Total Pageviews

Sunday, December 23, 2012

வாழும் வழி !!


--- யுகபுருஷன் - இறைதூதர் ராமரின் உபதேசங்கள் -
உடலையும் உள்ளத்தையும் தூய்மையாக்கிக்கொண்டு பக்தி சிரத்தையுடன் ; உன் மேல் வாய்க்கும் கடமைகள் யாவற்றையும் கடவுளுக்கு அர்ப்பணமாக ஒவ்வொரு நாளும் சேவை செய்து வா ! நல்ல காரியங்கள் செய்வதில் ஒரே ஒரு நாள் கூட அசிரத்தையாக இருக்காதே !!
சத்தியத்தை கைவிடாதே ! எப்போதும் உற்சாகத்துடன் இரு . பிறவியும் மூப்பும் மரணமும் உனக்கு இயல்பானவையே என்பதை நினைத்து எப்போதும் பணிவுடன் நடந்து கொள் . மனைவி மக்களிடம் அளவுக்கு மீறிய பற்றும் பாசமும் கொள்ளாதே !
அதிர்ஷ்ட்டம் வந்து சேர்ந்தால் பிரமாதமாக மகிழ்ந்து போகாதே ! அதிர்ஷ்ட்டம் போய் விட்டால் மன வருத்தமும் கொள்ளாதே ! மனதை சம நிலையில் வைத்திரு !
ராமனாகிய நான் எல்லா படைப்புகளுக்கும் ஆதாரமாக விளங்குகிறேன் ! என்னிடமே உன் மனம் நிலைத்திருக்கட்டும் !
முக்தியை பெறுவதற்கு என் மூலமாக கடவுளிடம் பக்தி கொள்ளுவது மிகவும் அவசியம் . கண் இருந்தாலும் இருளில் நடந்து போவதற்கு நமக்கு ஒரு விளக்கு தேவைப்படுகிறது அல்லவா ? அதுபோல உனக்கு போதிய ஞானம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் சரியான வழியில் முன்னேறுவதற்கு ராம குருபக்தி இருக்க வேண்டும் !
ராம குருபக்தியை பெற்றால் போதும் . வேறு எதுவுமே வேண்டியதில்லை . என் சீடனுக்கு ஞானமும் விஞ்ஞானமும் வைராக்கியமும் தாமாகவே வந்து சேரும் . இது கடவுளின் சித்தமாகும் !
இந்த உபதேசத்தை சிந்தித்தும் பின்பற்றியும் வாழ்ந்து வருபவன் உண்மையில் ஞானியே ஆவான் . அவன் எல்லாப்பாவங்களிலிருந்தும் விடுபடுவான் !
இந்த உலகம் முழுவதிலும் நான் - யுகபுருஷன் நிறைந்திருப்பதை ஒருவன் உணரவேண்டும் ! ஆழ்ந்த நம்பிக்கையுடன் என்னிடம் குருபக்தி கொள்ளவேண்டும் ! அவ்வாறு செய்தால் ஒருவன் பரிசுத்தம் அடைவான் ; மகிழ்சி அடைவான் ; பேரானந்தம் அனுபவிப்பான் ; நன்மை பெறுவான் ! 

Saturday, December 8, 2012

வால்மீகிக்கு நாரதர் செய்த உபதேசம் ???



வால்மீகி கொள்ளை தொழில் செய்பவர் ! கானகம் சென்று அங்கு தனித்து வரும் மனிதர்களை கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பது அவரது வாடிக்கை ! அந்த பணத்தை அவரது மனைவியிடம் கொடுத்து தனது வயதான தாய்தகப்பன் மனைவி பிள்ளைகளை வளர்த்து வந்தார் ! தனது குடும்பத்தை பராமரிக்கவே இந்த தொழிலை செய்வதாக சுய நியாயத்தை தேடிக்கொள்வார் ! மிரட்டுவாரே தவிற யாரையும் கொண்றதில்லை ! தன்னைப்பார்த்து பயப்படும்படியாக உருவத்தில் பயங்கரத்தை அமைத்துக்கொள்ளுவார் ! இந்த கதை கர்ண பரம்பரையாய் பலர் சொல்ல நான் கேள்விப்பட்டிருக்கிறேன் !


ஒரு நாள் அந்த கானகம் வழியாய் நாரதர் வந்தார் !
வழக்கம் போல அவரை மறித்து வால்மீகி ``உயிர் மேல் ஆசை இருந்தால் இருப்பதை கொடுத்துவிடு ``என மிரட்டினார் !
நாரதர் `` சரி கொடுத்துவிடுகிறேன் ! ஒரே ஒரு கேள்வி கேட்கிறேன் என்றார் ``
ம்..ம்,,,
இந்த தொழிலால் உனக்கு பாவம் வரும் அது உன் பிறவியை பல பிறவிகளுக்கு கெடுத்துவிடாதா ?
இது என் குலத்தொழில் ! நான் என் குடும்பத்தை பராமரிக்கவே இதை செய்கிறேன் !
அப்ப்டியா ? நான் இதே இட்த்தை விட்டு நீ வராமல் நகர மாட்டேன் என சத்தியம் செய்கிறேன் ! இந்த வழிப்பறியால் வரும் பாவத்தை உன் குடும்பத்தினர் உன்னோடு பங்குபோட்டு அனுபவிக்க சம்மதீபார்களா என கேட்டு விட்டு வா !
நான் அவர்கள் மீது வைத்துள்ள பாசத்தை போல பல மடங்கு அவர்கள் என் மீது வைத்துள்ளனர் ! நான் ஒருவனே பாடுபட்டு அவர்களை தாங்குகிறேன் குடித்து கூத்தடிப்பதில்லை ! சுய நல வாதியாய் இல்லை !
சரி ! போய் கேட்டு வா !

வால்மீகி வீட்டிற்கு சென்று ஒவ்வொருவரிடமும் கேட்கிறார் !
சம்பாதிப்பது உனது கடமை ! நீ எப்படி சம்பாதிக்கிறாய் என்பதற்கு நீயே பொறுப்பு ! அதில் வருகிற பாவத்திற்கும் எங்களுக்கு சம்பந்தமில்லை என அனைவரும் சொல்லி விடுகின்றனர் !

மனம் குத்தப்பட்ட வால்மீகி நாரதரிடம் சென்று `` முனிவரே எனக்கு நல்ல வழி காட்டுங்கள் `` குடும்பத்திற்காக செய்வதால் இது பாவமில்லை என நினைத்திருந்தேன் ! அதற்கும் எங்களுக்கும் சம்மந்தமில்லை என அவர்கள் சொல்லி விட்டனர் ! இப்போது நான் செய்த பாவங்கள் எனது மனக்கண்ணில் வந்து உருத்துகிறது ! பாவங்கள் தீர்க்க வழி சொல்ல வேண்டும் ``

மண்ணுலகில் பாவங்களை தீர்க்கும் அதிகாரம் கடவுளின் பிரதினிதியாய் வருகிற குமாரனுக்கு அருளப்பட்டுள்ளது ! ராமா ராமா என்று ஜபிக்க ஜபிக்க உன் பாவங்கள் தீரும் 

வால்மீகியால் ராமா ராமா என ஜபிக்க நாக்கு வரவில்லை ஏனென்றால் அவர் தெற்று வாய ! ராமா ராமா என வராததால் ``மரா மரா `` என ஜபிக்க சொன்னார் !
அப்படி நாரதரால் உணர்த்தப்பட்ட வால்மீகி தியானத்தில் அமர்ந்து மரா மரா என ஜபிக்க அது ராமா ராமா என மாறியது ! அந்த ஜபத்தில் மூழ்கி அவரை சுற்றி புற்று வளருமளவு அவர் ஜபத்தில் மூழ்கியதால் அவருக்கு ஞானம் உண்டாகி வால்மீகி மகரிஷியாய் மாறினார் !

ராமாயணம் அக்காலங்களில் கிராமிய நாடகங்களாக மட்டுமே இருந்ததை ஞானதிருஸ்ட்டியில் உணர்ந்து ராமாயண காவியம் பாடினார் ! 


ராம மந்திர ஜபம் என்பது கோடி பாவம் தீர்க்கும் என்பது அணுபவத்தில் பலரால் நிரூபணமான உண்மையாகும் !

இது இந்தியரின் இதயத்தில் உறைந்த உண்மை !

இந்த உண்மை உலகம் முழுமையும் ஏற்றுக்கொள்ளப்பட்ட்து ! உலகிலுள்ள பல மொழிகளிலும் இந்த ராமாயணம் கிராமிய நாடகங்களக இருந்து வந்துள்ளது ! இதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை ! 

ஆதி மனிதர்களான லெமூரியாக்கண்ட்த்து தமிழர்களே உலகம் முழுமையும் பரந்து விரிந்தனர் !

முதல் தமிழ் சங்கம் ஜலப்பிரளயத்தால் அழிந்த பிறகு மக்கள் இன்றைய ஆதிகடவூரில் இரண்டாம் சங்கம் அமைத்து வாழ்ந்தனர்

அங்கு கடவுளின் பிரதினிதியாக யுக புருஷன் ராமன் அவதரித்து தர்மத்தையும் ஏக இறைவனுக்கு மட்டுமே வழிபாடு என்பதையும் நிலைனாட்டினார் !

கடவுளை வழிபடுவதற்கு பதில் தங்களின் முன்னோர்களை  கடவுளுக்கு இணை வைத்து அவரிகளின் பெயரோடு ஈஸ்வரன் என சேர்த்துக்கொண்டு வழிபாட்டை மனிதர்களின் மத்தியில் அசுரர்கள் பிரபலப்படுத்தி வந்தனர் !

அசுரர்களை உபவாசித்து அவர்களின் அபிசேகம் பெற்று அரக்கர்களாக சிலர் வல்லமை பெற்று உலகை ஆண்டனர் ! 


இறை அச்சம் உள்ளவர்களாய் கடவுளை தேடிய வசிஸ்ட்டர் விசுவாமித்ரர் முதலான  ஞானிகளின் தபோவனங்களை தாக்கவும் செய்தனர் !

அவர்களின் வேண்டுதலின் பயனாய் கடவுளின் பிரதினிதியாக - இறைதூதராக யுக புருஷன் பூமிக்கு வந்ததே ராம அவதாரமாகும் !

வசிஸ்ட்டர் விசுவாமித்ரர் போன்றோர் திரேதா யுகத்தில் இன்றைய வேதாரண்யம் எனப்பட்ட திருமறைக்காடு ல் வர்ணசாலை அமைத்து குருகுல கல்வியும் வேதமும் வளர்த்து வந்தார்கள் .


ராமன் என்றால் குமாரன் - பிரதினிதி என்பது பொருள் ! கணனியில் கூட ஹார்ட்டிஸ்க் மூளை என்றால் அதனை இயக்கம் இதயம் போன்றதன் பெயர் ரோம் . அதாவது ராம் - பிரதிநிதி 

இந்த பூமியையும் படைப்பினங்கள் அனைத்தையும் கடவுள் யார் மூலம் படைத்தாரோ அவரே யுக புருஷன் ! பூமியில் அதர்மம் மிகும்போதெல்லாம் யுக புருஷன் பூமிக்கு வந்து மீண்டும் தர்மத்தை நிலைனாட்டி கடவுளோடு ஒப்புறவாக்குகிறார் ! அவர் கடவுளின் பிரதினிதி --- குமாரன் ஆனால் கடவுளல்ல !

ராமரின் அவதார மஹிமை அறிந்த வசிஸ்ட்டர் அவர் சிறுவனாய் இருந்தபோதே அவரை அழைத்து சென்று தபோவனத்தை தாக்க வந்த அரக்கர்களை அழிக்க  ஊக்குவித்தார் ! ராவணேசுரனை வதை செய்யும் வரை ராமரால் பல அரக்கர்கள் அழிக்கபட்டனர் !

வால்மீகி காலம் வரை ராமாயணம் செவிவழி செய்தியாகவும் கிராமிய நாடகங்களாகவும் இருந்தது . இவற்றையெல்லாம் ஞான திருஸ்ட்டியுடன் உணர்ந்து வால்மீகி ராமாயணம் வடித்தார் ! அதில் ராமன் யுக புருஷனாக - சற்குருவாக ; மனிதனுக்கும் கடவுளுக்கும் பாலமாக சித்தரிக்கபட்டாரே தவிற கம்ப ராமாயணத்தில் கதானாயகனை உயர்த்திக்காட்டுகிற கவிப்புலமையால் கடவுளுக்கு இணை வைத்ததைப்போல வால்மீகி இணை வைக்கவில்லை ! ஏனென்றால் வால்மீகி மகரிஷி என்ற யோகிக்கும் கவிப்புலமையால் காவியம் பாடிய கம்பனுக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது !

வால்மீகி ராமாயணத்தில் வராத பல சம்பவங்கள் கிராமிய ராமாயண நாடகங்களாக தமிழகத்தில் இன்றும் உள்ளன ! தமிழகத்தில் மட்டுமல்ல பல நாடுகளிலும் ராமாயண நாடகங்கள் உள்ளன ! உலகம் முழுமையும் அதிக மொழிகளில் உள்ள நாடகம் ராமாயணம் மட்டுமே ! இது எதனாலென்றால் ஆதிமனித சமூகமான லெமூரியாக்கண்டத்து தமிழ் சமூகமே பல நாடுகளுக்கும் பரவி ஆதி ஐந்து அடிப்படை மொழிகளாய் மறுவியது ! ஆதி ஐந்து அடிப்படை இனங்களும் தமிழ் இனத்திலிருந்து பரிணமித்ததே !

இனம்                   மொழி
தமிழ்                    தமிழ் முதலான தென்னிந்திய மொழிகள்
சமஸ்கிரதம்              இந்தி முதலான வட இந்திய மொழிகள்
லத்தீன்                   ஆங்கிலம் முதலான ஐரோப்பிய மொழிகள்
ஆரியம்                   அரேமிய பெர்சிய யூத அரேபிய ஆப்ரிக்க
                              மொழிகள்
மங்கோலியம்             சீன ஜப்பானிய மொழிகள்

ஆகவே ராமாயணம் சிலசில மாற்றங்களுடன் பல நாடுகளிலும் உள்ளது !

இந்த ராமாயணத்தின் அடிப்படை பூமியில் மனிதர்கள் சுயபெருமை பாராட்டி தங்கள் முன்னோர்களை கடவுளுக்கு இனை வைத்து அசுரர்களின் உபதேசங்களுக்கு ஆட்பட்டு இச்சைகளின் வழி வாழ்ந்து அதர்மம் மிகும் போதெல்லாம் யுக புருஷனானவர் பூமியில் அவதரித்து மீண்டும் இறைபேரரசை நிலை நாட்டுவார் என்பதாகும் !

கடவுளின் பிரதினிதியான அவரை சற்குருவாய் ஏற்று கடவுளுக்கு மட்டும் வழிபடுபவர்களாய் மனிதர்கள் மாறவேண்டும் என்பதே !


கீதை 4:6 நான் பிறப்பற்றவனாகவும்; அழிவற்ற எனது ஆத்துமசரீரம் நித்தியஜீவனுள்ளதாகவும் இருந்தாலும் நான் அதனை தாழ்த்தி யுகங்கள் தோறும் இப்பூமியில் அவதரிக்கிறேன்! எனென்றால் நானே இப்பூமிக்கு கடவுளின் பிரதிநிதியும்; பூமியில்உள்ள அனைத்து உயிரிணங்களின் யுகபுருஷனும் ஆவேன்!!

கீதை 4:7 எப்போதெல்லாம் எப்போதெல்லாம் ஆண்மீக மதிப்பீடுகள் தொய்வடைந்து அதர்மம் தலைவிரித்தாடுகிறதோ அப்போதெல்லாம் நான் பூமிக்கு இறங்கி வருகிறேன்!!


கீதை 4:8 பக்தர்களை ரட்சிக்கவும் தீமை புரிந்து பூமியில் குழப்பம் செய்வோரை அழிக்கவும் மீண்டும் தர்மத்தை நிலைநாட்டவும் யுகங்கள்தோறும் யுகங்கள்தோறும் இப்பூமியில் அவதரிக்கிறேன் !!

 
யுகங்கள் தோறும் பூமிக்கு வருகிற - இதுவரை வந்த ராமன் மூவரே ! -மூவரும் ஒருவரே !
திரேதா யுகத்தில் ராமன் !
துவாபர யுகத்தில் கிருஷ்ணர் !
கலியுகத்தில் இயேசு !

கலியுகம் பிறக்க போவதைப்பற்றி பாண்டவர்களுக்கு முதல் முதலில் உபதேசித்தவர் கிருஷ்ணரே ! கலியுக முடிவில் நியாயத்தீர்ப்பு செய்து சத்திய யுகத்தை நிறுவ கல்கியாக தாம் வானத்தின் வழியாக வரப்போவதாகவும் அறிவித்தார் !
இயேசுவும் யுக முடிவில் நியாயத்தீப்பு செய்ய தாமே இரங்கி வரப்போவதாக சொல்லிவிட்டு பரமேறி சென்றார் !

யானையை தடவிய குருடர்கள் போன்ற மதவாதிகள் இருவரையும் வேறுவேறு நபர் என எடுத்துக்கொண்டு சண்டை போட்டுக்கொண்டுள்ளனர் !

யுக புருஷனானவர் கலியுகத்தில் இயேசுவாக வந்து தன் மூலமாக உண்டாகி தனக்குள் நிலைபெற்றுள்ள மனித குலத்தின் பாவங்கள் அனைத்திற்கும் பாவ பரிகாரம் செய்தார் என்பது உண்மை !

யோவான் 1:3 சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை.

தன்னை உணர்ந்து மனம் திருந்தி கடவுளை தேடுகிற ஆத்துமாக்கள் யாரோ அவர்களுக்கு சற்குருவான யுக புருஷன் அவர்களின் பழம்பாவங்கள் அவர்களை பிடித்து பின்னோக்கி இழுத்து இம்சை செய்யாதபடி - அல்லது ஆயிரம் தீமைகள் செய்தாலும் அடுத்தவர் குறைகளை குற்றமாக சுமத்தி மனிதனை மட்டம் தட்டுகிற அசுர ஆவிகள் முன்னேறுகிற சாதகனை குற்றப்படுத்தாத படியாக சற்குருவான யுகபுருஷன் பவப்பரிகாரம் செய்தாயிற்று !

கடவுளைத்தேடுகிற எல்லோருக்கும் இயேசுவின் பரிகாரம் பக்கபலம் அளிக்கிறது ! மதவாதிகள் மிகைப்படுத்துவது போல மதம் மாறி வெள்ளைக்காரர்கள் பெயரை வைத்துக்கொள்ள வேண்டும் ; பாடத்தெறிந்ததால் பாஸ்ட்டராகிய ஒருவருக்கு அடிமையாகி கானிக்கை கொடுத்து தண்ணீரில் மூழ்க வேண்டும் ; அப்போது மட்டுமே இயேசுவின் பாவப்பரிகாரத்தின் பலன் ஒருவருக்கு கிடைக்கும் என்பது அவசியமேயில்லை !

மனம் கடவுளை நோக்கி திரும்பினாலே போதுமானது ! இயேசுவின் பாவப்பரிகாரம் அவர்களுக்கு பக்கபலம் கொடுக்கும் ! ஒவ்வொரு மனிதனும் பதிலுக்கு பதில் அனுபவித்துதான் தீர்க்கவேண்டும் என்றால் அதற்கு பல பிறவிகள் போதாது ; அந்தளவு மனித இனம் பாவங்களுக்கு அசுர்ர்களால் வழினடத்தப்படுகிறது !

இப்போது பாரம் தூக்க வண்டிகள் உள்ளன ! பார வண்டிகள் இல்லாத காலங்களில் மனிதர்களே பாரம் சுமந்தார்கள் ! அந்த நாட்களில் வழியெங்கும் ஆங்காங்கே ``சுமைதாங்கிகல்லை`` நட்டு வைத்திருப்பார்கள் ! அறுப்பு திருவிழாவின் போது கிராமத்தினர் அதற்கு சந்தனம் வைத்து தீபம் காட்டுவார்கள் ! அந்த கல் இயேசுவுக்கு அடையாளமானது !

பாவம் அதிகம் செய்யாத ஆத்துமா ஓடியாடி சம்பாதிக்கும் ; அழும்பும் செய்யும் பிறரை அடக்கி ஒடுக்கும் !காலமும் ஓடும் ; பல பிறவிகளில் பாவம் முற்றிய ஆத்துமாக்களோ அடிஉதை படும் ! தொட்டதெல்லாம் துயறம் தரும் ! அந்த ஆத்துமாக்கள் யுகபுருஷனை குருவாக வைத்து கடவுளை தொழதொடங்கினால் போதும் அவர்களின் பாரம் குறையும் ! விடுதலை உண்டாகும் ! பாவங்கள் உணர்த்தப்பட்டு தன்னை உணர்வதால் ஞானமாக பக்குவமடையும் ! !

கலாத்தியர் 3:13 மரத்திலே தூக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து நமக்காகச் சாபமாகி, நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கி மீட்டுக்கொண்டார்.

நீண்ட நாளாக வாத நோயால் படுத்தபடுக்கையாய் இருந்த ஒருவரை இயேசு குணப்படுத்திய ஒரு சம்பவம் சித்தரிக்கபடுகிறது :

மத்தேயு: 9
2. அங்கே படுக்கையிலே கிடந்த ஒரு திமிர்வாதக்காரனை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். இயேசு அவர்களுடைய விசுவாசத்தைக் கண்டு, திமிர்வாதக்காரனை நோக்கி: மகனே, திடன்கொள், உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார்.

3. அப்பொழுது, வேதபாரகரில் சிலர்: இவன் தேவதூஷணம் சொல்லுகிறான் என்று தங்கள் உள்ளத்தில் சொல்லிக்கொண்டார்கள்.

4. இயேசு அவர்கள் நினைவுகளை அறிந்து: நீங்கள் உங்கள் இருதயங்களில் பொல்லாதவைகளைச் சிந்திக்கிறதென்ன?

5. உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது என்று சொல்வதோ, எழுந்து நடவென்று சொல்வதோ எது எளிது?

6. பூமியிலே பாவங்களை மன்னிக்க மனுஷகுமாரனுக்கு அதிகாரம் உண்டென்பதை நீங்கள் அறியவேண்டும் என்று சொல்லி, திமிர்வாதக்காரனை நோக்கி: நீ எழுந்து உன் படுக்கையை எடுத்துக்கொண்டு, உன் வீட்டுக்குப் போ என்றார்.

7. உடனே அவன் எழுந்து, தன் வீட்டுக்குப்போனான்.
 

 இங்கு குணமாக்குவது என்பது சித்தர்கள் ஆற்றல் அல்ல ! மந்திரதந்திரமுமல்ல ! பாவங்கள் மண்ணிக்கபட்டால் மட்டுமே அந்த பாவத்தால் உண்டான நோயை குணப்படுத்தமுடியும் என்பதை இயேசு வெளிப்படுத்துகிறார் ! பல நாள் தவம் செய்து சித்தர்களின் அருள் பெற்று மூலிகைகளை கண்டறிந்து சித்தராக மாறுவது என்பதாக இப்போது அறிவு ஜீவிகளின் மத்தியில் நவீன நாத்திகவாதம் கலைகட்டிக்கொண்டுள்ளது ! சித்தர்கள் ஆற்றல் என்பது தற்காலிகமானது ! நிரந்தரமானது தன்னை உணர்ந்து யுகபுருஷன் மூலமாக கடவுளிடம் பாவமண்ணிப்பு பெற்று ஞானமடைவது மட்டுமே !

மண்ணுலகிற்கு கடவுளின் பிரதினிதியானவரும் (குமாரன்) இந்த லோகம் யார் மூலமாக படைக்கபட்டு யாருக்குள் சகலமும் நின்றும் இயங்கியும் அழிந்தும் வருகிறதோ அந்த யுகபுருஷன் மூலமாகவே கடவுளிடம் பாவபரிகாரம் பெற முடியும் ! அதற்கு பிரயச்சித்தம் செய்யவே கலியுகத்தில் குமாரனாகிய ராமன் இயேசுவாக அவதரித்தார் !

யோவான் 6:40  குமாரனைக் கண்டு, அவரிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ அவன், நித்தியஜீவனை அடைவதும், நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவதும், என்னை அனுப்பினவருடைய சித்தமாயிருக்கிறது என்றார்.

யோவான் 8:36  ஆகையால் குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள்,
மத்தேயு 11:27  சகலமும் என் பிதாவினால் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது. பிதா தவிர வேறொருவனும் குமாரனை அறியான்; குமாரனும், குமாரன் எவனுக்கு அவரை வெளிப்படுத்தச் சித்தமாயிருக்கிறாரோ அவனும் தவிர, வேறொருவனும் பிதாவை அறியான்.

நாரதர் வால்மீகிக்கு ``மரா மரா `` என்ற மந்திரத்தை ஜபிக்கும்படியாக உபதேசித்ததன் மறைபொருள் இதுவே ! மறைபொருளை விளங்கிக்கொள்ள முடியாதவர்கள் அதற்கு சப்பைகட்டாக ஒரு கதையை கட்டிவிட்டனர் ! வால்மீகிக்கு தெற்று வாய் ! ராமா ராமா என உச்சரிக்க வரவில்லை அதனால் மரா மரா என உச்சரிக்க சொன்னார் என்று ! மரா மரா என உச்சரிக்க முடிந்தால் ராமா ராமா என உச்சரிக்க முடியாதா என்ன ?

மறைபொருளாவது :
மரா மரா என்றால் மரத்திலே தூக்கபடுகிற ராமா மரத்திலே துக்கப்படுகிற ராமா என்பதாகும் !

பின்னொரு காலத்தில் ராமர் பூமியிலே இயேசுவாக அவதரித்து தன்னை மரத்திலே
தூக்கப்படுவதற்கு ஒப்புக்கொடுப்பார்.

மரத்திலே தூக்கபடுகிற ராமனால் மனிதர்களுக்கு பாவபரிகாரம் உண்டாகும் என்பதுவே நாரதரின் உபதேசமாகும் ! மரத்திலே தூக்கபட்ட ராமா என்ற ஜபமே கொள்ளையன் வால்மீகியை பரிசுத்தமாக்கி வால்மீகி மஹரிஷியாய் மாற்றியது !


இந்த மறைபொருள் உணர்த்தப்பட்ட்தால் அடியேனும் அதை நீண்ட நாளாக பயன்படுத்தி வருகிறேன் ! நாராயணனே திரேதா யுகத்தில் ராமராகவும் துவாபர யுகத்தில் கிரிஷ்ணராகவும் வந்ததைப்போல இந்தியர் அல்லாத மற்ற இன மக்களையும் நல்வழிப்படுத்த கலியுகத்தில் இயேசுவாக வந்தவர் என்ற உண்மையை சொல்லிக்கொண்டுள்ளேன்

இன்னும் சொல்லப்போனால் அந்த அவதாரங்களின் போது பூமியில் அவர்களோடு உடன் இருந்த ஆத்மாக்களுள் அடியேனும் ஒருவன் என்பதால் அவரை நன்கு அறிந்தவன் என்ற முறையிலேயே அந்த மூவரும் ஒருவர் என சொல்லிக்கொண்டுள்ளேன்  


ராம நாமமே பாவத்தை போக்கவல்லது ! அந்த ராம நாமத்தின் மூலமாக கடவுளை வேண்டுவதே மனிதர்கள் உய்வடையும் வழி !

நாராயணன் நாமத்தினாலும் சிவனின் நாமத்தினாலும் சேஷனனின் நாமத்தினாலும் ஆதிசக்தியின் நாமத்தினாலும் கடவுள் தங்களையும் தங்கள் குடும்பத்தாரையும் தமது அருளால் நிரப்ப வேண்டுகிறேன்

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி

Sunday, November 18, 2012

அத்வைத நெறி !!



அத்வைத நெறியை ஞானமார்க்கம் என்றும் கடவுளை உள்ளேயே வைத்துக்கொண்டு ஏன் வெளியே தேடுகிறாய் என பலவகையான சித்தர் பாடல்களை உதாரணம் காட்டுவது பிரபலமாக உள்ளது !


அகம் பிரம்யஸ்யாமி --  எனக்குள் பிரம்மம் இருக்கிறது !
தத்துவமஸி         -- அது நீயாகவே இருக்கிறாய் !


இவை உண்மையே ! ஆனால் புரிதலிலும் அப்பியாசிப்பதிலும் கோளாறு வருகிறது ! அது உயிரை புரிந்து கொள்ளூவதில் உண்டாகும் குழப்பமே !

நான் என்பது உயிரல்ல ! எனது உயிர் என்று அதன் மீது நான் உரிமைபாராட்டமுடியாது ! நான் இறந்த பிறகு நானாக எனது ஆத்துமா மட்டுமே நிலைத்திருக்கும் ! ஆத்துமா அழிவற்றது ! அது பல பிறவிகள் எடுத்து ஒன்று ஞானமடைகிறது அல்லது அஞ்ஞானத்தில் மூழ்குகிறது ! நியாயத்தீர்ப்பு நாளன்று மட்டுமே அடுத்த யுகத்திற்குள்ளோ அல்லது நரகத்தில் அழிவுக்கேதுவாகவோ கடவுள் செய்வார் !

ஒத்த தாய்தகப்பனின் கர்ப்பத்தில் ஒரு ஆத்துமா ஜனித்தவுடன் தாயின் உயிர் மூலமாகவே ஆத்துமாவின் புற தோற்றமாக உடல் உருவாக்கபடுகிறது ! உடல் ஆத்துமாவின் வெளிப்பாடு ! உடலும் ஆத்துமாவும் ஒன்றைஒன்று ஆளுமை செய்யக்கூடியது ! இந்த உடலும் ஆத்துமாவும் இயங்க அதற்கு ஊக்க சக்தியாக கடவுள் தனது ஆவியை ஊதுகிறார் ! அவர் அனுமதிக்கும் வரை அந்த ஆவி உயிராக உடலில் இருக்கும் !

திருகுரான் :23:14. பின்னர் அந்த இந்திரியத் துளியை அலக் என்ற நிலையில் ஆக்கினோம்; பின்னர் அந்த அலக்கை ஒரு தசைப் பிண்டமாக்கினோம்; பின்னர் அத்தசைப்பிண்டத்தை எலும்புகளாகவும் ஆக்கினோம்; பின்னர், அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அணிவித்தோம்; பின்னர் நாம் அதனை வேறு ஒரு படைப்பாக (மனிதனாகச்) செய்தோம். (இவ்வாறு படைத்தவனான) அல்லாஹ் பெரும் பாக்கியமுடையவன் - (படைப்பாளர்களில் எல்லாம்) மிக அழகான படைப்பாளன்.

22:5. மனிதர்களே! (இறுதித் தீர்ப்புக்காக நீங்கள்) மீண்டும் எழுப்பப்படுவது பற்றி சந்தேகத்தில் இருந்தீர்களானால், (அறிந்து கொள்ளுங்கள்;) நாம் நிச்சயமாக உங்களை (முதலில்) மண்ணிலிருந்தும் பின்னர் இந்திரியத்திலிருந்தும், பின்பு அலக்கிலிருந்தும்; பின்பு உருவாக்கப்பட்டதும், உருவாக்கப்படாததுமான தசைக் கட்டியிலிருந்தும் படைத்தோம்; உங்களுக்கு விளக்குவதற்காகவே (இதனை விவரிக்கிறோம்): மேலும், நாம் நாடியவற்றை ஒரு குறிப்பிட்ட காலம் வரை கருப்பப்பையில் தங்கச் செய்கிறோம்; பின்பு உங்களை குழந்தையாக வெளிப்படுத்துகிறோம். பின்பு நீங்கள் உங்கள் வாலிபத்தை அடையும்படிச் செய்கிறோம். அன்றியும், (இதனிடையில்) உங்களில் சிலர் மரிப்பவர்களும் இருக்கிறார்கள்; (ஜீவித்து) அறிவு பெற்ற பின்னர் ஒன்றுமே அறியாதவர்களைப் போல் ஆகிவிடக்கூடிய தளர்ந்த வயது வரை விட்டுவைக்கப்படுபவர்களும் இருக்கிறார்கள்; இன்னும், நீங்கள (தரிசாய்க் கிடக்கும்) வரண்ட பூமியைப் பார்க்கின்றீர்கள்; அதன் மீது நாம் (மழை) நீரைப் பெய்யச் செய்வோமானால் அது பசுமையாகி, வளர்ந்து, அழகான (ஜோடி ஜோடியாகப்) பல்வகைப் புற்பூண்டுகளை முளைப்பிக்கிறது.


உயிரின் சக்தி கிடைத்தவுடன் ஆத்துமாவின் பாவபுண்ணிய பதிவுகளின் தொகுதியிலிருந்து மனமானது பிரகிருதியாகி ஓயாது இயங்குகிறது ! ஆனாலும் ஆத்துமாவில் எது உள்ளதோ அதுதான் வெளி வரும் ! உள்ளே அனுபவமாய் இல்லாத ஒன்று அதை விட்டு வரப்போவதில்லை ! உள்ளே இல்லாத ஒன்று புதிய வாழ்வு நிகழ்வாய் அதற்கு வரப்போவதில்லை ! புலண்கள் உலகில் தொடர்பு கொள்ளூவதை பொருத்து உள்ளே இருப்பதே எண்ணமாக உதயமாகிறது ! ஒரே பொருளை இரண்டு மனிதர்கள் பார்த்தாலும் அவர்களுக்குள் இருப்பதை பொருத்து இருவரும் அந்த ஒரு பொருளைப்பற்றி வெவ்வேறு சிந்தனை செய்கின்றனர் !

எதை நினக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய் என்பது உபதேசம் !


உண்மை என்னவென்றால் உனக்குள் எது இருந்ததோ அதுவே நினைப்பாக வெளிப்பட்டு அதனையே மேலும் உனக்குள் வளர்த்து அதுவாகவே உன் ஆத்துமா ஆகிவிடுகிறது !
அந்த எண்ணத்தை நல்ல எண்ணமாக மாற்றினால் அதுவாகவும் மாற முடியும் ! இந்த பாவபுண்ணீய வளர்சிதை மாற்றம் உனது ஆத்துமாவில் நிகழ்வதுதானே தவிர உயிரில் எந்த பாதிப்பும் உண்டாவதில்லை ! அது உன்னை தாங்கினாலும் உன்னால் மாசுபடுவதில்லை !உனக்குள்ளேயே இருந்தாலும் தாமரையிலையில் தண்ணீர் இருப்பது போல அது பாதிப்பிலாமலேயே இருக்கிறது ! ஏனென்றால் அது கடவுளின் ஆவி !அந்த ஆவி கடவுளால் எடுக்கபடும்போது உனக்கும் அதற்கும் சம்பந்தம் ஏதுமில்லை ! அடுத்த பிறவி நீ எடுக்கும் போது அதே ஆவி உனக்கு அருளப்படவேண்டிய அவசியமுமில்லை !


எது கொடுக்கபட்டதோ அது இங்கிருந்தே கொடுக்கபட்டது ; எது எடுக்கபட்டதோ அது இங்கிருந்தே எடுக்க பட்டது என்ற கீதையின் உபதேசம் அதுவே !

நானாகிய ஆத்துமாவில் கூட வருவது அதன் ஞானம் ஒன்றைத்தவிர வேறெதுவுமில்லை !


இன்று ஆணாக பிறந்த ஓர் ஆத்துமா அடுத்த பிறவியில் பெண்ணாகவும் பிறக்கலாம் ! ஏன் திருநங்கையாக  பிறந்து துன்பம் அனுபவிக்காது என்பதற்கு உத்திரவாதம் உள்ளதா ?

இன்று பணக்காரர் அதிகாரி அடுத்த பிறவியில் வருமையில் வாடமாட்டாரா ? இன்று உயர் ஜாதியில் பிறந்து பெருமை பாராட்டுகிறவர் அடுத்த பிறவியில் தாழ்ந்த ஜாதியில் பிறக்கமாட்டர் என்பது என்ன நிச்சயம் ? ஆத்துமா பிறந்துபிறந்து அனுபவித்துக்கொண்டு உள்ளது ! அதன் ஞானம் மட்டுமே கூட வருகிறது ! இப்போது எங்கு உள்ளதோ அதனையே தானாக நினைத்துக்கொள்ளுகிறது ! உடலின் மூலமாக உலகமும் தீமைகளும் இச்சைகளை தூண்டிவிடும் அசுர ஆவிகளும் ஆத்துமாவை ஆளுகை செய்து அதில் இருளை நிறப்புகின்றன !

உலகம் உடலின் வழியாக ஆத்துமாவை ஆளுமை செய்வது போல கடவுள் உயிரின் மூலமாக அந்த ஆத்துமாவை ஆளுமை செய்யமுடியும் ! ஆனால் ஆத்துமா உயிரில் நிலைத்து நின்று பழகினால் மட்டுமே இது சாத்தியமாகும் ! புற புலண்கள் ஆத்துமாவை எளிதில் ஆட்சி செய்துவிடும் ! ஏனென்றால் உடல் ஆத்துமாவின் புற வெளிப்பாடு அதிலிருந்து உண்டாகி அதனை ஆட்சி செய்வது ! ஆத்துமா விளிப்படைந்து அக புலண்கள் மூலமாக தன்னை இயக்கினாலும் அலட்டாமல் சாட்சியாக உள்ள உயிரில் ஒன்றி தியானிக்க பழகவேண்டியுள்ளது !இந்த உள்னோக்கு -- உள்சார்பு நிலையே ஆன்மீக வாழ்வு -- ஆன்ம ஈக வாழ்வு என்பது !

மனிதனிடம் கடவுளோடு நெருக்கமுள்ள ஒரு பொருள் அவனது உயிரே ! அந்த உயிரும் கடவுளும் வேறல்ல என்பதுவே அத்துவைதம் ! 

அது நீயாக இருக்கிறாய் ! ஆனால் நீ அல்ல ! உன்னைப்போல உனக்குள்ளாக இருக்கும் உனது உயிர் ! அந்த உயிர் உன்னைப்போல மேற்போக்காக தெரிந்தாலும் உன்னிடம் பற்றற்றே இருக்கிறது ! அந்த உயிர் நீயாக இருக்கிறது !உன்னை இயக்குகிறது ; உன்னால் எவ்வித பாதிப்பும் சலனமுமில்லாமல் நிர்விகற்ப நிலையில் உள்ளது ! அது பிரம்மமாய் உள்ளது ! அகம் பிரமஸ்யாமி !

இந்த புரிதலை தவறாக வியாக்கியானம் செய்வது இன்றைய ஞானமார்க்க யோகா வியாபாரிகளின் வாடிக்கை ஆகிவிட்டது ! அவர்கள் காணாததை கண்டுபிடித்துவிட்டோம் `` நீதான் கடவுள் `` என்கிறார்கள் ! நான் கடவுள் என்றால் மற்றவர்கள் யார் ?


திறமையாக உன்னை நீ உணர்ந்து கொள்ளாமல் இருப்பதால் நீ கடவுளென்று உனக்கு தெரியவில்லை ! உன்னை நீ உணர்ந்து விட்டால் நீ தான் கடவுள் என்று சொன்னவுடன் பல சாதகர்கள் என்னை நான் உணராமலிருக்கிறேன் என்று திருப்தியடைந்து விடுகிறார்கள் !

அல்லது கடவுள் எனக்குள்ளாக இருக்கிறார் ; அவரை வெளியே தேடுவதற்கு நான் முட்டாளாக இல்லை : ஞானம் அடைந்துவிட்டேன் என்கிறார்கள் ! கடவுள் உங்களுக்குள் மட்டும் இருந்தால் மற்றவர்களுக்குள் யார் இருக்கிறார்கள் ? இந்த உலகையே உங்களுக்குள் மட்டும் இருக்கிற கடவுள் இயக்குகிறாரா ? அதாவது இந்த உலகையே நீங்கள் தான் நிர்வகிக்கிறீர்களா ?

நானும் கடவுளாக இருக்கிறேன் என்பதை ஞானமார்க்க வியாபாரிகளிடம் தெரிந்து கொண்ட பலர் அதை சுயபெருமைக்காக -- தன்முணைப்பு அகம்பாவமாக பாவிக்கும் அவல நிலை பெருகி வருகிறது ! நவீன நாத்திகவாதிகள் பலர் ஆன்மீக போர்வையில் கடவுள் மறுப்பை பரப்பி வருகிறார்கள் ! துணைக்கு ரெண்டு சித்தர் பாடல்களை சுட்டிகாட்டி தங்களை ஆன்மீகவாதிகள் ; ஞானமார்க்கிகளாக பகட்டுகின்றனர் !ஞானத்திற்கு அஞ்ஞான விளக்கம் கொடுக்கிறார்கள் ! மாயை மாயை !!

அப்படியானால் அத்வைதத்தின் சரியான அளவுகோல் என்ன ?


எங்கும் நிறைந்த ஏகாந்தர் எனக்குள்ளாகவும் இருக்கிறார் என்பதுவே ! 


எனக்குள்ளாக மட்டுமே இருக்கிறார் என்பதற்கும் எனக்குள்ளாகவும் இருக்கிறார் என்பதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது ! கடவுளின் முற்றுயிர் எனக்குள் சிற்றுயிராக இயங்கிக்கொண்டுள்ளது ! அது கடவுள் ஆனால் அதுவே கடவுளல்ல ! எனக்குள்ளும் எல்லா ஜீவராசிகளுக்குள்ளும் உயிராக இயங்கிக்கொண்டுள்ளது கடவுளின் ஆவியே ! ஆதியில் ஆவி மட்டுமே இருந்தது ! அந்த ஆவியே குளிர்ந்து ஜலமாக மாறியது ! அந்த ஜலமே குளிர்ந்து ஜடப்பொருளாக மாறியது ! பின் ஜீவராசிகள் தோன்றின ! கடவுளின் ஆவியாலேயே சகலமும் உண்டாகி கடவுளுக்குள் நிலைத்துள்ளன ! 

ஏகம் பிரமஸ்யாமி ! சர்வம் பிரமஸ்யாமி !

சற்குரு- யுகபுருஷன் இயேசு சொல்வதை கேளுங்கள் :

யோவான் 4:23 உண்மையாய்த் தொழுதுகொள்ளுகிறவர்கள் பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளுங்காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது; தம்மைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் இப்படிப்பட்டவர்களாயிருக்கும்படி பிதாவானவர் விரும்புகிறார்.

யோவான் 4:24 தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும் என்றார்.


கடவுள் ஆவியாய் இருக்கிறார் ! ஆதியிலே அவர் ஆவியாய் மட்டுமே இருந்தார் ! படைப்பு தொடங்கியபோது ஜலமாகி , ஜடமாகி , புல்லாகி பூண்டாகி இருப்பவையாகவும் இல்லாதவையாகவும் அந்த ஆவியே ஆனது ! 


சர்வம் பிரமஸ்யாமி !

அவரை தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளூவதே சரியானது ! ஒரு மனிதனுக்கு ஆவியாய் உள்ள அவனது உயிரில் அவனது ஆத்துமா ஒன்றவேண்டும் ! உண்மை ; ஞானம் என்பது அவனது ஆத்துமாவின் உள்ளொளியாகும் ! அந்த முழு ஆத்துமாவோடு உனது உயிராகிய ஆவியில் ஒன்றி தியானித்து முற்றுயிராக உள்ள ஏக இறைவனிடம் பிரார்தித்து தொழவேண்டும் !

இங்கு இரண்டு யோகம் சுட்டப்பட்டுள்ளது ! முதலாவது உனது உயிரில் ஒன்றுக ! அடுத்து அந்த நிலையில் முற்றுயிரில் ஒன்றுக ! இந்த இரண்டும் செய்யபட்டாலேயே அது முழுமையான தொழுகை !

இந்திய தத்துவ ஞானத்தில் மூன்று படி தொகுதிகளை  நம் முன்னோர்கள் காட்டியுள்ளனர் !


சரியை - கிரியை - யோகம்
துவைதம் - அத்வைதம் - விசிஷ்டாத்வைதம்
சத் - சித் - ஆனந்தம்  



1) துவைதம் -- முதலில் வெளியே உள்ள கடவுள் நம்மை தண்டித்து விடுவார் என பயம் காட்டி சாதாரண மனைதர்களையும் சரியை வழிபாடு செய்ய வைப்பது ! அதில் வளர்ந்தவர்கள்

2)அத்வைதம் -- உள்ளே உரையும் கடவுளின் ஆவியாகிய உயிரிலே ஒன்றி தியானித்து பழகுவது ! இந்த நிலையில் ஆத்துமா உடலின் ஆதிக்கத்திலிருந்து படிப்படியே விடுபட்டு உயிரின் ஆதிக்கத்தில் அதாவது கடவுளின் ஆதிக்கத்தில் வளரத்தொடங்கும் ! அப்போது ஆத்துமா விளிப்படைந்து உடலின் இச்சைகளை கட்டுப்படுத்தவும் வெல்லவுமான பக்குவம் அல்லது உலகிலேயே இருந்தாலும் அதில் பற்றுகளை அற்ற நிலைக்குள்ளாக வளரும் ! இவ்வாறு செயல்பாடுகளில் நுண்ணறிவு உண்டாவதே கிரியை எனப்படும் ! அதில் வளர்ந்தவர்கள்

3) மனித முயற்சியால் மட்டுமே அல்லது கிரியை ஞானத்தால் மட்டுமே நாம் முழுமை அடையமுடியாது என்பதை உணர்வார்கள் ! ஞானம் வளர்ந்தபிறகு தாழ்மையடைந்து மீண்டும் கடவுளிடம் சரணடைவார்கள் ! தனக்குள் மட்டுமல்ல எங்கும் நிறைந்து ஏகாந்தமாகவும் இருப்பவரும் விரவியிருந்தாலும் தனித்தும் இருப்பவரான ஏக இறைவனை உணர்ந்து அவனிடம் முழுசரணாகதி அடையும் நிலை உருவாகும் ! சிற்றுயிரில் யோகம் சித்தித்து அந்த வெளிச்சத்தில் முற்றுயிரின் தொடர்பு யோகம் சித்திக்கும் ! சிற்சபை ; பொற்சபை ரகசியம் வள்ளலாருக்கு வெளிப்பட்டது போல ! அந்த தொடர்பால் ஆவியோடும் உண்மையோடும் கடவுளை தொழுதுகொள்ளும் நிலை சித்திக்கும் ! அதுவே முழுமையான யோகம் என்பது !

அதையே இறுதி படியாக `` விசிஸ்ட்டாத்வைதம் `` என்றார்கள் !


அத்வைதத்தின் வளர்சியில் அதனுடன் மீண்டும் துவைதத்தை இணைத்துக்கொள்ளுவது !
ஞானம் வளர்ந்ததால் உண்டான முற்றறிவால் முற்றுயிரை சரணடைவது !


சத், சித், ஆனந்தம் என்பதன் விளக்கமும் இதுவே !

சத்      -- உடலின் பின் செல்லுவது -- சரியை !
சித்   --   ஆத்துமா விழிப்படைந்து உயிரின் பின் செல்லுவது -- கிரியை!
ஆனந்தம்-- உயிரில் யோகம் கைகூடி ஏக இறைவனிடம் யோகம் சித்தித்தல் !

கேட்க காதுள்ளவன் கேட்கக்கடவன் !!


நாராயணனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ நாராயணனாய

ஆதிசேஷனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ ஆதிசேஷாய

நாராயணியாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ நாராயணியாய

சிவனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ சிவாய

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி 




Saturday, October 13, 2012

மனமும் உடலும் !!



-- இறைதூதர் ராமரின் உபதேசங்கள் ---
 
காமம் என்பது ஒரு பெரிய மரம் ! ஆசை என்ற கொடி அதைப்போர்த்தி மூடியிருக்கிறது ! அந்த மரத்திற்கு கணக்கிட இயலாத என்னற்ற கிளைகள் இருக்கின்றன ! அந்த கிளைகளின் மீது சுற்றி திரிகிற மனம் , தான் பெற விரும்பும் கனியை ஒரு நாளும் பெற முடியாது !

ஆபத்து ஏற்படும்போதும் ; மோகம் தங்களை ஆட்கொள்ளும் போதும் சோர்வடைந்து போகாத மக்கள் மிகவும் அபூர்வம் ! சுய நல லட்சியம் ஒன்று நிறைவேறியதுமே கர்வம் கொள்ளாதவர்கள் மிகவும் அபூர்வம் ! பெண்களின் கண் வீச்சுக்கு மனம் குழம்பாமல் இருக்கும் ஆண்கள் மிகவும் அபூர்வம் ! இத்தகைய அபூர்வமான மக்களை பொதுவாகப்பார்க்கவே முடியாது !

தான் விரும்பிய பொருள்  கிடைத்து விட்டால் கூட மனம் ஒருபோதும் திருப்தியடைவதில்லை ! ஒட்டைப்பானையில் எவ்வளவுதான் தண்ணீரை ஊற்றினாலும் அது நிறைவதில்லை அல்லவா ? அதுபோல லவ்கீக இன்பங்களை அடைவதில் பெரிதும் ஆவல் கொண்டுள்ள மனம் எப்போதுமே காலிப்பானைதான் ! அதற்கு எந்த இடத்திலும் அமைதி கிடைக்காது ! கூட்டத்திலிருந்து பிரிந்து வழி காணாமல் தவிக்கும் மானைப்போல !

அலைகளைப்போல எப்போதும் கொந்தளிப்புடன் இருப்பதுதான் மனதின் இயல்பு ! சஞ்சலத்திளிருந்து அதற்கு அவ்வளவு சுலபத்தில் விடுதலை கிடைப்பதில்லை ! ஒரு விநாடி கூட அது அமைதியாக இருப்பதில்லை ! புலனின்பங்களை பின்பற்றி பல திசைகளிலும் கலக்கத்துடன் ஓடியபடியே இருக்கிறது !

இந்த மனம் என்னும் பேய்க்கு உன்மையில் இருப்பு என்பது அறவே கிடையாது ! வீணான கற்பனையின் மூலமாக அது ஒரு வடிவத்தை ஏற்கிறது ! அந்த பேயை அடக்கி ஆள்வது மிகவும் கடினம் ! அது நம்மை நெருப்பை விட மிகவும் அதிகமாக எரித்து விடக்கூடியது ! வஜ்ரத்தை விட கடினமானது ! புலன் விசயங்களை நோக்கி பாய்ந்த படியே இருக்கிறது ! மாமிசத்தை பார்க்கும் காகம் அதை உண்பதற்கு பாய்ந்தோடுவது போல மனமும் புலனின்பத்தை நாடி பாய்கிறது !என்றாலும் மறுகணமே தான் நாடிய பொருளை விட்டு விலகியும் சென்றுவிடுகிறது !குழந்தைக்கு இருப்பதைப்போன்ற சலன புத்தி மனதின் இயல்பாக இருக்கிறது ! எந்த ஒன்றிலும் நிலையாக அது இருப்பதே இல்லை ! நீர்ச்சுழல் இருக்கும் கடலைப்போலவே , மனமும் மனிதனை எங்கோ கொண்டுபோய் தள்ளி விடக்கூடியது ! கடலைக்கூட வற்ற அடித்து விடலாம் ; மலையைக்கூட பெயர்த்து விடலாம் ; நெருப்பை கூட சாப்பிட்டு விடலாம் ; ஆனால் மனதை அடக்குவது கடைனமான காரியமாகும் !

மரத்திலுள்ள இலை விரைவில் பழுத்து தரையில் உதிர்ந்து விடுகிறது ! அதைப்போன்றதே இந்த உடலின் நிலை ! பொய் ஞானத்தில் உதிப்பது இந்த உடல் ! ஆகவே கனவு நிலையைப்போல உடலும் மோக மயக்கங்களால் நிறைந்து இருக்கிறது ! உடலின் நிலையாமை வெட்ட வெளிச்சமான விசயம் !

உடலுக்கு நேரும் வயோதிகம் என்ற நிலையை வென்றவன் யாரும் இல்லை ! மனிதனுடைய ஆசை எதுவும் நிறைவேறாத படி வயோதிகம் அடக்கி விடுகிறது !  மாலை நேரத்தை தொடர்ந்து இருள் சூழ்வதைப்போல ; வயோதிகத்தை தொடர்ந்து மரணம் வருகிறது !

உடலில் உள்ளும் புறம்பும் இருக்கும் எல்லப்பொருள்களையும் ஆராய்ந்து பார்த்து ; இந்த உடலில் நல்லது என்ற ஒன்று ஏதாவது இருக்கிறதா என்பதை சொல்லுங்கள் ? மனிதன் இறந்தபிறகு கூடவே செல்லாத இந்த உடலின் மீது நம்பிக்கை வைக்கலாமா ?

குழந்தைப்பருவத்திலே வேடிக்கையிலும் களியாட்டத்திலும் காலம் கடந்து போய் விடுகிறது . அந்த சமயத்தில் மனம் சிறிது கூட அமைதியின்றி அலைகிறது ! வாலிபப்பருவத்திலோ மக்கள் புலனின்பங்களை நாடித்திரிகிறார்கள் . ஆகவே அப்போதும் சாந்தி பெறுவதற்கு வழியில்லை ! மூப்பு வந்ததுமே உடல் நோய் வயப்பட்டு தளர ஆரம்பித்து விடுகிறது ! இந்த வயோதிக நிலையில் மனிதன் துன்பங்களையும் துயரங்களையும் மட்டுமே அனுபவிக்கிறான் !

பனி விழுந்து வாடிப்போன தமரையை விட்டு ஓடிப்போவதுதான் தேனீயின் இயல்பு . அதுபோல கொடிய நோயும் மூப்பும் இந்த உடலை வந்து தாக்கும் போது உயிராகிய தேனீ உடலை விட்டு பறந்து போய் விடுகிறது ! உலகமாகிய ஏரியும் முற்றிலும் வரண்டு போய் விடுகிறது !

இந்த உடல் மோகத்தில் அழுந்தியிருக்கும் ஆத்துமாவின் இருப்பிடமாக உள்ளது ! எது நிலையானது எது நிலையற்றது என பாகுபடுத்தி பார்க்கத்தெறியாமல் ஆத்துமா திண்டாடுகிறது ! மிகவும் சின்னஞ்சிரிய தூண்டுதல் கிடைத்தால் போதும் அது மகிழ்ச்சியில் பூரிக்கிறது அல்லது கண்ணீர் மல்க துன்பப்படுகிறது ! இந்த உடலைப்போல அருவருப்புக்கு இடமான , பரிதாபத்திற்கு உரிய , நல்ல அம்சம் எதுவுமே இல்லாத வெறொரு பொருளைப்பார்க்கவே இயலாது ! அப்படிப்பட்ட உடல் அதனை நம்பும் மனிதனை அறியாமையாகிய குழியில் தள்ளுகிறது !

உடலின் இயல்பு நிலையாமையே ஆகும் ! என்றாலும் அதற்குள்ள ஒரே ஒரு தகுதி ஆத்துமா மோட்சம் பெறுவதற்கு அந்த உடல் வேண்டும் ! ஆகவே மற்ற சாதாரண பொருளைப்போன்று அதனை தள்ளிவிடவும் கூடாது ; முற்றிலும் சிறந்த பொருள் என்று அதனை கொள்ளவும் கூடாது ! அதிலிருந்து கொண்டுதான்  ஆத்துமா மோட்சம் பெற முயற்சிப்பதற்கு முடியும் என்கிற அளவிலே மட்டுமே அதனை பேண வேண்டும் !

எனக்கும் உடலுக்கும் சம்பந்தம் கிடையாது ; உடலும் நானும் ஒன்று அல்ல ; நான் ஆத்துமா ; நான் மோட்சம் பெற இது போல பல உடல்களை கடந்து கொண்டிருக்கிறேன்  என்கிற உள்ளுணர்வை பெறும் மனிதன் உண்மையிலேயே சிறந்தவன் ஆவான் !!    


Tuesday, October 2, 2012

காந்தி ஜெயந்தி வாழ்த்துகள் !!






காந்தி இந்திய விடுதலை என்ற ஒன்றை மட்டும் முன்னெடுத்தவரல்ல ! ஆன்மீக வாழ்வே அவரது பிரதான பணியாகவும் முன்னுதாரனமாகவும் இருந்தது ! சகல மதங்களின் நல்ல விசயங்களை உள்வாங்கி ``அஹிம்சை `` என்ற உன்னதமான சாத்வீக வாழ்வு நெறி அவரது ஆசிரமத்தில் பயிற்சி செய்யப்பட்டது ! இந்தியா நெடுகிலும் பல மனிதர்கள் உன்னத ஆத்துமாக்களாக பரிணமித்தனர் !


ஆன்மீக மனிதர்கள் அவரது பெயரை உச்சரித்தது போலவே அரசியல்வாதிகளும் அவர் பெயரை உச்சரித்து அவரை தங்களின் பிழைப்புக்கு அடையாளப்படுத்தி அவரை கேலிக்குறிய பொருளாக்கி விட்டனர் !

இந்தியா விடுதலை அடைந்ததும் பதவியிலிருந்தும் ஆட்சியிலிருந்தும் விலக்கிக்கொண்ட மஹாத்துமா `` பதவியிலும் ஒரு நபர் குறிப்பிட்ட தடவைகள் மேல் இருக்க கூடாது என்ற அமெரிக்கா ( இரண்டு தடவைக்கு மேல் ஜனாதிபதி பதவி வகிக்க முடியாது ; அரசியல் வாழ்விலிருந்து ஒதுங்கி பொதுத்தொண்டு அல்லது சொந்த வாழ்வு மட்டுமே செய்ய முடியும் ) முன்மாதிரியையும் ஏற்படுத்தியிருந்தாரானால் பரம்பரை அரசியல் ; அரசியலை மட்டும் முழு நேர தொழிலாக கொண்டு பிழைக்கும் ஒரு புதிய அரசர்களை உண்டாகாமல் தடுத்திருந்திருக்கலாம் ! ஆனால் அந்தோ கொள்கைகளே அவசியமில்லை ``கிளை , வட்டம் , மாவட்டம் `` என பதவிகளை பெற்றுக்கொண்டு அங்கும் இங்கும் காசு வாங்கி மேலும் கீழும் கொஞ்சம் கொடுத்து விட்டு மிச்சம் பார்க்கும் ஒரு பிழைப்பு நெறி ஜனநாயகம் என்பதை பணநாயகமாக மற்றி வைத்திருக்கிறது ! ஓட்டு என்ற ஒன்றிக்கு வரும்போது தவிற இந்த அரசர்களிடம் எதற்கு சென்றாலும் பணம் செலவழித்தாக வேண்டும் என்பதால் அந்த ஓட்டிற்கும் பணத்தை பெற்றுக்கொண்டு போடுகிற நிலை பொதுமக்களை ஆட்கொண்டு விட்டது ! அல்லது அக்கறைக்கு இக்கறை பச்சை என்று மாறிமாறி சிலரை --சில குடும்பங்களை ஆட்சியில் உட்கார வைக்கும் நிலை வந்து விட்டது !

இந்த பணநாயக நெறிமுறை வரப்போகிறது ; கொள்கை கோட்பாடுகள் அவசியமற்ற ஒரு அரசியல் வாழ்வு வரப்போகிறது என்பதை காந்தியோ அவரின்  சீடர்களோ அறிந்திருக்க வாய்ப்பு இல்லை ! கலியுகத்தின் வளர்சி இது !

சகல மதத்தினரையும் அரவணைத்து ஏக இறைவனை நோக்கிய பிரார்த்தனை வாழ்வு நெறி அவரால் இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதிலும் அவருக்கு அங்கீகாரம் உண்டாகியிருந்தது ! அரசியல் பொருளாதார சமூகவியலில் மேலை நாட்டிணர் மட்டுமே ஆளுமை செலுத்தக்கூடிய சூழ்னிலை இருக்கும் நிலையில் உலகம் தழுவிய ஆன்மீக பேரலையை இந்தியாவை மையமாக கொண்டு மஹாத்துமா காந்தியால் ஏற்படுத்தியிருக்க முடியும் ! அதற்காகவே அவர் அரசியலிலிருந்து ஒதுங்கி ஆன்மீகப்பணியை முன்னெடுக்க திட்டமிட்டிருந்தார் ! இந்தியாவின் துரதிருஸ்ட்டம் அவர் கொல்லப்பட்டார் ! இருப்பினும் காந்தியும் அவரின் சீடர்களும் செய்த தியாகங்கள் ஜீவன் இன்னும் இந்தியாவின் ஆழ்மனதில் பொதிந்து அமிழ்ந்து சாம்பல் மூடிக்கிடக்கிறது !

கல்கி வருமுன்னர் உலகை மூழ்கடிக்கும் ஆன்மீகப்பேரலை இந்தியாவிலிருந்தே புறப்பட்டாக வேண்டும் என்பது விவேகானந்தரின் தீர்க்க தரிசணமாகும் ! ஈசா நபி மீண்டும் உலகிற்கு வாணத்திலிருந்து இறங்கி வரும் போது உலகில் ``இமாம் ` --வழிகாட்டி ஒருவர் மூலம் உலகம் முழுமையும் சமாதானம் உண்டாகியிருக்கும் என்பது முஹமது நபி அவர்களின் தீர்க்கதரிசணமாகும் ! அந்த நபர் இந்தியாவிலிருந்தே வெளிப்படுபடியாக பிரார்த்திப்பது காந்திக்கு நாம்  செலுத்தும் நன்றியாகும் !

அனைத்து மத வெளிப்படுகள் மற்றும் பூர்வ புண்ணியங்களின் அடிப்படையில் உலகின் மூத்த குடியாகிய தமிழ் சமூதாயத்திலிருந்தே அந்த இறைதூதர் வருவார் என்பது உண்மை ! ஆனால் நம்பிக்கையோடு அந்த நபரை அனுப்பும் படி கடவுளிடம் பிரார்திக்கிற ஆத்துமாக்களே இப்போது அவசியமானவர்கள் ! 


Friday, September 28, 2012

இல்லறம் !!


---குரு ராமகிருஸ்ண பரமஹம்சரின் உபதேசங்கள் ---



கடமைகளையெல்லாம் விடாமல் செய்து வா ; ஆனால் உள்ளத்தை மட்டும் இறைவனிடம் இருத்து ! மனைவி , மக்கள் , தந்தை , தாய் அனைவருடனும் சேர்ந்து வாழ் ! அவர்களுக்கு தொண்டுகள் செய் ! அவர்களிடம் மிகவும் அன்புடன் பழகு ! ஆனால் அவர்கள் உண்மையில் உணக்கு சொந்தமானவர்களல்ல என்பதை மறக்காதே !


பணக்காரர்களின் வீட்டு வேலைகாரி அந்த வீட்டின் வேலைகளையெல்லாம் செய்கிறாள் ; ஆனால் அவளூடைய சிந்தனையெல்லாம் தன் சொந்த வீட்டின் மீதே உள்ளது ! எஜமானரின் குழந்தைகளை தன் குழந்தைகள் போலவே வளர்க்கிறாள் ; அவர்களை கண்ணே பொன்னே என்றெல்லாம் கொஞ்சுகிறாள் ! ஆனால் அந்த குழந்தைகள் தனக்கு சொந்தமே அல்ல என்பதை அவளுடைய உள்ளம் நன்றாக அறியும் !

ஆமை நீரில் அங்குமிங்கும் போய்க்கொண்டிருக்கிறது ; ஆனால் அதன் எண்ணமெல்லாம் நதிக்கரையில் அதன் முட்டைகள் கிடக்கிற இடத்தில் இருக்கும் ! அதுபோல உனது கடமைகள் அனைத்தையும் செய் : ஆனால் மனதை மட்டும் இறைவனிடம் வை !

முட்செடிகளை தின்பதில் ஒட்டகத்திற்கு அலாதி ஆனந்தம் ! முள் குத்தி வாயிலிருந்து ரத்தம் வழிந்தாலும் அது மேலும் மேலும் முட்செடிகளை தின்னவே முயலுகிறது ! அதுபோல உலகியல் மனிதன் எவ்வளவோ துயரையும் வேதனையையும் அனுபவிக்கிறான் ! ஆனால் ஒரு சில நாட்களில் அதையெல்லாம் மறந்து விட்டு ; மீண்டும் பழைய போக்கிலேயே வழ்வதற்கு தலைப்படுகிறான் !

உன்னுடைய சொந்த மதத்தில் நிலைத்து நில் ; ஆனால் மதவெறி , சகிப்பற்ற தன்மை , பிறமத வெறுப்பு போன்றவற்றை முற்றிலும் தவிர்த்து விடு !

கண்ணாமூச்சி விளையாட்டில் நீ ஒருதடவை தாய்ச்சியை தொட்டு விட்டால் அதன் பிறகு உனக்கு ஆபத்து இல்லை ! அதுபோல இறைவனுடன் தொடர்பை -- உறவாட்டத்தை ஏற்படுத்திக்கொண்டோமானால் அதன் பின்னர் இல்லறத்தில் -- உலகில் பயமின்றி வாழலாம் !

மனம் பால் போன்றது ! அதனை தண்ணீராகிய உலகத்தில் சேர்த்தாயானால் இரண்டும் கலந்து போகும் ! முதலில் பாலை அமைதியான ஒரு இடத்தில் வைத்து அதை தயிராக உறைய விடவேண்டும் ! பிறகு அதிலிருந்து வெண்ணெயை கடைந்து எடுக்க வேண்டும் ! வெண்ணெயை நீரீல் வைத்தால் அது கலப்பதில்லை ; மிதக்கிறது ! அதுபோல் தனிமையில் சாதனைகள் செய்து மனம் என்னும் பாலிலிருந்து ஞானம் , பக்தி ஆகிய வெண்ணெயை கடைந்தெடு ! உலகமாகிய நீரில் அவற்றை தாராளமாக மிதக்க வைக்கலாம் !அவை உலகுடன் கலக்காது !

சிலர் ஞானத்தைப்பற்றி கேட்டுள்ளனர் ! ஒரு சிலரே அதை சுவைத்துள்ளனர் ! வெகு சிலரே அதை உணர்ந்து அனுபவிக்கின்றனர் ! இறைவனுடன் தொடர்பு உண்டான பிறகே மன அமைதி கிடைக்கும் ! அவருடைய வார்த்தை கிடைத்தாலோ ஆனந்த அனுபவம் உண்டாகும் ! ஆன்ம பலமும் இறைவனால் பயன்படுத்தப்படுகிற அனுபவமும் உண்டாகும் !

ஒரு கையால் கடமையை செய் ! மறு கையால் கடவுளை பற்றிக்கொள் !

கடவுள் உன்னை உலகில் வைத்துள்ளார் ! நீ என்ன செய்ய முடியும் ? எல்லாவற்றையும் அவருக்கே அர்ப்பணித்து விடு ! அவருடைய திருவடிகளில் பணிந்து கிட ; அப்போது எந்த குழப்பமும் உன்னை மேற்கொண்டுவிடாது ! கடவுளே எல்லாவற்றையும் செய்கிறார் -- பார்த்துக்கொள்ளுகிறார் என்பதை உணர்ந்து கொள்வாய் ! கடவுளே எனக்கு எல்லாமும் என்பது உள்ளனுபவமாகி ஞானமும் பக்தியும் அருள வேண்டும் என கண்ணீர் மல்க பிரார்திக்கிற நிலை உருவாக வேண்டும் !

இல்லறத்தார்கள் இடையிடையே சத்சங்கத்தை நாடி செல்லுவது மிகவும் அவசியம் ! பிறவிப்பெருங்கடலில் அல்லாடுகிற இல்லறத்தாரின் துன்பத்தை சாதுக்களின் -- மகான்களின் செர்க்கை பெருமளவில் தணிக்கும் ! சாதுக்களை -- மகான்களை தரிசிக்க ஒருபோதும் வெறும் கையுடன் போகக்கூடாது ! ஒரு சிறு பழமே ஆனாலும் சரி ; பெரியவர்களை காண செல்லும் போது ஏதோ ஒன்றை எடுத்துக்கொண்டே போக வேண்டும் !

உயிர்களிடம் அன்பு , மெய் அடியார்களுக்கு சேவை , இறைவனை துதித்தல் - இவை இல்லறத்தாரின் கடமைகள் !

பணம் நமக்கு தருவதெல்லாம் சோறும் கறியும் மட்டுமே ! பணத்தையே எல்லாமுமாக கருதாதே !

இடையறாத சாதனைதான் வெற்றிக்கு வழி ! பெண்கள் அவல் இடிப்பதை பார்த்திருக்கிறேன் ; குழந்தைகளுக்கு பால் கொடுப்பார்கள் , அவல் வாங்க வருவோருடனும் விலையும் பேசுவார்கள் , அதே நேரத்தில் உலக்கை விழுந்து கைகால்கள் நசுங்காமலும் அவலை இடித்துக்கொண்டே இருப்பார்கள் !

கடவுளை அடைவதற்கு சில அனுகூலங்கள் வேண்டும் ! அவை நல்லோர் தொடர்பு , விவேகம் , உத்தம குருவின் ஆசிகள் என்பன ஆகும் !

உலகில் தந்தையும் தாயும் பரமகுரு !அவர்கள் உயிரோடு இருக்கு மட்டும் முடிந்த அளவு அவர்களுக்கு சேவை செய்ய வேண்டும் ! பராமரிக்க போதிய பண வசதி அற்றவர்கள் கூட தனிமையில் அவர்களை எண்ணி அழவேண்டும் ; அப்போதுதான் நாம் அவர்களுக்கு பட்டுள்ள கடனை பூர்த்தி செய்ய முடியும் !!
விவேகத்துடன் செயல்பட வேண்டும் !அவ்வப்போது உலகின் அமளி துமளிகளிலிருந்து விலகி தனிமையில் சாதனைகள் புரிந்து இறைவனை அடைய முயலவேண்டும் ! அப்போதுதான் லட்சிய இல்லறத்தார்களாக பரிணமிக்க முடியும் !


Sunday, September 2, 2012

மீராவின் உன்னதமான பக்தி !

 


 உன்னையே எனதுயிர்த்துனை என்று
உவந்ததும் என் தவறோ அய்யா !

கணவிலும் உன்னையன்றி நினைவுண்டோ
கதி உன் கழலின் நிழலேயன்றோ

வானகம் வையகம் தரும் இன்பங்களை
கருதியதும் உண்டோ ?
இரங்குவது அறிகில்லையா
மறந்திட லாகாதையா !

இரவெல்லாம் கண்ணில் நீரருவி பெருகும்
அனலில் மெழுகென அகமும் உருகும்
ஹரி ஹரி என நாவும் கதரும்
இதயமும் பதரும் அய்யா !

பாத மலரில் பணிந்திடும் வண்டாய்
நாதனே உன் இசை பாடுவேன் கண்டாய் !
அடியாள் மீரா அன்றும் என்றும் உன்
அடைக்கலம் அய்யா !

Friday, August 31, 2012

ஞான நெறி !

---குரு ராமகிருஸ்ண பரமஹம்சரின் உபதேசங்கள் ----

ஞானி எப்போதும் உண்மைப்பொருளைப்பற்றி ஆராய்ச்சி செய்கிறான் ! நேதி , நேதி --இதுவும் அல்ல ; இதுவும் அல்ல ; பிரம்மம் இதுவும் அல்ல அதுவும் அல்ல ; ஜீவன்களும் அல்ல ; உலகமும் அல்ல என்றெல்லாம் விவேகத்துடன் சிந்தனையில் ஈடுபடுகிறான் ! இந்த ஆராய்ச்சியின் மூலம் அவனது மனம் உறுதி பெறுகிறது ! இறுதியில் மனமே இல்லாமல் போகிறது ; அப்போதே சமாதிநிலை அவனுக்கு வாய்க்கிறது !

ஆராய்ச்சியின் முடிவில் நான் என்ற எதுவும் அற்ற நிலையை அடைகிறான் ! வெங்காயத்தை எடுத்துக்கொள்ளுங்கள் . சிவப்பு தோல்களை உரித்தெடுங்கள் , வெண்ணிறத்தோல்கள் வரும் . அவற்றையும் களையுங்கள் ; உள்ளே எதுவும் இருக்காது அதுபோல் நான் யார் என்ற ஆராய்ச்சியின் முடிவில் எதுவுமே எஞ்சுவதில்லை !

கடவுள் நமக்கு வெளியில் மட்டுமே இருக்கிறார் ; வெகு தொலைவில் இருக்கிறார் என்ற எண்ணம் இருக்கும்வரை நீ அறியாமையில் இருக்கிறய் ! நம்முள்ளும் அவரை உணரும் போதுதான் உண்மை ஞானம் தோன்றுகிறது ! சொந்த ஆன்மாவாகிய கோயிலில் (ஜீவாத்துமாவில் ) இறைவனின் உறைவிடத்தை காண்பவன் பிரபஞ்சமாகிய கோயிலிலும் அவரை காண்கிறன் ! கடவுள் அதோ அங்கே இருக்கிறார் என்ற உணர்வு மட்டும் இருக்கும் வரை ஒருவன் அறியாமையில் தான் மூழ்கி இருக்கிறான் ; இதோ இங்கேயும் இருக்கிறார் என்ற உணர்வு ஏற்படும்போதுதான் அவன் ஞானம் பெற்றவன் ஆகிறான் !

ஞானம் ஏகத்தை , ஒருமையை நோக்கி அழைத்து செல்லுகிறது . அறியாமை பன்மைக்கு வழி வகுக்கிறது !

ஸோகம் ( நானே அவன் ) என்கிறான் ஞான யோகி ! ஆனால் தான் உடல் எனக்கருதிக்கொள்ளும் ஒருவன் இத்தகைய மனப்போக்கை கைகொள்வது தீங்கு விளைவிக்கும் ! அவன் தன்னையும் ஏமாற்றிக்கொள்கிறான் ; பிறரையும் ஏமாற்றுகிறான் ! மாறாக ஆத்துமா நான் எனக்கருதிக்கொள்பவனே இத்தகைய மனப்போக்கை கைக்கொள்வது அனுபூதியை தரும் !

கீழ் நிலை பக்தன் ``கடவுள் அதோ அங்கே வானில் உள்ளார் `` என்கிறான் ! நடுனிலை பக்தன் `` கடவுள் எல்லா உயிர்களிலும் உயிராகவும் உணர்வாகவும் உள்ளார் `` என்கிறான் !

தோட்டி முதல் தொண்டைமான் வரை அனைத்து நிலையிலுள்ள அனுபவங்களையும் பெற்று ; அவற்றில் ஒன்றும் இல்லை என்ற உறுதி தோன்றும் போதுதான் சகலத்தையும் கடறும் போதுதான் ஒருவன் பரமஹம்ச நிலையை அடைய முடியும் ! அப்போதுதான் அவன் உண்மையான ஞானி ஆகிறான் !

Saturday, August 25, 2012

ரமலான் என்பது பிரியாணி சாப்பாடு மட்டுமல்ல !



ரமலான் --ஈகைத்திருநாள் வாழ்த்துகள் !! 

ரமலான் என்பது பிரியாணி சாப்பாடு மட்டுமல்ல ! 

எல்லா மனிதர்களும் தங்களது வருமாணத்தில் 2 சதவீதம் தங்களை விட ஏழைகளுக்கு செலவழிக்க வேண்டும் என்பது கடவுள் குரான் மூலம் வெளிப்படுத்தியது ! அதை எல்லா நாளும் செயல்படுத்த முடியாதவர்கள் இந்த நாளிலாவது கொஞ்சமாவது கடைபிடிக்க இந்த சம்பிரதாயம் உருவாக்கபட்டது ! இதனை மாற்று மத சகோதரர்களுடன் ஒரு நல்லிணக்கமாகவும் நிறைய பேர் கடைபிடிக்கிறார்கள் ! 

தாவூது என்ற இறைதூதர் மூலமாக ஒரு வார்த்தை வெளிப்படுத்தப்பட்டது ! 

`` சிறுமைப்பட்டவன் மேல் சிந்தையுள்ளவன் பாக்கியவான் `` 

இவ்வார்த்தை எல்லா மதத்தினரும் கடைபிடிக்க வேண்டிய ஒன்று !
இன்றைய பரபரப்பான உலகில் சிறுமைப்பட்டவர்களுக்கு நின்று நேரத்தை ஒதுக்கி செலவு பண்ண வாய்ப்பும் வசதியும் இல்லாமல் போகலாம் ! வாழ்வு அந்தளவு நெருக்கடி மிக்கதாகவே ஒவ்வொருவருக்கும் இருக்கிறது ! ஆனால் போகிற போக்கில் எளிதாக செய்யக்கூடிய விசயம் ! அவர்கள் மீது மனதில் இரக்கம் கொள்ளுவதும் கடவுளே உதவிசெய்யுங்கள் எனவேண்டிக்கொள்ளுவதும் ! சிறுமைப்பட்டவர்கள் மீது சிந்தை கொள்ளுவதும் அவருக்காக கடவுளை நினைப்பதுமான ஒருஒரு நிமிட வேலை !
 அது முதலாவது நம்மை அடிக்கடி கடவுளோடு உறவாடுகிற சகஜ பிரார்த்தனை அல்லது சகஜ யோகா என்ற நிலைக்குள் அழைத்து செல்லுகிறது ! அடுத்து நமது வேண்டுதலால் அந்த ஆத்துமாவுக்கு முடிந்தளவு செயல்பூர்வமான உதவி யார் மூலமாகவேனும் கடவுளால் உண்டாகிறது ! அந்த உதவி அந்த ஆத்துமாவின் தகுதியையும் பொறுத்தது . ஆகவே உதவி அவர்களுக்கு கிடைக்கிறதோ இல்லையோ நாம் கடவுளின் அருளாகிய குளத்தில் மூழ்கி மூழ்கி எழுவதால் அவரின் பரிபூரணத்தை நம்மில் நிறப்புகிரது ; அத்தோடு நமக்கு உதவி தேவைப்படும் சமயம் கடவுளே என நாம் அழைத்து கொண்டிருக்கும் போதே எங்கிருந்தேனும் யார் மூலமாகவேனும் உதவியும் ஆலோசனையும் வந்து நிற்கிறது ! 

இதை கடைபிடிக்க நான் முயற்சி செய்துகொண்டிருப்பதால் நடைமுறை பூர்வமான அனுபவங்களையும் கடவுளின் பேரன்பையும் சிலாகித்து சிலாகித்து பலமுறை உணர்ந்திருக்கிறேன் ! 

``வாடிய பயிறை கண்டபோதெல்லாம் வாடினேன் `` என்ற வள்ளல் பெருமானின் போதனை --அனுபூதி அதுவே !!

Monday, August 20, 2012

சாலை ஆண்டவரிடம் பெரியார் இணக்கமாக நடந்து கொண்டாரா ?



சாலை ஆண்டவர் தன்னை ஒருபோதும் கடவுள் என சொல்லிகொள்ளவில்லை .மெய்வழி சாமியார் என்று தம்மை குரு என்று சொல்லி கடவுளை அறிய மார்க்கம் காட்டினார் . அதனாலேயே அவரை பெரியார் சாடவில்லை ! வழக்கம் போல மனிதர்கள் சாலைஆண்டவர் என அடை கொடுத்து அவரை கடவுளாக்கி விட்டனர் ?


குரு என்ற வாசகம் வெள்ளைக்காரர்களூக்கு தெறியாது ! அதனால் அதிகாரிகள் மேலானவர்களை அழைக்கும் பட்டமாகிய லார்ட் என்ற வாசகமே அங்கு பயன்படுத்தபடுகிறது ! பைபிளில் காட் என்ற வாசகம் கடவுளுக்கும் லார்ட் என்ற வாசகம் இயேசுவுக்கும் பயன்படுத்த படுகிறது ! பைபிளின் தொடர்பில் வந்த முஸ்லீம்கலும் அதே லார்ட் ஐ தமிழில் ஆண்டவர் அல்லது கர்த்தர் என்ற மொழிபெயர்ப்பில் பயன்படுத்துகின்றனர் ! அதிகாரிகளையும் லார்ட் ஆண்டவனே என்றுதான் ஆங்கிலத்தில் அழைக்கவேண்டுவது அவர்கள் மரபு !

அது போலத்தான் முஸ்லீம்மத தொடர்பில் கடவுளை அறியும் மார்க்கத்தை காட்டியவரே சாலை ஆண்டவர் என அழைக்கபடுபவர் ! ஆனாலும் அவர்கள் சித்தர்களின் வாக்கியங்களையும் உபதேசங்களையும் பயன்படுத்துவர் ! அதுபோல முஸ்லீமாக பிறந்து சித்தர் நெறி மற்றும் முஸ்லீம் வேதத்தையும் கடைபிடிக்கும் ``பாவா`` ஒருவர் தேனி மாவட்டம் லோயர்கேம்ப்பில் தற்ப்போது ஆசிரமம் ஒன்று அமைத்துள்ளார் !அவருக்கும் இந்து சீடர் கூட்டம் வருகிறது ! அவரும் சித்தர்களின் பாடல்களுக்கு விளக்கம் சக்கை போடுபோடுவார் ! ஆனால் கடவுள் என்ற ஒரேஒரு அரூப கடவுளை மட்டுமே உபதேசிப்பார் ! இப்படிப்பட்டவர்களை பெரியார் இன்றைக்கு இருந்தாலும் சாடமாட்டார் ! ஏனென்றால் கடவுளின் பெயரால் பல கட்டுகதைகளையும் புனைசுருட்டுகளையும் கட்டவிழ்த்து ஏமாற்றுபவர்களை சாட கடவுளால் பயன்படுத்த பட்ட கருவி அவர் !

பெரியார் கண்ணை மூடிக்கொண்டு கடவுள் இல்லை என சொன்னவர் என்பதாக பிரபல பட்டுவிட்டது ! ஆனால் சுய மரியாதை எனபது `` நாத்தீகமல்ல ! தான் கொண்ட கொள்கையில் பித்தலாட்டம் இல்லாமல் மன சாட்சிக்கு நேர்மையாக இருப்பது என விவேகானந்தரின் சீடர்களிடம் ஐஸ்ஹவுசில்
ஒருமுறை உரையாற்றி இருக்கிறார் ! அவர் ராமகிருஸ்ண மடங்களுடன் உறவாகவே இருந்தார் ; ஏக இறைகொள்கை உள்ளவர்களுடன் இணக்கமாகவே இருந்தார் ! அவர் மெய்வழிசாமியாருடன் இணக்கமாக இருந்திருக்க வாய்ப்பு உள்ளது ! வள்ளலார் மீது பெரு மதிப்பு கொண்டவராய் வடலூர் ஆலயம் சென்று பார்த்தும் புலால் உண்பவர்கள் உள்ளே நுழையக்கூடாது என்ற வாசகத்தை மதித்து உள்ளே நுழையாமல் திரும்பி வந்தவர் அவர் ! பெரியாரை பற்றி முழு உண்மை வெளிப்படுத்தப்படாமல் அவரது ஒரு கோணம் மட்டுமே வெளியாக்க பட்டுள்ளது

இது நுட்பமாக புரிந்துகொள்ள வேண்டிய ஒன்று :
அன்றைய காலகட்டத்தில் பெரும்பான்மையான மக்கள் கடவுள் என்பதை ``பல கடவுள் `` கொள்கை என்பதாகத்தான் புரிந்து வைத்திருந்தனர் ! அத்தோடு உருவ வழிபாடும் அதற்கு குருமார்களாக பிறப்பால் அந்தணர்கள் என்று ஸ்தாபித்து கொண்டு தங்களை உயர்ந்தவர்களாக சித்தரித்து கொண்டிருந்த ஒரு குறிப்பிட்ட ஜாதியினரிடம் அந்த கடவுள் கொள்கை மாட்டிக்கொண்டிருந்தது ! கடவுள் என்ற வார்த்தையின் பின்னால் அந்த ஜாதியினர் தங்களை ஸ்தாபித்து கொண்டிருந்த நிலை !

``சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்க மாட்டான் `` என்ற பழமொழி ஆழ்ந்த அனுபவத்தில் வந்தது ! பூசாரி வரம் கொடுக்காவிட்டால் சாமியால் வரம் கொடுக்க நினைத்தாலும் ஒன்றும் கொடுக்க இயலாது என்னும் அளவு உருவ வழிபாடும் ; கோவில்களும் ; அரசு பணிகளும் ; கல்வி கூடங்களும் சமூக நிர்வாகமும் பூசாரிகளானவர்களின் பிடியில் இருந்தது ! அதை உடைத்தாக வேண்டும் என்ற மகத்தான சமுதாய பணி ; பெரியாரின் தோள் மீது வந்த போது கடவுள் இருக்கிறாரா இல்லையா என்கிற முற்றுண்மையை முக்கியப்படுத்தாமல் ; பிராமர்கள் தங்களுக்கு கவசமாக்கி வெளியே காட்டிகொண்டிருந்த கடவுள் சித்தாந்தத்தை அவர் உடைத்தார் ! ``கடவுளை மற மனிதனை நினை`` என்ற தாரக மந்திரம் நாத்திக கொள்கைக்காக வந்ததல்ல ; பூசாரிகளின் ஆதிக்கத்தை உடைத்து சமூக சமத்துவத்தை உண்டாக்கும் சமூக சிந்தனையால் வந்தது !

வெளி நாடுகளில் நாத்தீக கொள்கைக்காக நாத்தீகம் பேசுகிறவர்கள் சாதிக்காத விசயத்தை பெரியார் சாதித்த ரகசியம் அவர் நாத்தீக கொள்கைக்காக நாத்தீகம் பேசாமல் சமூக சீர்திருத்தம் செய்ய கடவுள் மறுப்பு என்ற நிலைபாட்டை சூழ்னிலைக்காக கையில் எடுத்தார் என்பதே !அவர் உள்ளார்ந்து கடவுள் மறுப்பாளரா என்பது அவருக்கும் கடவுளுக்கும் மட்டுமே உள்ள விசயம் ! பிராமனர்களின் ஆதிக்கத்தில் இருந்த பல கடவுள் உருவ வழிபாட்டு கொள்கைகளை அவர் கடுமையாக சாடினாரே தவிற இந்து மதத்தின் பிரிவாகிய ஏக கடவுள் மார்க்கங்களாகிய ராமகிருஸ்ண மடங்கள் ; ஞான மார்க்க தபோவனங்கள் ; வள்ளலார் ஏனைய சித்தர்கள் தொடர்பானவர்களின் விசயத்தில் அவர் மூக்கை நுழைத்ததே இல்லை !


ஏன் ஒருமுறை வேதாத்திரி மஹரிஸி அவ்வளவு பிரபலம் அடையாத போதே நான் எதை செய்து கொண்டிருக்கிறேனோ அதையே நீங்கள் வேறு வழியில் சொல்லுகிறீர்கள் என்று சொன்னாராம் ! ஏக இறைகொள்கை பேசுவதோடு சமூக சமத்துவம் காக்கும் இசுலாத்துடன் அவர் உறவாகவே இருந்தார் ! அதே நேரத்தில் ஏக இறைகொள்கை பேசினாலும் வெளினாட்டு பணத்தை பங்கு போட்டுகொள்வதில் ஜாதியத்தை வெளியே தெறியாமல் கட்டிகாப்பதும் ; அரசுக்கு நிகராக நிறுவனங்களை வைத்து கொண்டு அதை அனுபவிப்பதில் ஜாதிபாகுபாடுகளை காப்பதுமான கிரிஸ்தவ நிறுவனங்களுடன் பெரியார் இணக்கமாக நடந்து கொண்டதில்லை !

வள்ளலார் , வேதாத்திரி மஹரிஸி , சித்தர்கள் , இசுலாம் இவர்களுடன் அவர் உறவு பூண்டிருந்தது போலத்தான் அவர் மெய்வழிசாலையுடனும் உறவு பூண்டிருந்தார் ! அது ஏக அரூப கடவுள் கொள்கை பேசுகிறவர்களுடன் அவர் நல்லுறவு பேனிக்கொண்டு பிராமர்களின் ஆதிக்கத்தை உடைக்க பல கடவுள் உருவ வழிபாடுகளை மட்டுமே எதிர்த்தார் --அன்றைய சமூகத்தில் பாமர மக்கள் பிராமர்களின் கவசமாக பார்த்த கடவுளை மட்டுமே மறக்க சொன்னாரே ஒழிய ஞான மார்க்கத்தினர் ஏக இறைகொள்கை உள்ளோருடன் அவர் முறன்படவே இல்லை என்பது உண்மை !!


தான் கொண்ட கொள்கையில் தெளிவும் அதை தன் வாழ்வில் பித்தலாட்டமில்லாமல் கடைபிடிப்பதை மற்றவர்களுக்கு சொல்லும் யாரையும் எதிர்த்ததில்லை தனக்கே உண்மை என தெரியாததை தான் பிழைப்பதற்காக பரப்பும் மூட சம்பிரதாயங்களே அவரால் சாடப்பட்டன அவர் காலத்தில் பிழைப்பு கூடங்களாய் இருந்த மடங்களே கண்டிக்க பட்டன ஞானமார்கத்தில் பிழைப்புவாதிகளால் கார்ப்பரேட் சாமியார்கள் அப்போது இல்லை
 

மெய்வழி சாமியார் எப்படிபட்டவர் என்பது பற்றி ஆழமாக பேச வரவில்லை !

ஆனால் பெரியாரை ஆழமாக அவரது சீடர்கள் கூட புரிந்து வைத்திருக்கவில்லை எனபதே எனது கருத்து !

சமூக சீர்திருத்தம் என்ற இலட்சியத்திற்காக அவர் கடவுளை மற என்று சொன்னாரே தவிற மேலை நாட்டில் பல நாத்தீக வாதிகள் செய்தது போல கடவுள் இல்லை என்று நிரூபிக்கும் முயற்சியில் பல ஆய்வுகளையும் வலிந்து விளக்கங்களையும் செய்து கொண்டு இருக்கவில்லை ! கடவுள் இல்லை என்று நிரூபித்துக்கொண்டிருப்பதை விட கடவுள் பெயரை சொல்லிகொண்டு பிறரை அடிமைப்படுத்தும் ; இருளுக்குள் தள்ளும் பிற்போக்கு சக்திகளை ; ஜாதீய ஏற்றத்தாழ்வுகளை ; சமூக அவலங்களை உடைத்து சமூகத்தில் பல தரப்பட்டவர்களும் முன்னேற்றம் அடைய அவர் முயற்சித்து அதில் பெரிய அளவில் வெற்றியும் பெற்றார் ! அவருடைய பிரதான பணி சமூக சீர்திருத்தமே தவிற கடவுள் மறுப்பல்ல ! அது ஒரு கருவி !

கம்யுனிஸ்ட்டுகள் அடிக்கடி சொல்லுவார்கள் ஸ்டெரடஜி & டேக்டிக்ஸ் ; அதாவது கொள்கை அதை அடைய அந்தந்த சூழ்னிலைக்கு கடைபிடிக்க படும் சில நடைமுறைதந்திரம் ! இந்த நடைமுறைகள் பல வேலைகளில் கொள்கைக்கு எதிரானவர்களுடனும் ஒரு குறிப்பிட்ட்ட விசயத்திற்கு ஒத்து வேலை செய்ய வேண்டியிருக்கும் ! பெரிய எதிரியை வீழ்த்த சின்ன எதிரியுடன் உறவு வைத்து கொள்வது இன்ன பிற !

அதுபோல சமூக சீர்திருத்தம் என்ற கொள்கைக்கு பெரியார் கடைபிடித்த நடைமுறைதந்திரமே கடவுள் மறுப்பு என்பது ! நான் மீண்டும் சொல்கிறேன் ; உண்மையிலேயே அவர் கடவுளை வெறுத்தவரா ? உள்ளார்ந்து கடவுளுடன் உறவாடியவரா ? என்பதையும் தாண்டி அவர் கடவுளால் பயன்படுத்தப்பட்ட பாத்திரம் என்பதே எனது கருத்து !

கடவுளை நம்புகிறேன் என்று சொன்னவர்கள் ; கடவுளை பரப்பியவர்கள் பலர் மனித முற்சியால் தங்களுக்கு தெறிந்த சில விசயங்களை பூமியில் உலப்பிகொண்டிருதார்களே தவிற அவர்கள் கடவுளால் பயன்படுத்த பட்டார்களா ? அல்லது கடவுளின் கரத்தில் நல்ல கருவியாய் இருந்தார்களா ? என்பதற்கு சான்றுகள் ; விளைவுகள் ; பயன்கள் இல்லை ! ஆனால் என்னைப்பொறுத்த அளவில் கடவுளை மறுக்கிறேன் என்று சொல்லியும் தெறிந்தோ தெறியாமலோ கடவுளின் கரத்தில் நல்ல கருவியாய் பெரியார் இருந்தார் என்பதற்கு சான்றுகள் ; விளைவுகள் ; பயன்கள் தமிழகத்தில் நிறைய உண்டு !

பெரியாரால் சமுதாயத்திற்கு பல நன்மைகள் நடந்தன சமூக சீர்திருத்தம் என்பதை நாத்தீகம் என்ற தவறுடன் அவர் செய்தார்

அதை பிழைப்புவாதமாக அவர் மாற்றவில்லை . ஆனால் அதை பிழைப்புவாதமாக மாற்றும் நோக்கத்தில் அண்ணாவும் கலைஞரும் முன்னேற்ற கழகம் என்று ஆரம்பித்தார்கள் . அது அவர்களின் குடும்பத்தை முன்னேற்றுவது என்பதை பெரியார் ` கண்ணீர்த்துளிகள்` என நக்கலிடித்தார் 

மொத்த இந்தியாவும் திராவிடம் என்பதை மறைத்து வட இந்தியர் ஆரியர் தமிழர்கள் மட்டுமே திராவிடர்  என்றும் பொய்யை பரப்பியவர்கள்  இந்த இருவருமே

இவர்களின் பேச்சை நம்பி உணர்ச்சி வசப்பட்டு காமராஜரின் நல்லாட்சியை அகற்றிய தமிழக மக்கள் தவரிளைத்ததாகத்தான் பெரியார் சொன்னார்

ஆனால் அந்த தெளிவு பழுத்த ஆன்மீக வாதியான ராஜாஜி அவர்களுக்கு அந்த நேரத்தில் இல்லாமல் போனதும் - சில தனிப்பட்ட பகையின் காரணமாக காமராஜரை எதிர்த்து திமுக வை அவர் ஆதரித்தார் என்பதும் உண்மை

தமிழகம் இந்தியாவிலிருந்து தனிமைப்பட்டு அனேக நன்மைகளை இழந்து நிற்கிறது

மேற்போக்காகவேனும் கடவுளை நம்புகிற ஒரு மனிதன் என பலரால் நம்புவதற்கு வாய்ப்புள்ள என்னைபோன்றவனும் விருப்புவெறுப்பு இல்லாமல் நடுனிலையோடு அனுக முடியும் என்றால் அது பெரியார் கடவுளால் பயன்படுத்தப்பட்ட பாத்திரம் என்பதை புரிந்து வைத்திருப்பதும் ஏற்றுக்கொள்வதுமாகும் !


உலக வாழ்க்கை !!

உலக வாழ்க்கை !!

--குரு ராமகிருஸ்ண பரமஹம்சரின் உபதேசங்கள் -----

மகா மாயையின் வழிகள் அறிவுக்கு எட்டாதவை ! கடவுளை எளிதில் அடைய அது விட்டுவிடுமா என்ன ? பற்று கொள்வதற்கு உறவினர் யாருமே இல்லாத ஒருவன் இருந்தால் அவனிடம் ஒரு பூனையை கொடுத்து அதனிடம் பற்றுகொள்ள செய்து விடுகிறது . அவனும் அந்த பூனையை உலகம் என்று எண்ணிக்கொண்டு அதற்கு வேண்டிய பாலுக்காக அலைந்த வண்ணம் , ``நான் என்ன செய்யட்டும் ? பாலையும் மீனையும
் தவிர , இது வேறு எதையும் உண்ண மறுக்கிறதே ! `` என்று சொல்லியபடி அதைப்பராமரிப்பதிலேயே வாழ்நாளை செலவிடுகிறான் !

இந்த நிலையற்ற உலகை இறைவனுடன் தொடர்பு படுத்தியே பார்க்க வேண்டும் ; அவ்வாறே செயல்படவும் வேண்டும் . ஒரு கையினால் இறைவனுடைய திருவடிகளைப் பிடித்துக்கொண்டு , மற்ற கையால் உலகச் செயலகளை செய்ய வேண்டும் !

நம்மை வாழ்க்கையாகிய அறியாமையில் வைத்திருப்பதும் இறைவனே , நம்மைத்தன்னிடம் அழைத்து முக்தி அளிப்பதும் அவரே !!

Friday, August 17, 2012

இறைஅனுபூதி !!


----குரு ராமகிருஷ்ண பரமஹம்சரின் உபதேசங்கள்  ---

பெறற்கறிய மானிடப்பிறவியை பெற்றும் இந்த பிறவியிலேயே இறைஅனுபூதி பெற முயலாதவன் வீனில் பிறந்தவனே !

இறைவனிடம் ஜெபி ! அவருடைய புகழ் பாடு ! சத்சங்கத்தை நாடு ! உலகியலிலும் உலக கடமைகளிலும் இரவுபகலாக மூழ்கியிருக்கின்ற மனதால் இறைவனை சந்திக்க இயலாது ! எனவே இடையிடையே தனிமையை நாடி சென்று இறைவனை சிந்திப்பது மிகவும் இன்றியமையாதது !

உண்மையையும் உண்மையற்றதையும் எப்போதும் விவேகத்தால் ஆராய்ந்து அறிய வேண்டும் . இறைவன் ஒருவரே உண்மை . மற்ற அனைத்தும் உண்மையற்றவை ; அதாவது நிலையற்றவை . இவ்வாறு ஆராய்ந்து , நிலையற்றவற்றை உள்ளத்திலிருந்து உதறித்தள்ள வேண்டும் !

குழந்தையிடம் தாயின் பாசம் , கணவனிடம் மனைவியின் காதல் , பணத்திடம் கருமியின் பற்று ----- இந்த மூன்றும் ஒன்று சேர்ந்தது போன்ற அன்பை உன்னால் இறைவனிடம் செலுத்த முடியுமானால் அந்த கணமே இறைவனை காண்பாய் !

பாலிலிருந்து வெண்ணெயைப் பெற வேண்டுமானால் பாலை தனியான இடத்தில் வைத்து அது தயிர் ஆகுமாறு விடவேண்டும் ! ஆட்டவோ அசைக்கவோ செய்தால் அது தயிராக உறையாது . பிறகு வேறு வேலைகளை ஒதுக்கி வைத்து விட்டு , அமைதியான இடத்தில் உட்கார்ந்து , தயிரை கடைய வேண்டும் ; அப்போதுதான் வெண்ணெய் கிடைக்கும் . அதுபோல தனிமையில் இருந்து இறைவனை தியானிப்பதால் ஞானம் , வைராக்கியம் , பக்தி ஆகிய பேறுகள் கிடைக்கின்றன !

வெட்கம் , வெறுப்பு , பயம் --இவை மூன்றும் இருக்கும் வரையில் இறை காட்சி கிடைக்காது !

தராசில் கனமுடைய தட்டு தாழ்கிறது ; லேசான தட்டு மேலே போகிறது . அதுபோல் உலகியல் பளுவை சேர்த்து வைத்திருப்பவன் வாழ்க்கையில் அமிழ்ந்துவிடுகிறான் .அத்தகைய பளு குறைவாக இருப்பவன் இறைவனுடைய பாதாரவிந்தைகளை நோக்கி மேலெழுகிறான் !

தனது உத்தியோகத்தை இழந்து , புதுவேலை தேடி அலுவலகம் அலுவலமாக ஏறி இறங்கி அலைகின்ற மனிதனின் ஆவலும் ஏக்கமும் எவ்வளவு இருக்குமோ அவ்வளவு தீவிரமான ஆவலையும் ஏக்கத்தையும் இறைவனிடம் கொள்ள வேண்டும் !

பிள்ளைகள் இல்லையே என்று சிலர் ஆறாக கண்ணீர் பெருக்குகின்றனர் . சொத்து இல்லையே என்று சிலர் அழுகின்றனர் . ஆனால் அந்தோ ! கடவுளை காணவில்லையே என்று ஏங்கி அழுபவர்கள் எத்தனை பேர் உள்ளனர் ? வெகு சிலரே !இறைவனை தேடுபவர்கள் ; அவருக்காக கண்ணீர் வடைப்பவர்கள் உண்மையிலேயே அவரை அடையத்தான் செய்கிறார்கள் !

கடவுள் எங்கும் நிறைந்தவர் என்றால் நாம் ஏன் அவரை காண்பதில்லை என்று கேட்கலாம் ? பாசி படிந்து கிடக்கின்ற குளத்தின் கரை மீது நின்று பார்த்தால் அதிலுள்ள தண்ணீரை காண முடியாது . தண்ணீரை காண வேண்டுமானால் பாசியை விலக்க வேண்டும் . அறியாமை திரையால் மூடிய கண்களை வைத்து கொண்டு கடவுளை காண முடியவில்லையே என்று புலம்புகிறாய் . அவரை காண விரும்பினால் முதலில் உன் கண்களிலிருந்து அறியாமைத்திறையை அகற்று . அத்ற்கு தியானம் , ஜபம் ,இவை போற சாதனைகள் வேண்டும் !

தூசு படிந்த கண்ணாடியில் பிம்பம் தெரியாது . அதுபோல் தூய்மையற்ற மனதில் இறைவன் தெரிய மாட்டான் . இறைவனின் திருநாமத்தை உச்சரித்து உனது உடலையும் உள்ளத்தையும் தூய்மைப்படுத்திக்கொள் . பகவானுடைய புன்னிய நாமத்தை கீர்த்தனம் செய்து உனது நாக்கினை பரிசுத்த படுத்திக்கொள் !

ஆன்மீக சாதனைகளில் ஈடுபட்டிருக்கும் காலத்தில் அவற்றை பரிகசிப்பவர்களிடமிருந்து விலகியே இரு !

காந்த ஊசி எப்போதும் வடக்கு நோக்கியே நிற்கிறது . அதனால் தான் கடலில் செல்லும் கப்பல் திசை தவறுவதில்லை . உள்ளம் கடவுளை நோக்கியதாக இருக்கும் வரையில் வாழ்க்கை கடலில் மனிதன் வழி தவற மாட்டான் ! 

கொக்கு ஒன்று மீனை பிடிப்பதற்காக மிகுந்த கவனத்துடன் போய் கொண்டிருந்தது . வேடன் ஒருவன் பின்னால் நின்று அதன் மீது அம்பை எய்யத்தயாராக நின்றான் . ஆனால் கொக்கு அதை கவனிக்கவே இல்லை . அதைக்கண்ட மகான் ஒருவர் `` நான் தியானத்திற்கு அமரும் போது உன்னைப்போல இருப்பேனாக . என் பின்னால் யார் இருக்கிறார்கள் , என்ன இருக்கிறது என்று ஒருபோதும் திரும்பிப்பாராதவனாக இருப்பேனாக ! `` என்று கூறினார் !

சிறு இழை ஒன்று நீட்டிக்கொண்டிருந்தாலும் ஊசியின் காது வழியாக நூல் நுழைய முடியாது . உலகப்பொருட்களில் சிறிது பற்று இருந்தாலும் நம்மால் கடவுளை அணுக முடியாது !

பொட்டலம் கிழிந்து கடுகு சிதறிவிட்டால் அவற்றை ஒன்று சேர்ப்பது மிகவும் கடினம் ! அதுபோல பல்வேறு திசைகளில் ஓடுகின்ற மனதை உட்குவித்து ஒருமுகப்படுத்துவது எளிதான காரியம் அல்ல . அத்ற்கு சத்சங்கம் ஒரு முக்கிய தேவையாகும் !

புலி மற்ற மிருகங்களை கொல்கிறது . அது போல் பக்தி என்னும் புலி , காமம் , குரோதம் முதலானவற்றை கொன்று விடுகிறது . இதயத்தில் பக்தி வளருமானால் காமமும் ஏனைய மிருக உணர்ச்சிகளும் மறைகின்றன !

வயதின் காரணமாக கிளியின் தொண்டையில் உள்ள சவ்வு தடித்து விடுமானால் அத்ற்கு பேச கற்று கொடுக்க முடியாது . அதுபோல் வயதான பிறகு மனதை இறைவனிடம் செலுத்துவது கடினம் . இளமைப்பருவத்திலேயே இறைவனை நாட வேண்டும் !

மன ஏக்கத்துடன் இறைவனுக்காக உன்னால் அழ முடியுமா ? மனைவி மக்களுக்காகவும் பணத்திற்காகவும் குடம்குடமாக கண்ணீர் சிந்தி அழுகின்றனர் . இறைவனுக்காக யார் அழுகிறார்கள் ? குழந்தை பொம்மையுடன் விளையாடிக்கொண்டிருக்கும் தாய் மற்ற வேலைகளில் ஈடுபட்டிருக்கிறாள் . விளையாட்டில் சலிப்புற்றதும் அது பொம்மைகளை எறிந்துவிட்டு ``அம்மா `` என்று அலறுகிறது . இந்த சத்தம் கேட்பதுதான் தாமதம் , தாய் உடனே சோற்றுப்பானையை அடுப்பிலிருந்து இறக்கிவைத்து விட்டு வேகமாக ஓடி வந்து குழந்தையை கைகளில் ஏந்திக்கொள்கிறாள் !

எண்ணமும் செயலும் ஒன்றாக இல்லாமல் , களங்கம் அற்ற நேர்மை இல்லாமல் கடவுளை அறிய முடியாது . கோணல் புத்தி உடையவர்களிடமிருந்து அவர் வெகு தொலைவிலேயே இருக்கிறார் !

பெரிய மீன் பிடிக்க விரும்புபவன் தூண்டிலையும் இரையையும் நீருக்குள் போட்டுவிட்டு மணிக்கணக்காக அமைதியாக காத்திருக்கிறான் . அதேபோல் ஆன்மீக சாதனைகளை பொறுமையாக செய்துகொண்டே இருப்பவன் இறுதியில் கடவுளை நிச்சயமாக கண்டே தீர்வான் !

உலக வாழ்வாகிய கடலில் ஆறு முதலைகள் உள்ளன . காமம் , குரோதம் முதலியனவே அந்த முதலைகள் . ஆனால் நீ உன் உடம்பில் மஞ்சளை பூசிக்கொண்டால் முதலை பயமே உனக்கு வேண்டாம் .விவேகமும் வைராக்கியமுமே அந்த மஞ்சள் !

பூவிலிருந்து காய் வெளிப்பட்டதும் பூவின் இதழ்கள் தானாகவே வீழ்ந்துவிடுகின்றன . அதுபோல் உனது தெய்வீக இயல்பு வெளிப்படும்போது , மனித இயல்பிற்கு இயற்கையான குற்றம்குறைகள் தாமாகவே விலகிவிடுகின்றன !

கடவுளை அடைய விரும்புபவர்களும் ஆன்மீக சாதனைகளில் முன்னேற விரும்புபவர்களும் காமம் , பணத்தாசை ஆகிய இரண்டு வலைகளில் சிக்காமல் இருப்பது மிக முக்கியம் . இல்லாவிடில் அவர்கள் ஒரு நாளும் பூரணத்துவம் பெற மாட்டார்கள் !

யாரையும் குற்றம் சொல்லாதே . ஒரு பூச்சியிடம்கூட யாரையும் குற்றம் சொல்லாதே . ஒரு பூச்சியிடம்கூட குறை காணாதே . பக்தி வேண்டும் என்று பிரார்த்திப்பதை போலவே பிறரை குற்றம் சொல்லாமல் இருக்க வேண்டுமென்றும் பிரார்த்தனை செய் !

நல்லவனாக வேஸம் போடுவது , கணக்குப்பார்ப்பது , தர்க்கம் செய்வது -- இத்தகைய மனதால் கடவுளை அறிய முடியாது . எண்ணமும் செயலும் ஒன்றாக இருப்பவர்களுக்கு இறைவன் வெகு அருகிலேயே உள்ளார் !

கடவுளை நெருங்க நெருங்க அமைதியை உணர்வாய் . அமைதி அமைதி ; நிலத்த அமைதி -- இந்த அனுபவம் ஏற்படும் . கங்கையை நெருங்க நெருங்க அதன் குளிர்ச்சியை உணர்கிறாய் . அதில் இறங்கினாலோ பரிபூரண அமைதி உணர்ச்சியை பெறுவாய் !   

Tuesday, August 14, 2012

இறைவன் உள்ளாரா ?

குரு ராமகிருஷ்ண பரமஹம்சரின் உபதேசங்கள் !!

இறைவன் உள்ளாரா ?

இரவு நேரத்தில் ஆகாயத்தில் நட்சத்திரங்கள் பலவற்றை நீ காண்கிறாய் , ஆனால் பகலில் காண்பதில்லை ! ஆகையால் பகலில் வானத்தில் நட்சத்திரங்கள் இல்லையென்று சொல்லிவிட முடியுமா ?

மனிதனே ! நீ அறியாமையில் இருக்கும் போது உன்னால் இறைவனை காண முடியவில்லை ! அதற்காக இறைவனே இல்லையென்று சொல்லாதே !!

பூமியை விட எத்தனையோ மடங்கு பெரியது சூரியன் . ஆனால் தொலைவு காரணமாக அது ஒரு சிறிய வட்ட தட்டு போல் தோன்றுகிறது . அது போல் இறைவன் எல்லையற்ற மகிமை உடையவராக இருந்தும் நாம் அவரிடமிருந்து வெகு தொலைவில் இருப்பதால் அவரது மகிமையை அறிய முடியவில்லை !!

கடவுள் ஒரு சர்க்கரை குன்று போன்றவர் . சிறிய எறும்பு அதிலிருந்து ஒரு சிறிய துணுக்கை எடுத்து செல்லுகிறது . பெரிய எறும்பு சற்று பெரிய துணுக்கை எடுத்து செல்லுகிறது . இப்படி எவ்வளவோ எறும்புகள் எடுத்து சென்றாலும் குன்று முன் போல பெரியதாகவே இருக்கிறது .பக்தர்கள் விசயமும் இப்படித்தான் .இறையருளின் சிறிய அனுபவம் ஏற்பட்டாலும் அவர்கள் பரவசப்பட்டு போகின்றனர் . அவருடைய மகிமைகள் அனைத்தையும் உணர்ந்து அவற்றை தன்னுள் அடக்கி கொள்ள வல்லவன் யாரும் இல்லை !!

காந்தமும் இரும்பும் போல் கடவுளும் மனிதனும் . அப்படியானால் கடவுள் ஏன் மனிதரை கவர்வதில்லை ? இரும்பு மண்ணில் ஆழப்பதிந்திருந்தால் காந்தத்தால் அதனை கவர முடியாது . அது போல கர்மத்தளையில் ; அறியாமையில் மூழ்கிக்கிடக்கிற மனிதன் இறைவனுடைய கவர்ச்சியை உணர்வதில்லை . மண்ணிலிருந்து இரும்பை வெளியில் எடுத்து சுத்தம் செய்தால் இரும்பு உடனே அதனை கவர்கிறது . அது போல கண்ணீர் விட்டு அழுது பிரார்திப்பதன் மூலம் கர்மத்தளைகள் ; அறியாமை இருள் விலகும் போது இறைவனால் மனிதன் கவரப்படுகிறான் !!

பத்து பிறவிகளின் அனுபவங்களை கடவுளை உணர்ந்த புருஷர்களின் கருணையினால் ; தொடர்பினால் ஒரே பிறவியில் மனிதன் பெற்று விட முடியும் !!

கண்ணியமிக்க இரவு !!

கண்ணியமிக்க இரவு !!

திருக்குரான் :

97:1. நிச்சயமாக நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலத்துல் கத்ர்) என்ற இரவில் இறக்கினோம்.

97:2. மேலும் கண்ணியமிக்க இரவு என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது?

97:3. கண்ணியமிக்க (அந்த) இரவு ஆயிரம் மாதங்களை விட மிக்க மேலானதாகும்.

97:4. அதில் மலக்குகளும், ஆன்மாவும் (ஜிப்ரீலும்) தம் இறைவனின் கட்டளையின் படி (நடைபெற வேண்டிய) சகல காரியங்களுடன் இறங்குகின்றனர்.

97:5. சாந்தி (நிலவியிருக்கும்); அது விடியற்காலை உதயமாகும் வரை இருக்கும்.

அந்த புனிதமான இரவு 13-8-12 , 15-8-12 , 17-8-12 ஆகிய தேதிகளில் ஒரு இரவில் வருகிறது !

தியானத்திற்கும் பிரார்த்தனைக்கும் உகந்த நாள் ! சித்தி உண்டாகும் ! முயற்சிப்பீர்களாக !!

Thursday, July 26, 2012

எனது பெரிய அண்ணன் அவர்களுக்கு பிரியாவிடை !

21/7/2012

என்னால் பெரிதும் மதிக்கபடுகிற எனது பெரிய அண்ணன் விவேகானந்தன் அவர்கள் உடல் சுகவீனத்தின் நிமித்தம் மதுரை அப்பெல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்ற தகவல் வரப்பெற்றது ! அவர் நான் இருக்கும் இடத்திலிருந்து 50 கி .மீ தொலைவிலுள்ள கிராமத்தில் உள்ளார் !அவரை காண்பதற்காக குடும்பத்துடன் மதுரை பயணமானேன் !

அவர் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ! அத்தோடு நடுநிலைப்பள்ளியின் நிர்வாகியுமாவார் ! காமராஜர் காலத்தில் பள்ளி கல்வி உத்வேகப்படுத்த பட்டபோது எனது தந்தையாரின் முயற்சியால் பட்டிகாடான கிராமத்தில் இப்பள்ளி துவங்கப்பட்டு ;எங்களை வளர்த்தது போலவே இப்பள்ளியும் கடுமையான் கஸ்ட்டத்திலேயே வளர்க்கப்பட்டது ! நல்ல தரமான சேவையால் ஏழை எளியவர்கள் பலரை உயர் பதவிக்கு அனுப்பியுள்ளது ! கடைசி--ஏழாவது  மகனான நான் நான்காவது படிக்கும் போதே எனது மூத்த அண்ணனும் அண்ணியும் ஆசிரிய பணிக்கு வந்தபோதிலும் எனக்கு திருமணம் முடியும் வரை தனிக்குடித்தனம் போகவில்லை ! எனது அப்பாவின் பாரத்தை நல்ல மகனாக சுமந்து கொண்டார் ! எனது தந்தையின் அனைத்து கடமைகளிலும் தோள் கொடுத்தார் ! அவரின் இறுதிகால கடமைகளை செய்து எனக்கு திருமணமும் செய்து வைத்து அவரின் சொந்த வாழ்வை தனியாக அவர் துவங்கும் போது அவரின் பிள்ளைகள் +2 வ்ந்து விட்டனர் ! ஒரு பெரிய குடும்பத்தை இழுத்ததால் ஓயாது வேலை ;பள்ளி ,விவசாயம் ,கடன் ,உருட்டல் பெரட்டல் என்று உழைத்து கொண்டே இருப்பார் !

மற்ற சகோதரர்கள் வேலை நிமித்தமாக வெளியூரில் வசித்ததால் அவர்கள் மீது என் தகப்பனாரின் பாரம் ஏறவில்லை என்றே சொல்லலாம் ! ஆனாலும் முழுமனதோடு தகப்பனுக்கு அடங்கிய தமையனாக மூத்த மகன்கள் பலர் இருப்பதில்லை !மருமகள்களும் அமைவதில்லை ! இப்படித்தான் மூத்த மகன் வாழவேண்டும் என்பது கடவுளின் விருப்பமும் கூட ! எல்லா மதங்களின் வேதங்கள் கூட மூத்த மகன் பொறுப்பை சுமக்கவேண்டும் என்று தான் சொல்லுகிறது !யூதர்களின் தவ்ராத் வேதத்திலும் மூத்த மகன் சிரேஸ்ட்ட புத்திரன் --அவனுக்கு மற்ற பிள்ளைகளை விட இரண்டு மடங்கு சொத்து உரிமையாக படவேண்டும் என்கிறது !ஏனென்றால் அவன் தன் தகப்பனுக்காக் வாழ்ந்தாக வேண்டும் ! அப்படிபட்ட கடமையை அவர் சிறப்பாகவே நிறைவேற்றினார் என்பதே கடைசி தம்பியான எனது கருத்து ! ஆனால் அதன் மதிப்பை மற்ற அண்ணன்மார்கள் போதிய அளவு உணரவில்லை !

அவர் பொது குடும்ப சொத்து முழுவதையும் வைத்துதானே எல்லாம் செய்து கொண்டிருந்தார் என்கிற வாதம் அவர்களுக்கு போதுமானதாக தெரிகிறது !ஆனால் அதில் உழைத்து ஒரு பெரிய குடும்பம் மற்றும் பள்ளி நிர்வாக செலவுகளை இழுத்து வந்த உழைப்பு ;அவர் தனியாக எதையும் ஒதுக்கி கொள்ளவில்லை ! ஆனால் முழுமூச்சாய் வளர்த்த அந்த பள்ளியை மட்டும் சகோதரர்கள் அவர்களாக விட்டுகொடுத்து விடுவார்கள் என நம்பினார் ! எனாக்கு அது உடன்பாடாகவே பட்டது !மற்றவர்கள் ஒத்து கொள்ளவில்லை ! எனது தந்தையாருக்கு பின் பங்காளிசண்டயாய் அது மாறிவிட்டது ! நான் சொல்லி பார்த்தேன் ;தீமைகள் ,சண்டைகள் சச்சருவுகள் பெருகும் வேகத்தை அணை போட முடியவில்லை !நான் ஒதுங்கி என்ன காத்துகொள்வதை தவிர என்னாலும் எதுவும் முடியவில்லை !

என் அண்ணன்மார்களின் குடும்பங்களுக்குள் கைபட்டது குற்றம் கால் பட்டது குற்றம்  என நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக பிணக்குகள் வளர்ந்து பெருகிகொண்டே இருந்தன ! எல்லாம் அந்த பள்ளியை மய்யமாக வைத்தே பூசல் முற்றிகொண்டிருந்தது ! எனக்கு திருமணம் நிச்சயம் செய்தவுடன் என் தந்தையார் சுகவீனமடைந்து அவரை மருத்துவமனையில் வைத்தே என் அண்ணன் பராமரித்து வந்தார் ! அந்த காலங்களில் அவரை பார்க்க வரும்போதெல்லாம் (வெளியூரில் வேலையிலிருந்தேன் ) பெரிய அண்ணாவிற்கு --அவரின் உழைப்பு வீணாகதபடி அந்த பள்ளியை எழுதி வைத்துவிடும்படியாகவே நானும் சொன்னேன் ! அப்பாவும் அதுதான் சரியென்றார் ! எழுதி வாங்கிக்கொள்ளும்படியாக அண்ணாவிடமும் சொன்னார் ! ஆனால் பார்த்துகொள்ளலாம் --சகோதரர்கள் சுமூகமாக முடித்து கொள்ளுவோம் என அலட்சியமாக இருந்து விட்டார் ! ஊழ் விணை வந்து உருத்தும் என பலவேலைகளில் முன்னெச்சரிக்கை வந்தாலும் அதனை வெல்ல முடியாத அளவு விதி வந்து அழுத்திகொள்ளுவதிலிருந்து தப்ப முடியாத அனுபவம் எனக்கு நிறைய உண்டு !

முக்கியமாக எனது மற்ற அண்ணன்மார்களை விட எனக்கு மூத்தவரையும் அவரது மனைவியையும் இவ்விசயத்தில் சமாதன படுத்தவே முடியாது ; பெரும் சிக்கலை தவிற்கவே முடியாது பங்காளிசண்டையில் எனது தகப்பனாரின் வாரிசுகள் அல்லொகலப்படுவார்கள் என பயந்தது நடந்தது ! பிதுரார்ஜித கர்மா என்பது வலிமையானது ! வாழ்ந்து கெட்ட குடும்பங்களில் முன்னோர்களின் பாவம் என்பது மீண்டும் மீண்டும் வந்து அடிமேல் அடித்து கொண்டிருக்கும் ! ஒரே அடியாய் அடித்தால் மனிதன் தாங்க முடியாது என்கிற கடவுளின் கருணை கொஞ்சம் அடியும்கொஞ்சம் ஆசுவாசமுமாய் வந்து கொண்டிருக்கும் !

எனது முப்பாட்டணார் காலத்தில் எற்பட்ட பங்காளி சண்டையில் வெள்ளைக்காரன் கோர்ட்டிற்கு பல ஏக்கர் நிலத்தை விற்றிருக்கிறார்கள் ! எனது தாத்தா வருமையில் உலன்றார் ! சிருவயதிலேயே தாயை இழந்த எனது தகப்பனார் எப்படியோ ஆசிரியரானார் ! கடும் உழைப்பாளி ! ஒரு பள்ளியையும் தொடங்கி அடிமட்டத்திலிருந்து வளர்ந்து ஆறு பேரை பட்டபடிப்பு படிக்கவைத்து அரசு ஊழியர்களாயும் மாற்றினார் !அவர்களுக்கு திருமணமும் முடித்து நான் படிக்க வரும் போது கடன் பிரச்சினை விஸ்வரூபமெடுத்து ஆட்டுவித்து கொண்டிருந்தது ! எனது சகோதரர்கள் அனைவரும் கல்லூரி படிப்பு விடுதி செலவு என்ற நிலையில் சிறுவயதிலிருந்தே நன்றாக படிக்கிற நான் பெரிய படிப்பு படிக்க ஆசைபட்டுவிடுவேனோ என்று எனது தந்தையார் ``கிருபா ! எனக்கு வயசாகிவிட்டது நீ காலகாலத்தில் படித்து நான் இருக்கவே வேலைக்கு வந்துவிடு !பாலிடெக்னிக் படிக்க போ `` என்று சொல்லி கண்ணீரும் விட்டுவிட்டார் !  சரி என்று சொல்வதைதவிற வேறு வழி இல்லை என்பதை விட ஏன் அப்பா அழுதார் ? அவர் சொன்னால் ஏற்றுகொள்ளாதவனா ? பார்க்க ஒற்றுமையாக பெரிய குடும்பம் போல இருந்தாலும் உள்ளார்ந்த பிரச்சினைகள் ; கடன் ; முழுக்க மகனை சார்ந்து வாழவேண்டிய வயது ; இது எல்லாமுமே என் தகப்பனாரின் அழுத முகம் எனக்குள் படிமானமாக தங்கிவிட்டது ! நான் விடுதியில் 9 & 10 படிக்கும் போதே வறுமையை உணற தொடங்கிவிட்டேன் ! மெஸ் பில் கட்ட அப்பா லேட்டாக வருவார் ! ஒரு முறை விடுதி மாணவர்கள் அனைவரும் சுற்றுலா செல்ல பணம் கட்டசொன்னார்கள் ! அப்பா உடனடியாக வரவில்லை !சீட் முடிந்து விட்ட பிறகு வந்தார் ! வேண்டாமப்பா இருக்கட்டும் என்று சொன்னேன்  ! அவர் என்னை  கொஞ்சம் இரு என்று சொல்லிவிட்டு அந்த ஆசிரியரிடம் தனியே சென்று கெஞ்சுவது தூரத்திலிருந்து எனக்கு புரிந்தது ! பலனில்லை ! அதை விட அந்த தேவையை குறைத்துகொள்ளுவது என் தந்தைக்கு நான் கொடுக்கிற மரியாதையாக எனக்குள் பட்டது ! இப்போது அவர் அழுததும் எனக்கு தேவைகள் என்ற ஒன்றை அப்படியே கடந்துவிடுவது நல்லது என மனம் வைராக்கியம் கொண்டுவிட்டது ! அது ஒரு வகையில் இந்த உலகின் அலங்காரங்களில் இருந்து விடுபட்டவனாக மாற அடித்தளமிட்டது !

எந்த தேவையயும் முடிந்த அளவு அவசியமற்றவனாக என்னளவில் விடுதி ; வகுப்பு ; நூலகம் ; இயற்கையான பரந்த புல் வெளிகளில் ஏகாந்தமாய் இருப்பது தூங்குவது அப்படியே தியானிப்பதுமாய் வாழ்வு திரும்பிவிட்டது ! உலக பரபரப்பு ,லவ்கீக மாயைகளில் மனம் ஈடுபாடு கொள்ளவில்லை என்பதை விட எங்கே என் தேவைகளுக்காக நான் பணம் கேட்டு என் அப்பா அழுதுவிட கூடுமோ ; அதை உருவாக்கிவிடகூடாது என்ற வைராக்கியம் ; தாய்தகப்பனை கணம் பண்ண வேண்டிய மகனுக்கான கடமை ;பாசம் என்பதைவிட மதிப்பு என்னை தனித்தவனாக எனக்குள்ளாகவே மூழ்கியிருப்பவனாக ஆன்மீக வாழ்வுக்குரிய அடிப்படையை அமைத்து கொடுத்தது ! சினிமா ; பெண்களின் பின்னால் அலைவது அதில் ஒரு சுவையை காண்பது இவை இல்லாமலேயே போய் விட்டது ! மதுரையில் விடுதியில் இருக்கும் மாணவர்கள் கூட்டம் கூட்டமாய் கோவிலுக்கு போய் சைட் அடிப்பதும் ; காதல் செய்வது என்ற பெரும்பேறை அடைவதற்கு  மணவனாய் பிறவிஎடுத்து வந்திருப்பதாக சினிமாக்களும் கவிஞர்களும்  உரத்து உரத்து சொல்லிகொண்டிருக்கும் போது நான் சத்சங்கங்களிலும் --சிவானந்தர் , ராமகிரிஸ்ணர் ஆன்மீக கூட்டங்களில் கலந்து கொள்ளுவேன் ! முதலாவது இங்கு வறுமை --ஏற்றத்தாழ்வு முக்கியப்படுத்த படாத ஒரு பாதுகாப்பு கிடைக்கும் ! ஒரு சன்னியாசி --ஞானவான் முன்னால் அரசனும் பணம்படைத்தவனும் ஒரு பொருட்டாக கருதப்படுவதில்லை !

 சக மாணவர்கள் என்னை புரிந்து கொள்ளமுடியாமல் தவித்து பைத்தியம் அரக்கிருக்கு என முடிவுக்கு வராதபடி படிப்பில் அதிக மதிப்பெண்கள் பெறுவது எனக்கு ஒரு பாதுகாப்பு ! விடுதியே 20 ,30 தடவை பார்த்து ``ராதா ராதா `` என புலம்பிக்கொண்டிருக்க 100 ஆவது நாளில் படம் தூக்கபோகிறார்கள் என கேள்விப்பட்டு அப்படி என்னதான் இருக்கிறது என தெறிந்து கொள்ளுவதற்காக `` அலைகள் ஓய்வதில்லை `` படம் பார்த்தேன் !எனக்கு சிவுக்கென்றிருந்தது !அந்த அளவிற்கு ராதா அழகில்லை ! மேக்கப் இல்லமல் பார்த்தால் கிராமத்தில் வேலை செய்யும் விவசாய கூலி பெண்களைக்காட்டிலும் சுமாரிலும்சுமார் ! ஆனால் மாயையால் பிரபலப்படுத்த பட்டு அன்றாடம் நாம் காண்கிறவர்களை விட சாதாரண ஒருவரை உரே உலகமே புலம்பி தவிக்க வைக்கிற மாயைகள் வெல்லபட வேண்டியவை என்கிற புரிதல் வந்தது ! உலக மாயைகள் இப்படி பல மனிதர்களை மயக்கியே வைத்திருக்கிறது !அதில் மகாமாயை --காதல் என்பது ! 8 ம் வகுப்பு தாண்ட முடியாத எனது சிறுவயது தோழர்களும் தோழிகளும் விவசாய கூலிகளாகி உடனடியாக திருமண வாழ்வில் இணைந்தவர்கள் அப்போதே எனக்கு உண்டு ! இந்த ஜோடிகள் எவ்வளவு அன்னியோன்யமாய் -பாடுபட்டு வாயைகட்டி வகுத்தை கட்டி பிள்ளைகளை ஆளாக்குகிறார்கள் என்பதை அறிவேன் ! இவர்களுக்குள்ளிருப்பதே நேசம் -காதல் என்பது ! எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இன்னாடே என்ற பாரதியின் வரிகள் உண்மையானவை ! இவர்கள் வறுமையை ஒரு பொருட்டாக கருதாதவர்கள் அல்லது மகிழ்சியில் துள்ளிகுதிக்காதவர்கள்! சின்ன சின்ன மூக்குத்தியாம் சிவப்பு கல்லு மூக்குத்தியாம் என்ற பாடலை போலவே ஒரே மூக்குத்தி அழகிலேயே மனம் திருப்தியானவர்கள் ! அவர்கள் அலைவதுமில்லை ; வாழ்வை வீண்மாயைகளில் வீணாக்குவதுமில்லை !

அதன் பிறகு வேலைக்கு வந்ததும் சத்சங்க நண்பர்களே எனக்கு உறுதுனையாக இருந்தார்கள் ! ஞானமார்க்க குருமார்களின் தொடர்பும் எனக்கு வழிகாட்டியாய் அமைந்தது ! என் தேவைகளை மாதம் 400 ரூபாயளவில் முடித்து கொண்டு அப்படியே பணத்தை அப்பாவிடம் கொடுத்து விடுவேன் ! அது அவருக்கு பேரன்பேத்திகள் அதிகம் ! அவர் மடி நிறைய பணம் வைத்துகொண்டு பிள்ளைகள் கேட்க கேட்க காசு கொடுத்து கொண்டே இருக்க வேண்டும் !அப்போதுதான் அவருக்கு மன நிறைவாக இருக்கும் ! என்னையும் அப்படித்தான் வளர்த்தார் ! 8 ம் வகுப்பு படிக்கும் வரை காசாக வாங்கி எனது நண்பர்கள் சூழ எதையாவது அரைத்து கொண்டிருப்பேன் ! அப்பாவை சுற்றி வந்து கொண்டே இருப்பேன் !அவர் வெளியூர் போனால் எனக்கு வெறுமையாக தெறியும் ! கத்தாளை வழியாக ஊருக்கு வரும் பாதையையே பார்த்து கொண்டிருப்பேன் !அதில் தொலைவில் அப்பா வருவதை பார்த்தவுடன் மட்டுமே ஆறுதலடைவேன் ! அப்பாவை சார்ந்த மனனிலை ஒருவகையில் கடவுளை சார்ந்த மனனிலையாக மாற அடித்தளமானது ! அவரிடம் ஓயாமல் காசு வாங்கியதும் கடன் பிரச்சினைக்கு காரணமோ என்ற ஒரு எண்ணமே அப்படியே என் தேவைகளை குறைத்து கொள்ளுகிற வைராக்கியம் கொடுத்தது ! அதனால் அவர் மீதுள்ள மதிப்பை முன்னிலைபடுத்தி அவர் இருக்கும் வரை அவரிடம் பணம் கொடுத்து விட்டு உலகமாயைகளை விட்டு ஒதுங்கி சத்சங்களில் புகளிடம் தேடிக்கொள்ளுவது அவசியமாயிற்று ! இதை நான் சொல்லுவதன் காரணம் : தாயையும் தகப்பனையும் மனதாலும் செய்கையாலும் கணம் பன்னும் மனிதனை கடவுள் தன் மீது பக்தி செலுத்தியதாகவே எடுத்துக்கொள்ளுகிறார் என்பது உண்மை !அதற்கு என் வாழ்வில் கடவுள் அருளிய ஆசிர்வாதங்ககளே ஒரு சான்று !

அப்பாவின் இறப்புக்கு பின்பே எனக்கு திருமணம் ஆனது ! ஆனால் அன்னியமாக இருந்தாலும் என் தகுதிக்கு மீறிய ஒரு குடும்பம் என்னை மருமகனாக சுவீகரித்துகொண்டது !என்னை அரைசாமியார் என்று நன்கு தெரிந்தே விரும்பி ஏற்றுகொண்டார்கள் ! அதன் காரணம் எனது மாமனாருக்கு வழிகாட்டிய நாமக்கல் மகான் ஜட்சு அவர்களே !(நாமக்கல்லில் ஒரு மகான் !!)  நானும் எனது அண்ணன்மார்களின் பங்காளிசண்டைகளிலிருது விலகிக்கொள்ள அது மிக வசதியானது ! ஒரு தாய் வயிற்றில் பிறந்தவர்கள் ஒருவர் சொத்துகளை முன்னேபின்னே வைத்து கொண்டார் என்பதற்காக யுத்தம் செய்யலாகாது ! அதை விட விட்டுகொடுத்து விட்டு கடவுளை நம்பி நமக்கு உள்ளதிலிருந்து வாழ தொடங்கி விட்டால் நாம் எவ்வளவு விட்டுகொடுத்தோமோ அதை விட பல மடங்கு நமக்கு உண்டாகும் படியாக கடவுள் பார்த்துகொள்ளுவார் !அதில் சந்தேகமேயில்லை ! பங்காளிசண்டை போடுவதை விட விலகி செல்லுவதே உத்தமம் !அவர்களுள் குறைந்த படிப்பு படித்த எனக்கே முதலாவது நல்ல வீடு உண்டானது ! 10 ஆண்டுகளுக்கு மேலாக கார் வைத்துள்ள நபராகவும் உள்ளேன் ! இவையெல்லாம் கடவுள் மிச்சங்களை குடுத்தால் மட்டுமே சாத்தியமாகும் ! வரவும் வருவாய்க்கு அடங்கிய செலவீணமும் மிச்சங்களும் கடவுளின் கரத்திலேயே உள்ளது !

ஆனால் என் அண்ணன்மார்கள் வம்பு வழக்கடி ஒருவருக்கொருவர் தீங்கு செய்து கொண்டது முன்னோர்களின் பாவமே ஆகும் ! கடைசியாக சிவில் வழக்கில் போய் முடிந்து ஆளாலுக்கு பல லட்சம் செலவும் செய்தார்கள் ! என் சகோதர்களின் கேடுகளுக்காக மனம் வருந்தி பிரார்த்தனை செய்து வந்ததை தவிற எனது பல முயற்சிகள் வெற்றிபெறவில்லை !ஆனாலும் கடவுளின் கிருபையால் -எனது ஓயாத அறிவுரையால் அந்த வழக்கிலிருந்து எனக்கு மூத்தவரை தவிற மற்றவர்கள் விலகிக்கொண்டனர் ! சிவில் வழக்கும் பெரிய அண்ணனுக்கு சாதாகமாக தீர்ப்பு வந்தது ! அவரது இரண்டு பிள்ளைகளுக்கும் வேலை போட்டுகொண்டார் ! தற்போது ஓரளவு வெற்றியின் பேரில் முன்னேற்றங்கள் உண்டாகி உள்ளன ! அவரவர்கள் சமாதனமாகி அவரவர் பாதையில் உள்ளதை வைத்து நல்ல வாழ்வு வாழ்வார்கள் என்ற நம்பிக்கை உண்டாகி உள்ளது !

இந்த வழக்குகளால் அதிகம் பாதிப்படைந்த எனது பெரிய அண்ணா தற்போது அவைகளில் இருந்து ஏறக்குறைய மீண்டுவிட்டார் ! ஆகவே இனியும் உலக கடமைகளுக்காக அவர் பாடுபட வேண்டியதில்லை ! இப்போது அவர் கடுமையாக சுகவீணம் அடைந்து ஒரு வாரத்திற்கு மேலாக உண்ணமுடியாமல் மிகவும் மெலிந்து எழும்பும் தோலுமாகிவிட்டார் ! மருத்தவமனைக்கு வரமாட்டேன் என்றவரை வம்பாகத்தான் அப்பெல்லோவில் சேர்த்திருக்கிறார்கள் ! ரத்தம் வயதானதால் கெட்டுவிட்டது --டையலிஸ் செய்தால் சரியாகிவிடும் --அதற்கு சில சோதனைகளின் முடிவு வரவேண்டும் என்ற நிலை !

முடிவு காலம் நெருங்கிவிட்டால் அது சில வியாதிகளாக மனிதர்களுக்கு வெலிப்படுத்த படுகிரது !முன்பு காலங்களில் கடவுளை வேண்டிவிட்டு ஏற்றுகொள்ளுவார்கள் ! இப்போதோ பெரிய மருத்துவமனைகளில் மனதிருப்திக்காக சில லட்சம் செலவு செய்து குறிப்பிட்ட நேரத்தில் மரணத்தை அடைகிறார்கள்  !  இது அண்ணனுக்கு முடிவு காலமாகவே தெறிகிரது ! இந்த காலங்களில் ஒரு மனிதன் உலக காரியங்களை சிந்தித்து வருத்த பட்டுகொண்டிருந்தால் ஒன்றும் ஆகப்போவதில்லை ! ஆனால் இக்காலத்திலேனும் ஆத்துமாவிற்காக கடவுளை பிரார்திக்கிற வேலையை மட்டுமே செய்து கொண்டிருதால் அது அந்த ஆத்துமாவிற்கு நல்ல பலனை அளிப்பதோடு அவரின் சந்ததிக்கும் செயல்முறை பூர்வமாக நற்பலனளிக்கும் ! இதை ஏற்றுகொள்ளுகிற பக்குவம் அவருக்கும் புரியவைக்க சந்தர்ப்பமும் அருளும்படி பிரர்தித்து கொண்டே இருந்தேன் ! கடவுள் நாடினால் மரண காலம் வரை நோய் வாட்டாமல் அவரை காத்துகொண்டு நித்திரை அளிக்க முடியும் ! அவருக்காக பிரார்திக்கிறவர்களின் பிரார்தனையின் வேண்டுதலுக்கு கடவுள் நிச்சயம் செவிசாய்ப்பார் ! அப்படிபட்ட பிரார்தனையை ஏறெடுப்பதே நம்மால் செய்யகூடிய உதவி !

அவரிடம் பணியாற்றுகிற பல ஆசிரியர்கள் வரவும் போக்குமாய் இருந்தது !  நான் எதிர்பார்த்தது போல சந்தர்ப்பம் வந்தது !நானும் அண்ணாவும் மட்டுமே தனித்து விடப்பட்டோம் ! அப்போது பேசினேன் `` அண்ணா ! உன் கடமைகள் அனைத்தையும் மிக நேர்த்தியாகவே நீ செய்திருக்கிறாய் ! அப்பாவிற்கு நல்ல மூத்த மகனாக அவரது பாரத்தை சுமந்தாய் ! அவரின் இறுதி காலத்திலும் தொண்டு செய்தாய் ! அம்மாவையும் நீயே தூக்கி சுமந்தாய் ! சிவில் வழக்கும்முடிந்து உன் பிள்ளைகள் பதவியில் அமர்த்திவிட்டாய் ! திருமண காரியங்களும் முடிந்தது !நல்ல நிறைவான வாழ்வையே வாழ்ந்திருக்கிறாய் ! இனி உன் பிள்ளைகள் எல்லாவ்ற்றையும் பார்த்து கொள்ளுவார்கள் ! ஆகவே போதும் இனி உலக கடமைகளை எண்ணாதே ! உனக்காக உனது ஆத்துமாவிற்கு மட்டுமே நீ உழைத்தாகவேண்டிய தருணம் இது !இருக்கும் வரை கடவுளை பிரார்தித்து கொண்டு மறுமையை அடைய மனம் ஒப்பிக்கொள் அண்ணா என்று பேசிக்கொண்டிருக்கும் போதே கண்ணை மூடி புண்ணகை பூத்தவாறு இரு கைகளை கூப்பி பிரார்திக்க தொடங்கிவிட்டார் !எனக்கு மன நிறைவாய் இருந்தது !சிலர் மரணத்தை கண்டு பயப்படுவார்கள் ! அண்ணன் அப்படியில்லை ! இருக்கும் வரை பிரார்திக்கவும் செய்வார் ! மாலையில் டயலிஸ் செய்ய அழைத்தார்கள் !வேண்டாம் வீட்டிற்கு செல்வோம் என்றார் ! நானும் சமாதனப்படுத்தி அவரை தொட்டு தூக்குகிற சாக்கில் அவர் தலைமீது கை வைத்து பிரார்தித்தேன் ! அவரை உள்ளே விட்டுவிட்டு வெளியேஅமர்ந்து பிரார்தித்தவாரே இருந்தேன் !கடவுள் நாடினால் அவர் மரணம் வரை நோவில்லாமல் காத்து மரணம் தர முடியும் !மறுமையிலும் அவருக்கு நற்பேறுகள் தரமுடியும் !அவரை அருளுக்குள் புகுத்த முடியும் !

அறையில் சென்று தங்கியவாறு பிரார்தித்து கொண்டிருந்தேன் ! மறுனாள் அவரை காண சென்றபோது தெம்பாக தெளிவாக இருந்தார் ! சில நாளில் வீட்டிற்கு அனுப்புவதாக மருத்துவர்கள் சொன்னார்கள் ! அவ்வறு வந்த பிறகும் அவர் தொடர்ந்து பிரார்த்தனை வாழ்வில் இருந்து அருளுக்குள் நுழைய கடவுள் அருள் புரிவாராக ! அந்த நாள் வரை அவருக்காக பிரார்திப்பேன் !இதுவே அவருக்கு மற்றவர்கள் செய்ய வேண்டிய வழியனுப்புதல் ஆகும் !!