Total Pageviews

Saturday, July 11, 2020

ஆப்ரகாமிய வேதங்கள் வணங்கா கழுத்து உள்ளவர்களை வளைக்கும் ஆரம்ப பாடம்









ஆப்ரகாமைத்தவிர அவரின் வாரீசுகள் இறைவனை உள்ளத்தால் உணர்ந்து ஒழுகியவர்கள் அதிகமில்லை

தவ்ராத் மற்றும் குரான் எங்கிலும் மக்கள் அல்லாஹ் வோடு இணங்கி வாழாதவர்கள் என்ற குற்றச்சாட்டு அடிக்கடி வருகிறது

யாத்திராகமம் 32:9 பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: இந்த ஜனங்களைப் பார்த்தேன்; இவர்கள் வணங்காக்கழுத்துள்ள ஜனங்கள்

இயேசு வரையான பல தீர்க்கதரிசிகள் அடுத்தடுத்து வந்து கண்டித்தும் ஆப்ரகாமின் வாரீசுகள் இறைநெறிக்கு பயந்தவர்களாக இல்லாமல் சடங்காச்சாரிகளாகவே இருந்தார்கள்

ஏசாயா 58:3 நாங்கள் உபவாசம்பண்ணும்போது நீர் நோக்காமலிருக்கிறதென்ன? நாங்கள் எங்கள் ஆத்துமாக்களை ஒடுக்கும்போது நீர் அதை அறியாமலிருக்கிறதென்ன என்கிறார்கள்; இதோ, நீங்கள் உபவாசிக்கும் நாளிலே உங்கள் இச்சையின்படி நடந்து, உங்கள் வேலைகளையெல்லாம் கட்டாயமாய்ச் செய்கிறீர்கள்.

ஏசாயா 58:4 இதோ, வழக்குக்கும் வாதுக்கும் துஷ்டத்தனத்தையுடைய கையினால் குத்துகிறதற்கும் உபவாசிக்கிறீர்கள்; நீங்கள் உங்கள் கூக்குரலை உயரத்திலே கேட்கப்பண்ணும்படியாய், இந்நாளில் உபவாசிக்கிறதுபோல் உபவாசியாதிருங்கள்

ஏசாயா 58:5 மனுஷன் தன் ஆத்துமாவை ஒடுக்குகிறதும், தலைவணங்கி நாணலைப்போல் இரட்டிலும் சாம்பலிலும் படுத்துக்கொள்ளுகிறதும், எனக்குப் பிரியமான உபவாச நாளாயிருக்குமோ இதையா உபவாசமென்றும் கர்த்தருக்குப் பிரியமான நாளென்றும் சொல்லுவாய்?

ஏசாயா 58:7 பசியுள்ளவனுக்கு உன் ஆகாரத்தைப் பகிர்ந்துகொடுக்கிறதும், துரத்துண்ட சிறுமையானவர்களை வீட்டிலே சேர்த்துக்கொள்ளுகிறதும், வஸ்திரமில்லாதவனைக்கண்டால் அவனுக்கு வஸ்திரங் கொடுக்கிறதும், உன் மாம்சமானவனுக்கு உன்னை ஒளிக்காமலிருக்கிறதும் அல்லவோ எனக்கு உகந்த உபவாசம்.

எரேமியா 14:12 அவர்கள் உபவாசித்தாலும், நான் அவர்கள் விண்ணப்பத்தைக்கேட்பதில்லை; அவர்கள் தகனபலிகளையும் காணிக்கைகளையும் செலுத்தினாலும், நான் அவர்கள்மேல் பிரியமாயிருப்பதில்லை

யூதர்கள் பாபிலோனுக்கு சிறைபட்டு போய் விடுதலை பெற்று மீண்டு வந்து கோவிலை கட்டி ரெம்ப தீவிரமாக கும்பிட்டு கொண்டிருந்தபோதுதானே அல்லாஹ் இயேசுவை அனுப்பிவித்தார்

அவர் வந்து அல்லாஹ் வை கும்பிட்டால் மட்டும் போதாது இறைநெறியை உணர்ந்து வாழ வேண்டும்

லூக்கா 3:8 மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகளைக் கொடுங்கள்; ஆபிரகாம் எங்களுக்குத் தகப்பன் என்று உங்களுக்குள்ளே சொல்லத்தொடங்காதிருங்கள்; தேவன் இந்தக் கல்லுகளினாலே ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டுபண்ண வல்லவராயிருக்கிறார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

மத்தேயு 23:23 மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, நீங்கள் ஒற்தலாமிலும் வெந்தயத்திலும் சீரகத்திலும் தசமபாகம் செலுத்தி, நியாயப்பிரமாணத்தில் கற்பித்திருக்கிற விசேஷித்தவைகளாகிய நீதியையும் இரக்கத்தையும் விசுவாசத்தையும் விட்டுவிட்டீர்கள்; இவைகளையும் செய்யவேண்டும், அவைகளையும் விடாதிருக்கவேண்டுமே.

மத்தேயு 23:25 மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, போஜனபானபாத்திரங்களின் வெளிப்புறத்தைச் சுத்தமாக்குகிறீர்கள்; உட்புறத்திலோ அவைகள் கொள்ளையினாலும் அநீதத்தினாலும் நிறைந்திருக்கிறது.

மத்தேயு 23:15 மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, ஒருவனை உங்கள் மார்க்கத்தானாக்கும்படி சமுத்திரத்தையும் பூமியையும் சுற்றித்திரிகிறீர்கள்; அவன் உங்கள் மார்க்கத்தானானபோது அவனை உங்களிலும் இரட்டிப்பாய் நரகத்தின் மகனாக்குகிறீர்கள்.

மத்தேயு 23:13 மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, மனுஷர் பிரவேசியாதபடி பரலோகராஜ்யத்தைப் பூட்டிப்போடுகிறீர்கள்; நீங்கள் அதில் பிரவேசிக்கிறதுமில்லை, பிரவேசிக்கப் போகிறவர்களைப் பிரவேசிக்கவிடுகிறதுமில்லை.

குரானும் இதையே வலியுறுத்துகிறது

2:177. புண்ணியம் என்பது உங்கள் முகங்களைக் கிழக்கிலோ, மேற்கிலோ திருப்பிக்கொள்வதில் இல்லை; ஆனால் புண்ணியம் என்பது அல்லாஹ்வின் மீதும், இறுதி(த் தீர்ப்பு) நாளின் மீதும், மலக்குகளின் மீதும், வேதத்தின் மீதும், நபிமார்கள் மீதும் ஈமான் கொள்ளுதல்; (தன்) பொருளை இறைவன் மேலுள்ள நேசத்தின் காரணமாக, பந்துக்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(ஏழை)களுக்கும், வழிப் போக்கர்களுக்கும், யாசிப்பவர்களுக்கும், (அடிமைகள், கடனாளிகள்) போன்றோரின் மீட்புக்காகவும் செலவு செய்தல்; இன்னும் தொழுகையை ஒழுங்காகக் கடைப்பிடித்து முறையாக ஜகாத் கொடுத்து வருதல்(இவையே புண்ணியமாகும்); இன்னும் தாம் வாக்களித்தால் தம் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோரும்; (வறுமை, இழப்பு போன்ற) துன்பத்திலும், (நோய் நொடிகள் போன்றவற்றின்) கஷ்டத்திலும், யுத்த சமயத்திலும், உறுதியுடனும், பொறுமையுடனும் இருப்போரும் தான் நன்னெறியாளர்கள்; இன்னும் அவர்கள் தாம் முத்தகீன்கள்(பயபக்தியுடையவர்கள்).

ஐந்து வேளை தொழுதல் ; குறிப்பிட்ட நாளில் பள்ளியிலோ ; சினகாக்கிலோ ; குனிந்து வளைந்து தொழுதல் என்பது உடலை ஒடுக்க கற்றுக்கொள்வது அல்லது சர்ச் ளில் கைதட்டி டான்ஸ் ஆடி ஆவேசம் ஆதல் என்பன சரியை வகைப்பட்ட அடித்தட்டு ஆன்மீகம்

ஆரம்ப பள்ளி பாடம்

ஆப்ரகாமிய வேதங்கள் வணங்கா கழுத்து உள்ளவர்களை வளைக்கும் ஆரம்ப பாடம் என்பதற்கு அதிகமாக பெரிய பலன் கொடுக்காத ஒன்று


சரியைக்கு பிறகு பாவ புண்ணியம் ; பிறர் மனம் புண்படுத்தாது வாழ்தல் ; நல்லொரோடும் தீயோரோடும் வளைந்து நெளிந்து நன்மையின் பால் இருத்தல் போன்ற கிரியை என்ற படி உள்ளது

சரியை ; கிரியை என்ற படிகளில் தேறிய பிறகே யோகம் என்ற படிநிலை உள்ளது

அது தியானம் தவம் மூலமாக பரமண்டல சக்திகளுடன் கூடி வாழ்தலாகும்

அது எவ்வளவு வரங்கள் இறைவனிடம் பெற்றாலும் அதை பயன்படுத்தாது இறைவன் சொன்னால் மட்டுமே செயல்படுகிற நிலை - சரணாகதி தத்துவம் என்பார்கள்

ஆப்ரகாமில் வந்த இறை தூதர்கள் அப்படியிருந்தார்கள்

முகமதுநபி முன்னுதாரணமானவர்

ஆனால் ஆப்ரகாமியர் எவருக்கும் அந்த தகுதியில்லை ; அதை வளர்த்துக்கொள்ளும் உபதேசமும் இல்லை

அப்படியானால் சொர்க்கம் வாக்களிக்கப்படுல்ல்தே என்றால் ஆப்ரகாமிய வேதங்கள் ஒரு டோக்கண் அவ்வளவே

அதில் தேறியவர்கள் அடுத்த பிறவியில் இந்தியாவில் பிறந்து கிரியை யோக மார்க்கங்களில் ஞானிகளின் பின்னால் வளர்வார்கள்

யோகம் என்றால் கூடியிருத்தல் என்றே பொருள்

பரமண்டல சக்திகளில் யார் தேவர்கள் யார் அசுரர்கள் ; அவர்கள் உளவியல் ரீதியாக மனித மனங்களை எப்படி ஆளுமை செய்கிறார்கள் என்பதை அவரவர் அனுபவத்தில் உணர்ந்து ஒவ்வொரு தீய குணங்களில் இருந்து விடுபட்டால் அது ஞானமாக உள்ளே விளையும்

அப்போது மட்டுமே சைத்தானால் விளைய வைக்கப்பட அழிவுக்கேதுவான மாமிச சரீரத்தை மீண்டும் ஆதி சரீரத்திற்கு அழிவில்லாத ; வெட்கத்தளங்கள் வெளிப்படை ஆகாத ஒளி சரீரத்திற்கு ஒவ்வொரு மனிதனும் மாற முடியும்

20:121. பின்னர் (இப்லீஸின் ஆசை வார்த்தைப்படி) அவ்விருவரும் அ(ம் மரத்)தினின்று புசித்தனர்; உடனே அவ்விருவரின் வெட்கத் தலங்களும் வெளியாயின; ஆகவே அவ்விருவரும் சுவர்க்கத்துச் சோலையின் இலையைக் கொண்டு அவற்றை மறைத்துக் கொள்ளலானார்கள்; இவ்வாறு ஆதம் தம்முடைய இறைவனுக்கு மாறு செய்து, அதனால் வழி பிசகி விட்டார்.

சைத்தானால் வழிபிசகிய பிறகே இந்த மாமிச சரீரம் உண்டானது . ஆனால் படைக்கப்பட்டபோது தேவர்களைப்போல ஒளி சரீரம் இருந்தது

அதுவே நித்திய ஜீவன் ; மரணமில்லா பெருவாழ்வு

33 கோடி தேவர்களில் 6 கோடி பேர் சைத்தானாக மாறினார்கள்

அந்த விடுபட்ட இடத்திற்கு தகுதியுண்டாகும் மனிதர்களே ஒளி சரீரம் அடைந்து பரலோகம் போகிறார்கள்

அப்படி முதலாவது சென்றவர் ஆதம் என்ற சிவனே ஆவார்

அவ்வாறு அவர் ஆன இடம் காரைக்குடி அருகிலுள்ள திருப்பத்தூர் வைரவன் பட்டி

இங்குள்ள கோவிலில் ஆதியோகியான சிவன் வைரவனாக மாறினார் என்பதை அடையாளப்படுத்தி உள்ளனர்

வைரம் என்பது அழிவில்லாதது ; பூமியில் புதையுண்டாலும் மக்காதது . ஒளிர கூடியது

அப்படிபட்ட சரீரத்தை ஆதம் மீண்டும் அடைந்து பரத்திற்கு ஏறியதால் அவரை பரமேஸ்வரன் என்றார்கள்

இப்படி பரமேறுபவர்கள் இந்தியாவில் பிறந்து ஞானமார்க்கத்தில் பயின்றுதான் செல்ல முடியும் . சமீபத்தில் அப்படி சென்றவர் வடலூர் வள்ளலார்

ஆகவே ஒருவர் மதம் மாறுவதாலும் யாதொரு பிரயோஜனமுமில்லை என்பதை உணரவேண்டும் இந்து கிறிஸ்த்துவ இசுலாமிய மும் மதங்களில் சமரசம் படைக்கும் சமரச வேதாந்தி என்ற அல்மஹ்தி விரைவில் இறைவனால் அனுப்பபடட்டும் என வேண்டுதலே இப்போதைய கடமையாகும்

அல் மஹ்தி யாக முகமதுநபியே அவதரித்து வர உள்ளார்









4:125.மேலும், எவர் நன்மை செய்யக்கூடிய நிலையில் அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபட்டு, இப்ராஹீமுடைய தூய மார்க்கத்தையும் பின் பற்றுகிறாரோ அவரைவிட அழகிய மார்க்கத்தை உடையவர் யார்? இன்னும் அல்லாஹ் இப்ராஹீமை தன் மெய்யன்பராக எடுத்துக் கொண்டான்

யூதம் கிறிஸ்தவம் இசுலாம் மூன்றுமே ஆப்ரகாமிய மார்க்கங்கள்

12:38. “நான் என் மூதாதையர்களான இப்ராஹீம், இஸ்ஹாக், யஃகூப் ஆகியோரின் மார்க்கத்தைப் பின்பற்றுகிறேன்; அல்லாஹ்வுக்கு எதையும் நாங்கள் இணைவைப்பது எங்களுக்கு தகுமானதல்ல

ஆப்ர்காமின் வாரீசுகளுக்கே உரிய மார்க்கங்கள் இவை

ஆபிரகாம் கலியுகம் பிறந்த பிறகு வந்தவர்

ஆப்ரகாமுக்கு முன்பே மூன்று யுகங்கள் கடந்துவிட்டன

கிருத யுகம் - இந்த யுகத்தின் ரசூல் ஆதம் என்ற சிவன்

இதுவே ஆதி தொன்மையாம் இயற்கை மார்க்கம்

30:30. ஆகவே, நீர் உம்முகத்தை தூய (இஸ்லாமிய) மார்க்கத்தின் பக்கமே முற்றிலும் திருப்பி நிலைநிறுத்துவீராக! எ(ந்த மார்க்கத்)தில் அல்லாஹ் மனிதர்களைப் படைத்தானோ அதுவே அவனுடைய (நிலையான) இயற்கை மார்க்கமாகும்; அல்லாஹ்வின் படைத்தலில் மாற்றம் இல்லை; அதுவே நிலையான மார்க்கமாகும். ஆனால் மனிதரில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள்.

ஆதாமின் காலத்தில் ஆபிரகாம் பிறக்கவே இல்லை

ஆனால் அப்போதே இசுலாம் இருந்தது என்றால் அதுவே தமிழரின் வாழ்வியல்

தொல்காப்பியம் ; திருமந்திரம் ; பரிபாடல் முதலான சங்க இலக்கியங்களில் இவ்வழிபாட்டு நெறி பற்றிய குறிப்புகள் உண்டு

அதில் மனிதர்கள் மூலமாக பிசாசு தான் வாக்கையும் கலந்துவிட்டதால் இந்து மதத்தில் சீர்கேடுகள் வந்திருக்கின்றன

அவற்றை சரி செய்யவே அல் மஹ்தி வர உள்ளார்

அடுத்து திரேதா யுகத்தின் ரசூல்களாக நர நாராயண ஜோடி வந்தது

15:10. (நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு முன்னால் முந்திய பல கூட்டத்தாருக்கும் நாம் (தூதர்களை) அனுப்பிவைத்தோம்

ராமராக காப்ரியேலின்அம்ஸமும் லக்ஷ்மணராக மீகாயேலின்அம்ஸமும் வந்தனர்

அடுத்து துவாபர யுகம்

இதில் கிறிஷ்ணராக காப்ரியேலின்அம்ஸமும் அர்ச்சுனராக மீகாயேலின்அம்ஸமும் வந்தனர்

மகாபாரத யுத்தம் முடிந்த பிறகே ஆபிரகாம் பிறந்தார் . அதாவது கலியுகம்

இந்த கலியுகத்தில் இயேசுவாக காப்ரியேலின்அம்ஸமும் முகமதுநபியாக மீகாயேலின்அம்ஸமும் வந்தனர்

22:75. அல்லாஹ் மலக்குகளிலிருந்தும், மனிதர்களிலிருந்தும் தூதர்களை தேர்ந்தெடுத்துக் கொள்கிறான்! நிச்சயமாக அல்லாஹ் (எல்லாவற்றையும்) செவியேற்பவன்; பார்ப்பவன்

இறை தூதர்களில் மலக்குகளிலிருந்து வந்தவர்களும் உள்ளனர் . இவர்களை மசீஹ் அதாவது அவதாரம் என்பார்கள்

மலக்கு தூதர்களாக அவதாரங்களாக வந்தவர்கள் காப்ரியேல் மற்றும் மீகயெளின் அம்ஸங்களே அன்றி வேறு யாருமில்லை

ராமர் - கிறிஷ்ணர் - இயேசு இம்மூவரும் ஒருவரே காப்ரியேளின் அம்ஸமே

லக்ஷ்மணர் - அர்ச்சுனர் - முகமதுநபி இம்மூவரும் ஒருவரே மீகாயேளின் அம்ஸமே

ஆகவேதான் ஆப்ரகாமின் வாரீசுகளாக இயேசுவும் முகமதுநபியும் வந்தபோதிலும் ஆப்ரகாமின் வாரீசுகளின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுத்தார்கள்

அவர்களின் அகம்பாவத்தை கடுமையாக கண்டித்தார்கள்

[லூக்கா 3:8] மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகளைக் கொடுங்கள்; ஆபிரகாம் எங்களுக்குத் தகப்பன் என்று உங்களுக்குள்ளே சொல்லத்தொடங்காதிருங்கள்; தேவன் இந்தக் கல்லுகளினாலே ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டுபண்ண வல்லவராயிருக்கிறார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

[லூக்கா 13:28] நீங்கள் ஆபிரகாமையும் ஈசாக்கையும் யாக்கோபையும் சகல தீர்க்கதரிசிகளையும் தேவனுடைய ராஜ்யத்திலிருக்கிறவர்களாகவும், உங்களையோ புறம்பே தள்ளப்பட்டவர்களாகவும் காணும்போது உங்களுக்கு அழுகையும் பற்கடிப்பும் அங்கே உண்டாயிருக்கும்.

ஆப்ரகாமுக்கு முன்பே தாங்கள் இருக்கிறவர்கள் என்றார்கள்

[யோவான் 8:53] எங்கள் பிதாவாகிய ஆபிரகாமிலும் நீ பெரியவனோ? அவர் மரித்தார், தீர்க்கதரிசிகளும் மரித்தார்கள்; உன்னை நீ எப்படிப்பட்டவனாக்குகிறாய் என்றார்கள்.

[யோவான் 8:56] உங்கள் பிதாவாகிய ஆபிரகாம் என்னுடைய நாளைக் காண ஆசையாயிருந்தான்; கண்டு களிகூர்ந்தான் என்றார்.

[யோவான் 8:57] அப்பொழுது யூதர்கள் அவரை நோக்கி: உனக்கு இன்னும் ஐம்பது வயதாகவில்லையே, நீ ஆபிரகாமைக் கண்டாயோ என்றார்கள்.

[யோவான் 8:58] அதற்கு இயேசு: ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

ஆகவேதான் ஆபிரகாம் வழிபட்ட அல்லாஹ் வை மட்டுமே வழிபடாமல் இந்து தர்மத்தின் படியாக குருவின் மூலமாக வழிபடும் முறையை கொண்டுவந்தார்கள்

[மத்தேயு 11:27] சகலமும் என் பிதாவினால் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது; பிதா தவிர வேறொருவனும் குமாரனை அறியான்; குமாரனும், குமாரன் எவனுக்கு அவரை வெளிப்படுத்தச் சித்தமாயிருக்கிறாரோ அவனும் தவிர, வேறொருவனும் பிதாவை அறியான்.

இயேசு நாராயணனின் அம்சம் என்பதால் இயேசுவின் நாமத்தால் அல்லாஹ் வை வழிபடும் மார்க்கத்தை உருவாக்கினார்

முகமதுநபியோ சிவனின் அம்சம் என்பதால் மோசேயின் அல்லாஹ் கோவிலுக்கு பதிலாக ஆதம்நபி உருவாக்கிய அஸ்த்ரக் சிவலிங்க கோவிலை வழிபாட்டு கோவிலாக மாற்றினார்

இந்த செய்கைகள் மூலமாக இயேசுவும் முகமதுநபியும் தாங்கள் ஆப்ரகாமுக்கு கட்டுப்பட்டவர்கள் அல்ல ; அவர்களை விட பெரியவர்கள் என நிரூபித்தார்கள்

4:136. முஃமின்களே! நீங்கள் அல்லாஹ்வின் மீதும், அவனுடைய தூதர் மீதும், அவன் தூதர் மீது அவன் இறக்கிய (இவ்) வேதத்தின் மீதும், இதற்கு முன்னர் இறக்கிய வேதங்களின் மீதும் ஈமான் கொள்ளுங்கள்; எவர் அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும், இறுதி நாளையும் (நம்பாமல்) நிராகரிக்கிறாரோ அவர் வழிகேட்டில் வெகு தூரம் சென்றுவிட்டார்

யோவான் 15 26. பிதாவினிடத்திலிருந்து நான் உங்களுக்கு அனுப்பப்போகிறவரும், பிதாவினிடத்திலிருந்து புறப்படுகிறவருமாகிய சத்திய ஆவியான தேற்றரவாளன் வரும்போது, அவர் என்னைக்குறித்துச் சாட்சிகொடுப்பார்.

யோவான் 16 : 13. சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்;

சகல சத்தியத்திற்குள்ளும் நடத்துவது என்பது முகமதுநபி அவதாரத்தில் முழுமை அடையவில்லை

ஆப்ரகாமின் வேதங்களோடு அதற்கு முந்திய சைவம் ; வைணவம் உள்ளிட்ட இந்து வேதங்களையும் சமரசப்படுத்தினாலே மட்டுமே அது சகல சத்தியம் ஆகும் .

அதற்காக அல் மஹ்தி யாக முகமதுநபியே அவதரித்து வர உள்ளார்

இறைவனால் பல மார்க்கங்கள் பூமியில் அனுமதிக்கப்பட்டுள்ளன






இறைவனால் பல மார்க்கங்கள் பூமியில் அனுமதிக்கப்பட்டுள்ளன என்றே குரானில் உள்ளது .

குரானுக்கு அர்த்தம் சொன்ன மனிதர்கள் ; பேராசைக்கார காலிபாக்கள் ; முகலாய மன்னர்கள் தங்கள் நாடுபிடி ஆசைக்காக இசுலாத்தை தவிர மற்ற அனைத்து மதங்களும் தவறானவை என்றும் பரப்பி விட்டனர்

5:48. மேலும் (நபியே! முற்றிலும்) உண்மையைக் கொண்டுள்ள இவ்வேதத்தை நாம் உம்மீது இறக்கியுள்ளோம், இது தனக்கு முன்னிருந்த (ஒவ்வொரு) வேதத்தையும் மெய்ப்படுத்தக் கூடியதாகவும் அதைப் பாதுகாப்பதாகவும் இருக்கின்றது. எனவே அல்லாஹ் அருள் செய்த(சட்ட திட்டத்)தைக் கொண்டு அவர்களிடையே நீர் தீர்ப்புச் செய்வீராக; உமக்கு வந்த உண்மையை விட்டும் (விலகி,) அவர்களுடைய மன இச்சைகளை நீர் பின்பற்ற வேண்டாம். உங்களில் ஒவ்வொரு கூட்டத்தாருக்கும் ஒவ்வொரு மார்க்கத்தையும், வழிமுறையையும் நாம் ஏற்படுத்தியுள்ளோம்; அல்லாஹ் நாடினால் உங்கள் அனைவரையும் ஒரே சமுதாயத்தவராக ஆக்கியிருக்கலாம்; ஆனால், அவன் உங்களுக்குக் கொடுத்திருப்பதைக் கொண்டு உங்களைச் சோதிப்பதற்காகவே (இவ்வாறு செய்திருக்கிறான்); எனவே நன்மையானவற்றின்பால் முந்திக் கொள்ளுங்கள். நீங்கள் யாவரும், அல்லாஹ்வின் பக்கமே மீள வேண்டியிருக்கிறது; நீங்கள் எதில் மாறுபட்டு கொண்டிருந்தீர்களோ அதனை அவன் உங்களுக்குத் தெளிவாக்கி வைப்பான்.

அல்லாஹ் மனிதர்களை ஒரே சமுதாயமாக மாற்ற விரும்பவில்லை ; விரும்பியிருந்தால் அப்படி செய்திருப்பார் என தெளிவாகவே கூறப்பட்டுள்ளது

ஏன் அல்லாஹ் மனிதர்கள் வேறு வேறு சமுதாயமாகவும் ; அவரவர்களுக்கு ஒரு வேதமும் அருள வேண்டும் ?

ஆதம் என்ற சிவனை பூமிக்கு அனுப்பும் முன்பு இறைவன் கொடுத்த சாபங்கள் மூன்று இன்னும் சமாதானம் அருளப்படாமல் உள்ளது ; அந்த மூன்று சாபங்களே மனிதர்களை பிரிவினை உள்ளவர்களாக மாற்றி வைத்திருக்கிறது

2:36. இதன்பின், ஷைத்தான் அவர்கள் இருவரையும் அதிலிருந்து வழி தவறச் செய்தான்; அவர்கள் இருவரும் இருந்த(சொர்க்கத்)திலிருந்து வெளியேறுமாறு செய்தான்; இன்னும் நாம், “நீங்கள் (யாவரும் இங்கிருந்து) இறங்குங்கள்; உங்களில் சிலர் சிலருக்கு பகைவராக இருப்பீர்கள்; பூமியில் ஒரு குறிப்பிட்ட காலம் வரை உங்களுக்குத் தங்குமிடமும் அனுபவிக்கும் பொருள்களும் உண்டு” என்று கூறினோம்.

அல்லாஹ் வின் சாபமும் அனுமதியுமே அசுரர்களுக்கு சிந்தையால் மனிதர்களை கெடுக்க இடமும் கொடுக்கிறது

7:14. “(இறந்தவர்) எழுப்பப்படும் நாள் வரை எனக்கு அவகாசம் கொடுப்பாயாக” என அவன் (இப்லீஸ்) வேண்டினான்.
7:15. (அதற்கு அல்லாஹ்) “நிச்சயமாக நீ அவகாசம் கொடுக்கப்பட்டவர்களில் ஒருவனாவாய்” என்று கூறினான்.

7:16. (அதற்கு இப்லீஸ்) “நீ என்னை வழி கெட்டவனாக (வெளியேற்றி) விட்டதன் காரணத்தால், (ஆதமுடைய சந்ததியரான) அவர்கள் உன்னுடைய நேரான பாதையில் (செல்லாது தடுப்பதற்காக அவ்வழியில்) உட்கார்ந்து கொள்வேன்” என்று கூறினான்.

ஆதியாகமம் 11:9 பூமியெங்கும் வழங்கின பாஷையைக் கர்த்தர் அவ்விடத்தில் தாறுமாறாக்கினபடியால், அதின் பேர் பாபேல் என்னப்பட்டது; கர்த்தர் அவர்களை அவ்விடத்திலிருந்து பூமியின்மீதெங்கும் சிதறிப்போகப்பண்ணினார்.

10:19. மனிதர்கள் யாவரும் (ஆதியில்) ஒரே இனத்தவராகவே அன்றி வேறில்லை; பின்னர் அவர்கள் மாறுபட்டுக் கொண்டனர்.

5:48. அல்லாஹ் நாடினால் உங்கள் அனைவரையும் ஒரே சமுதாயத்தவராக ஆக்கியிருக்கலாம்; ஆனால், அவன் உங்களுக்குக் கொடுத்திருப்பதைக் கொண்டு உங்களைச் சோதிப்பதற்காகவே (இவ்வாறு செய்திருக்கிறான் . ; நீங்கள் எதில் மாறுபட்டு கொண்டிருந்தீர்களோ அதனை அவன் உங்களுக்குத் தெளிவாக்கி வைப்பான்.

உங்களுக்குக் கொடுத்திருப்பதைக் கொண்டு என்பது மனிதகுலத்தின் மீதுள்ள ஆதி சபங்களை குறிப்பிடுகிறது

நீங்கள் எதில் மாறுபட்டு கொண்டிருந்தீர்களோ அதனை அவன் உங்களுக்குத் தெளிவாக்கி வைப்பான்.

இதே வார்த்தை கிறிஸ்தவர்களும் யூதர்களும் இசுலாமியர்களும் செய்யும் பலவகையான தர்க்கங்களைப் பற்றியும் வருகிறது

2:113. யூதர்கள் கூறுகிறார்கள்: “கிறிஸ்தவர்கள் எந்த நல்வழியிலும் இல்லை” என்று; கிறிஸ்தவர்கள் கூறுகிறார்கள்: “யூதர்கள் எந்த நல்வழியிலும் இல்லை” என்று; ஆனால், இவர்கள் (தங்களுக்குரிய) வேதத்தை ஓதிக்கொண்டே (இப்படிக் கூறுகிறார்கள்); இவர்கள் கூறும் சொற்களைப் போலவே ஒன்றும் அறியாதவர்களும் கூறுகிறார்கள்; இறுதித்தீர்ப்பு நாளில் அல்லாஹ் இவர்கள் தர்க்கித்து மாறுபட்டுக் கொண்டிருக்கும் விஷயத்தில் தீர்ப்பளிப்பான்.

இவ்வசனங்கள் அனைத்தும் ஒரு சாராரை உண்மை என்று கூறவில்லை . இருவரும் உண்மையை உணராமல் தர்க்கித்துக்கொண்டுள்ளனர் ; உண்மை எதுவென்பதை இறுதி நாளில் விளக்கப்படும் என்றே சொல்கிறது

3:73. “உங்கள் மார்க்கத்தைப் பின்பற்றுவோரைத் தவிர (வேறு எவரையும்) நம்பாதீர்கள்” (என்றும் கூறுகின்றனர். நபியே!) நீர் கூறும்: நிச்சயமாக நேர்வழியென்பது அல்லாஹ்வின் வழியே ஆகும்; உங்களுக்கு (வேதம்) கொடுக்கப்பட்டதுபோல் இன்னொருவருக்கும் கொடுக்கப்படுவதா அல்லது அவர்கள் உங்கள் இறைவன் முன் உங்களை மிகைத்து விடுவதா?” (என்று அவர்கள் தங்களுக்குள் பேசிக் கொள்கிறார்கள்.) நிச்சயமாக அருட்கொடையெல்லாம் அல்லாஹ்வின் கையிலேயே உள்ளது; அதை அவன் நாடியோருக்கு வழங்குகின்றான்; அல்லாஹ் விசாலமான (கொடையளிப்பவன்; யாவற்றையும்) நன்கறிபவன் என்று கூறுவீராக.

39:3. அறிந்து கொள்வீராக ! களங்கமற்ற மார்க்க வழிபாடுகள் யாவும் அல்லாஹ் வுக்கே உரியது; இன்னும், அவனையன்றிப் பாதுகாப்பாளர்களை எடுத்துக் கொண்டிருப்பவர்கள், “அவர்கள் எங்களை அல்லாஹ்வின் அருகே சமீபமாகக் கொண்டு செல்வார்கள் என்பதற்காகவேயன்றி நாங்கள் அவர்களை வணங்கவில்லை” (என்கின்றனர்). அவர்கள் எதில் வேறுபட்டுக் கொண்டிருக்கிறார்களோ அதைப்பற்றி நிச்சயமாக அல்லாஹ் அவர்களுக்கிடையே தீர்ப்பளிப்பான்;

அல்லாஹ் அல்லாதவைகளில் யார் தேவர்களோ அவர்களே சதா அல்லாஹ் வை வழிபாடுபவர்களாக இருப்பதால் ; அவர்களிடம் வைக்கப்படும் பிரார்த்தனையை அவர்கள் அல்லாஹ் விடம் நிச்சயமாக சேர்த்து விடுவார்கள்

ஆனால் யார் அசுரர்களோ அவர்கள் அல்லாஹ் விதம் பிரார்த்தனையை சேர்க்காது தாங்களே திருடிக்கொள்வார்கள்

யார் தேவர்கள் யார் அசுரர்கள் என்று உணர போதிய ஆன்மீக அனுபவம் ; பாராம்பர்யம் அற்ற ஆப்ரகாமின் வாரீசுகள் அல்லாஹ் வைத்தவிர யாரிடமும் வேண்டுதலே செய்யக்கூடாது என்ற தீவிரவாதத்தில் போய் நிற்கிறார்கள்

ஆதி இசுலாம் ஆகிய ஆதி இந்து தர்மத்தின் வழிபாட்டு மந்திரங்கள் இவ்விசயத்தில் மிக தெளிவாகவே உள்ளன

எந்த ஒரு தேவரின் அல்லது இலாஹா முன் நிற்கிறார்களோ அங்கு மந்திரம் எவ்வாறு இருக்க வேண்டும் ?

உதாரணமாக சிவன் முன்னாள் நின்றால் ஓம் நமோ சிவாயா ; சிவா என்று சொல்லாமல் சிவாய என்று சொல்ல வேண்டும்

இதன் அர்த்தம் சிவனாக ஆனவனை வழிபடுகிறேன் என்பதாகும் . மந்திரங்களை சரியாக உச்சரிக்கும் இந்துக்கள் அதன் அர்த்தத்தை காலப்போக்கில் தவறாக அதாவது சிவனையே வழிபடுவதாக புரிந்துகொண்டனர்

இங்கு குரானின் வெளிச்சத்தில் சமரச வேதம் இந்துக்களை சீர்திருத்தினால் போதும் என்கிறது .

உமக்கு பிரியமான எந்த தேவரையும் குருவையும் எப்படி வழிபடவேண்டும் என்றால் ; அவராக வெளிப்பட்ட அல்லாஹ் வை வணங்குகிறேன் என அறிந்த நபரை குருவாக வைத்து அறியாத அல்லாஹ் வை வழிபடு என்பதாகும்

நாராயணன் என்ற காப்ரியேல் தமது முதல் அவதாரமான ராமராக பூமியில் வந்தபோது நாமத்தால் வழிபடுங்கள் என உபதேசித்தார் ; ராமரை வழிபடாதே ராம நாமத்தால் இறைவனை வழிபடு என்றார்

ஒரு இந்து குழந்தையிடம் சென்று ராமர் பெரியவரா ராம நாமம் பெரியதா என கேளுங்கள் ; ராம நாமமே பெரியது என்று சொல்லும்

ராம நாமத்தால் அல்லாஹ் என்று வழிபடுவதே அதற்கு அர்த்தம்

நாராயணனின் இறுதி அவதாரமான இயேசுவாக வரும் போதும் இதே விஷயத்தை தெளிவாக வழிகாட்டினார்

23. அந்த நாளிலே நீங்கள் என்னிடத்தில் ஒன்றுங் கேட்கமாட்டீர்கள். மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் என் நாமத்தினாலே பிதாவினிடத்தில் கேட்டுக்கொள்வதெதுவோ அதை அவர் உங்களுக்குத் தருவார்.

என்னிடத்தில் கேட்காதீர்கள் ; என் மூலமாக அல்லாஹ் விடம் கேளுங்கள்

எந்தவொரு இறை மார்க்கத்திலும் இருவர் வந்துவிடுவார்கள்

ஒருவர் வழிபடப்படும் இறைவனாகிய அல்லாஹ்
அடுத்தவர் அந்த மார்க்கத்தை இறைவன் யார் மூலமாக பூமியிக்கு அனுப்பினாரோ அந்த குரு – இறை தூதர் – ரசூல்

இசுலாத்தில் இணைபவர்கள் முகமதுநபியிடம் சத்தியம் செய்வார்கள்

லா இலாஹா இல் அல்லாஹு
முகமது ரசூல் அல்லாஹு

இங்கு இந்த இருவரும் வருகிறார்களா


அல்லாஹ் வும் அவரால் அனுப்பபட்ட குருவாக முகமதுவை ஏற்றுக்கொண்டால் அது முகமதியம்

அல்லாஹ் வும் அவரால் அனுப்பபட்ட குருவாக கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டால் அது கிறிஸ்தவம்

அல்லாஹ் வும் அவரால் அனுப்பபட்ட குருவாக சிவவை ஏற்றுக்கொண்டால் அது சைவம்

அல்லாஹ் வும் அவரால் அனுப்பபட்ட குருவாக நாராயணனை ஏற்றுக்கொண்டால் அது வைணவம்

முகமதுநபியால் வாக்களிக்கப்பட்ட அல் மஹ்தி என்ற சமரச வேதாந்தி விரைவில் வந்து பூமியில் சமாதானத்தை நிலைநாட்டுவார் என்பது மற்ற மதங்களை அழிப்பது அல்ல ; சகல மதங்களையும் அல்லாஹ் வுக்கு ஒப்புரவு ஆக்குவதாகும்

சமரச வேதத்தின் கலிமா ஆவது

நாராயணன் நாமத்தினாலும் சிவனின் நாமத்தினாலும் முகமதுநபியின் நாமத்தினாலும் இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலும் அல்லாஹ் உம்மையே வழிபடுகிறேன்

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி

காப்ரீயேல் பரமாத்மா என்றால் மீகாயேல் ஜீவாத்மா






6:98. உங்கள் அனைவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து உண்டாக்கிப்பின் (உங்கள் தந்தையிடம்) தங்க வைத்து, (பின்னர் கர்ப்பத்தில்) ஒப்படைப்பவனும் அவனே. சிந்தித்து விளங்கிக் கொள்ளக் கூடிய மக்களுக்கு நிச்சயமாக நம் வசனங்களை விவரித்துள்ளோம்.

படைக்கப்பட்டவைகள் அனைத்தும் யாருக்குள் படைக்கப்பட்டிருக்கிறதோ அவர் அல்லாஹ் வை அடுத்த பெரியவர்

இந்த ஜிப்ரீளை சாதாரண வேலைக்காரன் என்பதாக ஆப்ராகாமியர் தங்கள் அஞ்ஞானத்தால் புரிந்துள்ளார்கள்

வெட்டவெளி அருவமான அல்லாஹ் என்றால் அதற்குள் 100 ளில் 1 பங்கு பிரபஞ்சம் . இந்த பிரபஞ்சத்திற்குள் சகல படைப்புகளும் படைக்கப்படுகின்றன

மூலப்பொருள் - பரமாத்மா - காப்ரியேல் என்ற நாராயணன்

கீதை 10 : 6 எல்லா லோகங்களிலும் வாழும் சகல ஜீவராசிகளும் என்னிலிருந்தே வந்தவை !!

கீதை 10 : 7 யாறொருவன் இந்த உண்மையை -- எனது மறைசக்தியை ; மகிமையை உணர்ந்து விசுவாசிக்கிறானோ அவன் சந்தேகம் தெளிந்தவனாக திடமான பக்திதொண்டில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்வான் !!

கீதை 10 : 8 எல்லா பவ்தீக மற்றும் அமானுஸ்ய உலகங்களின் ஆதாரம் நானே ! ஒவ்வொன்றும் என்னிடமிருந்தே வெளிப்படுகின்றன ! மிகச்சரியாக புரிந்துகொண்ட ஞானவான்கள் முழு இதயத்தோடு என்னை பின்பற்றி பக்தி தொண்டாற்றுவார்கள் !!

இதே கருத்தை குரானின் வசனங்களும் மெய்பிக்கின்றன

17:85. (நபியே!) “உம்மிடம் ரூஹை (ஆத்மாவைப்) பற்றி அவர்கள் கேட்கிறார்கள். “ரூஹு” என் இறைவனுடைய கட்டளையிலிருந்தே உண்டானது; இன்னும் ஞானத்திலிருந்து உங்களுக்கு அளிக்கப்பட்டது மிகச் சொற்பமேயன்றி வேறில்லை” எனக் கூறுவீராக.

யோவான் 1:1. ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது.

2. அவர் ஆதியிலே தேவனோடிருந்தார்.

3. சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை.

வார்த்தையானவர் என்பதே காப்ரீல் - நாராயணன்


அல்லாஹ் எதைப்படைத்தாலும் பரமாத்மாவுக்குள் பரமாத்மாவிலிருந்தே எடுத்து படைக்கிறார்

அதிலிருந்து அல்லாஹ் வின் முழு சாயலில் உருவாக்கப்பட்டவர் ஆதம் என்ற சிவன் என்ற மீகாயேல்

மீகாயேல் என்றால் இறைவனை போன்றவர் என்று அர்த்தம்

அதனால்தான் ஆதம் படைக்கப்பட்டவுடன் அதற்கு முந்திய படைப்புகளான வானவர் அனைவரும் ஆதமை தொழுதுகொள்ளுங்கள் என கட்டளை போட்டார்


காப்ரீல் பரமாத்மா என்றால் மீகாயேல் ஜீவாத்மா

ஆதியாகமம் 1:26 பின்பு தேவன்: நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக; அவர்கள் சமுத்திரத்தின் மச்சங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், மிருகஜீவன்களையும், பூமியனைத்தையும், பூமியின்மேல் ஊரும் சகலப் பிராணிகளையும் ஆளக்கடவர்கள் என்றார்.

ஆதியாகமம் 2:7 தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான்.

2:34. பின்னர் நாம் மலக்குகளை நோக்கி, “ஆதமுக்குப் பணி(ந்து ஸுஜூது செய்)யுங்கள்” என்று சொன்னபோது இப்லீஸைத்தவிர மற்ற அனைவரும் சிரம் பணிந்தனர்; அவன்(இப்லீஸு) மறுத்தான்; ஆணவமும் கொண்டான்; இன்னும் அவன் காஃபிர்களைச் சார்ந்தவனாகி விட்டான்.

ஆதம் என்ற சிவன் படைக்கப்படும் முன்பு தேவர்கள் அனைவரும் அல்லாஹ் வுக்கு கீழ்படிந்தே இருந்தனர்

சில மலக்குகள் ஷைத்தானாக மாறியதற்கு காரணமே அல்லாஹ் வோடு சிவனையும் வனங்கமாட்டோம் என கலகம் செய்ததாலேயே ஆகும்

ஆகவேதான் முழுமையான வழிபாடு அல்லாஹ் வை மட்டுமே வழிபடுவது அல்ல . அரைகுறை ஞானத்தால் ஆப்ரகாமியர் இந்த தவறை செய்கிறீர்கள்

2:98. எவன் அல்லாஹ்வுக்கும், அவனுடைய மலக்குகளுக்கும், அவனுடைய தூதர்களுக்கும், ஜிப்ரீலுக்கும், மீக்காயிலுக்கும் பகைவனாக இருக்கிறானோ, நிச்சயமாக (அவ்வாறு நிராகரிக்கும்) காஃபிர்களுக்கு அல்லாஹ் பகைவனாகவே இருக்கிறான்.

ஆகவேதான் ஜிப்ராயேலே இந்துமத நாராயணன் என தெரியாமலும் மீகாயெலே சிவன் என தெரியாமலும் அவர்களை பகைத்து கோவில்களை இடித்த காலிபாக்கள் முகலாயர்கள் நரகத்திற்கு சென்று விட்டார்கள்

ஆனால் முகமதுநபியோ முழு உண்மையை உணர்ந்தவர் இந்துமத கோவிலகளை தாக்கவில்லை

ஆபிரகாம் வழி ஜெருசலோம் பைத்துஸ்மக்தஸ் அல்லாவை மட்டும் வழிபடும் கோவில் என்பதால் அதற்கு பதிலாக ஆதம் உருவாக்கிய அஸ்த்ரக் சிவலிங்க கோவிலை வழிபட அல்லாஹ் விடம் வேண்டினார் . உலகின் முதல் சிவலிங்க கோவில் மக்கீஸ்வரமேஆகும்

2:147. (கிப்லாவைப் பற்றிய) இவ்வுண்மை உம் இறைவனிடமிருந்து வந்ததாகும்; ஆகவே (அதனைச்) சந்தேகிப்போரில் ஒருவராக நீர் ஆகிவிட வேண்டாம்.

2:143. இதே முறையில் நாம் உங்களை ஒரு நடு நிலையுள்ள உம்மத்தாக (சமுதாயமாக) ஆக்கியுள்ளோம்; (அப்படி ஆக்கியது) நீங்கள் மற்ற மனிதர்களின் சாட்சியாளர்களாக இருப்பதற்காகவும், ரஸூல் (நம் தூதர்) உங்கள் சாட்சியாளராக இருப்பதற்காகவுமேயாகும்; யார் (நம்) தூதரைப் பின்பற்றுகிறார்கள் யார் (அவரைப் பின்பற்றாமல்) தம் இரு குதிங் கால்கள் மீது பின்திரும்பி செல்கிறார்கள் என்பதை அறி(வித்து விடு)வான் வேண்டி கிப்லாவை நிர்ணயித்தோம்; இது அல்லாஹ் நேர்வழி காட்டியோருக்குத் தவிர மற்றவர்களுக்கு நிச்சயமாக ஒரு பளுவாகவே இருந்தது; அல்லாஹ் உங்கள் ஈமானை (நம்பிக்கையை) வீணாக்கமாட்டான்; நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது மிகப்பெரும் கருணை காட்டுபவன், நிகரற்ற அன்புடையவன்.

அல்லாஹ் வோடு ஆதம் நபியையும் வழிபடுங்கள் என்ற ஆதி கட்டளையை யார் ஏற்று நல்லாடியார்களாக ஆவீர்களா அல்லது அல்லாஹ் வை ஏற்றுக்கொள்வோம் ஆதமை ஏற்றுக்கொள்ளமாட்டோம் என ஷைத்தானியர்களாக மாறுகிறீர்களா என்கிற ஆழமான விடயம் மக்காவா அல்லது ஜெருசலோமா என்பதில் உள்ளது


உண்மையில் மக்கவே சாலோம் தேசமாகும் . அங்கு ஆதமால் உருவாகி நடைமுறையில் இருந்த மேல்க்கிசெதெக் ஆசாரியனுக்கு ஆப்ரகாமே தசம பாகம் கொடுத்து வழிபட்டுள்ளார்

ஆதியாகமம் 14:18. அன்றியும், உன்னதமான தேவனுடைய ஆசாரியனாயிருந்த சாலேமின் ராஜாவாகிய மெல்கிசேதேக்கு அப்பமும் திராட்சரசமும் கொண்டுவந்து,

19. அவனை ஆசீர்வதித்து: வானத்தையும் பூமியையும் உடையவராகிய உன்னதமான தேவனுடைய ஆசீர்வாதம் ஆபிராமுக்கு உண்டாவதாக.

20. உன் சத்துருக்களை உன் கையில் ஒப்புக்கொடுத்த உன்னதமான தேவனுக்கு ஸ்தோத்திரம் என்று சொன்னான். இவனுக்கு ஆபிராம் எல்லாவற்றிலும் தசமபாகம் கொடுத்தான்.

சாலோம் என்றால் சமாதான ஸ்தலம் என்றுபெயர்

என்ன சமாதானம் என்றால் இக்கோவில் ஆதம் மூலமாக அல்லாஹ் வை வழிபடும் கோவிலாகும்

ஆகவேதான் மனிதர்கள் தங்கள் மூதாதையர்களை அல்லாஹ் வுக்கு இணையாக்கி வைத்திருந்த 300 க்கும் மேற்பட்ட சிலையை உடைத்தாலும் அதமுக்கு அடையாளமான அஸ்த்ரக் லிங்கத்தை உடைக்கவில்லை

ஆனால் ஆதி இசுலாத்தை மறந்து மூஸா மூலமாக உருவான கோவில் ஜெருசலோம்

ஜெரு என்றால் எதிர்ப்பாக என்று அர்த்தம்

சாலோமாகிய மக்காவை புறக்கணித்து உருவாக்கப்பட்டது ஜெருசலோம்

அத்தோடு தான் வாழ்நாளில் ஒருமுறையாவது மக்காவுக்கு ஹஜ் செய்வது கடமையாக்கப்பட்டதன் உண்மை இதுவே

தாங்கள் வாழுமிடத்தில் பள்ளிவாசலில் அல்லாஹ் வை மட்டுமே தொழும் முஸ்லீமகளே ஒருமுறையாவது அல்லாஹ் வோடு அஸ்த்ராக சிவலிங்கத்தை வணங்காவிட்டால் உங்கள் வணக்கம் பூர்த்தி ஆகாது என்ற கடமையின் பின்னணி இதுவே

ஆகவே அசட்டுத்தனமாக அரபியர்கள் சொல்லிக்கொடுத்த அல்லாஹ் வைத்தவிர அனைத்தும் சைத்தான்கள் என்ற அறியாமையை விட்டு வெளியே வருக

முகமதுநபியால் வாக்களிக்கப்பட்ட அல்மஹ்தியின் மும் மதசமரச வேதத்தின் குரலுக்கு செவிசாய்ப்போன் பாக்கியவான்

ஒருவரின் பாவத்தை அடுத்தவர் சுமக்க முடியுமா ?





குரானையும் பைபிளையும் ஆராயும்போது அரபியர்களுக்கும் யூதர்களுக்கும் இரத்தத்தில் ஊறியுள்ள சக்களத்தி சண்டை ஆங்காங்கே இறைவார்த்தைகளில் கைவைத்திருக்கும் என்பதை மறக்கலாகாது

அதேபோல ஆப்ரகாமியர்கள் போதிய ஆன்மீக அனுபவமற்றவர்கள் என்பதால் இவைகளுக்கு இந்துதத்துவ ஞானத்தின் அடிப்படையில் விளக்கம் சொன்னால் முழு உண்மையை உணரலாம்

ஒருவரின் பாவத்தை அடுத்தவர் சுமக்க முடியாது என பைபிலும் குரானும் இந்து தத்துவமும் ஒத்துக்கொள்கின்றன

ஆனால் சகலவற்றையும் படைத்தவருக்கு அவரால் படைக்கப்பட்டவர்களின் பாவத்தில் நிச்சயம் பங்கு உண்டு

அதனால் சகலரின் பாவங்களுக்காக நான் மரிக்கிறேன் என இயேசு பல இடங்களில் சொல்லியே மரித்ததால் ; பின்பு உயிர்த்தெழுந்ததால் இயேசு அல்லாஹ் என்ற பிதாவாகத்தான் இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு பைபிலியர்கள் போய்விட்டனர்

ஆனால் அவர்களுக்கு பின்பு வந்த வேதமான குரான் இயேசு அல்லாஹ் அல்ல அவரும் ஒரு நபியே என சொல்லிவிட்டது

ஆகவே இயேசு சகலரின் பாவங்களுக்காக மரித்தார் என்று ஒத்துக்கொண்டால் அவரே அல்லாஹ் என்று ஒத்துக்கொள்ள வேண்டிய நிர்பந்தம் வந்துவிடும் என்பதால் குரானை உமர் காலத்தில் தொகுத்து எழுதும்போது தங்கள் அறிவுக்குத்தக்க கொஞ்சம் உள்ளடி வேலையை செய்துவிட்டார்கள் - சில வசனங்களை திருத்தி எழுதிக்கொண்டனர்

ஆப்ராகாமியருக்கு போதிய இறை வாழ்வு ; ஆன்மீக அனுபவம் ; ஞானம் இல்லாததால் இப்படிப்பட்ட துர்ப்பாக்கிய நிலையை அடைந்து இன்றளவும் சண்டை போட்டு வருகிறார்கள்

ஆழ்ந்த இந்து தத்துவ ஞான பின்னனியில் இவ்விவகாரத்தை விளக்கம் சொன்னால் இயேசு சகலரின் பாவங்களுக்காக மரித்ததும் உண்மை அதே நேரத்தில் அவர் அல்லாஹ் வும் அல்ல என்பது நிருபனை ஆகும்

அதாவது பைபிலும் உண்மை குரானும் உண்மை ; அதை விளக்கம் சொல்பவர்களே குறை மதியாளர்கள் என்பது விளங்கும்

வெட்டவெளி யில் நூறில் ஒரு பங்கு கூட படைக்கப்பட்ட பிரபஞ்சம் இல்லை

வெட்டவெளியில் அருவமான அல்லாஹ் குன் என பேசியபோது முதலில் வந்தது சத்தம் அதாவது வார்த்தை

இந்த வார்த்தையே சகல பிரபஞ்சமாக மாறியுள்ளது

அதோடு படைக்கும் எதையும் அல்லாஹ் இந்த பிரபஞ்சத்திற்குள்ளேயே படைக்கிறார்

அவர் நாடினால் பிரபஞ்சத்திற்கு வெளியேயும் படைக்கலாம் ; ஆனால் அல்லாஹ்வோ மனித படைப்புகள் வரை அனைத்தையும் இந்த பிரபஞ்சத்திற்குள்ளேயே பிரபஞ்சத்திலிருந்து எடுத்தே படைக்கிறார் . அதாவது பிரபஞ்சமே பரமாத்மா

இந்த பிரபஞ்சம் படர்க்கை மட்டுமல்ல அவர் ஒரு அதி தேவர்

வாரத்தையானவர் என்றால் ஜிப்ரீல் - நாராயணன் என்று அர்த்தம்

கீதையில் இவ்விவரங்கள் சகல படைப்புகளும் பரமாத்மாவுக்குள்ளிருந்தே அவர் மூலமாகவே அல்லாஹ் வால் படைக்கப்படுகின்றன என விளக்கப்படுகிறது

கீதை 10 : 6 எல்லா லோகங்களிலும் வாழும் சகல ஜீவராசிகளும் என்னிலிருந்தே வந்தவை !!

கீதை 10 : 7 யாறொருவன் இந்த உண்மையை -- எனது மறைசக்தியை ; மகிமையை உணர்ந்து விசுவாசிக்கிறானோ அவன் சந்தேகம் தெளிந்தவனாக திடமான பக்திதொண்டில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்வான் !!

கீதை 10 : 8 எல்லா பவ்தீக மற்றும் அமானுஸ்ய உலகங்களின் ஆதாரம் நானே ! ஒவ்வொன்றும் என்னிடமிருந்தே வெளிப்படுகின்றன ! மிகச்சரியாக புரிந்துகொண்ட ஞானவான்கள் முழு இதயத்தோடு என்னை பின்பற்றி பக்தி தொண்டாற்றுவார்கள் !!


இதே கருத்தை குரானின் வசனங்களும் மெய்பிக்கின்றன

17:85. (நபியே!) “உம்மிடம் ரூஹை (ஆத்மாவைப்) பற்றி அவர்கள் கேட்கிறார்கள். “ரூஹு” என் இறைவனுடைய கட்டளையிலிருந்தே உண்டானது; இன்னும் ஞானத்திலிருந்து உங்களுக்கு அளிக்கப்பட்டது மிகச் சொற்பமேயன்றி வேறில்லை” எனக் கூறுவீராக.

6:98. உங்கள் அனைவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து உண்டாக்கிப்பின் (உங்கள் தந்தையிடம்) தங்க வைத்து, (பின்னர் கர்ப்பத்தில்) ஒப்படைப்பவனும் அவனே. சிந்தித்து விளங்கிக் கொள்ளக் கூடிய மக்களுக்கு நிச்சயமாக நம் வசனங்களை விவரித்துள்ளோம்.


படைக்கப்பட்டவைகள் அனைத்தும் யாருக்குள் படைக்கப்பட்டிருக்கிறதோ அவர் அல்லாஹ் வை அடுத்த பெரியவர்

இந்த ஜிப்ரீளை சாதாரண வேலைக்காரன் என்பதாக ஆப்ராகாமியர் தங்கள் அஞ்ஞானத்தால் புரிந்துள்ளார்கள்

2:97. யார் ஜிப்ரீலுக்கு விரோதியாக இருக்கின்றானோ (அவன் அல்லாஹ்வுக்கும் விரோதியாவான்) என்று (நபியே!) நீர் கூறும்

கிறிஸ்தவர்களுக்கு முந்திய ஜபூர் வேதத்தில் இவரை குமாரன் என்ற குறிப்பு உண்டு

சங்கீதம் 2:7 தீர்மானத்தின் விவரம் சொல்லுவேன்; கர்த்தர் என்னை நோக்கி: நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜநிப்பித்தேன்;

சங்கீதம் 2:12 குமாரன் கோபங்கொள்ளாமலும், நீங்கள் வழியிலே அழியாமலும் இருக்கும்படிக்கு, அவரை முத்தஞ்செய்யுங்கள்; கொஞ்சக்காலத்திலே அவருடைய கோபம் பற்றியெரியும்; அவரை அண்டிக்கொள்ளுகிற யாவரும் பாக்கியவான்கள்.

யோவான் 1

1. ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது.

2. அவர் ஆதியிலே தேவனோடிருந்தார்.

3. சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை.


பைபிள் சகலமும் அவர் மூலமாக உண்டாக்கப்பட்டது என சொல்லுகிறதே தவிர அவரே படைத்தவர் என சொல்லவில்லை . படைத்தவர் என்று அல்லாஹ் வை ஒத்துக்கொள்கிறது

அதாவது வானவர் காப்ரியேல் - பரமாத்மாவானவர் - அதிதேவர் நாராயணன் என்ற தெளிவு ; மும்மத வேதங்களையும் சமரசப்படுத்தினால் மட்டுமே புரியும்

இந்த ஜிபாராயிலே பூமியில் மலக்கு துத்ராக இயேசுவாகவும் அதற்கு முன்பு ராமராகவும் கிறிஷ்ணராகவும் வந்தார்

4:171. வேதத்தையுடையோரே! நீங்கள் உங்கள் மார்க்கத்தில் அளவு கடந்து செல்லாதீர்கள். அல்லாஹ்வைப் பற்றி உண்மையைத் தவிர (வேறெதையும்) கூறாதீர்கள்; நிச்சயமாக மர்யமுடைய மகனாகிய ஈஸா மஸீஹ் அல்லாஹ்வின் தூதர் தான்; இன்னும் (“குன்” ஆகுக என்ற) அல்லாஹ்வின் வாக்காக (அதனால் உண்டானவராகவும்) இருக்கின்றார்; அதை அவன் மர்யமின்பால் போட்டான்;

19:17. மர்யம் (தம்மை) அவர்களிடமிருந்து (மறைத்துக் கொள்வதற்காக) ஒரு திரையை அமைத்துக் கொண்டார்; அப்போது நாம் அவரிடத்தில் நம் ரூஹை (ஜிப்ரீலை) அனுப்பி வைத்தோம்; (மர்யமிடம்) சரியான மனித உருவில் தோன்றினார்.

ஆதாவது ருஹ் என்ற ஜிப்ரீல் மர்யம் வயிற்றில் நின்று ஈஸா மசீஹ் அவதரித்தார்

மசீஹ் என்றால் வானவர் மனிதனாக அவதரித்து வந்தவர் என்ற அர்த்தம்

அறைகுறை ஞானத்தால் அவரும் சாதாரண ஒரு தூதர்தான் என்று சொல்வது தவறு

10. அவர் உலகத்தில் இருந்தார், உலகம் அவர் மூலமாய் உண்டாயிற்று. உலகமோ அவரை அறியவில்லை.

11. அவர் தமக்குச் சொந்தமானதிலே வந்தார், அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.


ஆக யாருக்குள் யாரைக்கொண்டு சகலவற்றையும் அல்லாஹ் படைத்தாரோ அந்த இயேசுவுக்கும் சகல படைப்புகளின் பாவத்தில் அல்லாஹ் வைப்போலவே பங்கிருக்கிறது

ஆகவே அவரவர் பாவத்தை இயேசுவாலும் சுமக்க முடியும்

ஆதி இந்து உபநிசத்தில் ஆதி புருஷ்னை அல்லாஹ் படைத்தபிறகு படைக்க்ப்பட்டவை செய்யும் பாவங்களுக்காக அவரை பளியிட்டதாக வர்ணனை புருஷ சூக்தாத்தில் தீர்க்கதரிசனமாக சொல்லப்பட்டுவிட்டது

இயேசுவுக்கு முந்தின தீர்க்கதரிசி ஏசாயா 53:4 மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்; நாமோ, அவர் தேவனால் அடிபட்டு வாதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டவரென்று எண்ணினோம்.

ஏசாயா 53:10 கர்த்தரோ அவரை நொறுக்கச் சித்தமாகி, அவரைப் பாடுகளுக்குட்படுத்தினார்; அவருடைய ஆத்துமா தன்னைக் குற்றநிவாரணபலியாக ஒப்புக்கொடுக்கும்போது, அவர் தமது சந்ததியைக் கண்டு, நீடித்தநாளாயிருப்பார், கர்த்தருக்குச் சித்தமானது அவர் கையினால் வாய்க்கும்.

ஏசாயா 53:12 அவர் தம்முடைய ஆத்துமாவை மரணத்திலூற்றி, அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டு, அநேகருடைய பாவத்தைத் தாமே சுமந்து, அக்கிரமக்காரருக்காக வேண்டிக்கொண்டதினிமித்தம் அநேகரை அவருக்குப் பங்காகக் கொடுப்பேன்; பலவான்களை அவர் தமக்குக் கொள்ளையாகப் பங்கிட்டுக்கொள்வார்.

பரமாத்மா காப்ரீயேல் நாராயணன் என்ற அதிதேவரைப்பற்றிய தெளிவு அரபியர்களுக்கு இல்லாததால் குரானின் சில வசனங்களை கைவைத்துவிட்டனர்

ஆகவே பாபேல் சாபத்தின் படியாக குரானும் உண்மை பைபிலும் உண்மை என்று புரிந்துகொள்ள முடியாமல் சண்டையிட்டு கொண்டுள்ளனர்

அதுமட்டுமல்ல அந்த காப்ரியேல் இந்தியர்களை நல்வழிப்படுத்த ஏற்கனவே ராமராகவும் கிறிஷ்ணராகவும் அவதரித்துவிட்டார் என புரியாமல் மதம் மாற்றுவோம் என நேரத்தை வீனடித்துக்கொண்டுமுள்ளனர்

முகமதுநபியால் வாக்களிக்கப்பட்ட அல்மஹ்தி என்ற சமரச வேதாந்தி வரும் போது இந்த சண்டைகளை நீக்கி பூமியில் சமாதானம் உண்டாகும்




Sunday, March 29, 2020

லலித சகஸ்ரநாமம் பாடல் 112 -Lalita Sahasranamam (Verse 112)





VimarshaRupini : விமர்ச ரூபிணி - விமர்சிக்கப்படும் ரூபம் உள்ளவள் – ஈர்ப்பதால் கணக்கிடப்பட்டுக்கொண்டே இருக்கப்படுபவளாம்

அன்னையின் அம்சமான பெண்கள் அனைவருமே ; அவர்கள் உலாவும் போது காண்போர் அனைவராலும் ஏதாவது கணக்கீடு செய்யப்பட்டுக்கொண்டுதானே உள்ளார்கள்
சாதாரண பெண்களுக்கே அப்படி என்றால் சர்வ அழகுள்ள அன்னை ஆராதிக்கப்படாமல் இருப்பாளா ?

Vidya : வித்யா – வித்தைகளின் உறைவிடமானவள் – அறிவின் ஞானத்தின் பிறப்பிடமானவள்

நாம் பார்க்கிற ஒன்றை கணக்கீடு செய்யாமல் – விபரங்களை சேகரிக்காமல் அதைப்பற்றிய அறிதல் – அறிவு வராது

ஒன்றை பற்றிய பல பல விபரங்களே அறிவு ; அதைப்பற்றிய ஆழமான அனுபவமே ஞானம்

அன்னையின் அழகு ஈர்ப்பு மட்டுமல்ல ; அவளைப்பற்றிய பல பல பரிமாணங்களை அவள் உணர்த்திக்கொண்டே இருப்பதால் பக்தனுக்கு ஞானம் பயிற்சியாகிறது

அறிவின் பாதையில் ஞானத்தின் பாதையில் அவள் நம்மை பயிற்சி கொடுக்கிறாள்

ஆகவே அவளே வித்யை

VIydAdi JagatprasUh : வியாதி ஜகத் பிரசூஹ் – உலக வாழ்வின் மீதும் அதன் ஆடம்பரங்கள் மீதும் மோகத்தை கொடுக்கிறவளும் ; அதனால் பாவங்களை செய்ய வைத்து துன்பத்தை ; நோயை வரவழைத்துக்கொள்ள வைக்கிறவளூம் அவளே

Sarva vyAdhi prashamani : சர்வ வியாதி பிராசாமணி – அப்படி நோவுகளில் உலழும் போது அதில் படிப்பினையை கொடுத்து ஞானத்தை கற்றுக்கொடுக்கிறவளூம் இவளே

அந்தந்த நோவுகளுக்கு ஏற்ற படிப்பினை என சர்வ நோவுகளுக்கும் சர்வ படிப்பினையை நமக்கு கற்பிக்கிறவள்
Sarvamrutyu nivArini : சர்வ மிருத்யோ நிவாரணி _ சர்வ நோவுகளாலும் நாம் அழிந்து விடாதபடி நம்மை தற்காத்து விடுவிக்கிறவளூம் இவளே ; தற்காத்து ஞானத்தை நல்கி பாவங்களிலிருந்து ஒவ்வொன்றாக நம்மை விடுவித்து விடுவாள்

பாவத்திலே நம்மை மூழ்க வைக்கும் போது அவள் காளி

சிவனையும் அவரால் உண்டான மனுக்குலத்தையும் மிதித்து இச்சைகளுக்கு ஆட்படுத்துகிறவளாக நாக்கை தொங்கிட்டவளாக சித்தரிக்கப்படுபவள்

அவளே பாவத்திலிருந்து நம்மை விடுவிக்கும் போது பவதாரிணி

அவளின் ஒரு கரம் சிவலிங்கத்தை ஆராதிக்கிறவளாக சித்தரிக்கப்படுபவள்






திருவெம்பாவை பாடல் எண் : 3




முத்தன்ன வெண்நகையாய் முன்வந் தெதிர் எழுந்தென்
அத்தன் ஆனந்தன் அமுதன் என் றள்ளூறித்
தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய்
பத்துடையீர் ஈசன் பழவடியீர் பாங்குடையீர்
புத்தடியோம் புன்மைதீர்த் தாட்கொண்டாற் பொல்லாதோ
எத்தோநின் அன்புடைமை எல்லோம் அறியோமோ
சித்தம் அழகியார் பாடாரோ நம்சிவனை
இத்தனையும் வேண்டும் எமக்கேலோர் எம்பாவாய்


முத்தை போல புன்னைகையை சிந்தி கலகலப்பாக பேசுகிறவளே !

நல்லடியார்களை கண்டால் சிவன் மீது பற்று கொண்டவள் போல என் அத்தன் ; ஆனந்தம் நல்குகிறவன் ; அமுதம் போன்றவன் என்றெல்லாம் சிலாகித்து தித்திக்க தித்திக்க நீ பேசுவதெல்லாம் பசப்பு தானோ ?

இன்னும் நீ வாசல் திறக்கவில்லையே ?

பந்த பாசம் என உலக பற்றும் ; இறைவன் மீது பழசாகிப்போன பற்றும் என ஆற்றில் ஒரு காலும் சேற்றில் ஒரு காலுமாக அல்லாடுகிற இயல்புடையவளே

நம் மீதும் குடும்பத்தின் மீதும் புற்று போல வளர்க்கிற புன்மை கர்மங்களை தீர்த்து ஆட்கொள்ள வல்லவர் நாம் சிவனல்லவோ ?

பழவினைகள் எத்தனை பொல்லாப்பு செய்துவிடும் ; எல்லாம் நாம் அறிவோமோ

அறிவுள்ளவர்கள் கர்மங்களை களைய சிவ சற்குருநாதன் மீது பக்தி கொண்டு புகழ்கிறார்களே ; இறைவனை தேடுகிறார்களே ?

அவனை நாடினால் உலக வாழ்விற்கும் அத்தனையும் அருள்வான் என்று அறியீரோ

வெளிநாட்டு மக்களை நல்வழிப்படித்த இயேசுவாக அவதரித்து வந்த ஸ்ரீகிறிஷ்ணர் உலக வாழ்விற்கும் ஆன்ம வாழ்விற்கும் இடையில் அல்லாடீதீர்கள் என கூறியுள்ள அறிவுரையை கேளுங்கள் :

24. இரண்டு எஜமான்களுக்கு ஊழியம் செய்ய ஒருவனாலும் முடியாது; ஒருவனைப் பகைத்து ஒருவனைச் சிநேகிப்பான். அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு மற்றவனை அசட்டைபண்ணுவான்; தேவனுக்கும் உலகப் பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களால் முடியாது.

25. ஆகையால் என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும்; என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்கள் என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஆகாரத்தைப் பார்க்கிலும் ஜீவனும், உடையைப்பார்க்கிலும் சரீரமும் விசேஷித்தவைகள் அல்லவா?

26. ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப்பாருங்கள்; அவைகள் விதைக்கிறதுமில்லை, அறுக்கிறதுமில்லை, களஞ்சியங்களில் சேர்த்துவைக்கிறதுமில்லை; அவைகளையும் உங்கள் பரமபிதா பிழைப்பூட்டுகிறார்; அவைகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்கள் அல்லவா?

27. கவலைப்படுகிறதினாலே உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான்?

28. உடைக்காகவும் நீங்கள் கவலைப்படுகிறதென்ன? காட்டுப்புஷ்பங்கள் எப்படி வளருகிறதென்பதைக் கவனித்துப்பாருங்கள். அவைகள் உழைக்கிறதுமில்லை, நூற்கிறதுமில்லை;

29. என்றாலும் சாலொமோன் ராஜா முதலாய்த் தன் சர்வ மகிமையிலும் அவைகளில் ஒன்றைப்போலாகிலும் உடுத்தியிருந்ததில்லை என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன்.

30. அற்ப விசுவாசிகளே! இன்றைக்கு இருந்து நாளைக்கு அடுப்பிலே போடப்படும் காட்டுப் புல்லுக்குத் இறைவன் இவ்விதமாக உடுத்துவித்தால், உங்களுக்கு உடுத்துவிப்பது அதிக நிச்சயமல்லவா?

31. ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம், என்னத்தை உடுப்போம் என்று கவலைப்படாதிருங்கள்.

32. இவைகளையெல்லாம் அஞ்ஞானிகள் நாடித்தேடுகிறார்கள்; இவைகளெல்லாம் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்கள் பரமபிதா அறிந்திருக்கிறார்.

33. முதலாவது இறைவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்.

34. ஆகையால் நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்; நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். அந்தந்த நாளுக்கு அதினதின் பாடு போதும். (மத்தேயு : 6)






Saturday, March 28, 2020

ராமன் என்றால் குமாரன்





ராமா ராமா

ராமன் என்றால் குமாரன்

பிரதிநிதி


பரத்திலுள்ள இறைவனுக்கு பூமியில் வந்துள்ள பிரதிநிதி ராமன்

குரானின் வாசகப்படி இறைதூதன்

பூமியில் இதுவரை 33000 இறைதூதர்களை இறைவன் அனுப்பியிருப்பதாக குரானில் உள்ளது . அவர்களில் சில பத்து நபர்களைத்தவிர மற்றவர்கள் அரபியர்களுக்கு - இசுலாமியர்களுக்கு தெரியாதவர்கள் என்றுமுள்ளது

அசுரர்களை அடக்க நர நாராயணர்களாக முதல் இறைதூத ஜோடி வந்த்து

அதே ஜோடியே ராமனாகவும் லஷ்மணனாகவும் வந்த்து

கிரிஸ்ணராகவும் அர்ச்சுணராகவும் வந்த்து

வெளிநாட்டில் இயேசுவாகவும் முகமதுநபியாகவும் வந்த்து


எப்படியாகிலும் ராமநாமம் என்பது பூமிக்கு வந்த - வரப்போகிற இறைதூதர்களின் நாமங்களே

விஷ்னு சகஸ்ரநாமத்தில் சிவன் உரைத்ததாவது

சகஸ்ரநாம தத்துல்யம்
ராமநாம வரானனே


ராம நாமத்தால் அதாவது இறைதூதன் என்ற அந்தஸ்தோடு பூமிக்கு வந்தவர்களின் - வருகிறவர்களின் பெயரே சகஸ்ரநாமம் என்பதாகும்

ராமா ராமா என உருகி முக்தியடைந்த தியாகராஜரின் கீர்த்தனையை @Dr. Shobana Vignesh மூழ்கி திளைத்தே பாடுகிறார்






Sunday, March 8, 2020

திருஞானசம்மந்தர் தேவாரம் - தருமபுரம்



பெண்கள் தின வாழ்த்தாகவே திருஞானசம்மந்தர் தருமபுரம் தேவாரம் இருக்கிறது

தருமபுரம் வருகிறார் திருஞான சம்மந்தர்

அங்கு சிவனை தரிசிக்கிறார் ; அவர் உணர்ந்தது எதுவோ அதனை பதிகமாக பாடுகிறார்

இந்த பாடலில் நான்கு கருத்துக்கள் உள்ளன .

அந்த நான்குமே அன்னையைப்பற்றியதாகவே இருக்கிறது என்பதாலேயே பெண்கள் தின வாழ்த்தாகவே இப்பாடலை பதிகிறேன்

பெண்கள் இயல்பாகவே தன் கணவனுக்கு அடிமையாகவே பற்று உறுதியாக இருப்பார்கள்

அன்னம் போன்ற அழகுடையவளே ஆனாலும் மட அன்னமாம்
பெண்களுக்கே உரிய கணவனுக்குரிய அடிமைத்தனம் ; பற்றுதி உள்ளவளாம்


ஆதியாகமம் 3 ;16. அவர் ஸ்திரீயை நோக்கி: நீ கர்ப்பவதியாயிருக்கும்போது உன் வேதனையை மிகவும் பெருகப்பண்ணுவேன்; வேதனையோடே பிள்ளை பெறுவாய்; உன் ஆசை உன் புருஷனைப் பற்றியிருக்கும், அவன் உன்னை ஆண்டுகொள்ளுவான் என்றார்.
அப்படிபட்ட மலைமகளின் நடை அழகையும் உடை அழகையுமே துணை ; மனதுக்கு ரசனை என மகிழ்ந்து இருப்பவராம் சிவன்

பூத கணங்கள் இசை பாடி மகிழ்விக்கும் போது சிவனார் ஆடுவாராம் ; அப்போது கூட அவரோடு இசைந்தாடும் அவரின் படர்ந்த சடையாக இருப்பவளும் கங்கா அன்னைதானே

இசைக்கப்படும் ஏழிசையிலும் வேதங்கள் கலந்து வருகின்றனவாம் ; அது எது போல என்றால் பூமியை விம்மி விம்மி தழுவி பூமிக்கு சத்தளிக்கும் கடலைப்போன்ற அன்னையானவள் சிவனை தழுவி தழுவி அவருக்கு தெம்பும் பலமும் தருகிறாளாம் அன்னை

ஆழ்கடல் அசைவற்று இருக்கும் . தேங்கிய நீர் சாக்கடை ஆகி உயிரற்று கெட்டுப்போய் விடும் . ஓடும் நீரே பிராணவாயுவுடன் கலந்து உயிர்ப்புள்ளது

ஆழ்கடலில் கடலின் மேற்பரப்பில் காற்றால் அலையோடும் ; அதில் வெண்திரை உருவாகும் . இந்த வெண் திரையே திடமாகி கடலுக்கடியில் கடல் பாசி என்ற செடி கொடிகளாக மாறுகின்றனவாம் . அதில் மீன்கள் உருவாகி அதனை உண்டு வளர்க்கின்றனவாம் ; இரை - உணவும் சத்துமாகும்

கடல்கரையில் நுரையாக அந்த வெண் திரையே பொங்கி நின்று விம்மி விம்மி கரையை பொருது பலமளிக்கிறதாம் ; அப்படி சிவநாரை விம்மி விம்மி பொருதிக்கொண்டே இருக்கிற தனங்களை உடையவள் அன்னை

புன்னை மரம் கொடுமையான வெயிலில் குளிர்ச்சியான நிழலை கொடுத்து சத்தான எண்ணையும் கொடுப்பது போல அன்னை தாதுக்களை சேகரித்துள்ள வயிற்றை உடையவளாம்

வண்டுகள் மயங்கிக்கிடக்கிற மலர்களைப்போல எழிலும் பொழிலும் குயில் போன்ற குரலையும் உடைய அன்னை நடைபயில்கிற தருமபுரத்தின் பதி - அரசனாக சிவன் இருக்கிறாராம்

இந்தப்பதிகம் முழுவதும் அன்னையைப்பற்றிய புகழ் வருகிறதே தவிர சிவனைப்பற்றி புகழ் இல்லை






Tuesday, March 3, 2020

திருவெம்பாவை 2




பாசம் பரஞ்சோதிக் கென்பாய் இராப்பகல்நாம்
பேசும்போ தெப்போதிப் போதார் அமளிக்கே
நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்
சீசி இவையுஞ் சிலவோ விளையாடி
ஏசும் இடமீதோ விண்ணோர்கள் ஏத்துதற்குக்
கூசு மலர்ப்பாதந் தந்தருள வந்தருளும்
தேசன் சிவலோகன் தில்லைச்சிற் றம்பலத்துள்
ஈசனார்க் கன்பார்யாம் ஆரேலோர் எம்பாவாய்

நான் இறைவன் மீது பாசம் ; அன்பு ; பக்தி வைத்துள்ளேன் என பரபரப்பாக அடுத்தவர் முன்பு பகட்டு காட்டி விட்டு உலகப்பொருட்களின் மீதும் ; சுக போகங்களின் மீதும் பித்து வைக்கிறவர்களே

சீ சீ ; விளையாட்டு போக்காகும் வாழ்வு இதுவோ ?

15. கேட்கிறதற்கு காதுள்ளவன் கேட்கக்கடவன்.

16. இந்தச் சந்ததியை யாருக்கு ஒப்பிடுவேன்? சந்தைவெளிகளில் உட்கார்ந்து, தங்கள் தோழரைப்பார்த்து:

17. உங்களுக்காக குழல் ஊதினோம், நீங்கள் கூத்தாடவில்லை; உங்களுக்காகப் புலம்பினோம், நீங்கள் மாரடிக்கவில்லை என்று குறைசொல்லுகிற பிள்ளைகளுக்கு ஒப்பாயிருக்கிறது.

உலக வாழ்க்கை விளையாட்டும் வீணும் வியத்தமுமானது என்ற உள்ளுணர்வோடு கடமைகளை மட்டும் நிறைவேற்றிக்கொண்டு உள்ளார்ந்து இறைவனை நாடுகிற இதயம் ; காலகட்டம் ஒவ்வொரு நபரின் வாழ்விலும் ஒரு பிறவியில் உண்டாகும்

அதுவரை அருவமான இறைவனை வாயிலே சொல்லவும் காதிலே கேள்விப்படவும் மட்டுமே முடியும்

உள்ளார்ந்த உறவோ ; அன்போ உண்டாகாது

ஆனாலும் இறைவனின் அம்ஸத்தோடு ரூபத்தில் வெளிப்பட்ட அதிதேவர்கள் ; நமக்கும் இறைவனுக்கும் இணைப்பு பாலம் போன்றவர்கள்

யோவான் 6:46 தேவனிடத்தினின்று வந்தவரே தவிர வேறொருவரும் பிதாவைக் கண்டதில்லை, இவரே பிதாவைக் கண்டவர்.

நமது குற்றம் குறைகளினால் நாம் இறைவனின் பரிசுத்தத்திற்கு ஒப்புரவு ஆகாதவர்களாக இருந்தாலும் ; தங்களது சற்குரு ஸ்தானத்தால் நம் கோரிக்கைகளுக்கு இறைவன் செவி சாய்க்க செய்கிறவர்கள்

யோவான் 16:26 அந்த நாளில் நீங்கள் என் நாமத்தினாலே வேண்டிக்கொள்வீர்கள். உங்களுக்காகப் பிதாவை நான் கேட்டுக்கொள்வேனென்று உங்களுக்குச் சொல்லவேண்டியதில்லை.

சிவனார் வைரவனாகி பூமியை விட்டு பரமேறிய பின்பு ; ராவணாதி அரக்கர்களின் ஆட்டம் பூமியில் அதிகரித்தது

அப்போது பூமிக்கு வந்த முதல் தேவ தூதரான ஸ்ரீராமர் ; ராம நாமத்தால் வழிபடுங்கள் என்ற செயல்முறையை முதல் முதலில் அறிவித்தார்

ராமர் பெரியவரா ? ராம நாமம் பெரியதா ? என அந்தக்காலத்தில் கோவில் கோவிலாக உபன்யாசம் நடக்கும்

அதன் தாத்பர்யம் என்ன என தெரியாத மானிடர்கள் ; ஆளாளுக்கு ராமரும் அவர்தான் ராம நாமமும் அவர்தான் ; ஆனால் ராமா என்று சொல்லாமல் ராம நாமம் என சொல்லவேண்டும் என அறிவை காட்டிக்கொண்டிருப்பார்கள்

ராமரும் ராம நாமமும் ஒன்று என்றால் எதற்காக ராம நாமம் என்று சொல்ல வேண்டும்

விளக்கம் எதுவென்றால் அதை அதே ராமர் ; இயேசுவாக பூமிக்கு வந்த போது விளக்கமாக சொன்னார்

ராமர் என்றால் அர்த்தம் குமாரன்

இந்த குமாரன் என்பது அரூபமான இறைவன் ரூபமுள்ள அதிதேவர்கள் நால்வரை வெளிப்படுத்தி ; அவர்களுக்கு கீழே 33 கோடி தேவர்களை வைத்து இந்த முழு பிரபஞ்ச இயக்கத்தையும் நிர்வகித்து வருகிறார்களால்லவா ?

இந்த நால்வரே குமாரர்கள்

இந்த நால்வர்கள் யாரென்றால் நாராயணன் ; சிவன் ; ஆதிசேஷன் & ஆதிசக்தி என்பவர்களாம்

யோவான் 3:35 பிதாவானவர் குமாரனில் அன்பாயிருந்து எல்லாவற்றையும் அவர் கையில் ஒப்புக்கொடுத்திருக்கிறார்.

யோவான் 5:20 பிதாவானவர் குமாரனிடத்தில் அன்பாயிருந்து, தாம் செய்கிறவைகளையெல்லாம் அவருக்குக் காண்பிக்கிறார்; நீங்கள் ஆச்சரியப்படத்தக்கதாக இவைகளைப் பார்க்கிலும் பெரிதான கிரியைகளையும் அவருக்குக் காண்பிப்பார்.


உலகில் ஆங்காங்கு அந்தந்த பகுதி மக்களுக்காக வெளிப்பட்ட வேதங்களை வரட்டுத்தனமான சடங்குகளாக மதங்களாக மாற்றம் செய்துகொண்டு மததுவேசங்களை அசுரர்கள் பரப்பிவிட்ட்னர்

ஒருவரை ஒருவர் மதமாற்றம் செய்யாமல் ஒரு வேத வசனங்களை கொண்டு மற்றொரு வேதத்தை செழுமைப்படுத்திக்கொண்டால் மட்டுமே முழுமையான இறை நிலையை உணரமுடியும்

பரத்திலே குமாரன் எனப்படும் நாராயணன் ; சிவன் ; ஆதிசேஷன் & ஆதிசக்தி என்பவர்களை ஆப்ரகாமிய வேதங்களில் ஆர்க் ஏஞ்சல் காப்ரியேல் ; மிகாயேல் ; உரியேல் ; ராபேல் என்கிறார்கள்

இந்த நால்வரும் அல்லாஹ்வுக்கு அடுத்தவர்கள் ; அல்லாஹ்வின் ரூப வெளிப்பாடுகள் ; அல்லாஹ்வுக்கு இணையானவர்களும் கூட

யோவான் 5:22 அன்றியும் பிதாவைக் கனம்பண்ணுகிறதுபோல எல்லாரும் குமாரனையும் கனம்பண்ணும்படிக்கு, பிதாவானவர்தாமே ஒருவருக்கும் நியாயத்தீர்ப்புச் செய்யாமல், நியாயத்தீர்ப்புச் செய்யும் அதிகாரம் முழுவதையும் குமாரனுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார்

யோவான் 5:23 குமாரனைக் கனம்பண்ணாதவன் அவரை அனுப்பின பிதாவையும் கனம்பண்ணாதவனாயிருக்கிறான்.

யோவான் 5:26 ஏனெனில், பிதாவானவர் தம்மில் தாமே ஜீவனுடையவராயிருக்கிறதுபோல, குமாரனும் தம்மில்தாமே ஜீவனுடையவராயிருக்கும்படி அருள் செய்திருக்கிறார்.


யோவான் 5:30 நான் என் சுயமாய் ஒன்றுஞ்செய்கிறதில்லை; நான் கேட்கிறபடியே நியாயந்தீர்க்கிறேன்; எனக்குச் சித்தமானதை நான் தேடாமல், என்னை அனுப்பின பிதாவுக்குச் சித்தமானதையே நான் தேடுகிறபடியால் என் தீர்ப்பு நீதியாயிருக்கிறது.

இந்த குமாரன் என்ற ஏற்பாடு ; திரேதா யுகத்தில் ராமர்  லக்ஷ்மணன் ; துவாபர யுகத்தில் கிறிஷ்ணன் அர்ச்சுணர் கலியுகத்தில் இயேசு முகமதுநபி என்ற நர நாராயண ஜோடிகளின் செயல்பாடாகும்

இது கலியுகம் என்பதால் வெவ்வேறு பகுதி மக்களுக்காக பூமிக்கு அவதார தூதர்களாக அனுப்பபட்ட் அதாவது குரானின் படி மலக்கு தூதர்களை அதாவது குமாரர்களை ஒரே ஜோடி என புரிந்துகொள்ள முடியாமல் மதவாதிகளும் ; மததுவேசிகளும் ஒருவரை ஒருவர் காரி துப்பிக்கொண்டு மதம் மாற்றிக்கொண்டு மண்டைகளை உடைத்துக்கொள்ளும் வழிகேட்டில் இறைவன் விட்டுவிட்டார்

ஆனால் வரப்போகிற அல்மஹ்தி என்ற சமரச வேதாந்தி இவைகளை இறைவனின் வல்லமையோடு அத்தாட்சியோடும் நிலைநாட்டுவார்


குரான் 2:98. எவன் அல்லாஹ்வுக்கும், அவனுடைய மலக்குகளுக்கும், அவனுடைய தூதர்களுக்கும், ஜிப்ரீலுக்கும், மீக்காயிலுக்கும் பகைவனாக இருக்கிறானோ, நிச்சயமாக (அவ்வாறு நிராகரிக்கும்) காஃபிர்களுக்கு அல்லாஹ் பகைவனாகவே இருக்கிறான்.
2:177. புண்ணியம் என்பது உங்கள் முகங்களைக் கிழக்கிலோ, மேற்கிலோ திருப்பிக்கொள்வதில் இல்லை; ஆனால் புண்ணியம் என்பது அல்லாஹ்வின் மீதும், இறுதி(த் தீர்ப்பு) நாளின் மீதும், மலக்குகளின் மீதும், வேதங்களின் மீதும், நபிமார்கள் மீதும் ஈமான் கொள்ளுதல் ஆகும்

2:285. (இறை) தூதர், தம் இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பெற்றதை நம்புகிறார்; (அவ்வாறே) முஃமின்களும் (நம்புகின்றனர்; இவர்கள்) யாவரும் அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும் நம்புகிறார்கள்: “நாம் இறை தூதர்களில் எவர் ஒருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டுவதில்லை; (என்றும்) இன்னும் நாங்கள் செவிமடுத்தோம்; (உன் கட்டளைகளுக்கு) நாங்கள் வழிப்பட்டோம்; எங்கள் இறைவனே! உன்னிடமே மன்னிப்புக் கோருகிறோம்; (நாங்கள்) மீளுவதும் உன்னிடமேதான்” என்று கூறுகிறார்கள்.

ஜிப்ரீலுக்கும் (நாராயணனுக்கும்), மீக்காயிலுக்கும் (சிவனுக்கும்) பகைவனாக இருக்கிறானோ, நிச்சயமாக (அவ்வாறு நிராகரிக்கும்) காஃபிர்களுக்கு அல்லாஹ் பகைவனாகவே இருக்கிறான்.
இந்த உண்மை புரியாமலேயே மதவாதிகள் ஒருவர் மண்டைகளை ஒருவர் உடைத்து வருகிறார்கள்

அதிதேவர்கள் அல்லாஹ்வின் ரூபமும் வெளிப்பாடும் ஆனதால் குமார்கள் என்ற அந்தஸ்து உள்ளவர்கள்

இவர்களை பார்த்து வானவர்களும் பயப்படுவார்கள் என்கிறார் மாணிக்கவாசகர்

விண்ணோர்கள் ஏத்துதற்குக் கூசும் மலர்ப்பாதந் தந்தருள வந்தருளும்
தேசன் சிவலோகன் தில்லைச்சிற் றம்பலத்துள்
ஈசனார்க் கன்பார்யாம் ஆரேலோர் எம்பாவாய்

பரலோகம் ஐந்து அடுக்குகளால் ஆனது என்பார்கள்

அதில் உன்னதமான பரத்திற்கு முன்பு சிவலோகம் உள்ளது . சிவனின் குருகுலத்தில் வளர்க்கிறவர்களை வளர்த்து ஆளாக்கி சித்தி தருகிறவர் சிவன்

அதுபோல அந்தந்த லோகத்தில் அவரவர் குரு வழி நாம் சென்று அங்கிருந்து தான் உண்மையான இறைவனை தரிசித்து நாம் சித்தி அடையமுடியும்

யோவான் 14:2 என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு; அப்படியில்லாதிருந்தால், நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன்; ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்போகிறேன்.

பரலோகத்தில் அந்தந்த குநாதர்களுக்குரிய லோகத்தை அந்தந்த குவழியில் வந்தவர்கள் அடைவார்கள்

கீதை 12 : 1 அர்ச்சுணன் கேட்டான் : புலன்களுக்கு அப்பாற்பட்ட கண்ணால்
காண இயலாத கடவுளை வழிபடுபவர்கள் ; இதோடு கூட உம்மை சற்குருவாக பின்பற்றி முறையாக கடவுளை வழிபடுபவர்கள் இவர்களில் யார் விரைவில் பக்குவமடைவார்கள் ?

கீதை 12 : 2 அவதூதர் கிரிஸ்ணர் கூறினார் : என் மீது பற்று கொண்டு மனதை எப்போதும் என்னிடம் ஈடுபடுத்தி என் மூலமாக கடவுளை நம்பிக்கையுடன் யார் வழிபடுகிறார்களோ ; அவர்களுக்கு பரலோக வாழ்வுக்கான திவ்யமான விஷயங்கள் என்னால் அளிக்கப்பட்டு பக்குவமடைகிறார்கள்

கீதை 12 : 3 & 4 : ஆனால் தோற்றமில்லாததும் , புலன்களுக்கு அப்பாற்பட்டதும் எங்கும் விரவி நிற்பதும் புரிந்துகொள்வதற்கு அப்பாற்பட்டதும் மேலும் மாற்றமில்லாததும் அசைவுகள் அற்றதும் பூரணமானதும் ஆன கடவுளின் அருவத்தன்மையில் புலன்களை கட்டுப்படுத்தி நிலைப்படுத்துகிற யோகிகள் மன சமநிலை அடைய தனக்குள் போராடி எங்கும் எதிலும் சமநோக்கு உண்டாகவும் சகல உயிர்களுக்கும் நன்மை பயக்கும் கர்மங்களை செய்யவும் பெரும் பிரயத்தனம் செய்தும் இயலாமல் பலகீனத்தை உணர்ந்து தாழ்மையடைந்து இறுதியில் என் குருத்துவத்தை சரணடைவார்கள் !

கீதை 12 : 5 ஏனெனில் உடலை அடக்கும் அப்பியாசத்தால் கடவுளின் அரூபத்தில் மனதை நிலைபடுத்துவது , பக்குவம் எய்துவது – முன்னேற்றம் காண்பது மிகமிக கடினம் ! உடலை உடையோருக்கு அவ்வழி சிரமம் !

கீதை 12 : 6 & 7 ஆனால் எவர் என்னை ஏற்றுக்கொண்டு ( குருபக்தி ) எல்லா செயல்களையும் கடவுளுக்காக அர்ப்பணித்து எனது குருத்துவத்தில் பிறழாது பக்தி தொண்டாற்றுகிறார்களோ ; என்னை பின்பற்றுகிறார்களோ அவர்களை பிறப்பு இறப்பு என்னும் சாகரத்திலும் ஜடஉலகின் பந்தத்தால் நீளும் பிறவிகளிலும் உழலாமல் விரைவில் விடுவிகிறவன் ஆகிறேன் !!

கீதை 12 : 8 என் மீது மனதை பற்றவைத்து என் உபதேசங்களுக்கு உன் புத்தியை கீழ்ப்படுத்துவாயானால் என்னில் நிச்சயமாக நீ வாழ்வாய் என்பதில் சந்தேகமில்லை !!

கீதை 12 : 9 செல்வத்தை சம்பாதிக்கும் ஆற்றலுள்ளோனே ! உன் மனதை என்னிலே சமப்படுத்து ! முடியாவிட்டாலும் பக்தி யோகத்தின் நெறிகளை விடாது பின்பற்றுவாயாக ! அது என்னிலே நீ நிலைபெறுவதற்கான பயிற்சியை உண்டாக்கி என்னைப்போலாகும் ஆசையை பூர்த்தி செய்யும் !!

கீதை 12 : 10 பக்தி யோகத்தின் நெறிகளை பயிற்சி செய்ய இயலாவிடின் எனது குருத்துவத்தின் ஏவுதல்களை செயலாக்க முயல்வாயாக ! அவ்வாறு உனது கர்மங்கள் கடவுளுக்கு அர்ப்பணமாக நீ செய்வதால் விரைவில் பக்குவ நிலையை வந்தடைவாய் !

கீதை 12 : 11 இருப்பினும் இதைக்கூட செய்ய உன்னால் முடியாவிட்டாலும் ; குருவாகிய என்னிடம் அடைக்கலம் பூண்டு பக்தித்தொண்டாக எல்லா செயல்களின் பலன்களையும் தியாகம் செய்து விடுவாயாக ! இருக்கிறோம் என்ற இருப்பைத்தவிர உனது எல்லா செயல்களின் விளைவுகளையும்
கடவுளுக்கே அர்ப்பணித்து விடுவதால் ஆத்மாவிலே நிலை பெற முடியும் !

கீதை 12 : 12 நிச்சயமாக ஞானமே சிறந்தது ! ஞானத்துடன் தியானத்தையும் அப்பியாசிப்பாயாக ! முக்கியமாக உனது கர்மங்களின் விளைவுகளை கடவுளுக்கே அர்ப்பணித்து விடுவாயாக ! அர்ப்பணிப்பே மன சாந்தியை அருளும் !

கீதை 12 : 13 எல்லா உயிர்களிடத்தும் அன்புடனும் ; போட்டி பொறாமையற்ற நட்புடனும் ; நான் என்ற அலட்டல் அற்றும் ; முதிர்ந்த மனதால் சகலரின் தீயகுணங்களையும் சகித்தும் ; இன்பத்தையும் துன்பத்தையும் சமமாக பாவித்தும் :

கீதை 12 : 14 எப்போதும் திருப்தியுடன் தன்னில் தானே லயித்திருப்பவனே ஆத்மா ஞானியாவான் ! மனதாலும் புத்தியாலும் குருவாகிய என்னையே பற்றியவனாய் கடவுளுக்கு பக்தி தொண்டில் யாரொருவன் உறுதியாய் நிலைத்துள்ளானோ அவனே எனக்கு பிரியமானவன் !!

கீதை 12 : 15 உலக மக்கள் யாருக்கும் நெருக்கடி உண்டாக்காமலும் ; உலக மக்கள் யாராலும் யாரிடமிருந்தும் சஞ்சலம் அடையாமலும் ; இன்பம் துன்பம் பயம் மற்றும் ஏக்கம் கடந்தும் சம நிலையோடு யாரொருவன் உள்ளானோ அவனே எனக்கு பிரியமானவன் !!

கீதை 12 : 16 எல்லா செயல்பாடுகளிலும் கவலையிலிருந்து விடுபட்டும் ; துன்பங்கள் அனைத்தையும் உதாசீனப்படுத்தியும் ; உளத்துய்மையோடும் ; முரண்பாடுகள் அனைத்திலும் நடுநிலைமை – சமரசத்தில் நிபுணத்துவமும் உள்ளவன் எவனோ அத்தகு பக்தனே எனக்கு மிகவும் பிரியமானவன் !!

கீதை 12 : 17 அவன் மகிழ்ச்சியில் துள்ளிக்குதிப்பதில்லை ; துக்கத்தில் ஆழ்ந்து முடங்கிப்போவதில்லை ! கடந்ததை நினைத்து புலம்புவதுமில்லை ;
வரவேண்டியதை எதிர்பார்த்து தவிப்பதுமில்லை ! மங்களம் அமங்களம் இரண்டையும் கடந்தவன் எவனோ அத்தகு பக்தனே எனக்கு மிகவும் பிரியமானவன் !!

கீதை 12 : 18 & 19 நண்பர்களையும் எதிரிகளையும் சமமாக பாவிப்பவனும் ; புகழ்ச்சி இகழ்ச்சி ; மான அவமானம் ; இன்பம் துன்பம் ; தீ மற்றும் பணி ஆகிய இருமைகளை கடந்து சமமாக பாவிப்பவனும் ; களங்கங்களை கொண்டுவரும் சகல அசுரமாயைகளிளிருந்தும் விடுபடத்தெரிந்தும் ; இருப்பதில் திருப்தியுற்றும் ; இருப்பிடத்திற்கும் கூட கவலையற்றும் ; மெய்ஞானத்தில் நிலைத்து பக்தி தொண்டில் யாரொருவன் உறுதியாய் நிலைத்துள்ளானோ அவனே எனக்கு பிரியமானவன் !!

கீதை 12 : 20 பக்தி யோகம் என்ற இந்த அமிர்தத்தை நம்பிக்கையோடு ஏற்று உபதேசிக்கப்பட்டபடி பரமாத்மாவான என்னை சற்குருவாக ஏற்று முழுமையாக பின்பற்றுபவர்கள் எவர்களோ அவர்களே எனக்கு மிக மிக பிரியமானவர்கள் !!

ஏல் ஓர் என்பாயாக

இறைவன் ஒருவனே என்பாயாக






Sunday, February 23, 2020

இந்திய கிறிஸ்தவர்களே ; இஸ்லாமியர்களே





ராமர் என்ற கிறிஸ்ணரே இயேசுவாக அவதாரமே வராத யூதர் அரபியர் வெள்ளைக்காரர்களை நல்வழிப்படுத்த வந்தார் என்கிற உண்மையை உணர்க

சொந்த பாட்டணையும் பாட்டியையும் உடப்பிலே போட்டுவிட்டு யூதனின் ஆப்ரகாம் ஈசாக்கு யாக்கோபு இஸ்மாயிலை பாட்டன் பாட்டி என சொல்கிற பாவத்திலிருந்து வெளியேறுக

அல்லாஹ் உங்கள் கண்ணை திறக்கட்டும்

இயேசு உங்கள் கண்ணை திறக்கட்டும்

போலி யூதனாக வாழ்வது போதும்

போலி அரபியனாக வாழ்வது போதும்

ஆப்ரகாமுக்கு முன்னமே நான் இருக்கிறேன் என இயேசு சொன்னாரே அப்போது கல்லெடுத்தவர்களின் பிள்ளையாய் இராதேயும்
யோவான் 8:58 அதற்கு இயேசு: ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

ஆப்ரகாமுக்கு முன்பே இயேசுவின் முந்திய அவதாரங்களால் பண்பட்ட இந்துசமயங்கள் இறைவனிடமிருந்து வந்தவை

பாபேலின் பிரிவினை ஆவியால் மதக்குழப்பம் செய்யாதீர்கள்

நாராயணனை வழிபட்டாலே இயேசுவை வழிபட்ட புண்ணியம் உண்டாகும்

இறைவா என வழிபட்டாலே அல்லாஹ்வை வழிபட்ட புண்ணியம் உண்டாகும்

குரானில் இத்ரீஸ் நபி எனப்படுபவர் நூவ் நபியின் தாத்தா

இந்தியாவில் வந்த அகத்தியரின் தாத்தா அத்ரி மகரிசி எனப்படுபவரே இவர்

அத்ரி நபி பரத்துக்கு அழைக்கப்பட்டு சமுதாய சட்டங்களை பூமிக்கு கொண்டு வந்தார்

அத்ரியை சட்டநாதர் என இந்துகோவில்களில் வைத்துள்ளனர்

இவர் பரத்திற்கு சென்று வந்த்தால் அத்ரி பரமேஸ்வரன் எனப்படுகிறார்

நூவ் ம் அகத்தியரும் ஒருவர்

இவர். கும்பம் செய்து ஜலப்பிரளயத்தில் உயிர்களை காத்த நிகழ்வே கும்பகோணத்தில் கும்பமேளாவாக கொண்டாடப்படுகிறது

அகத்தியர் உருவாக்கிய வழிபாடு முருகன்

மாயோன் சேயோன் வழிபாடு

மாயவன் அரூவமான அல்லாஹ்

சேயோன் அவனது பிரதிநிதியாக பூமிக்கு இறைதூதர்கள் வருவார்கள் என்பதாகும்

3000 நபிமார்கள் பூமிக்கு வந்துள்ளார்களே அதில் அரபு தேசத்தை சுற்றிலும் வந்த சிலரின் வரலாறு மட்டுமே குரானில் சொல்லப்பட்டு மிகுதியானவர்கள் இந்தியாவில் வந்தவர்கள் என்பதால் சொன்னாலும் அரபியர்க்கு புரியாது என சொல்லாமல் விட்டுவிட்டதாக குரானில் உள்ளது

முருகன் என்றால் மலக்கு நபி என்று அர்த்தம்

மலக்கு ( தேவர்) ஒருவர் தூதுப்பணிக்காக பூமியில் அவதரித்து வந்தால் முருக்கி வருவதால் அதாவது தேவர் என்ற நிலையிலிருத்து மனிதனாக மாறி வருவதால் முருகன்

பூமியில் வந்த முருகர்களில் கடைசி ஜோடி யூதர்களையும் அரபியர்களையும் நல்வழிப்படுத்த வந்த ஈசா நபியும் முகமது நபியும் ஆகும்

அதற்கு முன்பே இந்தியாவில் இந்த ஜோடி (நர நாராயண ஜோடி ) ராமர் லஷ்மணராகவும் ; கிறிஸ்ணர் அர்ச்சுணராகவும் வந்துள்ளனர்

ராமரும் கிறிஸ்ணரும் இயேசுவும் ஒருவரே

லஷ்மணரும் அர்ச்சுணரும் முகமதுவும் ஒருவரே

குரான் 10:19. மனிதர்கள் யாவரும் (ஆதியில்) ஒரே இனத்தவராகவே அன்றி வேறில்லை; பின்னர் அவர்கள் மாறுபட்டுக் கொண்டனர்..

30:30. ஆகவே, நீர் உம்முகத்தை தூய (இஸ்லாமிய) மார்க்கத்தின் பக்கமே முற்றிலும் திருப்பி நிலைநிறுத்துவீராக! எ(ந்த மார்க்கத்)தில் அல்லாஹ் மனிதர்களைப் படைத்தானோ அதுவே அவனுடைய (நிலையான) இயற்கை மார்க்கமாகும்; அல்லாஹ்வின் படைத்தலில் மாற்றம் இல்லை; அதுவே நிலையான மார்க்கமாகும். ஆனால் மனிதரில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள்.

உலகின் ஆதிமனிதர்களான தமிழர்களும் இந்தியர்களும் கடைபிடிக்கும் இயற்கை மார்க்கமே ஆதி இஸ்லாம்

அதில் கலந்துவிட்ட சீர்கேடுகளை கலைய வேண்டுமே தவிர இந்துமத்த்தை அழிக்க முடியாது

இறைவனிடமிருந்து வந்த ஆதி மார்க்கமாம் இந்து மதத்தை அழிப்போம் என்ற எண்ணத்தை கைவிடுங்கள்

2:285. (இறை) தூதர், தம் இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பெற்றதை நம்புகிறார்; (அவ்வாறே) முஃமின்களும் (நம்புகின்றனர்; இவர்கள்) யாவரும் அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும் நம்புகிறார்கள்: “நாம் இறை தூதர்களில் எவர் ஒருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டுவதில்லை; (என்றும்) இன்னும் நாங்கள் செவிமடுத்தோம்; (உன் கட்டளைகளுக்கு) நாங்கள் வழிப்பட்டோம்; எங்கள் இறைவனே! உன்னிடமே மன்னிப்புக் கோருகிறோம்; (நாங்கள்) மீளுவதும் உன்னிடமேதான்” என்று கூறுகிறார்கள்

மலக்குகளையும் அவனுடைய வேதங்களையும் நம்பவேண்டும்

மலக்குகள் என்றால் தேவர்கள் 33 கோடி பேர் உள்ளனர்

இதில் ஆதம் என்ற சிவனை என்னை வணங்குவது போல வணங்க வேண்டும் என அல்லாஹ் கட்டளையிட்ட போது சிவனை வணங்க மறுத்த 6 கோடி பேர்கள் சைத்தானாக மாறிவிட்டனர்

அல்லாவுக்கு உடன்பட்ட மலக்குகளில் ஒரு பிரிவு சைத்தானாக மாறியதே அவர்கள் ஆதம் என்ற சிவனை வணங்கமாட்டோம் என அடம் பிடிப்பதாலேயாகும்

இணை வைப்பு கூடாது என சொல்லும் குரானே ஆதம் என்ற சிவனுக்கு சுஜூது செய்க என இணைவைப்பு கட்டளை இட்டிருக்கிறது

7:11. நிச்சயமாக நாமே உங்களைப் படைத்தோம்; பின்பு உங்களுக்கு உருக்கொடுத்தோம். அதன்பின், “ஆதமுக்கு ஸுஜுது செய்யுங்கள் (சிரம் பணியுங்கள்)” என்று மலக்குகளிடம் கூறினோம்; இப்லீஸைத் தவிர (மற்ற மலக்குகள்) யாவரும் (அவருக்குத்) தலைவணக்கம் செய்தார்கள்; அவன் (மட்டும்) தலைவணக்கம் செய்தவர்களில் ஒருவனாக இருக்கவில்லை.


அல்லாவைத்தவிர யாரையும் வணங்காதே என்ற விளக்கம் மனிதர்களாக உருவாக்கிக்கொண்ட இலாஹா க்களை குறிக்கிறதே தவிர மலக்குகளை அல்ல

அல்லாஹ் வையும் அவனது மலக்குகளையும் வழிபடுவதே முழுமையானது

அல்லாஹ் வை மட்டுமே வழிபட்டு ஆதமையும் வழிபடாத தவறால் இசுலாமியர் சைத்தானுக்கு இடம் கொடுத்தவர்களாகவே இருக்கிறீர்கள்

மலக்குகளை மட்டுமே வழிபட்டு அல்லாஹ் வை வழிபடாத்தால் இந்துமதமும் சீர்கேட்டில் உள்ளது

மதம் மாற்றுவதால் யாதொரு நற்பலனுமில்லை

இரண்டும் ஒன்றினால் ஒன்றை சீர்திருத்திக்கொள்வதே வரப்போகிற அல்மஹ்தியின் சமாதான பாதை

உலகை மூழ்கடிக்கும. சமர வேதம் என்ற ஆன்மீக பேரலை


அல்லாஹ் என்ற அரபுசொல் இறைவன் கடவுள் என மக்களால் குறிக்கப்படும் பொதுச்சொல்லாகும்

உலகம் முழுவதிலும் உள்ள பல மதத்து மக்களாலும் பொதுவார்த்தையாக அழைக்கப்படுபவரே வணங்கப்படுபவரே அல்லாஹ்

இசுலாத்துக்கென்று ஒரு தனி கடவுள் இருப்பதாகவும் அவரை முஸ்லீம்கள் மட்டுமே வணங்குவதாகவும் நாடுபிடிக்க முற்பட்ட கலீபாக்கள் அரசர்கள் இஸ்லாமியரை ஏமாற்றிவிட்டனர்

சகலராலும் தங்கள் இதயத்தில் வணங்கப்படும் இறைவனே அல்லாஹ்

லா இலாஹா இல் அல்லாஹ் என்பதை அல்லாவைத்தவிர வேறு தெய்வம் இல்லை என்பதாக மேலோட்டமாக அரபியர்கள் கற்பித்து விட்டார்கள்

இலஹா என்றால் அரபியில் வழிபடப்படும் தேவர்கள் என்று அர்த்தம்

இல் அல்லாஹு என்பதை அல்லா இல்லாத லா இலாஹா தேவர்கள் யாருமில்லை என்பதே சரியான அர்த்தம்

பரத்திலே அரூவமான இறைவனுக்கு அடுத்த நிலையில் உருவமான தேவர்கள் இருக்கிறார்

இறைவன் எதையாவது செய்ய வேண்டுமானால் பேசுகிறார் ; அந்த காரியத்தை அதற்குரிய மலக்குகள் செய்கிறார்கள்

மலக்குகள் மூலமாக அல்லாமல் அல்லா அவராக எந்த காரியத்தையும் செய்வதில்லை

முகமதுநபியுடன் அல்லா நேரடியாக வசனம் இறக்கினாரா அல்லாவின் சார்பாக காப்ரீயேல் தானே இறக்கினார்

இங்கு காப்ரீயேல் குரானை இறக்கவில்லை ; அல்லா காப்ரீயேல் மூலமாக இறக்கினார்

அல்லாஹ் இல்லாத தேவர்கள் யாருமில்லை என்பதே பாங்கின் சரியான அர்த்தம்

அதை அல்லாவைத்தவிர இறைவன் யாருமில்லை என அரபியர்கள் இஸ்லாமியர்களை ஏமாற்றி விட்டார்கள்

உலகில் உள்ள சகல மக்களலும் மதங்களாலும் வணங்கப்படும் தேவர்கள் அனைவரும் அல்லாஹ் வால் படைக்கப்பட்டு அல்லாஹ் வால் பயன்படுத்தப்படுகிறவர்களே

அல்லாஹ் இல்லாத தேவர்கள் யாருமில்லை

33 கோடி தேவர்களில் 6 கோடி பேர்களே அசுரர்களாக மாறியவர்கள்

உலக மக்களால் வணங்கப்படும் தேவர்களில் யார் தேவர் யார் சைத்தான் என்றால் அல்லாஹ்வோடு ஆதமையும் வணங்கினால் தேவர்கள்

ஆதமை வணங்காதவர்கள் சைத்தான்கள் என குரான் 2 : 285 சொல்கிறது

யார் மலக்கு யார் சைத்தான் என கண்டுபிடிக்குமளவு அரபியர்கள் எந்த ஆன்மீக அணுபவமும் இல்லாதவர்கள்

இசுமாயிலுக்கு பிறகு முகமதுநபி வரை ஒரு இறைதூதர் கூட வராமல் காட்டுமிராண்டிகளாக வாழ்ந்த கூட்டம்

குரானில் சொல்லப்படும் நபிகள் அனைவரும் யூதர்கள்; ஒருவர் கூட அரபியர் இல்லை

ஆன்மீக பின்னணி எதுவும் இல்லாமல் அடித்து உதைத்து இசுலாத்திற்கு மாற்றப்பட்ட அரபியர்கள் குரானுக்கு தப்பு தப்பாக விளக்கம் சொல்லிவிட்டார்கள்

சிவனே ஆதம் என கண்டுபிடிக்காவிட்டாலும் பரவாயில்லை ; அல்லாஹ் வுடன் ஆதமையும் வணங்காவிட்டால் சைத்தானுக்கு பிரியமானவர்களாக இருப்போம் என்பதை இன்றளவும் உணராதவர்கள் அரபியர்கள்

முகமது ரசூல் அல்லாஹு என்பதில் அல்லாஹ்வை முகமதுநபியை குருவாக வைத்து வழிபடுகிறோம் என்பதால் இதை ஒரு மார்க்கம் அதாவது பாதை என்றுதானே முகமதுநபியே சொன்னார்

உலக மக்களால் வழிபடப்படும் அல்லாஹ் வை முகமதுநபியை குருவாக வைத்துக்கொண்டு வழிபடும் ஒரு மார்க்கமே இஸ்லாம்

அதை மதமாக மாற்றி தங்கள் நாடுபிடி ஆசையை தீர்த்தவர்கள் காலிபாக்கள்

முகமதுநபி இஸ்மாயிலின் பிள்ளைகளாக 100 மேற்பட்ட குலமாக சிதறிக்கிடந்த அரபியர்கள் மீதுமட்டுமே ஜீகாத் செய்தார் ; அடித்து உதைத்து இஸ்லாத்துக்கு மாற்றினார்

அரபியர்கள் யூதர்கள் இல்லாத மற்ற இனத்துமக்களை ஒருவரை கூட முகமதுநபி மதமாற்றம் செய்யவில்லை

இறைவனை வணங்க இஸ்லாம் ஒரு மார்க்கம் என்றால் வேறு மார்க்கங்களும் பூமியில் இருக்கிறது என்றே அர்த்தம்

தேவர்களை குருவாக வைத்து வழிபடும் மார்க்கம் ஒன்றிருக்குமானால் அவர்களை காபீர்கள் என கொன்றதும் கொத்தடிமைகளாக வைத்ததும் ஜிசியா வரிவாங்கியதும் கொடூரமாக நடந்ததும் பாவமாகாதா

முகமதுநபியிடம் இறைவன் பேசினால் மட்டுமே செய்தார்

இறைவன் தங்களிடம் பேசாமல் ; குரானை வாசித்துவிட்டு அதற்கு தங்கள் அறியாமையால் தப்புதப்பாக விளக்கம் கற்பித்து பூமியில் அரபியர்கள் செய்த அட்டூழியங்களுக்கு நிச்சயமாக அல்லாஹ் பொறுப்பு ஏற்கமாட்டார்

மதினாவிலிருந்து படைநடத்தி மக்காவை வெற்றி கொண்ட முகமதுநபி கபாவில் இருந்த சிலைகள் அனைத்தையும் வெளியேற்றுகிறார் ; ஆனால் அங்கிருந்த அஸ்த்ரக் கல்லை மட்டும் வெளியேற்றவில்லை

அந்த அஸ்த்ரக் கல் ஆதம் என்ற சிவனுக்கு பரத்திலிருந்து வழிபாட்டு மூர்த்தமாக கொடுக்கப்பட்டது

பரத்திலிருந்து பூமிக்கு மனிதர்களாக மாறி வந்த சிவனும் அவரில் பாதியாளான பார்வதியும் முதலில் வந்த இடம் சிவனொளிபாத மலை என இலங்கையில் உள்ளது

சிவனும் பாதியாளுமே ஆதம் அவ்வாவாகும்

அங்கிருந்து ராமேஸ்வரம் மற்றும் லெமூரியா கண்டம் முழுவதும் மனுகுலமாக தமிழர்களை உற்பத்தி செய்தனர்

அப்போது நீண்ட நாள் உத்திரகோச மங்கையில் வாழ்ந்தனர்

அடுத்து வட இந்தியா முழுவதிலும் மனுகுலம் பரவியது

அப்போது இமயமலையை வாசஸ்தலம் ஆக்கியிருந்தனர்

அதன்பிறகு இன்றைய மக்காவிலுள்ள அரபாத் சமவெளியில் வசித்து கிழக்கு ஆசியா முழுவதிலும் மனுகுலம் பரவியது

பிறகு ஆப்ரிக்காவில் மனுகுலம் பரவியது

பிறகு பட்டமங்கலம் வந்தனர்

சிவன் மீண்டும் ஒளிதேகம் பெற்று அதிதேவர் ருத்திரன் என்ற மைக்கேலாக பரலோகம் போனார்

வைரவன்பட்டி திருப்பத்தூர் ஆதிவைரவர் கோயில் அடையாளமாகும்

மக்காவில் சிவன் இருந்த காலத்தில் அவருக்கு பரத்திலிருந்து இறைவன் என்ற அல்லாஹ் வழிபாட்டு மூர்த்தமாக அஸ்த்ரக் கல்லை கொடுக்கிறார்

இந்த அஸ்த்ரக் கல்லே லிங்க வழிபாட்டின் முதல் லிங்கமாகும்

லிங்கம் என்பதன் விளக்கம் அரு உருவம்

அரூவமான இறைவனை ஒரு கல்லில் அடையாளப்படுத்தி வழிபடுதல் அரு உருவ வழிபாடாகும்

படைக்கப்பட்ட மனிதர்கள் விலங்குகள் சாயல் இல்லாத ஒரு கல் ; இயற்கை வழிபாடு

30:30. ஆகவே, நீர் உம்முகத்தை தூய (இஸ்லாமிய) மார்க்கத்தின் பக்கமே முற்றிலும் திருப்பி நிலைநிறுத்துவீராக! எ(ந்த மார்க்கத்)தில் அல்லாஹ் மனிதர்களைப் படைத்தானோ அதுவே அவனுடைய (நிலையான) இயற்கை மார்க்கமாகும்; அல்லாஹ்வின் படைத்தலில் மாற்றம் இல்லை; அதுவே நிலையான மார்க்கமாகும். ஆனால் மனிதரில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள்.

பஞ்சபூதங்களை படைத்து அதன் மூலமாகவே பூமியில் மனிதர்கள் படைக்கப்படுகிறார்கள்

அந்த பஞ்சபூதத்தின் அடையாளமாகவே லிங்கம் இருக்கிறது

சரியாக சொன்னால் ஜடவழிபாடே ஆதியில் அல்லாஹ் வால் அணுமதிக்கப்பட்டது

உருவ வழிபாடே தடைசெய்யப்பட்டது

யாத்திராகமம் 20:4 மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம்

சொரூபம் உருவ வழிபாடு தடைசெய்யப்பட்டது ; ஆனால் ஜட வழிபாடு அணுமதிக்கப்பட்டது

18. அதிகாலையிலே யாக்கோபு எழுந்து, தன் தலையின்கீழ் வைத்திருந்த கல்லை எடுத்து, அதைத் தூணாக நிறுத்தி, அதின்மேல் எண்ணெய் வார்த்து,

உலகம் முழுவதிலும் நடுகல் வழிபாடு தொன்மையானது

மெக்காவின் அஸ்த்ரக் கல் ஜட வழிபாடு சிவனால் ஆரம்பிக்கப்பட்டதால் அதை சிவலிங்கம் என்கிறார்கள்

இந்துமத சிவலிங்க கோவில்கள் அனைத்தும் மக்கீஸ்வரத்தின் அடிப்படையில் வந்த கோவில்கள் ஆகும்

சிவனுக்கென்று மனித ரூபம் உண்டு ; அதை சிலையாக செய்து வழிபடாமல் ஆதி இயற்கை - ஆதி இஸ்லாம் வழியில் உள்ளவையே சிவன் கோவில்கள் ஆகும்

லிங்கவழிபாட்டில் இருவர் வருகிறார்கள்

ஒருவர் வழிபடப்படும் அல்லாஹ்

மற்றவர் யாரை குருவாக வைத்து வழிபடுகிறோம் என்பதாகும்

சிவனை குருவாக வைத்து அல்லாஹ் வை வழிபடுவதால் இது சிவலிங்கம்

குரானில் அல்லாஹ் வை வணங்குவதுபோலவே ஆதம் என்ற சிவனை வணங்கு என கட்டளை வந்தது

7:11. நிச்சயமாக நாமே உங்களைப் படைத்தோம்; பின்பு உங்களுக்கு உருக்கொடுத்தோம். அதன்பின், “ஆதமுக்கு ஸுஜுது செய்யுங்கள் (சிரம் பணியுங்கள்)” என்று மலக்குகளிடம் கூறினோம்; இப்லீஸைத் தவிர (மற்ற மலக்குகள்) யாவரும் (அவருக்குத்) தலைவணக்கம் செய்தார்கள்; அவன் (மட்டும்) தலைவணக்கம் செய்தவர்களில் ஒருவனாக இருக்கவில்லை.

ஆக சிவனையும் அல்லாஹ் வையும் இணைத்து வழிபடுவதே சிவலிங்கமாகும்

அல்லாஹ் வால் மனிதர்களுக்கு கொடுக்கப்பட்ட முழுமையான வழிபாடு அஸ்த்ரக் கல் வழிபாடு

அதாவது சிவலிங்க வழிபாடு

இந்தியாவில் இதன் மூலமந்திரம் ஓம் நம சிவாய

சிவனை வழிபடுகிறேன் என மந்திரம் இல்லை

சிவாய - சிவனாக வெளிப்பட்ட அல்லாஹ் வை வழிபடுகிறேன் என்பதே மூலமந்திரம்

மக்கா வழிபாடு ஆப்ரகாமும் சாராயும் ஈரானிலிருந்து நாடோடியாக வரும்போதே : ஹாஹாரை சந்திக்கும் முன்பே யூதர்களும் அரபியர்களும் பிறக்கும் முன்பே நடைமுறையில் இருந்தது

18. அன்றியும், உன்னதமான தேவனுடைய ஆசாரியனாயிருந்த மெல்கிசேதேக்கு அப்பமும் திராட்சரசமும் கொண்டுவந்து,

19. அவனை ஆசீர்வதித்து: வானத்தையும் பூமியையும் உடையவராகிய உன்னதமான தேவனுடைய ஆசீர்வாதம் ஆபிராமுக்கு உண்டாவதாக.

மக்கா கோவிலில் ஆதியில் ஆதம் என்ற சிவன் உண்டாக்கிய வழிபாடுகளில் ; பின்னாட்களில் அங்கு வாழ்ந்த அரபியர்கள் சேர்த்துக்கொண்ட வழிபாடுகளைத்தான் முகமதுநபி ஒழித்தாரே தவிர புதிய இறைவழிபாட்டை முகமதுநபி கொண்டுவந்தது போல தவறான கருத்தை அரபியர்கள் புகுத்தி விட்டார்கள்

ஹஜ் யாத்திரையின் போது இந்து சைவநெறிக்குரிய வெள்ளாடை உடையமைப்பு ; கோவிலை ஏழு முறை வலம் வருதல் என்பதெல்லாம் அரபிக்களுக்கு புரியாது

ஆனால் இந்திய முஸ்லீம்களே இது உங்கள் மூதாதையர் நடைமுறை என்பதை உலக முஸ்லீம்களுக்கு புரிய வையுங்கள்

அப்படியில்லாமல் புதிதாக மதம் மாறிய கிறிஸ்தவர்களும் இசுலாமியர்களும் தங்கள் நாட்டில் உள்ள வழிபாடுகளை ஒழித்துவிட்டு அல்லாவை வழிபட வேண்டும் என்ற தவறுக்குள் கிடக்கிறார்கள்

அஸ்த்ரக்கல்லை ஆதமை வணங்குவதாக முகமதுநபி மதித்தார்

அதனிடம் குதிரையில் அமர்ந்து காலாட்டிக்கோண்டே தொலைத்துவிடுவேன் என வீரவசனம் பேசினார் உமர் ரலி

உமர் ரலியின் அறியாமையை சாத்தான் பயன்படுத்திக்கொண்டான்

அல்லாஹ் வுக்காக அடுத்த தேவர்களை அவமதி ; அடுத்த வழிபாட்டுக்கார்ர்களை கொன்றால் சொர்க்கத்தை கையில் வைத்துக்கொண்டு அல்லாஹ் அலைகிறார் எனவும் சைத்தான் ஸ்ட்ராங்காக இசுலாமியர்க்கு ஓதி விட்டான்

அல்லாவை வழிபட்டாலும் சைத்தானுக்கு இடம் கொடுத்தவர்களாக வாழ்வதால் இன்று இசுலாமிய நாடுகளில் மக்கள் நிம்மதியாக வாழ முடியவில்லை

அரபுக்களின் சொந்த வழிபாடுகளை ஒழித்து அரபுக்களுக்கு முந்திய சைவ வழிபாட்டை முகமதுநபி நிலைநிறுத்தியிருக்க ; அரபுக்களின் முஸ்லீம்களின் சொந்த வழிபாட்டை மற்றவர்களின் மேல் திணிக்க அட்டூழியங்கள் செய்ய அல்லாஹ் அத்தாட்சி கொடுத்திருப்பதாக நம்பித்திரிகிறார்கள்

குரான் இறைவனால் இரக்கப்பட்டிருந்தாலும் ஆன்மீக அணுபவம் அற்ற அரபிக்கள் தப்பு தப்பாக விளக்கம் சொல்லி வைத்ததால் இசுலாமியர் அல்லாவை விட சைத்தானுக்கு சொந்தக்காரர்கள் ஆகிவருகிறார்கள்

இந்தநிலையில் இருந்து தப்ப வேண்டுமானால் இந்து மதத்தின் ஆதி வேதங்களை உணர்ந்து குரானை அணுகினால் சரியான வெளிச்சம் கிடைக்கும்

நாராயணன் நாமத்தினாலும் சிவனின் நாமத்தினாலும் ஆதிசக்தியின் நாமத்தினாலும் ஆதிசேஷனின் நாமத்தினாலும் அல்லாஹ் ; பூமியிலே சமாதானத்தை உண்டாக்க வல்ல சமரச வேதாந்தி என்ற அல்மஹதியை விரைவில் அணுப்புவீராக

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி