Total Pageviews

Sunday, November 20, 2011

இறைபணி யார் செய்யலாம்???

பரம்பரை பூசாரிகள் கோவிலை ஆதிக்கம் செய்வது புத்தருக்கு முன்பிருந்த நிலை!அவர்கள் ராமரையும் க்ரிஸ்ணரையும் சிலைவழிபாட்டுக்குள் கொண்டுவந்து விட்டனர்!அந்த நிலையில் அதனை புத்தர் உடைத்தார்!துறவிகள் அருள்பணி செய்யும் நிலையை அறிமுகப்படுத்திணார்!அதுவும் பின்னாளில் சீர்கெட்டது!

யூதர்களிலும் இது நடந்தது கோவிலில் பணி செய்ய லேவியின் பரம்பரையினருக்கு மட்டும் உரிமை அளிக்கபட்டது!அவர்கள் அதனை வியாபாரமாகவும் வரட்டுத்தனமாகவும் சடங்காச்சாரமாகவும் மாற்றி கடவுளை பொதுமக்களிடம் விட்டு பிரித்தனர்!

புத்தரைபோலவே இயேசுவும் மதவாதிகளை கடுமையாக சாடியவர்!
மத்தேயு 23:13 மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, மனுஷர் பிரவேசியாதபடி பரலோகராஜ்யத்தைப் பூட்டிப்போடுகிறீர்கள்; நீங்கள் அதில் பிரவேசிக்கிறதுமில்லை பிரவேசிக்கப் போகிறவர்களைப் பிரவேசிக்கவிடுகிறதுமில்லை.
மத்தேயு 23:15 மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, ஒருவனை உங்கள் மார்க்கத்தானாக்கும்படி சமுத்திரத்தையும் பூமியையும் சுற்றித்திரிகிறீர்கள்; அவன் உங்கள் மார்க்கத்தானானபோது அவனை உங்களிலும் இரட்டிப்பாய் நரகத்தின் மகனாக்குகிறீர்கள்.
15. அவர்கள் எருசலேமுக்கு வந்தார்கள். இயேசு தேவாலயத்தில் பிரவேசித்து, ஆலயத்தில் விற்கிறவர்களையும் கொள்ளுகிறவர்களையும் துரத்திவிட்டு, காசுக்காரருடைய பலகைகளையும், புறா விற்கிறவர்களுடைய ஆசனங்களையும் கவிழ்த்து,
17. கடவுளின் வீடு எல்லா ஜனங்களுக்கும் ஜெபவீடு என்னப்படும் என்று எழுதியிருக்கவில்லையா? நீங்களோ அதைக் கள்ளர் குகையாக்கினீர்கள் என்று அவர்களுக்குச் சொல்லி உபதேசித்தார்.
---------இயேசுவின் காலத்தில் பரம்பரை ஒழிக்கபட்டது!அங்கும் துறவிகள் ஆதிக்கம் வந்து(RC) அதிலும் சீர்கேடுகள் வந்து கிரஹஸ்தர்கள் அருள் பணி செய்யும் நிலையாக தற்போது உள்ளது!(PROTESTANT)
-------தற்போது `குரான்` கோவிலை பொதுமக்கள் குழுவின் நிர்வாகத்திலும் வேதம் அறிந்தோர் இறைபணி செய்வதாகவும் வழிகாட்டியுள்ளது!காணிக்கை அனைத்தும் கோவிலுக்கே என்கிற நிலையை மாற்றி `ஏழைவரி`-தங்கள் வருவாயில் 2% ஏழைகளுக்கும்.கோவிலுக்கும் பகிர்ந்து கொடுத்தாலும் அது கடவுளுக்கு செலுத்தப்பட்ட காணிக்கையே என அங்கீகரித்துள்ளது!அருள்பணி செய்வோர் பொதுமக்களை ஏமாற்றி ஆளுகை செய்யாதிருக்கவே இந்த ஏற்ப்பாடு!
குரான்9:34. ஈமான் கொண்டவர்களே! நிச்சயமாக (அவர்களுடைய) பாதிரிகளிலும்,சந்நியாசிகளிலும் அநேகர் மக்களின் சொத்துக்களைத் தவறான முறையில் சாப்பிடுகிறார்கள்; மேலும் அல்லாஹ்வின் பாதையை விட்டும் (மக்களைத்) தடுக்கிறார்கள்; இன்னும் எவர்கள் பொன்னையும், வெள்ளியையும் சேமித்து வைத்துக் கொண்டு அவற்றை அல்லாஹ்வின் பாதையில் செலவிடாதிருக்கின்றார்களோ; (நபியே!) அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனை உண்டு என்று நன்மாராயம் கூறுவீராக!.









புத்தரின் உபதேசங்கள்!!!!

After killing mother (desire), father ("I am" conceit) and two warrior kings, and destroying the kingdom along with its
subjects, the brahmin goes on his way unperturbed.


After killing mother, father and two priestly kings, and killed a tiger as his fifth victim, the brahmin goes on his way
unperturbed.-----(Buddhist, Dhammapada - Sayings of the Buddha 1 (tr. J. Richards)
புத்தர் உருவகப்படித்தி சொன்ன அறிவுரை இது!ஒரு மனிதன் பிரம்மத்தை உணர்ந்த ப்ராமனன் ஆக மாற அவன் தனக்குள் உள்ள 5 விசயங்களை கொல்லவேண்டும்!
1)`ஆசை`--யாகிய தாய்!
2)`நான்`---என்ற ஆணவம்!-தகப்பன்!
3)&4) `வெற்றி தோல்வி` அல்லது`இன்பம் துன்பம்`--என்ற இரண்டு சண்டைக்கார ஆளுமை செய்கிற அரசர்கள்!
5)புலி--உலக வாழ்க்கைக்கு உழைப்பதன் அடையாளம்!
           --இந்த 5 காரியங்களை விட்ட ப்ராமனன் அல்லது துறவியை பாவம் பற்றாது!

புத்தரின் உபடேசங்களில் துறவறம் செல்வது தான் கடவுளை அடைவதற்க்கு பாதை என்பது இந்திய ஆண்மீகபாராம்பரியத்தில் இடையில் உண்டான ஒரு தீவிரவாத போக்காகும்!ஆதியில் முணிவர்கள் வனப்ரஸ்த வாழ்க்கையில் குடும்பமாகத்தான் ஈடுபட்டார்கள்!ஆசிரமங்களை அமைத்து கடவுளை தேடுவதுடன் மாணவர்களுக்கு குருகுல கல்வி போதிக்கும் பணியையும் செய்து வந்தனர்!ராமர், க்ரிஸ்ணர் மஹாபாரத காலத்தில் முணிவர்கள்,ரிஷிகள் தான் ஆண்மீக,உலக பிரச்சணைகளுக்கு பொதுமக்கள் நாடி செல்லுகிற இடமாக இருந்திருக்கிறது அரசர்கள் நீதி செய்தாலும் முணிவர்கள் தலையிட்டால் அதற்க்கு முகியத்துவம் கொடுப்பது மரபாக இருந்தது!
மஹாபாரத காலத்திற்க்கு பின் கோவில் வழிபாடும் அதில் பூசாரிகள் அர்ச்ச்கர்கள் ஆதிக்கமும் மிகுந்து இவர்கள் குடும்பஸ்தர்கள் ஆனதால் கோவில்கள் வியாபார ஸ்தலங்களாக மாற்றம் அடைந்தது இயல்பு!
`பிழைப்புவாதம் பெருகும் இடத்தில் கொள்கை ஓரம்கட்டப்படும்`
         இந்த காலகட்டதில் துறவறம் பிரபலப்படுத்த பட்டது!எனவே தான் புலியை--அல்லது மனிதர்களை ஆதிக்கம் செய்கிர பிழைப்புவாதம் என்கிற அரசை கொல்லவேண்டும் என்றார் புத்தர்!
புலி ஒரு மாட்டை அடித்து கொஞ்சம் சாப்பிட்டு விட்டு சென்று விடும்!அந்த உணவு தீரும் வரை மீண்டும் வந்து சாப்பிடும்!அதனால் இடையர்கள் புலி அடித்ததில் விசத்தை வைத்து விடுவார்கள்! புலி வந்து சாப்பிட்டு செத்துவிடும்!புலியை கொல்ல தேடி செல்ல வேண்டுவதில்லை!பிழைப்புவாதம் என்கிற புலியை கொல்ல தன் தேவைக்கு உழைப்பது நிறுத்தபடவேண்டும் என்றார் புத்தர்!புத்த துறவிகள் காலையில் சென்று முதல் வீட்டில் `பிச்சாந்தேகி`என்று வேண்டவேண்டும் உணவு கிடைக்கவில்லை என்றால் அன்று கடவுள் அருள் செய்ய வில்லையென்று பட்டினி இருக்க வேண்டும்! 
               1)`ஆசையே` எல்லா துன்பதிற்க்கும் காரணம்(பெண்ணாசை,பொன்னாசை,மண்ணாசை இந்த மூன்று ஆசைகளும் இந்த மனித சரீரத்தில் உறைந்து கிடக்கிறது!
               2)நான் என்ற ஆணவம் பிறரை அடக்கியாள,புகழ் விரும்பி காரியம் செய்ய,கடவுளை மறக்க,கடவுளுக்கு தன்னை இனைவைக்க --பாவத்திற்க்கு ஏதுவாகிறது!
               3&4)வெற்றியில் இன்பமடைவதும் தோல்வியில் துவண்டு போவதுமான இருமைகள் மனிதனை ஆளுமை செய்கிற அரசர்கள்!இக்கரைக்கு அக்கரை பச்சை என்பதுபோல இங்கும் அங்குமாக மனிதர்களை மாறிமாறி ஓடசெய்து கொஞ்ச காலம் திருப்தியடைய செய்து உண்மையை நோக்கி வளராதபடி ஏமாற்றுகிண்றன!மாறிமாறி ஆட்சிக்கு வரும் அரசியல் கட்சிகளைப்போல!`இருமைகள்`என்ற மாயைகள் பல உள்ளன!இவை மிகுந்த ஆபத்தாணவை!இந்த மாயைகளை கடப்பது `மனச்சமனிலை`அடைந்த நிறைபக்தனால் மட்டுமே முடியும்!இன்பத்தில் அவன் கடவுளுக்கு நன்றி செலுத்துகிறான் துன்பத்தில் அவன் வேண்டுதல் செய்து விட்டு தன் கடமைகளை செய்துகொண்டு துவளாமல் இருக்கிறான்!(கீதை 2:15)
5)புலி தன் இறைக்காக ஓயாது சுற்றிக்கொண்டே இருப்பதை போல உலக வாழ்க்கைகாக மட்டும் ஒயாது ஒடிக்கொண்டிருக்கும் நிலையிலிருந்து விடுபட வேண்டும்!
         -இந்த உபதேசங்கள் பின்னால் துறவறம் பூண்ட துறவிகள் நிறைய எளும்பி இந்தியா,இலங்கை, மங்கோலிய இணம் முழுமையும் ஆட்கொண்டது!ஆனால் உலக மாயையை காட்டி மனிதர்களை துறத்தி கொள்ளும் அசுரர்கள் ஆகிய புலிகள் இந்த புத்த துறவிகளை வீழ்த்திய விதம் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!
         ஆசைகள்,ஆணவம்,தன் உணவுக்கு உழைத்தல் ஆகியவற்றை விட்ட துறவிகள் தங்களின் எதிரி தங்கள் உடல் மட்டுமே அதனை வருத்தி அடக்குவதாக நம்பினர்!புத்தர் வெளியே உள்ள அசுரர்கள் இந்த இச்சைகளை தூண்டி மனிதர்களை வீழ்த்துவதை பற்றி எச்சரிக்கவில்லை!விளைவு உணவு தேடி வெளியே செல்லாத துறவிகளை தேடி உணவும் பொன்னும்பொருளும் வந்து சேர்ந்தது!அரசுகளில் அதிகார மய்யங்களாக மாற வர்மக்கலைகள் கற்றுக்கொள்ளப்பட்டன!
          இந்த நிலையில் புத்த துறவிகள் மாநாடு கூட்டி கடவுள் தான் புத்தராய் வந்தவர்!இதை இத்தனைனாள் கண்டுகொள்ளாமல் அஞ்ஞானிகளாய் இருந்துவிட்டோம்(ஹீணயானம்) என கொள்கை முடிவு எடுத்தார்கள்!அரூப கடவுளை புத்தரை குருவாய் வைத்து வழிபட்ட வரை(மஹாயானம்) அது கடவுளை உயர்த்தும் மார்க்கமாக செழித்தோங்கியது!அன்பை ,அஹிம்சையை வலியுறித்தியது!
          ஆனால் புத்தரையே கடவுளாக்கி நின்ற, படுத்த, தியானம் செய்கிற புத்த சிலைகளை நிறுவி புத்த மடங்கள் புத்த விவஹாரரங்களாக மாறிவிட்டன!அன்பை ,அஹிம்சையை போதித்தவர்கள் வர்மக்கலைகளை கொண்டு சண்டை போடும் அதிகார மய்யங்களாக மாறிவிட்டன!அதானால் இந்தியாவின் மக்கள் மனதை விட்டு அப்புறப்படுத்தப்பட்டனர்!
           ஆனால் ஆதிபுத்த மதம்(மஹாயானம்) இந்து மதத்தின் ஒரு பிரிவுதான் என்பதும் இந்தியதத்துவ ஞானத்தின் ஒரு மகுடம் என்பதும் மறுப்பதற்க்கில்லை!துறவறம் என்பதை மட்டும் விட்டுவிட்டு இல்லறத்திலேயே மனசமன்பாட்டை கடைபிடித்து அன்பு அஹிம்சையை கடைபிடிப்பதும்;  அருவ கடவுளை வழிபட்டு அசுரர்களின் மாயங்களை எதிர்த்து வெல்வதும் ஆதி இந்து மதத்தின் போதனையாகும்!
           --