Total Pageviews

Monday, December 12, 2011

இறந்தவர்களை புதைக்கலாமா ? எரிக்கலாமா ?

                       மனிதன் ஆவி ,ஆத்துமா ,சரீரம் என்ற மூன்றால் ஆணவன்! சரீரம் என்பது ஸ்தூல உடம்பு; ஆத்துமா என்பது சூக்கும உடம்பு; இவை இரண்டும் தாய் தகப்பன்-- இரண்டு பரம்பரை பாவ புண்ணிய கணக்குகளுடன் ஜனித்து அதன் தொடர்பாக மேலும் செயல்படுகிற ஜீவாத்துமா ஆகும்! புதிதாக ஒரு பரம்பரையின் சில பாவ புண்ணிய பதிவுகளின் அடிப்படையில் உருவாகிற ஜீவாத்மாவும் இருக்கும் ஏற்கனவே பல முறை பிறந்து ; பிறவியில் உண்டான பாவ புண்ணிய பதிவுகளுக்கு ஒத்த பரம்பரையில் பிவி எடுக்கிற பழைய - நாட்பட்ட ஆத்மாவும் உலகத்தில் இருக்கும்

கடவுளின் ஆவியே நமக்குள் உயிராக ஓடிக்கொண்டு இருக்கிறது!அது நமக்குள் இயங்கும் வரை நாம் உயிரோடு இருக்கிறோம் நம்மிடமிருந்து ஆவியை கடவுள் எடுத்துக்கொள்ளும் போது நாம் மரிக்கிறோம் சரீரம் அழிந்து விடுகிறது!

அல் குரான்10:56. அவனே உயிர் கொடுக்கின்றான்; இன்னும், (அவனே) மரிக்கச் செய்கின்றான் - பின்னர் அவனிடமே (மறுமையில்) திரும்பக் கொண்டு செல்லப்படுவீர்கள்.
                       உயிர் தான் நான் என்பதாக சில ஆன்மீகவாதிகள் சொல்வது தவறு! உயிரும் நானல்ல அது கடவுளால் அருளப்பட்ட ஆவி!அவர் அந்த ஆவியை ஒவ்வொரு குழந்தையும் பிறக்கும் போது சுவாசமாக ஊதுகிறார்!அதை அவர் எடுத்துக்கொள்ளவும் செய்கிறார்!ஒரு மனிதனுக்கு அவனிடம் உள்ள பொருளில் கடவுளை நெருங்கிய ஒன்று அவனது உயிரே! அதனாலேயே அத்வைதம் கடவுளை உனக்குள்ளாகவே தேடு என்று சொன்னது அதாவது நமது உயிரோடு ஒன்றி தியானிப்பதும் கடவுளோடு ஒன்றுவதும் ஒன்றே எனக்குள்ளாகவே கடவுளின் ஆவி வாசமாகி இருக்கிறது என்பதை நானே கடவுள் வெளியே அவர் இல்லை என்பதாக சிலர் புரிந்து கொள்கிறார்கள் இதை ஞானம் என்றும் சொல்லிக்கொள்கிறார்கள்
                        சூக்கும சரீரமாகிய ஆத்துமா-- சூக்கும   உடம்பு மட்டுமே நான்!எனது பாவபுன்னிய பதிவுகள் எண்ணங்களின் தொகுதி இது! சரீரம் புதைக்கப்பட்ட பிறகு- சரீரம் அழிந்த பிறகு மண்ணுக்குள் சென்று செயல்பட முடியாமல் நித்திரையில் இருக்கும்!

அடுத்த பிறவி எடுக்கும் வரை இந்த ஆத்மா நித்திரையில் இருக்கும் இவர்களையே தென் புலத்தார் - பித்ருக்கள் என்கிறோம் பிறவி எடுக்க முடியாததும் ஒரு தண்டனை போல ! பித்ருக்களுக்கு புண்ணியாதானம் செய்வதன் மூலமாக அவர்களின் பரம்பரையினர் அவர்கள் பிவிஎடுக்க உதவ முடியும்

அல்லது பிறவி எடுக்காமலேயே - அல்லது யுக முடிவு சம்பவிக்கும் போது அப்போதுதான் இறந்து நித்திரையில் இருப்பவர்கள் நியாயத்தீர்ப்புக்காக உயிர் கொடுக்கப்பட்டு ஆவி சரீரத்தில் எழுப்பப்படுவார்கள்

                      நியாயத்தீர்ப்பு நாளன்று ஆத்துமாவிற்கு ஆவி அருளப்படும் போது ஆவிக்குரிய சரீரத்தில் உயிரோடு எழுப்பப்படும்! கல்கியினால் நியாயத்தீர்ப்பு அடைந்து கல்கி யுகத்திர்க்கோ நரகத்திர்க்கோ செல்லும்

யோவான் 5:28. இதைக்குறித்து நீங்கள் ஆச்சரியப்படவேண்டாம்; ஏனென்றால் பிரேதக்குழிகளிலுள்ள அனைவரும் அவருடைய சத்தத்தைக் கேட்குங் காலம் வரும்;
29. அப்பொழுது, நன்மைசெய்தவர்கள் ஜீவனை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும், தீமை செய்தவர்கள் ஆக்கினையை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும் புறப்படுவார்கள்.
------------------------இறந்தவர்கள் சரீரத்திற்குள் உண்மையான மனிதனாகிய ஆத்துமா செயல் பட முடியாமல் ஆனால் உணர்வோடு இருக்கும்! புதைத்து நாற்பது நாளளவில் சரீரம் அழிந்து விட்டது என்கிற உண்மையை உணர்ந்து மண்ணுக்குள் அவரவர்களுக்கென்று கடவுள் ஏற்பாடு செய்யும் இடத்தில் சென்று தங்கும் இதனை அறிந்தே ஆதி இந்து கொள்கை புதைத்து நாற்பது நாளில் நீர்சாந்தி ஒன்றை செய்கிறது! ஆனால் பின்னாளில் கலி அந்த மனிதனையும் துன்பப்படுத்தவே தீயிட்டு எரிக்க சூது செய்து விட்டான்!தீயிட்டு  எறிப்பது இறந்த பிறகும் உணர்வுள்ள ஆத்துமாவை வேகச்செய்து நரகத்தை போல ஒரு தண்டனையை கொடுத்து விடும்! வள்ளலார் இதனை உணர்ந்தே எரிக்க கூடாது என கட்டளையிட்டார்!
                      நியாயத்தீர்ப்பு நாளன்று மனித ஆத்துமாக்கள் உயிர்த்தெழுவார்கள் என்பதை உடல் உயிர்த்தெழும் என அறைகுறையாக புரிந்து கொண்டே யூதர்கள் க்ரிஷ்தவர்கள் முஸ்லீம்கள் அந்த உடலை பாதுகாப்பதாக நினைத்து கல்லறை கட்டி நிலத்தை விரையமாக்கும் பழக்கத்தை கடைபிடிக்கிறார்கள்! இது அஞ்ஞானமாகும்!

கல்லறை கட்டினாலும் சரீரம் நிச்சயம் அழிந்து விடும்! இயேசு கேவலமாய் திட்டிய வார்த்தை `வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளே `என்பது தான்! உள்ளே அழிந்து விட்டது என தெரியாத அஞ்ஞானத்தினர் கல்லறைகளை கட்டி அதனை வெள்ளையடித்தும் பாதுகாத்து வருகின்றனர்!ஆப்ராமின் சந்ததியிணருக்கு வேதம் தூதர்கள் மூலம் அருளப்பட்டாலும் அதனை புரிந்து கொள்ளாமல் சடங்காச்சாரமாகவும் லவ்கீகமாகவும் கடைபிடித்து அசுரனுக்கு இடம் கொடுத்தவர்களாகவே வாழ்கின்றனர் என்பதற்கு கல்லறை கட்டும் பழக்கமும் ஒரு சான்று!

ஆத்மா அழிவற்றது என்பதே வேதம் அருளிய சற்குருனாதர்கள் - ராமர் ; கிரிஸ்ணர் ; இயேசு அருளியது


சாதாரண மனிதர்கள் யுகங்கள் ; யுக முடிவு ; நியாயத்தீர்ப்பு மூலமாக அடுத்த சத்திய யுகத்தில் பிரவேசிப்பார்கள் என்றால் ஆத்மா சுத்தியடைந்த பரிசுத்த ஆத்மாக்கள் ஒளி சரீரம் உருவாக்கி கொண்டு ஸ்துல சரீரம் அவசியமற்ற ஒரு நிலையை பெற்று மரணமில்லா பெரு வாழ்வு பெற்று பூமியை கடந்து விண்ணுலகம் செல்கின்றனர் - வள்ளலாரைப்போல !!


இந்த உண்மையின் அடிப்படையிலேயே வள்ளலார் இறந்தவர்களை எரிக்கலாகாது என்றார் ! அப்படி எரித்தால் அதுவும் அந்த ஆத்மாவுக்கு செய்யப்பட்டு ஒரு தண்டனையே !


ஓரிறைவனையே துதிக்கிறோம்
நாராயணன் நாமத்தினாலே    
ஓம் நமோ நாராயணா !!
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி

ஓரிறைவனையே துதிக்கிறோம்
சிவனின் நாமத்தினாலே    
ஓம் நமோ சிவாய !!
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி

நாராயணனாய் வெளிப்பட்ட அந்த
ஓரிறைவனையே துதிக்கிறோம்
ஓம் நமோ நாராயணாய !
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி