Total Pageviews

Wednesday, October 26, 2011

தீபாவளி ---தத்துவ விளக்கம் !




நரன் என்றால் மனித சரீரத்தில் இயங்கிக்கொண்டிருக்கிறவன் !

மனித சரீரத்திற்குள் கடவுள் தனது ஆவியில் ஒரு துளியை ஊதியதே அவனின் உயிராகும் ! அது உயிராக ஓடிக்கொண்டு இருக்கும் வரையில் நரன் என்
கிற ஆத்மன் சரீரத்தில் இயங்கி வாழ்ந்துகொண்டிருப்பான் !

தனது உயிர் கடவுளின் ஒரு துளி  என்பதை மறந்து சரீர உணர்வுகளுக்கு ஆட்பட்டு தன்னை மனிதனாகவே கற்பனை செய்துகொள்ளுகிறது ஆத்மன் ! அத்தோடு பிரபஞ்சம் முழுவதும் விரவியும் நிறைந்துள்ள பரமாத்மாவின் ஒரு நீட்சியே தனது ஆத்மா என்பதையும் மறந்துவிடுகிறது

அதுவே  நரனாய் ஆனவன் நாராயணன் என்பது !!


சரீரத்தோடு சம்மந்தமடைந்து எல்லா ஆத்மாக்களும் சுயேட்சை அடைந்து தனித்த பிரகிருதியாக  ஜீவாத்துமாவாக மாறுபாடடைகிறது!


பண்றி என்பது உணர்வுகளை முகர்ந்து அதனையே உண்டு வாழ்வது !காட்டுபண்றி தரையை முகர்ந்து உள்ளிருக்கும் கிழங்கு வகைகளை கண்டறிந்து பூமியை தோண்டி கிழங்கை உண்ணுகிறது எந்த பண்றியும் முகற்சி உள்ளது!


முகற்சி எண்பது மோஹவகைப்பட்டதாகும்!இந்த மோஹத்தை உலகமும் உலகத்தை மோஹமும் காதலித்து நரனை நரகாசுரனாக மாற்றிக்கொண்டு உள்ளன!


நரனான மனிதன் உலக மாயையில் மூழ்கி `எதை நினைக்கிறாயோ அதுவாகவே மாறி` மோஹ வகைப்பட்டவனாய் உலக பந்தத்தில் மாட்டிகொள்ளுகிறான்!

உலக பந்தத்தில் மாட்டிகொண்ட நரனை `1)ஆணவம்2)கண்மம்3)மோஹம்4)மதம்5)மாச்சரியம் என்கிற அய்ந்து மாயைகளை பறப்பி வானமண்டலத்து அசுரர்கள் அரக்கனாய் மாற்றுகின்றனர்!


உலகில் கொடுங்கோலர்கள் துன்மார்க்கர்கள் இருப்பார்கள் என்றால் அவர்களுக்கு அசுரர்களின் சிறப்பு அபிசேகம் இல்லாமல் கொடுமை செய்வதில்லை!

கடவுள் தனது தூதர்களை அனுப்புவது போல் அசுரர்களும் தனது தூதர்களை பூமியில் அவ்வப்போது அனுப்புகிறான்!கடவுள் பணமும் பதவியும் கொடுத்தால் அந்த மனிதனுக்கு ஆணவத்தையும் அக்கிரமத்தையும் அசுரர்கள் உபதேசித்து அரக்கர்களாய் மாற்றுகின்றனர்!


நரன் +அசுரன் =நரகாசுரன் !!

நரன் தன்னை நாராயணனின் அங்கம் என்பதையும் மறந்து உலகை மோஹித்து பணமும் பதவியும் அடைந்தவுடன் அசுரர்களுடன் கலந்து நரகாசுரனாக மாற்றம் அடைகிறான்!அதனால் தான் நரகாசுரனை நாராயணனாலும் கொல்ல முடியவில்லை என்பது!


நாராயணனின் மனைவி உயிர்த்தடமாகிய தொப்புளில் தாமரையில் வாசமாயிறுக்கிரவள்! தாமரை என்பது தான் இருக்கும் தண்ணீருடன் சம்மந்தம் கலவாதது ! இவ்வுலகத்திலேயே இருந்தாலும் சரீரத்திலேயே இருந்தாலும் அதில் பட்டும் படாமலேயே உயிரானது ஓடிக்கொண்டு உள்ளது ! ஏனென்றால் உயிரானது கடவுளின் ஆவியின் ஒரு துளி ஆகும்!

எனவே அவளிடம்--உயிரிடம் மனிதன் ஒன்றி தியாணிது தான் சரீரமல்ல ;அது நிலையற்றது! தன் சரீரம் தேர் மட்டுமே !அதில் பயணிக்கும் அர்ச்சுணன் ஆகிய ஆத்துமா; க்ரிஷ்ணனாகிய இறைதூதனுக்கு அடையாளமாகிய தனது உயிரின் பின்னால் செல்லக்கூடியவனாக மாற வேண்டும்!


ஒரு மனிதனின் சரீரம் என்பது அசுரர்களின் ஆளுகைக்குட்பட்ட பொருளாக--உணர்வு வயப்பட்ட பிரகிருதியாக உள்ளது! அந்த சரீரத்தின் பின்னால் செல்லுகிற மனிதன் அசுரர்களால் ஆளப்பட்டு நரகாசுரனாக மாற வாய்ப்புகள் அதிகம் உள்ளன !

அப்படியில்லாமல் உயிரோடு ஒன்றி தியாணிக்கிற மனிதன்;மேலும் இறைதூதர்களின் உபதேசங்களில் அடிக்கடி ஸ்ணானம் செய்கிற மனிதன் தேரினை அடக்கி க்ரிஷ்ணனின் நண்பனாய் வெற்றி பெறுகிறவனாய் மாறுகிறான்!


உயிருடன் ஒன்றி தியாணிக்கிற தன்மை பெறுக பெறுக இறைஉணர்வு மனிதனுக்கு விருத்தியாகிறது! இப்படிப்பட்ட மனிதன் தனது பணம்,பதவியை அசுரனின் பேச்சை கேட்டு துஸ்பிரயோகம் செய்வதில்லை! நரகாசுரனாக மாறி விட்ட மனிதனை இத்தகைய மனிதர்களே அடக்குகிண்றனர்! மனித நேயம்,முற்போக்கான காரியங்கள் இறைஅச்சம் உள்ள மனிதர்களாலேயே தலைத்தோங்குகின்றது!


இருப்பினும் இந்த தத்துவத்தை நிணைவு கூர்வதற்கு நரகாசுரனை கொன்ற நாளாக `தீபாவளி` உருவகப்படுத்தப்படுகிண்றது! இது ஒரு உருவகமே! உண்மை நிகழ்சி என எடுத்துக்கொள்ள வேண்டுவதில்லை!

கங்கா ஸ்ணானம் என்பது நம்மை தூய்மை செய்ய இறைதூதர்களின் உபதேசங்களில் மூழ்கவேண்டும் என்பதுதான்!

கடவுள் நம் ஆத்துமாவில் ஒளி ஏற்றுவாராக!






மனிதனுக்குள் என்ன இருக்கிறது?

ஆவி ,ஆத்துமா ,சரீரம் -----என மூன்றும் சேர்ந்தது மனிதன் ----யூத ,கிறிஸ்தவ ,முஸ்லிம் வேதங்களின்படி !
உயிர் ,உடல் என வகைபடுத்தினாலும் சரீரத்தை ஸ்தூல சரீரம் ,சூக்கும சரீரம் என உட்பிரிவாக முறையே உயிர் ,சூக்கும சரீரம்,ஸ்தூல சரீரம் என மூன்றாக மனிதனை வகைப்படுத்துவது இந்திய வேதம் !மனிதனின் மனம்  உயிரில் நிலை பெரும் போது மெய்அறிவு  விளித்துகொள்ளும் ஏனன்றால் உயிர் -கடவுளின் ஆவியில் ஒரு துளி மனிதனுக்கு உயிராக அருளப்படுகிறது!ஆத்துமா ,சரீரம் என்பது நமது தாய் தந்தையர் மூலமாக எல்லா பாவ புண்ணிய பதிவுகளுடன் வருவது !சரீரம் அழியக்கூடியது !ஆனால் ஆத்துமா அழிவில்லாதது (கீதை )--மனிதனை விட்டு அவனது உயிர் எடுத்துக்கொள்ளப்பட்டால் அவனது சரீரமும் ஆத்துமாவும் செயல்பட முடியாமல் நித்திரை அடைகிறது சரீரம் அழிந்தாலும் ஆத்துமா பூமிக்குள் நித்திரையிலிருக்கும்  நியாய தீர்ப்பு நாளன்று இதுவரை மனிதனாக வந்த எல்லா ஆத்துமாக்களும் ஆவி அருளப்படும்   சூக்கும சரீரத்தில் மீண்டும் உயிரோடு எழுப்பப்பட்டு அவரவர் செய்த செயலுக்கு நியாத்தீர்பு அடைவார்கள் !அதன் பிறகு தேரிய ஆத்மாக்களை கொண்டு கல்கியுகம் தொடங்கும் !இது தான் எல்லா மதங்களின் உள்ளார்ந்த அடிப்படை ! கடவுளின் நியாத்தீப்பு நாளை நம்புவது என்பதுதான் இறை அச்சத்திற்கு அடிப்படை !துன்மார்க்கர்களுக்கு இறை அச்சம் இல்லவேயில்லை !ஆத்துமா,சரீரத்தில் இச்சைகளை தூண்டி மனிதர்களை அசுரர்களால் ஆளுமை செய்ய முடியும் !அதனால்தான் கடவுளின் ஒரு பகுதியாகிய நமது உயிரில் நிலைத்து நின்று தியானம் ,யோகம் செய்யும் போது  ஆத்துமா; சரீர ஆளுகையிளிருந்தும் அசுரர்களின் மாயையிளிருந்தும் விடுபட தொடங்கி ஞானத்திர்க்குள் திரும்புகிறது !அத்தோடு  யூத ,முஸ்லிம் முறைமையின் படி கடவுளை நோக்கி இடைவிடாத பிரார்த்தனை அவசியம் !அதனால் தான் வல்ளலார் அருட்பெரும்ஜோதியை நோக்கிய பிரார்த்தனையை ஊக்குவித்தார் ! ஞான மார்க்கத்தில் திரும்புவோரை வளர விடாது தடுக்கிற அசுரர்கள் அப்படி வளர்ந்தால் அதையும் கெடுக்க  வைத்திருக்கிற மந்திரம் தான் உனக்குள்ளேயே கடவுள் இருக்கிறார் உன்னை நீ அறிந்து கடவுளாகிவிடு என்பது !தேவதூதர்களில் யார் நாங்களும் கடவுளுக்கு இனை ஆகி விட்டோம் என்றார்களோ அவர்கள் தான் அசுரர் ஆனவர்கள் !நியாய தீர்ப்பு நாளன்று தங்களுக்கு அழிவு நிச்சயம் என்பது அசுரர்களுக்கு நன்கு தெரியும் !கடவுளால் படைக்கபடுகிற மனிதர்கள் தங்களோடு அளிக்கப்பட வேண்டும் என்பதற்காகத்தான் இத்தனை மாயைகளை அசுரர்கள் செய்துகொண்டுள்ளனர் !அதில் கடைசி மாயை தான் ஞான மார்க்கதிர்க்கென்றே வைத்துள்ள உனக்குள்ளேயே தேடி நீயே கடவுளென்று உணர்ந்துவிடு என்பது !நாங்களும் கடவுளாகி விட்டோம் நீங்களும் கடவுளாகிவிடுங்கள் என்பது !சென்றுபோன தூதர்களை ,மகான்களை ,ஞானிகளை கடவுளாகி விட்டதாக சித்தரிப்பது !அவர்கள் பெயரால் பூமியில் அற்புதங்களை செய்து அவர்களை கும்பிட்டால் நல்லது நடக்கிறது ,அவர்களும் கடவுளாகிவிட்டனர் என நம்ப வைப்பது !இந்த மாயைக்குள் எல்லா மதங்களும் விழுந்து சீரழிந்து விட்டன !

சிவவாக்கியர்  எல்லா ஞானரகஸியங்களை சொல்லியபிறகு கடைசியாக சொன்னது :


ஓடி ஓடி   உட்கலந்த ஜோதியை
நாடி நாடி தேடியே நாட்களும் போயின !
கண்டவர் விண்டதில்லை
விண்டவர் கண்டதில்லையே !

மனிதனுக்குள்ளாக தேடுவதர்க்கு என்ன இருக்கிறது ?
கடவுளின் ஆவியில் ஒரு சிறு துளி மனிதனின் உயிராக இருக்கிறது !
அதற்க்கு மேலாக தேடிக்கொண்டே இருந்தால் நாட்கள் தான் விரையமாகுமே தவிர கடவுளை காணவே முடியாது !

பரப்பிரம்மம் ஆகிய கடவுள் முற்றுயிராக ---பரமாத்மாவாக ---அருட்பெரும்ஜோதியாக வெளியே இருக்கிறார் !எழு வானங்களுக்கு அப்பால் பரலோகத்தில்மையம் கொண்டு  உள்ளார் !நீக்கமற எல்லா இடங்களிலும் நிறைந்தும் உள்ளார் !  ஒரு மனிதனுக்கு கடவுளோடு மிகவும் தொடர்புள்ள பொருள் அவனது உயிரே !அந்த உயிரிலே நிலைத்துநின்றால் சரீரத்தின் பின் செல்லுகிற அவனது ஆத்மா உயிரின் பின் செல்லுகிற ஆத்மாவாக மாறும் !ஆனால் அது மட்டும் போதாது ;சரீர ஆத்மா ஜீவ ஆத்மாவாக தன்னை உணர்ந்து பரமாத்மாவோடு தொடர்பு கொள்ள பயிற்சிக்கு வரவேண்டும் !ஞான மார்க்கத்தில் வளர்ந்து மீண்டும் பக்தி மார்க்கத்தில் அருவ ,ஏக கடவுளை நோக்கி மனம் திரும்பிவிடவேண்டும் !அதுதான் விசிச்டாத்வைத நெறி !

புலால் உணவு உண்ணலாமா ?

உலகம் ஜலப்பிரளயதால் அழிந்ததாகவும் அப்போது ஒரு மனிதனின் குடும்பம் மட்டும் ஒரு பேழையில் தப்பித்ததாகவும் உலகம் முழுமையும் ஒரு கர்ணபரம்பரைக்கதை ஒன்று நிலவுகிறது .இக்கதையை யூதர்களின் வேதமான பைபிளும் .அரபியர்களின் வேதமான குரானும் ,இறைதூதர் நோவாவின் குடும்பம் மட்டுமே பிரளயத்தில் தப்பிய வரலாற்றை பொழிப்புரை செய்கின்றன !லெமூரிய கண்டம் என்ற ஒன்று கடல் கொண்டது என திராவிட வரலாறும் ஒப்புகொள்கிறது ! 5000 வருடத்திர்க்கு முன் மோசே என்கிற இறைதூதர் நோவா என்கிற இறைதூதரைப்பற்றி ஆதியாகமம் 4-9 அதிகாரத்தில் எளிதியுள்ளார் !பிரளயத்தில் தப்பிய நோவாவுடன் கடவுள் பேசியதாக கீல்கண்ட வசனங்கள் வருகின்றன :
ஆதியாகமம்  9 அதிகாரம்

    1. பின்பு தேவன் நோவாவையும், அவன் குமாரரையும் ஆசீர்வதித்து: நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்புங்கள்.

    2. உங்களைப்பற்றிய பயமும் அச்சமும் பூமியிலுள்ள சகல மிருகங்களுக்கும், ஆகாயத்திலுள்ள சகல பறவைகளுக்கும் உண்டாயிருக்கும்; பூமியிலே நடமாடுகிற யாவும், சமுத்திரத்தின் மச்சங்கள் யாவும், உங்களுக்குக் கையளிக்கப்பட்டன.

    3. நடமாடுகிற ஜீவஜந்துக்கள் யாவும், உங்களுக்கு ஆகாரமாய் இருப்பதாக; பசும் பூண்டுகளை உங்களுக்குத் தந்ததுபோல, அவைகள் எல்லாவற்றையும் உங்களுக்குத் தந்தேன்.

    4. மாம்சத்தை அதின் ஜீவனாகிய இரத்தத்தோடே புசிக்கவேண்டாம்.

    5. உங்களுக்கு ஜீவனாயிருக்கிற உங்கள் இரத்தத்திற்காகப் பழிவாங்குவேன்; சகல ஜீவஜந்துக்களிடத்திலும் மனுஷனிடத்திலும் பழிவாங்குவேன்; மனுஷனுடைய ஜீவனுக்காக அவனவன் சகோதரனிடத்தில் பழிவாங்குவேன்.

    6. மனுஷன் தேவசாயலில் உண்டாக்கப்பட்டபடியால், மனுஷனுடைய இரத்தத்தை எவன் சிந்துகிறானோ, அவனுடைய இரத்தம் மனுஷனாலே சிந்தப்படக்கடவது.

    7. நீங்கள் பலுகிப் பெருகி, பூமியிலே திரளாய் வர்த்தித்து விருத்தியாகுங்கள் என்றார்.


--------------------------------------------------------------------------------------------------
தாவரங்கள் அனைத்திற்கும் உயிர் இருக்கிறது .அவற்றை கொன்றுதான் உண்டுவருகிறோம் !உயிர்க்கொளையிலாத உணவு என்று எதுவுமே இல்லை !ஒரு பயிரை அறுக்கும் போது அது வேதனைப்படுகிறது ! தாவரங்கள் உறங்குகிறது; விழிக்கிறது; உணவு தயாரிக்கிறது:நல்ல இசைக்கு மங்குகிறது என்று கூட விஞ்ஞானம் கண்டுபிடித்திருக்கிறது !ஒவ்வொரு தாவரத்திர்க்கும் ஒரு குறிப்பிட்ட குணம் ---தாது உண்டு !சித்த வைத்தியம் என்பதின் அர்த்தம் ஒரு குறிப்பிட்ட வியாதி குறிப்பிட்ட குணத்தால் வருவது ;அதனை குறிப்பிட்ட குணம் உள்ள மூலிகைகளை கொடுப்பதன் மூலமாக குணமாக்கலாம் என்பதுதான் !அகத்தியர் முதலான மாமுனிவர்கள் மூலிகைகளின் குணங்களை ஆய்ந்தறிந்து வகைப்படுத்தியுள்ளனர் !நல்ல குணங்கள் மட்டுமல்ல கெட்ட குணங்களை உண்டாக்கும் மூலிகைகளும் உண்டு !ஒரு மூளிகையையை அளவுக்கு அதிகமாக சேர்த்தாலும் கெடுதல் உண்டாகும் !


ஓருயிர் முதல் ஐந்தறிவு மிருகங்கள் வரை எல்லாமும் உயிரினமே !மிருகங்கள் பாலுட்டி வளர்ப்பதால் மனிதனை நெருங்கிய படைப்பு மட்டுமல்ல அவைகளின் மீது மனிதனுக்கு விருப்பும் &வெறுப்பும் வருகிறது !அவற்றின் ரத்தத்திலிருந்து ஊரும் பாலை (ரத்தத்தையே ) குடிக்கும் மனிதன் அவற்றின் அளியப்போகிற உடல் மீது மட்டும் என்ன பரிதாபம் ?உடல் மீது அன்பு செலுத்தும் மனிதன் முதலில் அதன் பால் மீதும் அன்பு செலுத்த வேண்டுமல்லவா ? மிருகத்தை விட கீழ் அறிவுள்ள பயிர்களும் மீதும் அன்புசெழுத வேண்டாமா ?
வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாட வேண்டாமா ?இறை உணர்வில் வளர்ந்து முற்றியதால் வல்ளலார் வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடும் நிலைக்கு வந்தார் .நமக்கு அந்த வளர்ச்சி ஏற்படததாலேயே மிருகத்தின் அவலக்குரலை மட்டும் கேட்டு கலங்குகிற நிலையில் உள்ளோம் !அதுவுமற்ற கல்நெஞ்சக்காரர்களை விட நமக்கு நல்ல மனம் ---இளகிய மனம் என்பதை ஒத்துக்கொள்கிறேன் .ஆனால் குழந்தையாகவே இருப்பது சவ்கரியம்; ஒன்னாங்கிலாசுக்கு மட்டுமே போய் வருகிறேன் என்றால் தலைவாரி பூச்சூடி அனுப்பி வைப்போமா ?அது போல அன்பிலே வளர்ந்து எந்தப்பயிரையும் கொன்று உண்ணவே கூடாது என்று சொல்வீர்களானால் நானும் ஓ போடுவேன் !

ஆனால் தேவ ஞானமானது :
 3. நடமாடுகிற ஜீவஜந்துக்கள் யாவும், உங்களுக்கு ஆகாரமாய் இருப்பதாக; பசும் பூண்டுகளை உங்களுக்குத் தந்ததுபோல, அவைகள் எல்லாவற்றையும் உங்களுக்குத் தந்தேன்.

    4. மாம்சத்தை அதின் ஜீவனாகிய இரத்தத்தோடே புசிக்கவேண்டாம்.
------------நன்கு கவனியுங்கள்! ரத்தத்தை புசிக்கலாகாது!அது தரையிலே சிந்தப்படவேண்டும் !ரத்தத்தை தரையிலே ஊற்றிவிட்டால் அதன் ஜீவன் தரைக்குள் சென்று சாந்தியடைந்து விடுகிறது .பயிரை அருத்தவுடன் அதன் ஜீவன் வேர் வழியாக தரைக்குள் சென்று சாந்தியடைவதைப்போல !ரத்தமில்லாத மாமிசமும் பயிரும் ஒன்று தான் !
அசைவம் ----ஜீவன் கலந்த உணவு !மிருக ஜீவனை உட்கொண்டால் மிருகத்தன்மை மனிதனிடம் கூடி ஒருவரை ஒருவர் அழித்து வாழ்கிற மனநிலை வந்துவிடும் அதனை மட்டுபடுத்த சாத்வீக உணவு சைவ உணவு என்று ஞானிகள் சொன்னார்கள் !அவர்களின் குறிக்கோள் மிகவும் உயர்ந்தது !மனித அறிவாள் விளைகிற ஞானம் ---ஞானிகள் ,மகான்கள் தாங்கள் முயற்சியால் எட்டுகிற ஞானம் குரையுள்ளது !முற்றரிவாலனாகிய கடவுள் ஒருவரே தனது தூதர்கள் மூலமாக முற்றரிவை வெளிப்படுத்த வல்லவர் !நோவாவின் காலம் பல யுகத்திற்கு முன்பு !கடவுள் கொடுத்த வேதம் --அறிவுரை இது !ரத்தமாகிய ஜீவனை தரையிலே ஊற்றிவிட்டு ,தண்ணீரில் கழுவி மாமிசத்தை புசிப்பதும் சைவ உணவே !ஒரிஜினல் அக்மார்க் சைவ உணவே !ரத்தத்தை புசிப்பதும் குடிப்பதும் மிருக ஜீவனை மனிதனுக்குள் கலந்து அவனை அரக்கனாக --அசுரர்களுக்கு எளிதில் இடம் கொடுக்கிரவனாக மாற்றிவிடும் !

மோசே மூலமாக கொடுக்க பட்ட வேதத்தில் இன்னும் தெளிவாக ரத்தகலப்பற்ற உணவுக்கு வழிமுறை சொல்லப்பட்டுள்ளது !

1)தானாய் செத்தது ,பிரமிருகங்களால் பீறுண்டு செத்தது ,விபத்தில் அடிபட்டு செத்தது இவைகளும் உன்னலாகாது
 2)மிருகங்களில் உன்னத்தகுதியானவை என்பதற்கு ஒரு வரையறை ------அது அசை போடவேண்டும் !

அசை போடுகிற மிருகங்கள் என்றால் அது தாவர பட்சி மட்டுமே !மிருகத்தை மிருகம் அடித்து சாப்பிடுபவை ரத்தத்தோடு மாமிசத்தை பட்சிக்கிரவை !அதனை உன்னலாகாது !

அசை போடுகிற மிருகங்கள் எல்லாவகையான மூலிகைகளையும் முதலில் மேய்ந்து அரைகுறையாக முளிங்கிவிடும் .பிறகு தண்ணீரும் குடிதுவிடும் .பிற்பாடு ஒரு இடத்தில படுத்து தான் உண்டவைகளைஎல்லாம் வாய்க்கு கொண்டுவந்து அசைபோட்டு நன்கு அரைத்து அதனை சரிவிகித உணவாக ---சித்த வைத்தியர் சகல மூலிகைகளையும் கல்புடமிடுவதைப்ப்போல் -----மாற்றி பின்னர் செரிமானத்திற்கு அனுப்புகிறது !அதனால் உருவாகும் மாமிசமும் ,பாலும் ஜீவனிளிருந்து உருவாக்கப்படும் கனிகளைப்போன்றவையே !தாவரத்தின் விளைவை போல ,பல தாவரங்களை உண்ட ஜீவனின் விளைவை மட்டுமே உண்ணவேண்டும் என்பது இறைவனின் அருட்கொடையாகும் !மனிதனின் ஆதிதொளிலே விவசாயமும் ,கால்நடை வளர்ப்பும்தான் !சொல்லப்போனால் கால்நடைகளுக்கு மேய்ச்சல் தேடித்தான் மனிதன் உலகம் முழுமைக்கும் குடிபெயர்ந்து பரவிசென்றான் .இந்த இரண்டும் மனிதனின் உழைப்பால் விளைந்த செல்வங்கள் மட்டுமல்ல ;அவனின் உணவுக்கு உரியவையே !


அசை போடாதவைகள் 1)பன்றி 2)முயல்3)சகலவித காட்டு மிருகங்கள்


1 & இரண்டும் விரைவில் அளுகக்கூடியவை.பன்றிக்கு தனியாக தோல் இல்லை சதையிளிருந்து தொலை பிரிக்கமுடியாது !எளிதில் கிருமிகள் உட்புகுந்து உயிரோடு இருக்கும் போதே புழு இருக்கும் முயலும் அப்படியே இவைகளை உண்டால் மனிதனின் மாமிசமும் விரைவில் நோய்வாய்ப்படும் !இந்த உண்மை தெரியாமல் ---பைபிளை கையிலே வைத்திருந்தாலும் அருவருப்பான நாட்டுபண்ணியைத்தான் கடவுள் உன்னவேண்டாம் என சொல்லியிருக்கிறார் என சாக்கு சொல்லிக்கொண்டு வெள்ளைப்பன்னியாய் விரட்டிவிரட்டி உண்பார்கள் ---இது தவறு !

மனித ஞானத்தால் தாவரவுணவு மட்டுமே சைவ உணவு என தீர்மானித்தது மட்டுமல்ல தங்களை சாதாரண மனிதர்களை விட புநிதர்கலாக காட்டிகொள்ளவும் ,உயர்வுதாழ்வு உண்டாகவும் சிலர் பயன்படுத்திக்கொண்டனர் !மனிதன் மீது அன்பு செலுத்துவது கடவுள் மீதான பக்தியின் வெளிப்பாடு என்று சொன்னால் தாங்கள் மிருகங்களின் மீதும் அன்பு செலுத்துகிறவர்கள் என சுயநீதி பாராட்டவும் பயன்படுத்துகின்றனர்


கிராமத்திலே கேளுங்கள் ---மனிதனுக்கு எந்தெந்த உருப்பிலே வியாதியோ ஆட்டின் அந்த உறுப்பை உண்டால் அந்த வியாதி குனமாகுமென்பார்கள் !இது அனுபவ கைமருந்து ஆகும் !ஏழைகளுக்கு எளிய செலவில் சரிவிகுதி சத்துணவு புலால் உண்பதுதான் !

தெளிவுரை :
1)ரத்தத்தை விலக்கிய புலால் உணவு சைவ உணவே !
2)தானாய்செத்தது ,பீருண்டுசெத்தது.அடிபட்டுசெத்ததை உன்னலாகாது!
3)அசை போடாத எந்த மிருகத்தையும் உன்னலாகாது!
4)இருப்பினும் முடிந்த அளவு தாவர உணவே சிறந்தது !

ஒரு ஹதீசுக்கு விளக்கம்

3275. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ரமளானுடைய ஸகாத் பொருளைப் பாதுகாத்திடும் பொறுப்பை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னிடம் ஒப்படைத்தார்கள். அப்போது (இரவில்) ஒருவன் வந்து அந்த (ஸகாத்) உணவுப் பொருளை அள்ளலானான். உடனே, நான் அவனைப் பிடித்துக் கொண்டேன்; 'உன்னை அல்லாஹ்வின் தூதரிடம் இழுத்துச் சென்று முறையிடுவேன்" என்று கூறினேன். (அறிவிப்பாளர் முழு நிகழ்ச்சியையும் விபரமாகச் சொல்கிறார்..) இறுதியில் அவன், 'நீங்கள் படுக்கைக்குச் செல்லும்போது ஆயத்துல் குர்ஸீயை ஓதுங்கள். (அவ்வாறு ஓதினால்) உங்களுடன் பாதுகாவலர் (வானவர்) ஒருவர் இருந்து கொண்டேயிருப்பார். காலை நேரம் வரும் வரை ஷைத்தான் உங்களை நெருங்க மாட்டான்" என்று என்னிடம் சொன்னான். (இதை நபி(ஸல்) அவர்களிடம் சொன்னபோது,) 'அவன் பொய்யனாயிருந்தும், உங்களிடம் உண்மை பேசியுள்ளான். அவன் ஷைத்தான் தான்" என்று கூறினார்கள்.
Volume :3 Book :59

இதைப்பற்றி இன்னும் விரிவாக நான் சொல்லுகிரேன்:
முதல் நாள் இரவில் ஒருமனிதன் தானியத்தை வந்து அள்ளும்போது அபூ அவர்கள் தடுத்து வா உள்ளே நபியிடம் கொண்டு செல்வேன் என இழுத்த போது `தன் பிள்ளைகள் வறுமையில் வாடுவதால் இப்படி திறுடினேன் என சொன்னபோது மனம் இளகி விட்டுவிட்டார்!காலையில் நேற்றிரவு என்ன நடந்தது என நபி கேட்டார்கள்.அப்போது நபி அவன் பொய் சொல்லி உன்னை ஏமாற்றிவிட்டான் என சொன்னார்கள் அண்றிரவும் அதுபோல நடந்தது இரக்கபட்டு விட்டுவிட்டர் அபூ! மறுநாள் நேற்றிரவும் விருந்தாளி வந்தானா எனக்கேட்டு இன்றைக்கு வந்தால் விடாதே என எச்சரித்து விட்டார்!அன்றும் அதுபோல விருந்தாளி வந்தவுடன் அபூ உறுதியாய் பிடித்துக்கொண்டு நபியிடம் இழுத்த போது குர்ஸ்ஹியை ஓதும்படி கூறியவுடன் விட்டுவிடுகிறார்! ஆகா குரானை ஓதும்படி சொல்கிறானே நமது  ஆள் என்று நம்பி விட்டார் மறு நாள் மீண்டும் விசாரித்து விட்டு நபி பெருமானார் உண்மையை உரைத்தார்கள்:வந்தது சாத்தானென்று!

இதில் கற்றுக்கொள்ள வேண்டுவது?

நீங்கள் சொல்லுவது குர்ஸ்ஹியை ஓதினால் தேவதுதர்கள் பாதுகாப்பு கொடுப்பார்கள் என்பது மட்டுமே!
ஆனால் கீதையின் சாரத்தை புரிந்த என் விளக்கத்தை கேளுங்கள்
1) நபி அவர்கள் பீடத்தில் அமர்ந்திருக்கிற பள்ளிவாசலுக்கே சாத்தான் வருகிரான்.

 2)அங்கு பண்டிகைக்காக சேர்த்து வைத்திருக்கும் தானியத்தை குறைவடைய செய்ய முயற்சி செய்கிரான்.

3)திரும்பதிரும்ப பொய் சொல்லியாவது இரக்கத்தை தூண்டி தனக்கு இடம் கொடுக்க முயற்சி செய்கிரான்

4)பிடி பட்ட போது குரானின் சிறப்பையே சொல்லி தப்பிக்கொள்ளுகிறான் . சாத்தானும் வேதம் ஓதும் என்பதை நிரூபிக்கிறான் 

1)எவ்வளவு அருள் ஆற்றல் நிறைந்த இடத்திர்க்கும் -மனிதனிடத்தும் சாத்தான் வருவான்! தனக்கு  இடம் கொடுக்க வைக்க  முயலுவான்

2)நமது நற்க்குணத்தினால் பிரார்த்தனையால் விளைந்த பலனை முடிந்தளவு குறைவடைய செய்ய முயர்சிசெய்வான்!

3)அதர்க்காக நமது பலகீனமான உணர்வுகளை பயன்படுத்துவான் -தூண்டி விடுவான் ஒரு முறை தவறு செய்து விட்டால் மீண்டும் மீண்டும் அதனையே தூண்டுவான் பாவசெயல்களுக்கு  ஆசை காட்டுவது மட்டுமல்ல;அதனை சுய சாக்கு சொல்லி அழகாக்கி காட்டிக்கொண்டே இருப்பான்

4)அப்படியே மீறி அப்பாவத்தை செய்யக்கூடாது என முடிவெடுத்தால் வேதத்தின் ஒருபகுதியை ஓதி நீ பெரிய குற்றவாளி உன்னை கடவுள் தண்டிக்காமல் விடமாட்டார் என குற்றம் சாட்டுவான்!அதனால் பாவ சுரனை அற்றுப்போய் முழுக்க
நனைந்து விட்டோமே முக்காடு எதர்க்கு என பலர் முழுக்குற்றவாளியாய்
போய்விடுவர்!

கொஞ்சம் கவனியுங்கள்:மூன்று நாளலவும் திரும்ப திரும்ப அபூ அவர்கள் நபி எச்சரித்தும் சாத்தானுக்கு துணை போய்க்கொண்டிருந்தார்!இரக்கபட்டு விட்டார்!நபி பொய் என்று சுட்டியும் இரக்கபட்டு விட்டார்!அவனை விடவே கூடாது என நபி கண்டித்தும் குரானை சொன்னான் விட்டுவிட்டேன் என்று சொன்னார்!

இரக்கபட்டு சாத்தானுக்கு ஒத்துழைத்தார் பின்னர் குரானுக்காகவும் ஒத்துழைத்தார்!


பிறகு குரானின் சிறப்பை சாத்தானே சொல்லிவிட்டான் அதனை நான் கண்டுபிடித்துவிட்டேன் என இந்த ஹதீசில் தம்பட்டம் அடித்தாரே தவிற தான் சாத்தானுக்கு ஒதுப்போனதை பற்றி கடைசிவரை புரிந்து கொள்ளவே இல்லை!
இப்படித்தான் குரானை மட்டும் படிக்கிரவர்கள் வாழ்க்கை அறைகுறையாய் போய் கொண்டு உள்ளது!முந்தய வேதமான கீதையை,பைபிளை குரானின் வெளிச்சத்தில் படித்து பின் கீதையின் வெளிச்சத்தில் பைபிளை குரானை படித்தால் நன்றாக புரிந்து கொள்ளமுடியும்

நாராயணன் நாமத்தினாலும் சிவனின் நாமத்தினாலும் சேஷனனின் நாமத்தினாலும் காமாஷியின் நாமத்தினாலும் கடவுள் தங்களையும் தங்கள் குடும்பத்தாரையும் தமது அருளால் நிரப்ப வேண்டுகிறேன்

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி

தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி