Total Pageviews

Sunday, September 4, 2011

ஞான மார்க்கத்தின் தோல்வி அதனால் வரும் அகந்தையில் இருக்கிறது !

தனித்தன்மை என்பதும் தன அறிவின் மீது நம்பிக்கை வைப்பதும் தன்னை உயர்த்துவதும் ஆணவத்தில் போய் முடியும் !முற்றரிவாளன் கடவுள் ஒருவரே !நம் அறிவைக்கொண்டே எல்லா செயல்களையும் செய்தாலும் தன் அறிவின் மீது நம்பிக்கை வைக்காமல் கடவுளின் மீதும் அவர் வழிகாட்டுதலின் மீதும் நம்பிக்கை வைக்கிறவன் கர்ம யோகி !ஞான மார்க்கத்தின் தோல்வி அதனால் வரும் அகந்தையில் இருக்கிறது !அந்த அகந்தைக்கு பதிலாக பக்தி யோகம் எளியதும் அநேகர் வெற்றி பெற்றதுமான மார்க்கமாகும் !விசுவாமித்திரர் திரிசங்கு சொர்க்கத்தில் நின்று போனார் என்பது ஞான மர்க்கதினருக்கு எச்சரிக்கையாகும்!

கடவுள் ஒருவரே :அவரே சகலத்தையும் படைத்தவர்!

கடவுள் ஒருவரே :அவரே சகலத்தையும் படைத்தவர்!

by Kirubanandan Palaniveluchamy on Sunday, August 28, 2011 at 4:23pm
ராமர் முதல் வல்ளலார் வரை எல்லா இறை தூதர்களும் கடவுள் ஒருவர் என்பதிலும் அவர்க்கு ஏற்ப்புடையவராக வாழ வழிமுறைகளையும் வாழ்ந்து காட்டி சொல்லி சென்றார்கள் !அவர்கள் வாழ்ந்த காலத்தில் உலகம் அவர்களை பலித்தது கொடுமைகள் பல செய்தது! அவர்கள் சென்று போனதும் அவர்களை கடவுளுக்கு இனை ஆக்கி ஒரு கும்பிடு போட்டால் மட்டும் போதும் என ஓரம்  கட்டி அவர்களின் ஓரிறை கொள்கையை குழி தோண்டி புதைத்து விடுகின்றனர்! சீடர்கள் தங்கள் பக்தியின் உச்சத்தை காட்டிகொள்வதாக குருவை கடவுளுக்கு இனை வைத்து கூட்டத்தோடு கூட்டமாய் கடவுளை காணாமல் போக செய்து வெறும் சடங்காகவும் மதமாகவும் மாற்றி தாங்கள் பிளைக்கும் வழியை உண்டாக்குகின்றனர்!இந்த செயல்பாடுகளின் பின்னணியில் ஆவி மண்டல அசுரர்கள் உள்ளனர் !

இந்தியாவிற்கு புதிய இறைதூதரை எதிர்பார்த்து பிரார்த்திப்போம்!

www.facebook.com/kirubanandan.palaniveluchamyநான் கடவுளிடத்து இருந்து வந்தவன்:பரம பிதாவிடத்து கேட்டதையே உங்களுக்கு அறிவிக்கிறேன் என்றார் இயேசு! மனித நேயமற்ற கடவுள்  பக்தி போலியானது,கடவுளின் பெயரால் மத குருமார்கள் ஆளுமை மற்றும் சுரண்டலை கடுமையாக சாடினார் !சகல ஜனங்களுக்கும் பிரார்த்தனை இல்லம் எனப்பட்ட கோவிலை கள்வர்கள் குகையாக்கிணீர்கள் என சாடினார் !பெரியார் கடவுளே இல்லை என்றார் இந்த ஒரு விசயத்தை தவிர சமூக சீர்திருத்தத்தில் 10 பெரியாருக்கு இயேசு சமம் என்பது அவர் வரலாற்றை படித்தால் ஒருவர் ஏற்றுக்கொள்வார்!ஆனால் இடை விடாது பக்தி மார்க்கத்தை அவர் போதித்தார் கேளுங்கள் கிடைக்கும் தட்டுங்கள் திறக்கப்படும் ஒரு சிறு பிள்ளையைப்போல் கடவுளிடது வாருங்கள் கடவுளுக்கும் உங்களுக்கும் இடையில் எந்த சுவரும் இல்லை என்றார் !வரப் போகிற கடவுளின் நியாயதீர்ப்பு நாளுக்கு அஞ்சுங்கள் என்றார் !இந்து மதம் எதிர்பார்த்து காத்திருக்கிற கலியுக முடிவு -கல்கியின் வருகை - நியாய தீர்ப்புசெய்ய பூமிக்கு கடவுளின் வருகை இவற்றை போதித்தார் !அன்பின் மூலமாக கடவுளுக்கு ஏற்புடையவராய் ஆகுங்கள் என அழைப்பு விடுத்தார் !அன்பு கொள்கை அவருக்கு 2000 ஆண்டுக்கு முற்பட்ட இறைதூதர் புத்தரின் கொள்கைக்கு மாறுபாடானது அல்ல !பிறப்பால் யாரும் ஏற்றதால்வானவர்கலல்ல எல்லோரும் கடவுளின் குழந்தைகள் என்ற புத்தரை; உணவில் விஸம் வைத்து மதவாதிகள் கொன்றது போல ஏசுவையும் மதவாதிகளே கொன்றார்கள் !ஆனால் தூதர்கள் சென்று போன பிறகு அவர்களின் சீடர்கள் அவர்களையே கடவுளுக்கு இனை ஆக்கி புத்த மதமாகவும் கிறிஸ்தவ மதமாகவும் மாற்றி அவர்களின் கொள்கையையும் குழிதோண்டி புதைத்து விட்டார்கள் ! கடவுள் ஜிப்ரீல் என்ற வானவரை -தேவ தூதனை அனுப்பி அபிசேகம் செய்து ஓதுவிராக என்ற கட்டளை வரப்பெற்ற பிறகுதான் முஹமது தன்னை இறை தூதராக அரிவித்தார் 40 வயது வரை மலை குகையில் ஒதுங்கி இடைவிடாது பிரார்த்திக்கிற இயல்புடையவர் ஆடுமேய்த வறியவர் படிப்பறிவு இல்லாதவர் சாமான்யர் என்பதைத்தவிர வேறு எந்த பக்கபலமும் இல்லாதவர் !அவர் சமூக சீர்திருத்த கொள்கை மற்றும் கடவுளுக்கு ஏற்புடையவராக மாறுங்கள் என பிரச்சாரம் செய்ய தொடங்கியவுடன் மத வாதிகள் அவரை கொல்ல வகை தேடினார்கள் தப்பி ஓடும படியாயிற்று !இவர்கள் கடவுளிடத்து இருந்து அதிகாரம் பெற்றதாலேயே தங்களை இறை தூதர்கள் என அறிவித்தார்கள் !எங்கெல்லாம் அதர்மம் பெருகி தலை விரித்தாட தொடங்குகிறதோ அப்போதெல்லாம் இறை தூதர்கள் வந்து சமூக சீர்திருத்தம் செய்வார்கள் என்பது தான் கீதை -இறை தூதர் கிருஷ்ணரின் மொழி !ஆனால் கிருஷ்னரை கடவுளாக்கி பிழைத்த சீடர்கள் அவதாரம் என கடவுளுக்கு இனை ஆக்கி கடவுள் மீண்டும் மீண்டும் பிறப்பார் என கீதையை திருத்தும் செய்து விட்டார்கள் !கிருஷ்ணரை மன நோக செய்து அவர் தியானத்தில் இருந்தபோது அம்பு போட்டு கொண்றார்கள்! கீதையின் மகா உன்னதமான கடவுள் நம்பிக்கைகொள்கை ,பாவம் புண்ணியம் தொடர்பான இறை அச்சம் ,ஞான மார்க்கம் கர்ம யோகம் பக்தி யோகம் குறித்த உபதேசங்களையெல்லாம் அமுக்கிவிட்டு கிருஷ்ணலீலைகளைப்பற்றிய புனை சுருட்டுகளை பிரபலபடுத்தி கும்பிட்டால் போதும் என மதமாக்கி சீரளித்து விட்டனர் !எல்லா இறை தூதர்களும் அவரவர்களின் சமுதாயத்தை அப்படியே புரட்டி போட்டார்கள் !இந்த நற்காரியங்கள் வெற்று இறை நம்பிக்கை என்ற பொய்யிலிருந்து உண்டாகவே முடியாது !எப்போதும் இருக்கிரவரும் சர்வத்தையும் உண்டக்கினவருமான கடவுளின் வல்லமையினாலேயே நடந்தது !அதன் பிறகு கடவுளுக்கு மாறுபாடான அசுரர்களால் இவை அனைத்தும் சீர் கெடுக்க படுகிறது !சீர் கேடுகளுடன் ஒரு புதிய பரிணாமம் எட்டிய பிறகு கடவுள் மீண்டும் இறை தூதரை அனுப்புவார் !ராமர் ,கிருஷ்ணர் ,புத்தர் ,மகாவீரர் ,குரு நானக் ,ராமகிருஷ்ணர் ,விவேகனந்தர் ,வல்ளலார், மகாத்மா காந்தி,பெரியார் என இறை தூதர்கள் அதிகம் வந்த பூமி நம் பூமி !உலகின் எல்லா மதங்களும் சொல்லும் நியாய தீர்ப்பு நாளை -கலி முடிவை எதிர்பார்த்து காத்து இருக்கும் பக்தியோக பூமி!பக்தி நெறியில் பொய்யும் புனை சுருட்டும் மதவாதிகளின் பிழைப்பு வாதமும் பெருகி வழிந்தாலும் சாதாரண பொது மக்களின் இதயத்தில் கடவுளைகுரித்த அச்சம் இருப்பதாலேயே இந்து என பெயர் முதன் முதலில் பைபிளில் தான் சுட்டப்பட்டது !இந்து என்றால் கடவுளுக்கு பயந்தவர்கள் என்று பொருள் 3500 வருடங்களுக்கு முற்பட்ட பைபிள் புத்தகமான எஸ்தர் வரலாற்றில் பாரசீக பேரரசு காலத்தில் இந்து தேசம் என குறிக்கப்பட்டது !இந்து மதம் எங்கும் தன்னை இந்து மதம் என அறிவித்துகொண்டதே இல்லை !எல்லா இறை தூதர்களின் நெறியையும் கலவையாய் உள்ளடக்கி அனேக திருத்தல்களையும் பொய்யையும் புனைசுருட்டுகளையும் உள்ளடக்கிய கலவை !அப்படியே கொள்ளவும் கூடாது தள்ளவும் கூடாது !ஆனால் உலகின் மற்றைய மதங்களை கடைபிடிக்கிரவர்களை விட உள்ளத்தில் கடவுளுக்கு உண்மையில் பயந்தவர்கள் பழிபாவத்திற்கு அஞ்சியவர்கள் இந்தியாவிலேயே அதிகம் உள்ளனர் !பெரியார் உள்ளத்திற்குள் கடவுள் மருப்பற்றவரா என தெரியாது !தான் கொண்ட கொள்கைக்கு உள்ளார்ந்த நேர்மையற்றவர்களை சுயமரியாதை அற்றவர்கள் என சொன்னார் !மத வாதிகள் அநேகர் உள்ளார்ந்த நேர்மையற்றவர்களாய் கடவுள் பேரை சொல்லி பிழைப்பு நடத்துவதை எதிர்க்க அனேக மூட பழக்கவழக்கங்கள் கடவுளின் பெயரால் நடப்பதை எதிர்க்க வேண்டி கடவுளே இல்லை என எதிர் மறையான கருத்தை சொன்னார் !மனிதனை நினைக்க சொன்னார் !ஆனால் இதுவும் கடவுளின் வல்லமையால் நடந்ததுதான் !எங்கெல்லாம் நற்காரியங்கள் நடக்கிறதோ அது கடவுளால் நடந்தது!எங்கெல்லாம் தீமை நடக்கிறதோ அது அசுரர்களால் நடக்கிறது !காந்தி அவர் தம் அஹிம்சை மற்றும் பிரார்தனை கொள்கைகளை அரசியலுக்கு- நாட்டின் விடுதலைக்கு பயன்படுத்தியவுடன் கொல்லபட்டுவிட்டார்!இல்லை என்றால் ஆன்மீக உபதேசங்களை செளுமையாக்கி உபதேசித்து இன்னும் அநேகரை மெய்யான கடவுள் நெறிக்கு அழைத்து சென்றிருப்பார்!ஆனால் அவர் கொல்லப்பட்டு கந்தியவாதம் என்பது கேளிக்கூத்தாக சாடப்படுகிற விசயமாக்கபட்டு மறக்கடிக்கவும் பட்டுவிட்டது!கடவுளை நம்புவதும் அவரின் தூதரை எதிர்பார்த்து பிரார்த்திப்பதும் இன்றைய காலகட்டத்திற்கு அவசியமாணது !





சுயம்பு சித்தன் இது சம்பந்தமான என் புரிதலையும் / கேள்விகளையும் இங்கு பதிகிறேன், விளக்கம் அளியுங்கள். தூதர்கள் என்று தனியாக யாரும் பிறப்பதில்லை. சற்று தெளிவான மனிதர்களை பொதுமக்களிடமிருந்து வேறுபடுத்தி காட்டவே தூதர் / அவதாரம் என்றெல்லாம் சொல்கிறார்கள். புதுத் தூதர் வந்து என்ன செய்வார்? புதுக் கருத்துகள் சொல்வாரா? தீயவரை அழிப்பாரா? பழைய தூதர்களின் கருத்துகள் காலாவதியாகி விட்டனவா?






Kirubanandan Palaniveluchamy
கடவுள் நாட்டம் உள்ளவர்கள் சாதனை செய்தவர்கள் அனைவரையும் ஆண்றோர்கள் சான்றோர்கள் ஞானிகள் சூபிக்கள் என எல்லா மதங்களும் குறிப்பிடுகின்றன ஆனால் கடவுளின் சிறப்பு அபிஷேகம் பெற்றவர்கள் புதிய பலனுள்ள செய்தியை கடவுளின் ஏவுதலால் கொண்டுவந்து நிலைநாட்டியவர்கள் தூதர்கள் தம்மை தூதர்கள் என்று அத்தாட்சியுடன் அறிவிப்பார்கள் அதுபோல் அசுரர்களின் தூதர்களும் உண்டு இவர்களுக்கு ஆவிமண்டல தேவ அசுரர்களின் பின்பலம் இருப்பதாலேயே பிரபலமடைகிறார்கள் மற்றவர்கள் சாதாரன மனிதர்களாகவே இருப்பர் கொடியவர்கள் ஆவி பலத்தால்தான் கொடுமை செய்ய முடியும் இல்லாவிட்டால் மனம் வராது
 சுயம்பு சித்தன் புரிவது போலத் தான் இருக்கிறது. நாம் ஆவிமண்டல தேவ அசுரர்களின் பின்பலம் பெற என்ன செய்ய வேண்டும்? நாம் தூதராக இருந்தால் நமக்கு எப்படி தெரியும்?

Kirubanandan Palaniveluchamy தேவர்கள்,அசுரர்கள் இருவரின் பின்பலத்தை எதிர்பார்க்க முடியாது !தன்னை சார்ந்துகொண்டால் எல்லாம் செய்வதாக அசுரர்கள் வாக்களிப்பார்கள் முடிவோ நரகம் !தேவர்கள் அழைக்கவே மாட்டார்கள் !கடவுள் ஒருவரே தஞ்சம் என்று வாழத்தொடனங்கினால் கடவுளின் ஏவுதலின் படி தேவர்கள் நம்மை பலப்படுத்துவார்கள் அசுரர்களால் ஆயிரம் நன்மை வந்தாலும் வேண்டாம் என்று இருக்க வேண்டும்

சுயம்பு சித்தன் நமக்கு மேலே உள்ள சக்தி எப்படிபட்டதென்று எப்படி நமக்கு தெரிய வரும்? என்னால் நாட்டில் இருக்கும் அரசியல்/மதத் தலைவர்களையே புரிந்து கொள்ள முடியவில்லையே?
Kirubanandan Palaniveluchamy
நாம் இறை தூதரக முயற்சிக்க முடியாது !நல்ல பக்தனாக கடவுளோட நடக்க முயற்சிப்பவனாக மட்டுமே இருந்தால் போதும் !சிறு சிறு பணிகள் நாம் செய்யும் படியாக -நம்மை கடவுள் பயன்படுத்துகிர அனுபவம் !புகழ் பாராட்டுகள் வரும்போதும் அதில் நாம் பெருமைபடாமல் `எல்ல புகழும் இறைவனுக்கே `என சமர்ப்பணம் செய்கிற கர்ம யோகத்திர்க்குள் நடத்தப்படவேண்டும் ,அப்போது தான் பக்தியும் கர்ம யோகமும் ஞான யோகமும் ஒன்றினைகிற மெய் ஞானத்திர்க்குள் நாம் நடத்தபடுவோம்!கடவுளால் நடத்தபடுகிற அனுபவமே ஒரு நல்ல பக்தனுக்கு போதுமானது ! நமது பிரார்த்தனைகள் கேட்கப்பட்ட அனுபவம் நமக்கு வரும்போது நன்றி செலுத்தவும் பழகிக்கொள்ளவேண்டும் நம் சொந்த வாழ்க்கை ஆசிர்வதிக்க படுவதை கண்கூடாக காணமுடியும் !நம்மை சுற்றிலும் ஒரு சலனம் இருப்பதையும் நம்மை விரும்பி நெருங்குகிற மனிதர்களையும் காணமுடியும் !அசுர்களால் இடரல்கள் பல வருவதுபோல் வந்தாலும் நம்மை நெருங்காமலேயே விளையாடி செல்வதையும் காணமுடியும் !எதிலும் நம் அறிவுக்கோ திறமைக்கோ முயற்சிக்கோ அவசியமே இல்லாமல் காரியங்கள் நடந்தேருவதை பார்வையாளனைப்போல் பார்துகொண்டிருக்கிற சுகானுபவம் கிட்டும் `நின்றும் கிடந்தும் நடந்தும் நினைப்பது உன்னை `--நல்ல பக்தனின் பாடல் வரி இது !வெளியே தெரியாமலேயே ரகசிய சிநேகிதனாய் உணரதொடங்குவோம் !பாரதியார் காதலனாய் உணர்ந்து பாடியதன் அனுபவம் கிட்டும் !எளிமையான பேசத்தெரியாத நல்ல ஆத்மாக்களை -நல்ல பக்திமான்களை கிராம புறங்களில் நிறைய தரிசித்திருக்கிறேன் !அவர்கள் நிறைவாய் வாழ்ந்தார்கள் நற்பேறு பெறுவார்கள் என்பதாகவே தெரிகிறது 

சுயம்பு சித்தன்
தெளிவான பதில். நான் ஏற்கும்படி உள்ளது. நன்றி. இதை செயலில் காட்ட நான் சிலமுறை முயன்றிருக்கிறேன். நீங்கள் சொல்வது போல சில அனுபவங்களும் கிடைத்தன. இந்தப் பாதையில் நான் சந்தித்த பிரச்னை ... கடவுளோ, பக்தியோ சில நிமிடங்களே என் மனதில் நிற்கிறது ... பிறகு அதற்கான இடமோ, நேரமோ வரும்போது மீண்டும் கொண்டு வர வேண்டியுள்ளது ... இடையில் நினைவு வந்தாலும் மனம் அதில் ஒன்ற மறுக்கிறது. இப்போதைக்கு, சில உடல், மனப பயிற்சிகள் செய்து கொண்டு மற்ற செயல்களில் யோகநிலைக்கு முயன்று வருகிறேன், அடுத்த கட்டத்திற்கு நான் தயாராகும்போது வழிகாட்டப்படுவேன் என்ற நம்பிக்கையோடு.






கடவுளை வேண்டுங்கள் !நம்பிக்கையோடு காத்திருங்கள் !ஏதேனும் நாம் திருந்த வேண்டுமா என கடவுளிடம் கேளுங்கள்! கடவுளோடு நடக்க கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது !கடவுளோடு இடைபட இடைபட வழிநடத்த படுவதை உணர முடியும் !மற்றும் கடவுளது இறை தூதர்கள் வாய் மொழியையும் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும் !
  

ஸ்ரீராம்-ஜெரோம் -ரஹீம்






(இங்கு க்ளிக் செய்து இசையை கேட்டுக்கொண்டே வாசிக்கவும்)
ஓம்- ஆமென்-ஆமீன் என்பதும் ஒரு அர்த்தமே! அதுபோல் ராம் -ரோம் -ரஹீம் என்பதும் ஒரு அர்த்தமே! ராம் என்றால் குமாரன் -பிள்ளை -கணக்குப்பிள்ளை போல ! கணக்குப்பிள்ளை முதலாளிக்காக எல்லா பொறுப்புகளையும் செய்கிறவர் ! அதுபோல் ஸ்ரீராம்-ஜெரோம் -ரஹீம்  என்றால் கடவுளின்பிள்ளை- கணக்குப்பிள்ளை அதாவது இறைதூதன் என்று பொருள் !

                        ஆதி  5 மொழிகளிலும் அவ்வப்போது வரபோகிற இறைதூதனை பற்றிய குறிப்பும் எதிர்பார்ப்பும் உண்டு உலகின் ஆதி 5 நதிக்கரை நாகரீகங்கலைப்பற்றி அறிவீர்கள் !ஆதி பாஷைகள் எல்லாம் கொஞ்சம்கொஞ்சம் வேறுபாடான உச்சரிப்புகளுடன் ஒன்றுபோல் இருப்பவை ! முதல் மனிதன் தமிழனே ! லெமூரியா கண்டத்திலிருந்து 5 நாகரீகங்களுக்கும் மனிதன் பரவி சென்றான் ! மொழி மருவி மாறினாலும் அடிப்படை மாறாமலேயே இருக்கும் !


எல்லா மனிதர்களோடும் கடவுள்  இறைதூதர்கள் மூலமாக இடைபட்டுள்ளார்  1300 இறைதூதர்கள் பூமிக்கு அனுப்பபட்டிருப்பதாக குரானில் சொல்லப்பட்டுள்ளது! `நாம் அநேக தூதர்களை பூமிக்கு அனுப்பியுள்ளோம்;நபியே அதில் சிலரைப்பற்றி மட்டுமே உமக்கு வெளிப்படுத்தியுள்ளோம்` என்ற வசணம் குர்ஆனில் உள்ளது
அவ்வாறு குர்ஆனில் குறிப்பிடப்படும் இறைத்தூதர்

அனைவரும் யூதர்களும் அரபியரும் மட்டுமே

அவர்களுக்கு யாரை தெரியுமோ அவர்களைப்பற்றி

 மட்டுமே இறைவன் பேசியுள்ளார்


இதனை ஆப்ரகாம் சந்ததி தவிர வேறு எங்குமே 

இறைத்தூதர் வந்ததில்லை என்பதுபோல 

கிறிஸ்தவர்களும் முஸ்லீம்களும் தவறுதலாக 

புரிந்து கொண்டு மிக அதிக எண்ணிக்கையில் 

இறைத்தூதர்கள் வந்து வளர்த்த இந்துதர்மத்தை 

கண்ணெடுத்தும் பாராமல் ஒதுக்கி வைக்கின்றனர்


கிருத யுகத்தில் ஆதாமும் ஏவாளும் ( சிவனும் 

பார்வதியும் ) முதல் ; முதல் ஜலப்பிரளயம் வரை 

வந்த அனைத்து இறைத்தூதர்களும் தமிழர்கள் 

என்பதும் அவர்கள் வளர்த்த ஆதிதர்மமே 

இந்துமதம் என்பதையும் அவர்கள் புரிந்து 

கொள்ளும் காலம் வந்திருக்கிறது இந்த 

பாரம்பரியத்தில் திரேதா யுகத்தில் ஸ்ரீராமரும் 

துவாபர யுகத்தில் கிரிச்னரும் கலியுகத்தில் 

இயேசுவும் பரமாத்மாவின் அவதாரமாக பூமிக்கு 

வந்தனர் 
ஸ்ரீராம் ஜெயராம் என்றால் கடவுளின் தூதர் 

அசுரர்களை வென்று ஜெயிப்பார் -அதர்மத்தை 

அளித்து தர்மத்தை பூமியில் நிலைநாட்டுவார் 

என்பதாகும் !ஜெயராம் தான் எபிரேய -கிரேக்கு 

பாஷையில் ஜெரோம் என உள்ளது !


பிள்ளை,குமாரன் என்கிற வார்த்தைகள் கடவுளின் தூதர்கள் என்கிற அர்த்தத்தில் எல்லா ஆதி மொழிகளிலும் பயன்படுத்த பட்டுள்ளது !ஆனால் இறைதூதர்கள் சென்றுபோன பிறகு அசுரர்கள் அதையே திருத்தி கடவுளுக்கு பிள்ளை என அவர் சொல்லிக்கொண்டார் ; உண்மை என்னவென எங்கள் அறிவால் நாங்கள் கண்டுபிடித்தோம் கடவுள்தான் எங்கள் ஆளாக வந்தார் என கடவுளுக்கு இனை வைக்கும் தவறுக்குள் மனிதர்கள் சென்று விடுகின்றனர்

அதுமட்டுமல்ல எங்கள் ஆள் மட்டுமே ஒரிஜினல் கடவுள் மற்றவர்களெல்லாம் பொய் என்றும் அவமதிக்கத்தொடங்குகின்றனர்

அசுர ஆவிகள்தான் இப்படிப்பட்ட பெருமைகளை கற்பித்து இவரை மட்டும் வழிபட்டால் போதும் அந்தக்கடவுளை வேறு எதற்காக கடவுளே என வழிபட வேண்டும்  என கற்பிக்கின்றன . கடவுளை வழிபடுவதை மட்டும் எப்படியாவது தடை செய்யவேண்டும் என்பது அசுரர்களின் நோக்கம்

தூதர்களின் உபதேசங்களை கடைபிடிக்க வேண்டியதில்ல ;குழிதோண்டி புதைத்து விடுங்கள்  இவருக்கு கூட்டத்தோடு கூட்டமாய் ஒரு கும்பிடு போட்டால் போதும் எல்லா நன்மைகளும் கிடைத்து விடும் என்கிற மாயத்தை பரப்புகின்றனர்!


இந்தியாவின் ராமன் முதல் புத்தர் வரை கடவுளாக்கப்பட்டதும் இயேசு இறை மகனாக்கபட்டதும் இவ்வாறே!எனவேதான் கணக்குப்பிள்ளை என்கிற வாசகத்தை பிரயோகப்படுத்தினேன்!பெரிய குடும்பங்கள் எல்லாவற்றிலும் சகல வரவுசிலவுகளையும் குடுக்கல் வாங்கல்களையும் கணக்குபிள்ளைகளே முதலாளிபோல நிர்வகிப்பார்கள்!ஆனாலும் அவர்கள் முதலாளிகள்ள! நம்பிக்கைக்கு பாத்திரமானவர்கள் மட்டுமே! இறைதூதர்கள் நிலையும் இதுவே!

இந்த கணக்குபிள்ளைகள் மூலமாக முதலாளியை அணுகினால் எளிதில்  அனுகூலம் பெறலாம்

அதற்காக முதலாளியையே  ஒதுக்கி வைத்துவிட்டு கணக்குபிள்ளையை மட்டுமே நம்பிக்கொண்டிருக்கலாகத்து

இதுபோல  ஒரு  நிலையே  எல்லா  மதங்களிலும் உள்ளது

அவர்கள்  இறைவனை  மறந்து விட்டு அவரால்  அனுப்பப்பட்ட  இறைத்தூதர் ஒருவரை இவர்தான் உண்மைக்கடவுள் என்று சொல்லிக்கொண்டுள்ளனர்

நியாயதீர்ப்பு நாளில் கடவுள் தூதர்களிடம் பூமியில் உங்களை வழிபடும்படியாக ஒரு கூட்டத்தை ஏற்படுத்திக்கொண்டீர்களா என கேட்கப்படும் எனவும் அப்போது `நாங்களே சதா உங்களை வழிபடுகிரவர்களாக இருக்கும் போது நாங்கள் எங்களை வழிபடும்படி இவர்களிடம் கூறி தவறிழைக்கவில்லை !அசுரர்கள் இவர்களை வழிகெடுத்தார்கள் எங்களுக்கும் இவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என கைவிரித்து விடுவார்களாம்` என எச்சரிக்கிறது குரான் !இயேசு சொல்லிய வார்த்தைகளும் இதுவே !


மத்தேயு
அதிகாரம் 7
21. பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கிக் கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை. 22. அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள். 23. அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை. அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.


                                         ஏசு இவ்வளவு எச்சரித்தும் இறைமகன் ஏசு என்கிற சாக்கில் அவரையே வழிபடுகிறவர்களாக கிறிஸ்தவர்கள் சீர்கெட்டு விட்டனர் !அல்லது கடவுளையும் அவரது குமாரன் ஏசுவையும் சேர்த்து கும்பிடுகிறோம் என்பார்கள் ! எங்கள் மதத்தில் சென்றுபோனவர்களை புனிதராக்கி நாங்கள் கும்பிடலாம் ஆனால் உங்கள் மதத்தில் சென்று போனவர்களை நீங்கள் கும்பிடக்கூடாது என மதச்சன்டையும் போடுவார்கள் !இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய அசுர மாயங்கள் தான் !

இறை தூதர்கள் உயிரோடு இருக்கும் வரையில் அவர்கள் கடவுளை நோக்கி மனிதர்களை ஏவிக்கொண்டிருப்பர் கடவுளது நன்னெறியை அறத்தை பரப்புவர் முந்தைய தூதர்களின் கொள்கைகளை ஏற்றுகொண்டு வளப்படுத்தி செளுமைபடுத்துகிறவர்களாயும் அதர்மத்தை விடுத்தது தர்மத்தை நோக்கியும்  கடவுளை நோக்கியும் அழைக்கிரவர்களாகவும் இருப்பர்!

கிருஷ்ணர் ஒருபோதும் ராமரை மறுக்கவில்லை !அதுபோல் முகமது ஏசுவை மறுக்கவில்லை !அவர்களின் கொள்கைகளை திரித்த அசுர மாயத்தையும் சீடர்களின் மதக்கிறுக்கையும் தான் மறுத்தார்கள் !மதப்பெருமையை மறந்து கடவுளுக்கு ஏற்புடையவராகுங்கள் என்றார்கள்!

கடவுளின் வல்லமை இத்தூதர்கள் மீது இருக்கும் என்பதால் சகல எதிர்ப்புகளையும் மீறி தூதர்களால் தர்மத்தை நிலைநாட்ட முடியும் !எனவே தான் இந்தியாவிற்கு புதிய இறை தூதர் வேண்டுமென பிரார்த்தித்து வருகிறேன் !


ஓரிறைவனையே துதிக்கிறோம்
நாராயணன் நாமத்தினாலே    
ஓம் நமோ நாராயணா !!
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி

ஓரிறைவனையே துதிக்கிறோம்
சிவனின் நாமத்தினாலே    
ஓம் நமோ சிவாய !!
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி

நாராயணனாய் வெளிப்பட்ட அந்த
ஓரிறைவனையே துதிக்கிறோம்
ஓம் நமோ நாராயணாய !
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி