மந்திரம் !!


கீதை 10 : 20 அர்ச்சுணா ! தனித்த பரமாத்துமாவாக நான் இருப்பினும் ஒவ்வொரு மனிதனிலும் ஜீவாத்துமாவாகவும் நானே குடிகொண்டிருக்கிறேன் ! படைப்பினங்கள் அனைத்திற்கும் துவக்கமும் நடுவும் முடிவுமாக நானே இருக்கிறேன் !

கீதை 8:4 வானவர்களான தேவர்கள் அசுரர்கள் அதிதேவதைகள் அல்லது தேவதூதர்கள் என அறியப்படுகின்றனர் !சூரியசந்திர நட்சத்திரங்கள் உள்ளிட்ட வானமண்டலசேனைகள் மற்றும் பூமியிலுறையும் படைப்பினங்கள் அனைத்தும் எதிலிருந்து உருவாக்கபட்டதோ அந்த பரமாத்வான நானே ``ஆதியஜ்னா `` அல்லது வேள்விகளின் புருஷனாவேன் !

பூமியிலுறையும் படைப்புகளும் , வாணமண்டல படைப்புகளான தேவதூதர்கள் மற்றும் அசுரர்களும் நாராயணனிலிருந்தே படைக்கப்பட்டுள்ளனர் ! இந்த தேவதூதர்களில் பல வகையினர் உள்ளனர் !உதாரணமாக அஸ்வினிகள் ருத்திரர்கள் கந்தர்வர்கள் வசுக்கள் அசுரர்கள் மற்றும் மஹரிஷிகளும் தேவர்களாக உள்ளதாக குறிப்புகள் உள்ளன ! அப்படி ருத்திரர்கள் வகைப்பட்ட தேவதூதர்களில் ஒருவராக சிவன் உள்ளார் ! அஸ்வினிகளில் ஒருவராக விஷ்ணு உள்ளார் !  தேவர்கள் மற்றும் அசுரர்களும் நாராயணனுக்குள் படைக்கப்பட்ட படைப்புகளே ! இவர்களுக்கு ஒவ்வொரு பொறுப்புகளும் நிர்வாகமும் கடவுளாலும் நாராயணனாலும் வழங்கப்பட்டுள்ளன ! அவைகள் நாராயணனுக்கு கீழான சக்திகள் !! ஆனாலும் மனிதர்களை விட அவைகள் மேலான சக்திகள் !

மனிதர்களுக்கு தன்னை விட மேலான சக்திகளுக்கு பயப்படுதல் என்பது இயல்பாகவே வந்துவிடுகிறது ! செல்வந்தர்களை கண்டால்கூட கூழைக்கும்பிடு போடும்   மனிதர்கள் அவர்களை விட பெரிய வாணமண்டல சக்திகளை பிரியப்படுத்துவது என்பது இயல்பாக வந்த ஒன்று !

ஆனால் எல்லாபுகழும் கடவுளுக்கே என்பதுதான் ஆதியிலேயே மனிதர்களுக்கு உபதேசிக்கப்பட்டது ! கடவுளை யார் மூலமாக நாம் படைக்கப்பட்டுள்ளோமோ அந்த நாராயணன் மூலமாக வழிபடுவது சரியானது ! ஓரிறைவனை நாராயணன் மூலமாக துதிக்கிறோம் என்பதையே மகா மந்திரமாக `` ஓம் நமோ நாராயணாய  `` என்பதாக முதல் மகாமந்திரமாக மனித இனத்திற்கு வழங்கப்பட்டது !

ஆனாலும் மனிதனை விட மேலான சக்திகளான தேவதூதர்கள் மற்றும் மனிதர்களில் தூய்மயடைந்த மஹரிஷிகள் - குருனாதர்கள் மூலமாகவும் கடவுளை வழிபடுவதும் ஆத்ம கல்விக்கு ஏற்புடையது என்பதால் அவர்கள் மூலமாகவும் கடவுளை வழிபடுவது வழக்கத்தில் வந்தது !

மகா மந்திரத்தில் இரண்டு முக்கியமான பகுதிகள் உள்ளன !

முதலாவது பகுதி ஓரிறைவனையே துதிக்கிறோம் -- ஓம்
                 
                +

இரண்டாவது பகுதி யார் மூலமாக துதிக்கிறோம் என்பது -- நாமத்தினாலே


ஓம் நமோ நாராயணாய
ஓம் நம சிவாயா
ஓம் சிவாய நம
ஓம் பிரம்மாய நம  
ஓம் வருணாய நம
ஓம் அகத்தியாய நம
ஓம் வசிஸ்ட்டாய நம
ஓம் விஸ்வாமித்ராய நம

ஓம் நம சிவாய. சிவாய என்றுதானே உள்ளது சிவனாக ஆனவனை நமஸ்கரிக்கிறேன் ஓம் நம சிவ என மந்திரம் இல்லை சிவனை வழிபடுகிறேன் என மந்திரமே இல்லை ஓம் நமோ நாராயணாய நாராயணனாக ஆனவனை வழிபடுகிறேன் பஞ்சாக்கரமும் அஸ்ட்டாங்கமுமே ஆதி மூலமந்திரங்கள்

ஆனவனை வழிபடுகிறேன் அறியப்பட்டவன் மூலமாக அறியப்படாதவனை வழிபடுகிறேன்

இப்படி குருமூலமாக கடவுளை துதிப்பது என்ற சரியான வழக்கம் அசுரர்களின் துர் உபதேசத்தால் கலப்படம் அடைந்து ஓமை அர்த்தமற்றதாக்கி விட்டார்கள் ! கடவுளை விட்டுவிட்டு குருவையே கடவுளாக மாற்றிவிட்டனர் ! ஏக இறைவனை ஓரம்கட்டி குருக்களை பல கடவுள்களாக சித்தரித்துவிட்டனர் !

ஓரிறைவனையே துதிக்கிறோம் என்ற எளிதான பொருள் உள்ள ஓமை ஏதோ மூடுமந்திரம் என்றும் ரகசியம் என்றும் சிவனுக்கே தெரியாததை முருகன் ரகசியமாக காதில் ஓதினார் என்றும் இட்டுகட்டி விட்டனர் ! அதிலே ஓமை ரெம்ப பெரிய விசயம் என்பதுபோல காட்டி ஓரம் கட்டிய சாதனையை அசுர சக்திகள் செய்து விட்டன !

ஆனாலும் கதை சரியாகத்தான் உள்ளது ! பிரணவ மந்திரத்தை சிவனும் பிரமனும் மறந்துவிட்டனர் என்று ! வைணவம் மட்டும் மறக்கவில்லை ! இதுதான் குரான் சொல்லும் ஆதி இசுலாம் என்பது ! ஆதி இசுலாம் வைணவமே !!

நாராயணன் பூமியில் அதர்மம் அதிகரிக்கும்போதெல்லாம் அவதாரமாக வருவார் என்பதுவே முருகன் -- ராமன் -- குமாரன் !

அந்த இறைதூதர்கள் சிவனுக்கும் பிரமனுக்கும் ஓமை மீண்டும் உபதேசிப்பார்கள் என்பது வைணவம் !


நீங்கள் யாரை வழிபட்டாலும் அது என்னையே வழிபடுகிறீர்கள் என கீதையில் உள்ளதாக உள்ளது ! அது திரிபு !

நீங்கள் யார் மூலமாக கடவுளை வழிபட்டாலும் அது என் மூலமாக கடவுளை வழிபட்டதற்கு சமாணம் என்பதுவே சரியானது !

நீங்கள் யார் மீது பக்தியாக இருக்கிறீர்களோ அவர்கள் மூலமாக ஓரிறைவனையே துதியுங்கள் !!

கடவுள் என்பதற்கும் கடவுளின் தூதுவர் என்பதற்கும் மரியாதைக்குறைச்சல் ஏதுமில்லை !

ஒருவர் கடவுள் என்றே வைத்துக்கொள்ளுவோம் ! அவர் மூலமாக கடவுளை வழிபட்டால் அது அவருக்கு அவ மரியாதையில்லை !

ஆனால் மகான்கள் , மனிதனாக இருந்து கடவுளை அடைந்தவர்கள் , தவயோகிகள் , தேவதூதர்கள் ஆகியோரை அல்லது கடவுளால் படைக்கப்பட்டவர்களை அவர்களது தெய்வீகத்தண்மை கண்டவர்கள் அவர்கள் மீதுள்ள குருபக்தியை கொஞ்சம் அதிகமாக்கி கடவுளாகவே சித்தரித்து வழிபட்டால் அது கடவுளுக்கு செய்த அவ மரியாதை ஆகிவிடும் !

எட்டாத காரியத்தில் தலையிடாதே என்றொரு பழமொழி உண்டு !

கடவுள் யாரென்று அறிந்துகொள்ளுவது உண்மையில் எந்த நன்மையும் செய்யாது ! அவர் யாரென்று அறிந்துகொள்ளுவதை விட அவருக்கு ஒப்புறவாக நடந்து ஆத்ம தூய்மையடைந்து அவரை சேர்வதுவே முக்கியம் ! அங்கு சென்ற பிறகு அவர் யாரென்று அறிந்துகொள்ளலாம் ! அதுவரை கடவுளை கடவுள் என்று மட்டுமே அழைத்து வழிபடுவது மிகவும் பாதுகாப்பனாது !

நாம் மதிக்கும் யார் மூலமாகவும் கடவுளை வழிபடுவது ஏற்புடையதே !

எந்தக்கோவிலுக்கும் சென்று அங்கிருப்போர் மூலமாக கடவுளை வழிபடுவது மிகவும் நன்மையானது ! வேதங்களால் அங்கீகரிக்கப்பட்டதே !


யார் மூலமாகவும் கடவுளை வழிபடலாம் ! ஏனென்றால் சகலரும் கடவுளால் படைக்கப்பட்டவரே ! ஆனால் எவ்வளவு ஆற்றல் உள்ளவராக இருந்தாலும் ; கடவுளை நெருங்கியவராக இருந்தாலும் கடவுளை விட்டுவிட்டு அவரின் அடியவர்களை வழிபடுவது நல்லதல்ல !

நாளை இறுதி நியாயத்தீர்ப்பு நாளில் கடவுள் அத்தகையோரிடம் `` பூமியில் உங்களுக்கென்று ஒரு கூட்டத்தை ஏற்படுத்திக்கொண்டீர்களா ? என கேட்கும் போது இதற்கும் எங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை ; அவர்களாக எங்களை கடவுளுக்கு இணை வைத்துக்கொண்டார்கள் என்று கைவிரித்து விடுவார்கள் என்று குரான் எச்சரிக்கிறது !

5:116. இன்னும், "மர்யமுடைய மகன் ஈஸாவே, "அல்லாஹ்வையன்றி என்னையும் என் தாயாரையும் இரு கடவுள்களாக ஆக்கிக்கொள்ளுங்கள்" என்று மனிதர்களிடம் நீர் கூறினீரா?" என்று அல்லாஹ் கேட்கும் போது அவர், "நீ மிகவும் தூய்மையானவன்; எனக்கு உரிமையில்லாத ஒன்றை நான் சொல்வதற்கில்லை; அவ்வாறு நான் கூறியிருந்தால், நீ அதை நிச்சயமாக அறிந்திருப்பாய்; என் மனதிலுள்ளதை நீ அறிகிறாய்; உன் உள்ளத்திலிருப்பதை நான் அறிய மாட்டேன்; நிச்சயமாக நீயே மறைவானவற்றையெல்லாம் நன்கு அறிபவன்" என்று அவர் கூறுவார்.
5:117. "நீ எனக்குக் கட்டளையிட்டபடி (மனிதர்களை நோக்கி), "என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனுமாகிய அல்லாஹ்வையே வணங்குங்கள்" என்பதைத் தவிர வேறு எதையும் அவர்களுக்கு நான் கூறவில்லை; மேலும், நான் அவர்களுடன் (உலகில்) இருந்த காலமெல்லாம் அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன்; அப்பால் நீ என்னைக் கைப்பற்றிய பின்னர் நீயே அவர்கள் மீது கண்காணிப்பவனாக இருந்தாய். நீயே எல்லாப் பொருட்கள் மீதும் சாட்சியாக இருக்கிறாய்"


16:86. இன்னும், இணை வைத்தவர்கள் தாங்கள் இணைவைத்தவர்களை (மறுமை நாளில்) பார்த்தார்களாயின் "எங்கள் இறைவனே! நாங்கள் இணைவைத்துக் கொண்டிருந்தவர்கள் இவர்கள்தான். உன்னையன்றி நாங்கள் இவர்களைத் தான் அழைத்துக் கொண்டிருந்தோம்" என்று அவர்கள் கூறுவார்கள்; அதற்கு அவர்கள் , "நாங்கள் தெய்வங்களல்ல நாங்களே சதா இறைவனையே வழிபட்டவர்கள்  நிச்சயமாக, நீங்கள் பொய்யர்களே" என்னும் சொல்லை அவர்கள் மீது வீசுவார்கள் !
ஆகவே ஞானமானது ` யார் மூலமாகவேனும் கடவுளை மட்டும் வழிபடுவதே சிறந்தது என்பதை வெளியாக்குகிறது !

நான் அழைக்கிற பலரை நம்மால் சந்திக்கமுடியவில்லை ! ஒருவேளை சந்தித்தால் அவர்கள் நிச்சயமாக நமக்கு கடவுளை வணங்கும்படியாகவே வழிகாட்டுவார்கள் !

வள்ளலாரின் வாழ்விலும் இதுவே நடந்தது !

அவர் சைவசமயத்தில் ஈடுபாட்டோடு ஆரம்பத்தில் இருந்தவர் ! தருமசாலை ஆரம்பித்து அதை நடத்திவரும் வேளையில் ஒருனாள் தருமசாலைக்கு பழுத்த சவனடியார் ஒருவர் வந்து வள்ளாலாரிடம் உரையாடிக்கொண்டிருந்தார் ! வள்ளலார் மதிய ஓய்வுக்கு அறைக்கு சென்ற போது அவரும் கூட சென்று அறையில் படுத்துக்கொண்டார் ! உறங்கும்போது வள்ளலார் தன்தலையில் சிவனடியார் பாதம் வைத்ததை உணர்ந்து எழுந்து என்ன காரியம் செய்கிறீர் என கேட்ட போது உனக்கு நான் திருவடி தீட்சையளித்தோம் என கூறி மறைந்துவிட்டார் !

அவ்வாறு சிவனே திருவடி தீசை அளித்தபிறகு வள்ளலார் `` சிவனிலிருந்து அருட்பெரும்ஜோதியாக இறைவனை வழிபடுபவராக மாறினார் `` ஆரம்பத்திலே நான் சைவ சமயத்திலே லட்சியம் வைத்துக்கொண்டிருந்தேன் என்பதை அறிவீர்கள் ஆனால் இப்போதோ ஆண்டவர் என்னை ஏறாத நிலைமேல் ஏற்றிவிட்டார் ! `` என்று இந்த அனுபவத்தை வள்ளலார் குறிப்பிட்டுள்ளார் ! அப்படியானால் சிவனே வள்ளலாரை தன்னை வழிபடுவதற்கு பதிலாக ஏக அரூப இறைவனை வழிபட வழிகாட்டினார் என்றுதான் இதை எடுத்துக்கொள்ளவேண்டும் !


அதுவே உண்மையும் மனிதர்கள் கடைபிடிக்க வேண்டுவதும் ஆகும் !

நாம் அவ்வறு நமக்கு பக்திக்குரியவர்கள் மூலமாக கடவுளை வழிபட்டால் அது நமது பக்திக்குரியவர்களாலும் ஆசிர்வதிக்கப்படும் ! .  
 

நாராயணனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ நாராயணனாய

சிவனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ சிவாய

சேஷனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ சேஷாய

நாராயணியாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ நாராயணியாய

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி